LOADING...

உலகம் செய்தி

உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.

24 Oct 2025
ரஷ்யா

உங்கள் அழுத்தத்திற்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்: அமெரிக்காவின் தடைகளுக்கு அதிபர் புடின் கண்டனம்

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீதான அமெரிக்க தடைகளுக்கு கடுமையான எதிர்வினையாக, வாஷிங்டன் அல்லது வேறு எந்த நாட்டின் அழுத்தத்திற்கும் மாஸ்கோ ஒருபோதும் அடிபணியாது என்று அதிபர் விளாடிமிர் புடின் வியாழக்கிழமை அறிவித்தார்.

தீவிரவாதம் பயில பெண்களுக்கான ஆன்லைன் கோர்ஸ்: ₹500 கட்டணத்தில் தொடங்கியது JeM

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது (JeM), அதன் புதிய பெண்கள் பிரிவான ஜமாத் உல்-முகமதுவுக்கு பெண்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக "துஃபத் அல்-முகமது" என்ற ஆன்லைன் பயிற்சி திட்டத்தைத் தொடங்கியுள்ளது என்று இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியை இந்தியா கிட்டத்தட்ட முற்றிலுமாக நிறுத்துமென மோடி உறுதியளித்ததாக டிரம்ப் கூறுகிறார்

பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட உறுதிமொழியை மேற்கோள் காட்டி, இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை "கடுமையாக குறைக்கும்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக டெல்லி தொடர்ந்து முதலிடம்; லாகூர் இரண்டாவது இடத்தில் உள்ளது

சுவிஸ் நிறுவனமான IQAir இன் அறிக்கையின்படி, டெல்லி உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக தொடர்கிறது.

22 Oct 2025
பாரிஸ்

Louvre அருங்காட்சியகம் கொள்ளை: திருடப்பட்ட நகைகளின் மதிப்பு $102 மில்லியனாக இருக்கலாம் என்று கணிப்பு

மூன்று நாட்களுக்குப் பிறகு, பாரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகம் புதன்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.

சவுதி அரேபியா கஃபாலா முறைக்கு முற்றுப்புள்ளி: புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கிடைத்த சுதந்திரம்!

சுமார் 50 ஆண்டுகளாக தொடர்ந்த கஃபாலா தொழிலாளர் ஸ்பான்சர்ஷிப் அமைப்பை சவுதி அரேபியா அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

மோடிக்கு பாராட்டுகளும், ரஷ்ய எண்ணெய் குறித்த மறு வாதமும்: தீபாவளியை முன்னிட்டு டொனால்ட் டிரம்ப் சொன்னது என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை வெள்ளை மாளிகையில், தனது நிர்வாகத்தில் உள்ள இந்திய-அமெரிக்க உறுப்பினர்களுடன் தீபாவளியை கொண்டாடினார்.

இந்தியத் தலையீடு குறித்த பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

பிராந்தியத்தில் நிலவும் பதட்டங்களுக்கு இந்தியாவைக் காரணமாக்கி பாகிஸ்தான் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, நியாயமற்றவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் மௌலவி முகமது யாக்கூப் முஜாஹித் கடுமையாக நிராகரித்துள்ளார்.

21 Oct 2025
அமெரிக்கா

தற்போதைய எச்-1பி விசா வைத்திருப்போருக்கு ஒரு லட்சம் டாலர் கட்டணம் இல்லை; அமெரிக்கா விளக்கம்

இந்தியப் பணியாளர்களுக்குப் பெரும் நிம்மதி அளிக்கும் விதமாக, அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவுச் சேவைகள் (USCIS) ஒரு முக்கிய விளக்கத்தை வெளியிட்டுள்ளது.

21 Oct 2025
ஜப்பான்

ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே டகாய்சி பதவியேற்பு

ஜப்பான் பாராளுமன்றம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) அன்று, அதி பழமைவாதக் கொள்கைகளைக் கொண்ட சனே டகாய்சியை நாட்டின் முதல் பெண் பிரதமராகத் தேர்ந்தெடுத்தது.

ஜி ஜின்பிங் சந்திப்புக்கு முன்னதாக சீனாவிற்கு 155% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கட்கிழமை (அக்டோபர் 20) அன்று, அதிபர் ஜி ஜின்பிங் வாஷிங்டனுடன் நியாயமான வர்த்தக ஒப்பந்தம் செய்யத் தவறினால், சீனப் பொருட்களுக்குக் கடுமையான 155 சதவீத வர்த்தக வரிகளை விதிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்தார்.

