உலகம் செய்தி
உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.
ஹார்முஸ் நீரிணையில் அக்னிப் பரீட்சை: 40 வணிக கப்பல்களை பாதுகாப்பாக கடத்திய அமெரிக்கப் படை
ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க ராணுவம் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய பாதுகாக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ஈரானுடன் வர்த்தகம் செய்தால் பொருளாதாரத் தடை: இந்தியாவிற்கு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ எச்சரிக்கை
SCO உச்சிமாநாட்டின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானை சந்தித்துப் பேசிய சில நாட்களில், ஈரானுக்கு பொருளாதார ரீதியாக உதவும் நாடுகளுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து இந்தியா, சீனா, அமெரிக்காவிடம் காலநிலை இழப்பீடு கோரியுள்ளது நேபாளம்
1,000-க்கும் மேற்பட்டோரின் உயிரை பறித்த பேரழிவுகரமான திடீர் வெள்ளப்பெருக்கை தொடர்ந்து, இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய பசுமை இல்ல வாயுக்களை வெளியிடும் நாடுகளிடமிருந்து நேபாளம் காலநிலை இழப்பீடு கோரியுள்ளது.
ஈரானில் திருமண விழாவில் விழுந்த அமெரிக்க ஏவுகணை பாகங்கள்: சிறுவன் உட்பட 4 பேர் பரிதாப பலி
தெற்கு ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள கூஹெஸ்டாக் பகுதியில் திருமண நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு குடியிருப்பு வீட்டின் மீது அமெரிக்க ஏவுகணையின் சிதறிய பாகங்கள் விழுந்து தாக்கியதில், சிறுவன் ஒருவன் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
இந்தியாவிற்கு மேலும் எஸ்-400 அலகுகளை ரஷ்யா வழங்க முன்வந்துள்ளது
ரஷ்யா தனது நீண்ட தூரம் சென்று தரையிலிருந்து வான் குறிவைத்து தாக்கும் எஸ்-400 "ட்ரியம்ஃப்" ஏவுகணை அமைப்பின் மேலும் ஐந்து அலகுகளை இந்தியாவிற்கு விற்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க கிரீன் கார்டு பெற 179 ஆண்டுகள் காத்திருப்பு? இந்திய வல்லுநர்களுக்கு பேரதிர்ச்சி தகவல்
அமெரிக்காவில் வேலைவாய்ப்பு சார்ந்த கிரீன் கார்டு (நிரந்தர குடியுரிமை) பெற விரும்பும் உயர் தகுதி படைத்த இந்திய வல்லுநர்களுக்கு NFAP (National Foundation for American Policy) வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பயங்கரவாத அமைப்பை முழுமையாக ஒழிக்க வேண்டும்: பாகிஸ்தான் பிரதமர் முன்னிலையில் SCO மாநாட்டில் மோடி
கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடைபெற்ற 26வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரு வலுவான செய்தியை வழங்கினார்.
H-1B விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் பணிக்கு செல்ல அனுமதிக்கும் முறையை தடை செய்ய அமெரிக்கா நடவடிக்கை
H-1B விசா வைத்திருப்பவர்களின் குறிப்பிட்ட வாழ்க்கை துணைவர்களுக்கான பணி அனுமதிகளை ரத்து செய்ய அமெரிக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்கள் சொந்த நாடு திரும்ப புதிய வழிவகை: இலங்கை அரசு ஒப்புதல்
இந்தியாவில் தங்கியுள்ள பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழ் அகதிகள் எவ்வித சட்டப் பிரச்சனைகளுமின்றி தாயகம் திரும்புவதற்கு புதிய, எளிமையாக்கப்பட்ட வழிமுறையை இலங்கை அரசு முறைப்படி அறிவித்துள்ளது.
ஈரானுக்கு எதிராக அணுஆயுதமா? பத்திரிகையாளர் கேள்வியால் கோபமடைந்த டொனால்ட் டிரம்ப்
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் 6-வது மாதமாக நீடித்து வரும் நிலையில், ஈரானுக்கு எதிராக அணுஆயுதங்களைப் பயன்படுத்தும் வாய்ப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முற்றிலும் நிராகரித்துள்ளார்.
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கத்திக்குத்து: பெண் பலி, தாக்குதல் நடத்தியவரை சுட்டுக் கொன்ற காவல்துறை
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உலக புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் திங்கள்கிழமை பிற்பகல் கத்தியுடன் புகுந்த பெண் ஒருவர் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்; மற்றொருவர் படுகாயமடைந்தார்.
