LOADING...
"நேருவின் பேச்சைக் கேளுங்கள்": போர் சூழலில் காங்கிரஸ் வதந்தி பரப்புவதாகப் பிரதமர் மோடி சாடல்!
பிரதமர் மோடி

"நேருவின் பேச்சைக் கேளுங்கள்": போர் சூழலில் காங்கிரஸ் வதந்தி பரப்புவதாகப் பிரதமர் மோடி சாடல்!

எழுதியவர் Prasanna
Mar 14, 2026
10:34 am

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு இடையே, பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சியான காங்கிரஸ் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து காங்கிரஸ் கட்சி தவறான தகவல்களைப் பரப்புவதாகப் பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, ஈரான்-இஸ்ரேல் போர் சூழலில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து நிலவும் விவாதங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் அவரது பேச்சு அமைந்தது. போர் காரணமாக இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்று காங்கிரஸ் பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மோடி

பிரதமரின் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உரைகளை மேற்கோள் காட்டிப் பேசிய மோடி, "யுத்தம் போன்ற இக்கட்டான காலங்களில் தேசத்தின் ஒற்றுமையே முக்கியம் என்று நேரு அவர்களே கூறியுள்ளார். ஆனால், அவரது வழியில் வந்த காங்கிரஸ் கட்சியினர் இன்று நாட்டின் பாதுகாப்பு குறித்து மக்களிடையே தேவையற்ற அச்சத்தையும் வதந்திகளையும் பரப்பி வருகின்றனர்" என்று சாடினார். "இந்தியா ஏற்கனவே ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி நமது கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. ஆனால், அதனை மறைத்து அரசியல் லாபத்திற்காக மக்களைக் குழப்ப நினைக்கிறார்கள்" என்று பிரதமர் மோடி மேலும் கூறினார்.

Advertisement