LOADING...

உலகம் செய்தி

உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.

29 Nov 2025
இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: 120க்கும் மேற்பட்டோர் பலி; இலங்கையில் அவசர நிலை பிரகடனம்

டித்வா புயலின் காரணமாக ஏற்பட்ட கடும் பாதிப்புகளைத் தொடர்ந்து, இலங்கையின் அதிபர் அனுரா குமார திசநாயக்க, நாடு முழுவதும் அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ளார்.

29 Nov 2025
இலங்கை

இலங்கையில் டித்வா புயலின் கோரத் தாண்டவம்: பலி எண்ணிக்கை 123 ஆக உயர்வு

டித்வா புயலால் தூண்டப்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இலங்கையில் பலி எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளதுடன், மேலும் 130 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை மையம் சனிக்கிழமை (நவம்பர் 29) தெரிவித்துள்ளது.

29 Nov 2025
ரஷ்யா

விளாடிமிர் புடினின் வருகைக்கு முன் இந்தியாவுடனான முக்கிய ராணுவ ஒப்பந்தத்தை அங்கீகரிக்கிறது ரஷ்யா

வரும் டிசம்பர் 4-5 தேதிகளில் நடைபெறவுள்ள 23வது இருதரப்பு உச்சி மாநாட்டிற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான முக்கிய ராணுவ தளவாட ஒப்பந்தத்தை ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ்சபை அங்கீகரிக்கத் தயாராகி வருகிறது.

29 Nov 2025
விமானம்

விமானப் பயணங்களில் பெரும் இடையூறு: 6,000 ஏ320 விமானங்களின் மென்பொருளை உடனடியாக அப்கிரேட் செய்ய ஏர்பஸ் உத்தரவு

ஏர்பஸ் தயாரித்த சுமார் 6,000 ஏ320 ரக விமானங்கள் மென்பொருள் மேம்படுத்தலை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், உலகம் முழுவதும் விமானப் பயணங்களில் பெரும் பாதிப்பு மற்றும் ரத்துகள் ஏற்பட்டுள்ளன.

பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தியது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்; பின்னணி என்ன?

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாகிஸ்தான் நாட்டினருக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது.

28 Nov 2025
அமெரிக்கா

மூன்றாம் உலக நாடுகளுக்கான குடியேற்றத்தை இடைநிறுத்திய டிரம்ப்; இந்தியாவும் இதில் அடக்கமா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "மூன்றாம் உலக நாடுகள்" என்று அவர் அழைப்பவற்றிலிருந்து இடம்பெயர்வதை "நிரந்தரமாக நிறுத்த" அழைப்பு விடுத்துள்ளார்.

பறவைக் காய்ச்சல் வைரஸ் மட்டும் உருமாற்றம் அடைந்தால் கொரோனாவை விட ஆபத்து; பிரெஞ்சு நிறுவனம் எச்சரிக்கை

பறவைகள், கோழிகள் மற்றும் பாலூட்டிகளிடையே பரவி வரும் பறவைக் காய்ச்சல் வைரஸ், மனிதர்களுக்கு இடையில் பரவும் வகையில் உருமாற்றம் அடைந்தால், அது கொரோனாவை விட மோசமான பெருந்தொற்றாக மாறக்கூடும் என்று பிரான்சின் இன்ஸ்டிட்யூட் பாஸ்டர் சுவாச நோய்த் தொற்று மையத்தின் இயக்குநர் மாரி-ஆன் ராமெக்ஸ்-வெல்டி எச்சரித்துள்ளார்.

28 Nov 2025
நேபாளம்

இந்திய பிரதேசங்களுடன் அச்சிடப்பட்ட நேபாள ரூபாய் நோட்டு குறித்து தூதர் கூறுவது என்ன?

லிபுலேக், லிமியாதுரா மற்றும் காலாபாணி ஆகிய சர்ச்சைக்குரிய பிரதேசங்களில் இந்தியாவுடன் ராஜதந்திர ரீதியாக ஈடுபடுமாறு முன்னாள் இராஜதந்திரி கே.பி. ஃபேபியன் நேபாளத்தை வலியுறுத்தியுள்ளார்.

டிசம்பர் 4-5 தேதிகளில் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா வருகிறார்

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், 23வது இந்தியா-ரஷ்யா ஆண்டு உச்சிமாநாட்டிற்காக டிசம்பர் 4 முதல் 5, 2025 வரை இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வார் என்று வெளியுறவு அமைச்சகம் (MEA) அறிவித்துள்ளது.