20 Oct 2025
பாரிஸ்

வெறும் ஏழு நிமிடங்களில் நடந்து முடிந்த திருட்டு; பாரிஸின் பழமையான அருங்காட்சியகத்தில் நடந்தது இதுதான்

பாரிஸில் உள்ள லூவர் அருங்காட்சியகம் இரண்டாவது நாளாக திங்கட்கிழமையும் (அக்டோபர் 20) மூடப்பட்டுள்ளது.

20 Oct 2025
உக்ரைன்

உக்ரைனை புடின் அழித்துவிடுவார்; உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கிக்கு டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையே சமீபத்தில் நடந்த சந்திப்பு, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவின் நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என்று டிரம்ப் ஆக்ரோஷமாக வலியுறுத்தியதால், கடுமையான சத்தமிடும் சண்டையாக மாறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

20 Oct 2025
ஜப்பான்

ஜப்பானில் முதல்முறை; மருந்து கடைகளில் கிடைக்கும் அவசரகால கருத்தடை மாத்திரைக்கு ஒப்புதல்

முக்கியமான கொள்கை முடிவின்படி, ஜப்பான் தனது முதல் கடை விற்பனை அவசரகால கருத்தடை மாத்திரைக்கான (Over-the-Counter Emergency Contraceptive Pill) ஒழுங்குமுறை ஒப்புதலை வழங்கியுள்ளது.

ரஷ்யாவிடம் தொடர்ந்து எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிப்பாராம்; அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கட்கிழமை (அக்டோபர் 20) அன்று, ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவதைத் தொடர்ந்தால், இந்தியா தொடர்ந்து அதிகபட்ச வரியைச் செலுத்த வேண்டியிருக்கும் என்று கடுமையாக எச்சரித்தார்.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே மீண்டும் மோதல்; போர் நிறுத்தத்தை மீறியதாக பரஸ்பரம் குற்றச்சாட்டு

தெற்கு காசா நகரின் ரஃபா மற்றும் பிற பகுதிகளில் மீண்டும் சண்டை வெடித்துள்ள நிலையில், இஸ்ரேல் ராணுவமும் ஹமாஸும் உடனடியாகப் போர்நிறுத்த மீறல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.

19 Oct 2025
பாரிஸ்

உலகப் புகழ்பெற்ற பாரிஸ் லூவர் அருங்காட்சியகம் கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து மூடப்பட்டது

உலகப் புகழ்பெற்ற பாரிஸ் நகரிலுள்ள லூவர் அருங்காட்சியகம், ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 19) அன்று கொள்ளைச் சம்பவம் ஒன்று பதிவானதைத் தொடர்ந்து திடீரென மூடப்பட்டது.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உடனடியாகப் போர் நிறுத்தத்திற்குச் சம்மதம்; தோஹா அமைதிப் பேச்சுவார்த்தையில் முடிவு

எல்லை தாண்டிய கடும் மோதல்களுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உடனடிப் போர் நிறுத்தம் செய்வதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளன.

19 Oct 2025
அமெரிக்கா

அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக ஒரே நாளில் 2500 இடங்களில் போராட்டங்கள்

அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் நியூயார்க் உட்படப் பல நகரங்களில் சனிக்கிழமை (அக்டோபர் 18) அன்று, டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றம், பாதுகாப்பு மற்றும் கல்வி ஆகிய கொள்கைகளுக்கு எதிராக மிகப்பெரிய 'ராஜாவே வேண்டாம்' (No Kings) பேரணிகள் நடைபெற்றன.

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தொடர்ந்து இரண்டாவது நாளாக வான்வழித் தாக்குதல்; பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடக்குமா?

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மண்ணில் இரண்டாவது நாளாகத் தொடர்ச்சியாக வான்வழித் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் கடுமையாக அதிகரித்துள்ளது.

