28 Jun 2025
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சுபன்ஷு சுக்லாவிடம் கலந்துரையாடினார் பிரதமர் மோடி
சனிக்கிழமை (ஜூன் 28) அன்று பிரதமர் நரேந்திர மோடி, சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) நுழைந்த முதல் இந்திய விமானப்படை அதிகாரியாகவும், 1984 க்குப் பிறகு முதல் இந்தியராகவும் வரலாற்றைப் படைத்த குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவுடன் பேசினார்.
உட்கார்ந்தே வேலை செய்வதால் இந்திய இளைஞர்களிடையே அதிகரிக்கும் மலட்டுத்தன்மை; மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை
இந்தியாவில் இளைஞர்களுக்கு மலட்டுத்தன்மை அதிகரித்து வருகிறது. குறிப்பாக 20 வயது மற்றும் 30 வயதுடைய தம்பதிகள் கருத்தரிக்க சிரமப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் இந்திய பிரிவு முன்னாள் தலைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
தடைசெய்யப்பட்ட இந்திய மாணவர்கள் இஸ்லாமிய இயக்கத்தின் (சிமி) முன்னாள் மூத்த நிர்வாகியும், இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் நடவடிக்கைகளின் தலைவராக இருந்ததாகக் கூறப்படுபவருமான சாகிப் நாச்சன், மூளை ரத்தக்கசிவு காரணமாக டெல்லியின் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சனிக்கிழமை (ஜூன் 28) பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 57.
டிவிஎஸ்ஸின் அப்பாச்சி ஆர்டிஆர் 160 சிசியின் 2025 மாடல் அறிமுகம்; சிறப்பம்சங்கள் என்னென்ன?
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அதன் பிரபலமான அப்பாச்சி ஆர்டிஆர் 160 சிசி மோட்டார் சைக்கிளின் 2025 மாடலை வெளியிட்டுள்ளது.
டி.குகேஷை பின்னுக்குத் தள்ளி இந்திய செஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்தார் பிரக்ஞானந்தா
செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆர் பிரக்ஞானந்தா உஸ் செஸ் கோப்பை மாஸ்டர்ஸ் 2025 இல் தனது வியத்தகு வெற்றிக்குப் பிறகு இந்திய செஸ் போட்டி தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியதோடு, உலக அளவில் 4வது இடத்தைப் பிடித்துள்ளார்.
கொல்கத்தா சட்டக் கல்லூரி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் நான்காவதாக செக்யூரிட்டி கைது
தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் அடுத்த நடவடிக்கையாக, கல்லூரியின் 55 வயதான பாதுகாவலரான பினாகி பானர்ஜியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடற்படை தலைமைத் தளபதி மற்றும் முக்கிய அணுசக்தி விஞ்ஞானியை நீக்கினார் சீன அதிபர் ஜி ஜின்பிங்
சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது நாட்டின் மக்கள் விடுதலை ராணுவம் மீதான கட்டுப்பாட்டை இறுக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ராணுவத்தின் உயர் பதவியில் உள்ள முக்கிய நபர் உள்ளிட்ட பலரை நீக்கியுள்ளார்.
R&AW உளவுத்துறையின் புதிய தலைவராக பராக் ஜெயின் இரண்டு ஆண்டு காலத்திற்கு நியமனம்
இந்தியாவின் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் (R&AW) புதிய தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி பராக் ஜெயின், இரண்டு ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசு பள்ளிகளில் வாட்டர் பெல் இடைவேளை முறை அறிமுகம்; இதன் முக்கியத்துவம் என்ன?
மாணவர்களின் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட ஒரு புதிய முயற்சியாக, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் வாட்டர் பெல் முறையைத் தொடங்கியுள்ளது.
அருப்புக்கோட்டை கோயிலுக்கு இயந்திர யானையை நன்கொடையாக வழங்கிய நடிகை த்ரிஷா; பின்னணி என்ன?