'உயிரோடு இருப்பதற்கான ஆதாரம் இல்லை': உலகளாவிய தலையீட்டை நாடும் இம்ரான் கானின் மகன் 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மகன் காசிம் கான், தனது தந்தையின் பாதுகாப்பு குறித்த அச்சங்களுக்கு மத்தியில் சர்வதேச தலையீட்டிற்கு பொது வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மூன்றாம் உலக நாடுகளிலிருந்து இடம்பெயர்வு நிரந்தரமாக நிறுத்தப்படும்: டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அமைப்பு முழுமையாக மீண்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப அனுமதிக்கும் வகையில், அனைத்து 'மூன்றாம் உலக நாடுகளிலிருந்தும்' இடம்பெயர்வுகளை நிரந்தரமாக நிறுத்துவதற்கு தனது நிர்வாகம் செயல்பட்டு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார்.

28 Nov 2025
இலங்கை

இலங்கையில் கடும் மழை வெள்ளத்தால் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மூடல்; பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு

இலங்கையில் கடந்த வாரத்தில் தொடங்கிய கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவாக மாறியதையடுத்து, பலி எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.

28 Nov 2025
ஹாங்காங்

ஹாங்காங் தீ விபத்தில் பலி எண்ணிக்கை 94 ஆக உயர்வு; மூவர் கைது

ஹாங்காங்கில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் (Wang Fuk Court) அடுக்குமாடிக் குடியிருப்புக் கூட்டத்தில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் பலி எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது.

28 Nov 2025
அமெரிக்கா

அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவல்படி, அலாஸ்காவின் ஆங்கரேஜ் பெருநகரப் பகுதியில் உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை (நவம்பர் 27) காலை 8:11 மணியளவில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

பாகிஸ்தானில் இனி அசிம் முனீர் தான் எல்லாம்; முப்படைகள் மற்றும் அணு ஆயுதங்களின் தலைவராக நியமனம்

பாகிஸ்தான் ராணுவத் தளபதி சையத் அசிம் முனீர் வியாழக்கிழமை (நவம்பர் 27) நாட்டின் முதல் முப்படைகளின் தலைமை தளபதியாக (Chief of Defence Forces - CDF) பதவியேற்றுள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது

நில ஒதுக்கீடு தொடர்பான மூன்று ஊழல் வழக்குகளில் வங்கதேச நீதிமன்றம் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

27 Nov 2025
அமெரிக்கா

அமெரிக்க F-1 மாணவர் விசா சீர்திருத்தங்கள்: 'Intent to Leave' விதியால் இந்திய மாணவர்களுக்கு ஏற்படும் தாக்கம் என்ன?

அமெரிக்காவில் சர்வதேச மாணவர்களுக்கான F-1 விசா விதிகளை மாற்றுவது குறித்து அமெரிக்க அரசாங்கத்தின் பல்வேறு மட்டங்களில் (சட்டம் மற்றும் நிர்வாகத் துறைகள்) இரண்டு முக்கிய முன்மொழிவுகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

இம்ரான் கான் இறந்துவிட்டதாக வதந்திகள் பரவியதை அடுத்து பாகிஸ்தான் சிறைச்சாலை பதிலளித்துள்ளது

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறைக்குள் கொல்லப்பட்டதாக வதந்திகள் பரவியதை அடுத்து, அவர் உயிருடன் இருப்பதாகவும், நலமுடன் இருப்பதாகவும் பாகிஸ்தானின் அடியாலா சிறை நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

வெள்ளை மாளிகை துப்பாக்கிச் சூடு எதிரொலி: ஆப்கானியர்களுக்கான குடிவரவு விண்ணப்பங்கள் காலவரையின்றி நிறுத்தி வைப்பு

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் தேசிய காவல்படை வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) நிர்வாகம் ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

27 Nov 2025
ஹாங்காங்

ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்பில் கொடூர தீ விபத்து; 44 பேர் பலி, 300 பேர் மாயம்

ஹாங்காங்கில் உள்ள டாய் போ (Tai Po) மாவட்டத்தில் உயரமான குடியிருப்பு கட்டிடங்களில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது 44 பேர் உயிரிழந்தனர் மற்றும் சுமார் 300 பேர் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு: 2 தேசிய காவல்படை வீரர்கள் கவலைக்கிடம்

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகைக்கு அருகே நேற்றிரவு (புதன்கிழமை) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், தேசிய காவல்படையை சேர்ந்த இரண்டு வீரர்கள் படுகாயமடைந்தனர்.