உக்ரைன் போரை முடிக்க எதையும் செய்ய இந்தியா தயார்: புடினிடம் பிரதமர் மோடி உறுதி
உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க சாத்தியமான மற்றும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஈரான் போர் பதற்றத்திற்கு மத்தியில் அதிரடி சந்திப்பு! எஸ்சிஓ மாநாட்டில் ஈரான் அதிபரை நேரில் சந்தித்த பிரதமர் மோடி
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெற்று வரும் 26வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாட்டின் இடையே, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஈரான் அதிபர் மசூத் பேஷெஷ்கியான் இடையே திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) முக்கிய சந்திப்பு நடைபெற்றது.
'ஓடு, தண்ணீர்' என்ற அலறல் சத்தம் 370 நேபாள மாணவர்கள், ஆசிரியர்களைக் காப்பாற்றியது
நேபாளத்தின் பெட்ராவதியில் உள்ள உத்தர்கயா பொதுப் பள்ளியில், 370-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பெரும் வெள்ளத்திலிருந்து காப்பாற்ற, அறிமுகமில்லாத ஒருவரின் சரியான நேரத்திலான எச்சரிக்கை உதவியிருக்கலாம்.
ஏஐ பயன்படுத்தி நேபாள பேரழிவு நிவாரணம் என்ற பெயரில் மோசடி; பணம் சுருட்டியவர் கைது
நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட கடுமையான போதேகோஷி வெள்ளப் பெருக்கிற்குப் பிறகு, நிவாரண நிதி திரட்டும் போர்வையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்ட 32 வயது நபரை நேபாள காவல்துறை அதிரடியாகக் கைது செய்துள்ளது.
கீவ் அச்சகத்தை அழித்த ரஷ்ய தாக்குதல்கள்; 13 லட்சம் பாடப்புத்தகங்கள் வீணான அவலம்
புதிய கல்வியாண்டு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, உக்ரைனின் கீவ் நகரில் ரஷ்ய ஏவுகணை தாக்குதல்கள் ஒரு அச்சகத்தை அழித்துள்ளன.
நேபாள வெள்ளப் பேரழிவிற்கு பனி ஏரி உடைப்பு காரணம் அல்ல: ஆய்வில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்
ஆகஸ்ட் 26 அன்று நேபாளத்தின் போதேகோசி-திரிசூலி ஆற்றங்கரை பகுதிகளை சீரழித்த பேரழிவு வெள்ளத்திற்கு பனி ஏரி உடைப்போ (GLOF) அல்லது பெருமழையோ காரணம் அல்ல என்றும், பனிப்பாறை சரிவே இதற்கு காரணம் என்றும் நேபாள அறிவியலாளர்களின் முதற்கட்ட ஆய்வு அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
கனடாவில் படிக்க திட்டமிடும் மாணவர்களுக்கு அதிர்ச்சி! செப்டம்பர் 1 முதல் மாறும் விதிகள்; வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கனடாவில் உயர்கல்வி பயிலத் திட்டமிடும் சர்வதேச மாணவர்களுக்கான கல்வி விசா விதிகளில் முக்கிய மாற்றங்களை அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது.
முஸ்லிம் குடும்பத்தின் உள்நாட்டு விவகாரம், அஞ்சத் தேவையில்லை! மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணைவது குறித்து வங்கதேசம் கருத்து
சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய மூன்று முக்கிய நாடுகள் இணைந்து புதிதாக உருவாக்கியுள்ள மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் சேர்வதில் வங்கதேசத்திற்கு எவ்விதப் பாதுகாப்பு அல்லது தூதரக ரீதியிலான ஆபத்தும் இல்லை என்று வங்கதேச அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
அமெரிக்க தளங்கள் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்: ஜோர்டானில் பதற்றம்
ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள லாராக் தீவு மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) திங்கள்கிழமை பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
உயிரிழப்பு 800-ஐ கடந்தநிலையில் நேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை
நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தைத் தொடர்ந்து, போதேகோஷி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்ததால் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு நேபாள அரசு புதிய அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது.
உண்மையான எதிரியை அடையாளம் காணுங்கள்! இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் தலைவர் முஜ்தபா காமேனி பரபரப்பு கடிதம்
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போர் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள சூழலில், ஈரானின் உச்ச மதத் தலைவர் முஜ்தபா காமேனி பிராந்தியத்தில் உள்ள இஸ்லாமிய நாடுகளுக்கு ஒரு முக்கிய எழுத்துப்பூர்வ செய்தியை அனுப்பியுள்ளார்.