பக்தி மற்றும் வனவிலங்கு பாதுகாப்பை இணைக்கும் ஒரு தனித்துவமான செயலாக, அருப்புக்கோட்டையில் உள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் கோயில் மற்றும் ஸ்ரீ அஷ்டபுஜ ஆதிசேஷ வராஹி அம்மன் கோயிலுக்கு நடிகை த்ரிஷா ஒரு அதிநவீன ரோபோ யானையை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
தொடர்ந்து மைதானத்திற்கு வெளியே கார்களை சேதப்படுத்திய பந்து; வரலாற்றுச் சிறப்புமிக்க கிரிக்கெட் மைதானம் மூடல்
இங்கிலாந்தின் டான்பரியில் உள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க கிரிக்கெட் மைதானம், அருகிலுள்ள கார் பார்க்கிங்கில் ஒருவர் பந்து தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.
நாள்பட்ட மன அழுத்தத்தால் அவதிப்படுகிறீர்களா? கண்டுகொள்ளாமல் விட்டால் இந்த பிரச்சினைகள் எல்லாம் வரலாம்; நிபுணர்கள் எச்சரிக்கை
மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, நீண்டகால அல்லது நாள்பட்ட மன அழுத்தம், தற்காலிக மன அழுத்தத்தைப் போலன்றி, மூளையின் செயல்பாட்டையும் ஒட்டுமொத்த மன ஆரோக்கியத்தையும் கடுமையாக சீர்குலைக்கும்.
மீண்டும் குறைந்தது விலை; இன்றைய (ஜூன் 28) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை சனிக்கிழமை (ஜூன் 28) சரிவை சந்தித்துள்ளது.
அண்ணாமலை பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமனமா? முக்கிய தலைவர்கள் வாழ்த்தின் பின்னணி
பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) முன்னாள் தமிழக தலைவர் அண்ணாமலை தேசிய பொதுச் செயலாளராக பொறுப்பேற்பதற்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளங்களில் பாஜகவின் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சிந்து நதிநீர் ஒப்பந்தம்; நடுவர் மன்றமே சட்டவிரோதமானது எனக்கூறி தீர்ப்பை நிராகரித்தது இந்தியா
ஜம்மு காஷ்மீரில் உள்ள கிஷன்கங்கா மற்றும் ரேட்டில் நீர்மின் திட்டங்களுக்கு துணைத் தீர்ப்பை வழங்கிய சர்வதேச நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவை இந்தியா உறுதியாக நிராகரித்துள்ளது.
புதிய டிஜிட்டல் சேவை வரி விதிப்பால் கடுப்பு; கனடாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை நிராகரிப்பதாக டிரம்ப் அறிவிப்பு
புதிய டிஜிட்டல் சேவை வரியை விதிக்கும் கனடாவின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து, வர்த்தக பேச்சுவார்த்தைகளை உடனடியாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
27 Jun 2025
வங்கதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு; கேப்டனாக சரித் அசலங்கா நியமனம்
ஜூலை 2, 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கே முன்னோடி; முதல்முறையாக மொபைல் ஆப் மூலம் வாக்களிக்கும் வசதி பீகாரில் அறிமுகம்
மொபைல் போன் மூலம் வாக்களிப்பை அறிமுகப்படுத்தும் முதல் இந்திய மாநிலமாக பீகார் மாறியுள்ளது என்று மாநில தேர்தல் ஆணையர் தீபக் பிரசாத் வெள்ளிக்கிழமை (ஜூன் 27) அறிவித்தார்.
விரைவில் கேரென்ஸ் கிளாவிஸின் எலக்ட்ரிக் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது கியா மோட்டார்ஸ்
கியா இந்தியா சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கேரென்ஸ் கிளாவிஸின் (Carens Clavis) எலக்ட்ரிக் மாடலை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.
டொனால்ட் டிரம்பின் நிர்வாக உத்தரவுகளுக்கு தடை விதிக்க கீழ் நீதிமன்றங்களுக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு குறிப்பிடத்தக்க சட்ட வெற்றியாக, அமெரிக்க உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜூன் 27) ஒரு பரபரப்பு தீர்ப்பை வெளியிட்டது.