18 Oct 2025
சீனா

லாட்டரிப் பணத்தை ஆபாச தள லைவ்-ஸ்ட்ரீமரிடம் வாரி இறைத்த சீன நபர்; விவாகரத்து கோரி மனைவி வழக்கு

சீனாவைச் சேர்ந்த ஒருவர், தான் வென்ற $1.4 மில்லியன் (சுமார் ₹12.3 கோடி) லாட்டரிப் பணத்தின் பெரும் பகுதியை ஒரு பெண் லைவ்-ஸ்ட்ரீமருக்கு வாரி வழங்கியதுடன், தனது மனைவிக்குப் பணம் கொடுக்காமல் ஏமாற்றியதால், இந்தச் சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

அனைத்து ஆப்கானிஸ்தானியர்களும் நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்தல்

ஆப்கானிஸ்தானுடனான எல்லை மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் ஒரு கடுமையான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இந்திய ரஷ்ய எண்ணெய் வாங்குவதை குறைந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் பேச்சு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய எண்ணெயை வாங்குவதை முழுமையாக நிறுத்துவதாகத் தனக்கு உறுதியளித்ததாக மீண்டும் கூறியுள்ளார்.

மெஹுல் சோக்ஸியை இந்தியாவுக்கு நாடு கடத்த பெல்ஜியம் நீதிமன்றம் உத்தரவு; அடுத்து என்ன?

வெளிநாட்டிற்கு தப்பியோடிய வைர வியாபாரி மெஹுல் சோக்ஸியை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான முயற்சிகளில் இந்திய அதிகாரிகளுக்கு ஒரு முக்கிய வெற்றி கிடைத்துள்ளது.

போர் நிறுத்தத்தை மீறி ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்; பேச்சுவார்த்தை திட்டமிட்டப்படி நடக்காது என தகவல்

48 மணி நேரத் தற்காலிக போர் நிறுத்தத்தை நீட்டிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்ட சில மணி நேரங்களிலேயே, பாகிஸ்தான் மீண்டும் ஆப்கானிஸ்தானின் பாக்டிகா மாகாணத்தின் பல மாவட்டங்களைத் தாக்கி புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது என்று டோலோ நியூஸ் தெரிவித்துள்ளது.

பிரிக்ஸ் அமைப்பின் புதிய வளர்ச்சி வங்கியில் சேர சீனாவிடம் பாகிஸ்தான் ஆதரவு கோரிக்கை

கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான், மேற்கத்திய நிதி நிறுவனங்களான ஐஎம்எப் மற்றும் உலக வங்கியின் கடுமையான நிபந்தனைகளிலிருந்து விலகி, நிதி ஆதாரங்களைப் பல்வகைப்படுத்த உதவும் நோக்குடன், பிரிக்ஸ் அமைப்பின் நிதிக் கிளையான புதிய வளர்ச்சி வங்கியில் (NDB) உறுப்பினராகச் சேர சீனாவின் ஆதரவை முறைப்படி நாடியுள்ளது.

இரண்டு வாரங்களில் ஜி ஜின்பிங்கைச் சந்திக்க டிரம்ப் உறுதி: வர்த்தகப் பதற்றம் தணியுமா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இன்னும் இரண்டு வாரங்களில் சந்திப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

17 Oct 2025
திரிபுரா

திரிபுராவில் மாடு திருட முயன்ற 3 பங்களாதேஷ் கடத்தல்காரர்கள் கொல்லப்பட்டதால் பதற்றம்

கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி திரிபுராவில் நடந்த வன்முறை மோதலைத் தொடர்ந்து, இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையே ராஜதந்திர மோதல் வெடித்துள்ளது. இந்தப் பூசலில் மூன்று பங்களாதேஷ் கடத்தல்காரர்கள் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார், ஆனால் நிபந்தனைகள் உண்டு; பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் பேச்சு

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லையில் சமீபத்தில் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அறிவித்தார்.

மடகாஸ்கரில் ராணுவப் புரட்சிக்குப் பிறகு கர்னல் ராண்ட்ரியானிரினா அதிபராகப் பதவியேற்பு

முன்னாள் அதிபர் ஆண்ட்ரி ராஜோலினா நாட்டை விட்டுத் தப்பி ஓடிய நிலையில், ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றிய சில நாட்களுக்குப் பிறகு, ராணுவ கர்னல் மைக்கேல் ராண்ட்ரியானிரினா வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) மடகாஸ்கரின் புதிய அதிபராகப் பதவியேற்றார்.

17 Oct 2025
காசா

காசாவில் தொற்று நோய்கள் எல்லையை மீறி பரவுகின்றன: WHO எச்சரிக்கை

காசா பகுதியில் தொற்று நோய்கள் பரவி வருவது குறித்து உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது.