பேச முடியாத மகனுக்காக கையில் கீபோர்டு டாட்டூ! சார்ஜ் தீராத தாயின் அன்பு; இணையத்தைக் கலக்கும் நெகிழ்ச்சி சம்பவம்
அமெரிக்காவை சேர்ந்த ஜெசிகா பிளெட்சர் என்ற தாய், தனது 11 வயது ஆட்டிசம் பாதிக்கப்பட்ட மகனான ஹண்டருடன் உரையாடுவதற்காகத் தனது கையில் ஆங்கில எழுத்துக்கள் அடங்கிய கீபோர்டு டாட்டூவை வரைந்து கொண்டுள்ளார்.
இந்தியாவுக்கு நீண்ட கால யுரேனியம் வழங்க உஸ்பெகிஸ்தான் சம்மதம்! பிரதமர் மோடிக்கு உயரிய விருது வழங்கி கௌரவிப்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உஸ்பெகிஸ்தான் பயணத்தின் போது, இரு நாடுகளுக்கு இடையிலான உறவு விரிவான உத்திசார் கூட்டாண்மை நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
வர்த்தகம் முதல் பாதுகாப்பு வரை! பிரதமர் மோடி - அதிபர் மிர்சியோயேவ் இடையே தூதுக்குழு அளவிலான முக்கிய பேச்சுவார்த்தை
அரசுமுறைப் பயணமாக உஸ்பெகிஸ்தான் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் தாஷ்கண்டில் அந்த நாட்டு அதிபர் ஷவ்காத் மிர்சியோயேவ் உடன் தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தையை நடத்தினார்.
தாஷ்கண்டில் யோகா செய்த பிரதமர் மோடி! உஸ்பெகிஸ்தான் பயணத்தில் மிளிர்ந்த கலாச்சார பிணைப்பு
இரண்டு நாள் அரசுமுறை பயணமாக உஸ்பெகிஸ்தான் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் தாஷ்கண்டில் உள்ள யோகா கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு யோகா அமர்வில் கலந்துகொண்டார்.
4 மணி நேரப் போராட்டம், மீண்டெழுந்த 97 வயது மூதாட்டி! நேபாளத்தை உலுக்கிய வெள்ளத்தில் போராடி மீண்ட கதை
நேபாள நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், இடிபாடுகளுக்குள் சிக்கிய 97 வயது மூதாட்டி குண மாயா போஹாரா என்பவர் 4 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
வாழும் நாட்டிற்கு உண்மையா இருங்க! நியூயார்க் மேடிசன் சதுக்கத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உரை
நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற மேடிசன் சதுக்க மண்டபத்தில் நடைபெற்ற 'அனைவருக்குமான ஒற்றுமை கொண்டாட்டம்' நிகழ்வில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு உரையாற்றினார்.
விமான நிலையத்திற்கே நேரில் வந்து வரவேற்பு! பிரதமர் மோடியை வரவேற்ற உஸ்பெகிஸ்தான் அதிபர்
இருதரப்பு உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) மாலை உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்ட் சென்றடைந்தார்.
இந்தியாவுக்கு எதிராக கல்வான் மோதலை நடத்திய தளபதி திடீரென பதவி நீக்கம்: சீன அதிபர் ஜி ஜின்பிங் நடவடிக்கை
கடந்த 2017ல் டோக்லாம் மற்றும் 2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியப் படைகளுக்கு எதிராக சீன ராணுவ நடவடிக்கைகளை வழிநடத்திய வெஸ்டர்ன் தியேட்டர் கமாண்ட் அமைப்பின் முன்னாள் தளபதி ஜெனரல் ஜாவோ ஜோங்கி, சீன அரசின் உயரிய அரசியல் ஆலோசனைக் குழுவான CPPCC அமைப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
எந்த நேரத்திலும் ஏரி உடையலாம்! நேபாளத்தை அச்சுறுத்தும் புதிய பேரழிவு; சீனா அவசர எச்சரிக்கை
சீனா மற்றும் நேபாள எல்லைப் பகுதியில் பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட பயங்கர வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, லெண்டே ஆற்றுப் படுகையின் மேல் பகுதியில் புதிதாக உருவான இயற்கை ஏரி எந்த நேரத்திலும் கரையுடைந்து பேரழிவை ஏற்படுத்தலாம் என சீனா மீண்டும் எச்சரித்துள்ளது.