முதலீடு என்ற பெயரில் சைபர் கிரைம் மோசடியில் ரூ.2 கோடியை இழந்த ஆந்திர பிரதேச பேராசிரியர்
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவர் போலி முதலீட்டு ஆலோசனை வழங்கும் வாட்ஸ்அப் குழுவில் ஈர்க்கப்பட்டு, ஒரு அதிநவீன சைபர் கிரைம் மோசடியில் கிட்டத்தட்ட ரூ.2 கோடியை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நீதிமன்ற விசாரணையில் பெண் நீதிபதியை ஹனி எனக் கூறிய வழக்கறிஞர்; வைரலாகும் வீடியோ
அமெரிக்காவின் கொலராடோவில் உள்ள ஒரு நீதிமன்ற அறையில், நேரடி ஒளிபரப்பு அமர்வின் போது, உதவி அட்டர்னி ஜெனரல் வில்லியம் கோசெலிஸ்கி தற்செயலாக ஒரு நீதிபதியை "ஹனி (Honey)" என்று அழைத்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
சிங்கப்பூர் துணைத் தூதரக தலைவருடன் நடிகர் விஜய் சந்திப்பு; பின்னணி என்ன?
தமிழ் சினிமா நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவருமான விஜயை சென்னையில் உள்ள இந்தியாவிற்கான சிங்கப்பூர் துணைத் தூதரகத்தின் தலைவர் சிஜி போங் சந்தித்தார்.
இந்தியாவின் பெரும் செல்வந்தர்கள் எதில் முதலீடு செய்கிறார்கள்? EY-ஜூலியஸ் பேர் அறிக்கை சொல்வது இதுதான்
இந்தியாவின் பெரும் செல்வந்தர்கள் 2025 ஆம் ஆண்டில் தங்கள் முதலீட்டு உத்திகளை மறுபரிசீலனை செய்வது ஒரு அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.
2050 வரையிலும் சாத்தியமில்லை; ஏசி வெப்பநிலையை 20-28 டிகிரி செல்சியஸாக நிர்ணயிப்பது குறித்து மத்திய அமைச்சர் விளக்கம்
20 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையிலான முன்மொழியப்பட்ட நிலையான ஏர் கண்டிஷனர் வெப்பநிலை வரம்பை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிடவில்லை என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெளிவுபடுத்தியுள்ளார்.
EPFO உறுப்பினர்கள் விரைவில் ATM, UPI மூலம் EPF பணத்தை எடுக்கலாம்
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), அதன் உறுப்பினர்கள் தங்கள் ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) பணத்தை நேரடியாக ATMகள் அல்லது ஒருங்கிணைந்த கொடுப்பனவு இடைமுகம் (UPI) மூலம் எடுக்க அனுமதிக்கும் திட்டத்தில் செயல்பட்டு வருகிறது.
கூகிளின் பிக்சல் 7 ஜப்பானில் தடை செய்யப்பட்டது: என்ன காரணம்?
Copyrights தகராறு காரணமாக கூகிளின் பிக்சல் 7 தொடர் ஜப்பானில் தடை செய்யப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச முதல்வரின் வாகனங்களில் டீசலுக்குப் பதிலாக தண்ணீரை நிரப்பிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்!
மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவின் Convoy-இல் இருந்த 19 வாகனங்களில் டீசலுக்குப் பதிலாக தண்ணீர் நிரப்பப்பட்டு, என்ஜின் பழுதாகி, தள்ளி செல்லப்பட்ட ஒரு வினோதமான சம்பவம் நேற்று இரவு நடந்துள்ளது.
வீட்டுக் கடனை Refinancing செய்ய முடிவு செஞ்சிருக்கீங்களா? இதை தெரிஞ்சிக்காம பண்ணாதீங்க
இந்த ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மூன்று முறை ரெப்போ விகிதக் குறைப்புகளை மேற்கொண்ட நிலையில், வீட்டுக் கடன்களுக்கு மறுநிதியளிப்பது (Refinancing) குறித்து வீட்டு உரிமையாளர்கள் பரிசீலித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் 345 கட்சிகளின் அங்கீகராத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை; தமிழகத்தில் எத்தனை கட்சிகள்?
2019 முதல் குறைந்தபட்சம் ஒரு தேர்தலில் போட்டியிடுவது உட்பட கட்டாயத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதற்காக, பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத 345 அரசியல் கட்சிகளை (RUPPs) பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
ஏர் இந்தியா விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்காக ₹500 கோடி மதிப்பில் அறக்கட்டளை அமைக்க டாடா திட்டம்
400 பில்லியன் டாலர் மதிப்புள்ள டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ், ₹500 கோடி மதிப்பீட்டில் ஒரு அறக்கட்டளையை அமைக்க முன்மொழிந்துள்ளது.