17 Oct 2025
விசா

நவம்பர் 1 முதல் புதிய விதி அமல்: US விசா நேர்காணலை வெளிநாடுகளில் திட்டமிடுவது கடினம்

அமெரிக்க குடியேற்ற (Immigrant) மற்றும் குடியேற்றமற்ற (Non-Immigrant) விசா நேர்காணல்களை விண்ணப்பதாரர்கள் இனி தங்கள் சொந்த நாட்டில் அல்லது நிரந்தர வசிப்பிடத்தில் மட்டுமே எதிர்கொள்ள முடியும் என அமெரிக்க வெளியுறவுத்துறை புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் மோதலில் வைரலாகும் 93,000 பேண்ட்கள் 2.0; பின்னணி என்ன?

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த கடுமையான எல்லை மோதல்களுக்குப் பிறகு, ஒரு தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டிருந்தாலும், சமூக ஊடகங்களில் ஆப்கானிஸ்தானின் கருத்துருவாக்கம் வலுப்பெற்றுள்ளது.

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்: வங்கதேச வழக்கறிஞர்கள் கோரிக்கை 

கடந்த ஆண்டு மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களை வன்முறையில் ஒடுக்கியதில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பங்கு குறித்து வங்கதேச வழக்கறிஞர்கள் மரண தண்டனை கோரி வருகின்றனர்.

17 Oct 2025
ஹமாஸ்

ஹமாஸ் ஆதரவு செய்திகளால் அமெரிக்கா, கனடா விமான நிலையங்கள் ஹேக் செய்யப்பட்டன 

செவ்வாயன்று கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள பல விமான நிலையங்கள் ஹேக் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

17 Oct 2025
அமெரிக்கா

2028 வரை அமெரிக்காவின் கிரீன் கார்டு விசாவிற்கான லாட்டரியில் இந்தியர்கள் பங்கேற்க முடியாது; காரணம் என்ன?

அமெரிக்காவின் பன்முகத்தன்மை விசா (DV) லாட்டரி திட்டத்தில் இந்திய நாட்டினருக்குக் குறைந்தபட்சம் 2028 ஆம் ஆண்டு வரை பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

17 Oct 2025
விசா

H-1B விசா கட்டண உயர்வு: டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக அமெரிக்க வர்த்தக சம்மேளனம் வழக்கு

அமெரிக்காவில் புதிய H-1B விசாக்களுக்கான கட்டணத்தை $100,000 ஆக (இந்திய மதிப்பில் சுமார் 83 லட்சம் ரூபாய்) அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் உயர்த்தியதற்கு எதிராக, அமெரிக்க வர்த்தக சம்மேளனம் (U.S. Chamber of Commerce) நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

எல்லாத்துக்கும் காரணம் இந்தியா தான், இரு-முனை போருக்கு தயார்: அறைகூவல் விடுத்த பாகிஸ்தான் அமைச்சர்

ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்களுடன் பாகிஸ்தான் கடுமையான எல்லை மோதல்களில் ஈடுபட்டுள்ள சூழ்நிலையில், இந்தியாவை குறிப்பிட்டு பாகிஸ்தான் ஒரு முக்கியக் கருத்தை தெரிவித்துள்ளது.

காசா போர் ஓவர், அடுத்தது ரஷ்யா-உக்ரைன் போர்; புடினை நேரில் சந்திக்கவுள்ளார் டிரம்ப்

உக்ரைனில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக, புடாபெஸ்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார்.

16 Oct 2025
சீனா

சிவில் சர்வீஸ் பதவிகளுக்கான வயது வரம்பை உயர்த்திய சீனா

சீனா தனது வேலை சந்தையில் வயது பாகுபாட்டை சமாளிக்க புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

ஆப்கான் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் பேண்ட்டை விட்டுவிட்டு ஓடிய பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்? வைரலாகும் காணொளி

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) பயங்கரவாதிகளின் மறைவிடங்களை இலக்கு வைப்பதாகக் கூறி, ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.

16 Oct 2025
ரஷ்யா

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என மோடி உறுதி அளித்ததாக டிரம்ப் தகவல்; சீனாவிற்கும் நெருக்கடி தரப்போகிறாராம்!