உதவி வேண்டாம் என மறுத்த நேபாள அரசு திடீர் யூ-டர்ன்; இந்தியா, சீனாவின் மீட்புக் குழுக்களுக்கு அனுமதி
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் பல நாட்டுப் பிரஜைகள் மாயமானதைத் தொடர்ந்து, வெளிநாட்டு மீட்புக் குழுக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நேபாள அரசு உடனடியாகத் திரும்பப் பெற்றுள்ளது.
இனி வெனிசுலாவின் 65 பில்லியன் பேரல் கச்சா எண்ணெய் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்; டிரம்ப் அதிரடி
அமெரிக்கா மற்றும் வெனிசுலா நாடுகளுக்கு இடையே உலக வரலாற்றிலேயே மிக மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது டிரூத் சோஷியல் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
வாக்கெடுப்பில் தில்லுமுல்லு! போராட்டங்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் புதிய பிரதமராக இப்திகார் கிலானி தேர்வு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிர மக்கள் போராட்டங்கள் மற்றும் பெரிய அளவிலான தேர்தல் தில்லுமுல்லு குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவர் பாரிஸ்டர் இப்திகார் அலி கிலானி புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நேபாளம்: நிரம்பி வழியும் சவக்கிடங்குகள், வெள்ளத்தில் இறந்தவர்கள் சடலங்கள் உலர் பனிக்கட்டியில் பாதுகாக்கப்படும் அவலம்
நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 547 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பல மாவட்டங்களில் உள்ள சவக்கிடங்குகள் நிரம்பி வழிகின்றன.
16 நிமிட தாமதம் ஏற்படுத்திய பேரழிவு: நேபாள வெள்ள எச்சரிக்கை அமைப்பில் என்ன நடந்தது? முழு விபரம்
ஆகஸ்ட் 2026-இல் நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாவதற்கு காரணியாக 16 நிமிடத் தகவல் தாமதம் அமைந்திருந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
8 நாடுகளின் மீட்புக் குழுக்களை நேபாளம் நிராகரித்தது ஏன்? பின்னணித் தகவல்கள்
நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் பலி எண்ணிக்கை 472 ஆக உயர்த்துள்ள நிலையில், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட 8 வெளிநாடுகள் அனுப்ப முன்வந்த தேடல் மற்றும் மீட்புக் குழுக்களை நேபாளத்தின் பாலேன் ஷா அரசு நிராகரித்துள்ளது.
திபெத்தில் மீண்டும் உடைந்த அணை: நேபாளத்தில் அவசர சிவப்பு எச்சரிக்கை; மீட்புக் குழுவினர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்
நேபாள-திபெத் எல்லையில் புதன்கிழமை ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தால் 469 பேர் பலியாகி, 1,500-க்கும் மேற்பட்டோரைக் காணாமல் போயுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை திபெத் பகுதியில் மீண்டும் ஓர் அணை உடைந்ததால் நேபாளத்தில் புதிய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா நேட்டோ நாடுகளைத் தாக்காது! சிஐஏ இயக்குநரின் திடீர் ரஷ்ய பயணத்திற்குப் பின் டிரம்ப் விளக்கம்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேட்டோ அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் எல்லைகள் மீது எந்தவொரு ராணுவத் தாக்குதலையும் நடத்த மாட்டார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
சீனாவிடமிருந்து 20 J-10CE போர் விமானங்களை வாங்க வங்கதேசம் முடிவு: பின்னணியில் ஆபரேஷன் சிந்தூர் காரணம்
வங்கதேசத்தில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான புதிய அரசு தனது விமானப்படையை புதுப்பித்து நவீனப்படுத்தும் நோக்கில், சீனாவிடமிருந்து 20 J-10CE மல்டிரோல் போர் விமானங்களை வாங்கத் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஹார்முஸ் ஜலசந்தியில் வைக்கப்பட்ட கண்ணிவெடிகள் அகற்றம்: அமெரிக்க சென்ட்காம் தளபதி அறிவிப்பு
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிலவி வரும் சூழலில், உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படையினரால் (IRGC) வைக்கப்பட்டிருந்த கடல் கண்ணிவெடிகளை அமெரிக்கப் படைகள் வெற்றிகரமாக அகற்றியுள்ளன.