BSNL வீட்டுக்கே சிம் கார்டு டெலிவரி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது: புதிய இணைப்பு பெறுவது எப்படி?
இந்தியாவின் அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL, மொபைல் சேவைகளை நுகர்வோர்களுக்கு எளிமையாக்கும் நோக்கத்தில், வீட்டிற்கே சிம் கார்டு டெலிவரி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
அல் நாசர் அணியில் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ரொனால்டோவின் ஒப்பந்தம் நீட்டிப்பு; ஊதியம் எவ்ளோன்னு தெரியுமா?
கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி புரோ லீக் கிளப் அல் நாசருடன் இரண்டு ஆண்டு ஒப்பந்த நீட்டிப்பில் கையெழுத்திட்டதன் மூலம் ஐரோப்பிய கால்பந்திற்கு திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தனி நபர் முகம், குரலுக்கு copyrights சட்டம்; டீப்ஃபேக்குகளுக்கு எதிராக டென்மார்க் எடுத்த முடிவு!
செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட டீப்ஃபேக்குகளின் எழுச்சியை எதிர்த்துப் போராட டென்மார்க் ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்து வருகிறது.
குடும்பத்தை விட தேசிய கடமைக்கு முக்கியத்துவம்; கே.எல்.ராகுல் குறித்து நெகிழ்ந்த டெல்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர் ஹேமங் பதானி
கே.எல்.ராகுலின் இந்திய கிரிக்கெட்டிற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பை டெல்லி கேபிடல்ஸ் தலைமை பயிற்சியாளர் ஹேமங் பதானி பாராட்டியுள்ளார்.
சுபன்ஷு சுக்லா தனது முதல் நாளை ISS இல் எப்படிக் கழித்தார்?
இந்திய விமானப்படை (IAF) குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) அடைந்த முதல் இந்தியர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.
விவசாய நீர் பயன்பாட்டிற்கு வரி விதிக்கும் திட்டம் விரைவில் அறிமுகம்; மத்திய அமைச்சர் தகவல்
நிலத்தடி நீரைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க கொள்கை நடவடிக்கையாக, விவசாயத் துறையில் நீர் பயன்பாட்டிற்கு வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கொல்கத்தாவில் மற்றுமொரு கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம்; கல்லூரி வளாகத்திலேயே சட்ட மாணவிக்கு நேர்ந்த அவலம்
கொல்கத்தாவின் கஸ்பா பகுதியில் உள்ள ஒரு கல்லூரிக்குள் புதன்கிழமை இரவு 7:30 மணி முதல் 8:50 மணி வரை ஒரு சட்ட மாணவி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
AK64: நடிகர் அஜித்தின் அடுத்த படத்தின் அறிவிப்பு விரைவில்... சூசகமாக வெளியிட்ட மேனேஜர் சுரேஷ் சந்திரா
ரசிகர்களிடைய உற்சாகத்தைத் தூண்டும் விதமாக, நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா சமீபத்தில் தனது சமூக ஊடக பக்கங்களின் பயோவைப் புதுப்பித்து, AK 64 தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரே நேரத்தில் 10 பிரம்மாண்ட படங்களைத் தயாரிக்கும் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல்
தமிழ் சினிமாவில் ஒரு படத்தை உருவாக்கி வெற்றிகரமாக திரையரங்குகளில் வெளியிடுவது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.
ChatGPT-யிடம் பணிவாக இருப்பது அதன் துல்லியத்தை குறைக்கலாம் தெரியுமா? நீங்கள் தவிர்க்க வேண்டிய வார்த்தைகள் இவைதான்!
பல்வேறு இணையதளங்களில் வெளியான சமீபத்திய கட்டுரைகளில், ChatGPT போன்ற ஜெனரேட்டிவ் AI சாட்போட்களிடம் உரையாடும்போது "தயவுசெய்து", "முடியுமா", "நன்றி" போன்ற மரியாதை சொற்களைத் தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது.