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி தனக்கு உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

முற்றிய பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் மோதல்; உதவிக்கு கத்தார், சவுதி அரேபியாவை தொடர்பு கொள்ளும் பாக்.,

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் படைகளுக்கும், தாலிபான் போராளிகளுக்கும் இடையே ஏற்பட்ட புதிய மோதல்கள் டஜன் கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

கைபர் பக்துன்க்வா எல்லையில் பாகிஸ்தான் - தாலிபான் இடையே மீண்டும் துப்பாக்கி சண்டை 

பாகிஸ்தான் அரசு ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, செவ்வாய்க்கிழமை இரவு கைபர் பக்துன்க்வாவில் உள்ள குர்ரம் மாவட்ட எல்லையில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கும், ஆப்கானிஸ்தான் தாலிபான்களுக்கும் இடையே கடுமையான மோதல்கள் வெடித்தன.

உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் அமெரிக்கா இல்லை; இந்தியாவின் இடம் எது தெரியுமா?

ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2025 இன் படி, இரண்டு தசாப்தங்களில் முதல் முறையாக அமெரிக்காவின் பாஸ்போர்ட் உலகின் முதல் 10 சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளில் இருந்து வெளியேறியுள்ளது.

15 Oct 2025
கைது

இந்திய வம்சாவளி பிரபல அமெரிக்க ஆய்வாளர் ஆஷ்லே டெல்லிஸ் கைது: என்ன காரணம்?

இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல அமெரிக்க ஆய்வாளரும், தெற்காசிய கொள்கைக்கான நீண்டகால ஆலோசகருமான ஆஷ்லே டெல்லிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய பிரதமர், டொனால்ட் டிரம்ப் ஜூனியரின் தனிப்பட்ட எண்கள் இணையத்தில் கசிந்துள்ளன

ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் ஆகியோரின் தனிப்பட்ட தொலைபேசி எண்கள் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

14 Oct 2025
மலேசியா

மலேசியாவில் 6,000 மாணவர்கள் இன்ஃப்ளூயன்ஸாவால் பாதிப்பு; பள்ளிகள் தற்காலிகமாக மூடல்

மலேசியாவில் சுமார் 6,000 மாணவர்கள் இன்ஃப்ளூயன்ஸா (Influenza) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து குழந்தைகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக் கருதி சில பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் கல்வி அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

14 Oct 2025
காசா

காசா அமைதி உச்சி மாநாட்டில் "நல்ல நண்பர்" மோடிக்கு புகழாரம் தந்த டிரம்ப்

எகிப்தில் நடந்த காசா அமைதி உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோரை பாராட்டியதுடன், மத்தியஸ்த பேச்சுவார்த்தைகள் மூலம் பிராந்தியத்தில் அமைதியை கொண்டு வந்ததற்காக 'பெருமை' தெரிவித்தார்.

13 Oct 2025
அமெரிக்கா

தவறான தீர்ப்பால் அமெரிக்காவில் 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய அமெரிக்கர் விடுதலை; உடனே கைதுசெய்த குடியேற்றத்துறை

செய்யாத கொலைக் குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் கழித்த சுபு எனும் சுப்ரமணியம் வேதம் (64), விடுதலையான உடனேயே அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவால் (ICE) கைது செய்யப்பட்டார்.

நோபல் பரிசு உங்களுக்கு தான்: போர் நிறுத்த எதிரொலியாக டிரம்ப்பை புகழ்ந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு திங்களன்று இஸ்ரேலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

13 Oct 2025
உலகம்

ஆண்டிபயாடிக் எதிர்ப்புத் தொற்றுகள் உலகளாவிய அளவில் அதிகரித்து வருவதாக WHO எச்சரிக்கிறது 

உலகளவில் மருத்துவமனைகளில் Antibiotic-களுக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட பொதுவான தொற்றுகள் கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

நோபல் பரிசு 2025: பொருளாதாரத்திற்கான விருது மூன்று பேருக்கு கூட்டாக அறிவிப்பு

கண்டுபிடிப்பு உந்துதல் பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக ஜோயல் மொகிர், பிலிப் அக்யோன் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு கூட்டாக 2025 ஆம் ஆண்டிற்கான நோபல் பொருளாதார அறிவியல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

'இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு எனது சுங்க வரி மிரட்டல்களே காரணம்': மீண்டும் டிரம்ப் பேச்சு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே ஏற்பட்ட ராணுவ மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதில், தான் விதித்த பெரிய சுங்க வரிகளுக்கான அச்சுறுத்தலே தீர்க்கமான காரணியாக இருந்தது என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

13 Oct 2025
காசா

காசா ஒப்பந்தத்தின்படி பிணைக்கைதிகள் பரிமாற்றம் தொடங்கியது; முதல் தொகுதி இஸ்ரேலிய பிணைக்கைதிகள் ரெட் கிராஸிடம் ஒப்படைப்பு

காசாவிலிருந்து இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் நீண்டகாலமாக எதிர்பார்த்து வந்த விடுதலை ஆரம்பமாகியுள்ளது.