மஹிந்திரா வாகனங்களுக்கான புதிய NU பிளாட்ஃபார்ம் ஆகஸ்ட் 15இல் அறிமுகம்; டீஸர் வெளியிட்டு அறிவிப்பு
மஹிந்திரா நிறுவனம் ஆகஸ்ட் 15, 2025 அன்று மும்பையில், இந்தியாவின் சுதந்திர தினத்துடன் இணைந்து, 'NU' என்று பெயரிடப்பட்ட ஒரு புதிய வாகன பிளாட்ஃபார்மை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.
எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர் வேட்பாளர்; பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதி
வரவிருக்கும் 2026 மாநில சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்று பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதியாகக் கூறியுள்ளார்.
ஜூலை 15 முதல் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்
தமிழ்நாடு அரசு, முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15ஆம் தேதி முதல், அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத்திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
'நாங்கள் அவரைக் கொல்லும் முன்பே கமேனி தலைமறைவாகிவிட்டார்': இஸ்ரேல்
இரு நாடுகளுக்கும் இடையிலான சமீபத்திய பதட்டங்களின் போது ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை படுகொலை செய்ய இஸ்ரேலிய இராணுவம் திட்டமிட்டிருந்ததாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.
கமல்ஹாசன், பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா ஆகியோருக்கு ஆஸ்கார் அகாடமியில் சேர அழைப்பு
மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் அகாடமி, 534 புதிய உறுப்பினர்களை அதன் வரிசையில் சேர அழைத்துள்ளது.
கிராம் ரூ.9,000க்கு கீழே குறைந்தது தங்கம்; இன்றைய (ஜூன் 27) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை (ஜூன் 27) சரிவை சந்தித்துள்ளது.
தமிழக பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியீடு: ஜூன் 7 கவுன்சிலிங் தொடங்குகிறது
2025-2026 கல்வியாண்டுக்கான தமிழக பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை (மெரிட்) பட்டியல் இன்று சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குநரக அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜூன் 28) தமிழகத்தில் சென்னையில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
டி20 இன்னிங்ஸ்களில் பவர்பிளேவிற்கு புதிய விதிகளை அறிமுகம் செய்கிறது ஐசிசி
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளின் ஆட்ட நிலைமைகளில் ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டு வருகிறது.
விற்பனை சரிவு எதிரொலியாக டெஸ்லாவின் ஆபரேஷன்ஸ் தலைவரை பணிநீக்கம் செய்தார் எலான் மஸ்க்
டெஸ்லாவின் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கான உற்பத்தி மற்றும் செயல்பாடுகளின் தலைவரான ஓமேட் அஃப்ஷரை எலான் மஸ்க் பணிநீக்கம் செய்துள்ளார்.
40 ஆண்டுகளுக்குப் பிறகு, விண்டோஸின் பிரபலமான நீலத் திரை கருப்பு நிறமாக மாறுகிறது
மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது பிரபலமான ப்ளூ ஸ்கிரீன் ஆஃப் டெத் (BSOD)-ஐ நிறுத்திவிட்டு, புதிய பிளாக் ஸ்கிரீன் ஆஃப் டெத்-ஐ அறிமுகப்படுத்த உள்ளது.
ஏர் இந்தியா விமான விபத்து எதிரொலி: தெரபி நோக்கி செல்லும் இந்திய பயனர்கள்
சமீபத்தில் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து இந்திய பயணிகள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூலை 2ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (ஜூன் 27) முதல் ஜூலை 2ஆம் தேதி வரை மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது குறித்து தனது அனுபவத்தை விவரித்த சுபன்ஷு ஷுக்லா
சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற வரலாற்றை எழுதிய சுபன்ஷு சுக்லா, வியாழக்கிழமை தனது அனுபவத்தை விவரித்தார்.
சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தம் முடிந்தது, விரைவில் இந்தியாவுடன் 'மிகப் பெரிய' வர்த்தக ஒப்பந்தம்: டிரம்ப்
அமெரிக்கா, சீனாவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், விரைவில் இந்தியாவுடன் ஒரு "மிகப் பெரிய" ஒப்பந்தம் ஏற்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார்.