பிரபல பாப் பாடகியை டேட் செய்யும் கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 

பிரபல பாப் ஸ்டார் கேட்டி பெர்ரியும், கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் கலிபோர்னியாவில் ஒரு படகில் முத்தமிட்டு அரவணைத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

13 Oct 2025
இஸ்ரேல்

காசா போர் முடிந்தது: இஸ்ரேலுக்கு புறப்பட்டார் அதிபர் டொனால்ட் டிரம்ப்

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்திய பின்னர் முதல்முறையாக இஸ்ரேல் புறப்பட்டார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்.

அதிகரிக்கும் மோதல்; ஆப்கானிஸ்தான் பதிலடியைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பதற்றம் கடுமையாக அதிகரித்துள்ளது. சமீபத்தில் காபூலில் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்கானிஸ்தான் பதிலடி தாக்குதல் நடத்தியது.

12 Oct 2025
தாலிபான்

தாலிபான் பதிலடியை 58 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி; ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை ஒப்படைக்க வலியுறுத்தல்

பாகிஸ்தானுடனான பதட்டத்தை அதிகரித்து, தாலிபான் படைகள் டூரண்ட் கோடு எல்லையில் நடத்திய பதில் தாக்குதலில் 58 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் 30 பேர் காயமடைந்ததாகவும் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12) உரிமை கோரியது.

12 Oct 2025
ரஷ்யா

இந்தியா-ரஷ்யா கலாச்சார உறவுகளில் புதிய மைல்கல்; டெல்லியிலிருந்து அனுப்பிய புத்தரின் புனிதச் சின்னங்கள் கல்மியாவை அடைந்தது

இந்தியா-ரஷ்யா உறவுகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, புத்தரின் புனிதச் சின்னங்கள் ரஷ்யாவின் கல்மியா குடியரசின் தலைநகரான எலிஸ்டாவை சென்றடைந்துள்ளன.

12 Oct 2025
ஹமாஸ்

காசா அமைதி ஒப்பந்தம் குறித்து சந்தேகம் எழுப்பும் ஹமாஸ்; எகிப்தில் நடைபெறும் கையெழுத்து நிகழ்வில் பங்கேற்குமா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னெடுத்த புதிய காசா அமைதி ஒப்பந்தம், உடனடியாக சில சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது.

காபூல் தாக்குதலுக்கு பதிலடி; ஆப்கான் பதிலடியில் 12 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதில் நடந்த ஒரு பெரும் மோதலில் 12 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் பாலஸ்தீனுக்கு ஆதரவான TLP பேரணியை தடுத்ததால் கடும் வன்முறை; 11 பேர் பலி

பாகிஸ்தானின் லாகூரில் சனிக்கிழமை (அக்டோபர் 11) அன்று, தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தான் (TLP) இஸ்லாமிய அமைப்பின் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் இஸ்லாமாபாத்தை நோக்கிப் பேரணி செல்வதைத் தடுக்கப் பாதுகாப்புப் படையினர் முயன்றபோது, பலத்த வன்முறை மோதல்கள் வெடித்தன.

11 Oct 2025
பிரான்ஸ்

முடிவுக்கு வருமா பிரான்ஸ் அரசியல் முட்டுக்கட்டை? செபாஸ்டியன் லெகோர்னுவை மீண்டும் பிரதமராக நியமித்தார் இம்மானுவேல் மேக்ரான்

பிரான்ஸில் ஆழமடைந்து வரும் அரசியல் முட்டுக்கட்டையை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக, அதிபர் இம்மானுவேல் மேக்ரான், தனது பதவியை ராஜினாமா செய்த சில நாட்களிலேயே செபாஸ்டியன் லெகோர்னுவை மீண்டும் பிரதமராக வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) நியமித்தார்.