இம்ரான் கான் படுகொலை செய்யப்பட்டாரா? அசிம் முனீர் அவரைக் கொன்றதாக தகவல்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைக்குள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை சந்திக்க வேண்டுமென சகோதரிகள் போராட்டம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆகஸ்ட் 5, 2023 அன்று கைது செய்யப்பட்ட பின்னர் தற்போது ராவல்பிண்டியின் அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

26 Nov 2025
இஸ்ரேல்

'இந்தியாவின் பாதுகாப்பில் முழு நம்பிக்கை': நெதன்யாகுவின் வருகை ஒத்திவைக்கப்பட்டது குறித்து இஸ்ரேல் 

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இந்தியா வருகைக்கான புதிய தேதி ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாக அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

26 Nov 2025
விசா

இந்தியாவில் அதிக H-1B விசா மோசடி குறிப்பாக சென்னையில் என அமெரிக்க பொருளாதார வல்லுநர் குற்றச்சாட்டு

அமெரிக்காவில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பொருளாதார வல்லுநரான டாக்டர் டேவ் பிராட், H-1B விசா நடைமுறையில் அளவில்லா மோசடி நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட வனவிலங்குகள்: அண்டார்டிகாவை தாக்கிய கொடிய H5N1 வைரஸ்

சமீபத்திய ஆய்வில், H5N1 பறவை காய்ச்சல் வைரஸ் தற்போது அண்டார்டிகாவை அடைந்துள்ளது தெரியவந்துள்ளது.

25 Nov 2025
ஷாங்காய்

ஷாங்காய் விமான நிலையத்தில் அருணாச்சலப் பெண் துன்புறுத்தப்பட்ட விவகாரம்; மறுக்கும் சீனா, எதிர்க்கும் இந்தியா

ஷாங்காய் விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரிகள் இந்திய பெண்ணை துன்புறுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது.

25 Nov 2025
இஸ்ரேல்

டெல்லி குண்டுவெடிப்பை தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இந்திய வருகையை ரத்து செய்தார்

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

10,000 ஆண்டுகளுக்குப் பின் எத்தியோப்பியா எரிமலை வெடிப்பு: அபுதாபிக்குச் சென்ற இண்டிகோ விமானம் திருப்பி விடப்பட்டது

எத்தியோப்பியாவில் சுமார் 10,000 ஆண்டுகளுக்குப் பிறகு ஹெய்லி குப்பி (Hayli Gubbi) எரிமலை திடீரென வெடித்ததைத் தொடர்ந்து, கண்ணூரில் இருந்து அபுதாபிக்குச் சென்ற இண்டிகோ விமானம் 6E 1433, பாதுகாப்பு நடவடிக்கையாக அகமதாபாத் விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டது.

24 Nov 2025
ஜெர்மனி

ஐரோப்பாவின் வலிமையான இராணுவத்தை உருவாக்க கட்டாய இராணுவச் சேவை மசோதாவை அறிமுகப்படுத்துகிறது ஜெர்மனி

ஐரோப்பாவின் வலிமையான இராணுவத்தை உருவாக்குவது என்ற லட்சிய இலக்கை ஜெர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ் நிர்ணயித்துள்ளார்.

பாஸ்போர்ட் விவகாரத்தில் ஷாங்காயில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்ட அருணாச்சல பிரதேச பிரஜை 

அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த இங்கிலாந்து வாசியான பெமா வாங்ஜோம் தோங்டாக், ஷாங்காய் புடாங் விமான நிலையத்தில் சீன குடியேற்ற அதிகாரிகள் தன்னை தடுத்து வைத்து துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

பாகிஸ்தான் படை தலைமையகத்தில் தற்கொலைத் தாக்குதல்; உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள துணை ராணுவப் படையின் தலைமையகமான ஃபிரன்டியர் கார்ப்ஸ் (Frontier Corps -FC) தலைமையகத்தின் மீது திங்கட்கிழமை காலை துப்பாக்கி ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

24 Nov 2025
அமெரிக்கா

சைலண்டாக இழுத்து மூடப்பட்ட DOGE துறை; எலான் மஸ்க் தலைமையிலான பிரிவின் செயல்பாடுகள் முடக்கம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பால் உருவாக்கப்பட்ட, அரசு கட்டமைப்பில் சீர்திருத்தம் மற்றும் செலவுகளை குறைக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட "அரசு செயல்திறன் துறை" (Department of Government Efficiency - DOGE), அதன் பணிக்காலம் முடிவதற்கு எட்டு மாதங்களுக்கு முன்னதாகவே ரத்து செய்யப்பட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.

நன்றி தெரிவிக்கவில்லை என ட்ரம்ப் கூறிய குற்றச்சாட்டுக்கு உக்ரைன் பதிலடி

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்கா செய்த உதவிகளுக்கு உக்ரைன் "எந்த நன்றியும் தெரிவிக்கவில்லை" என்று வைத்த குற்றச்சாட்டுக்கு விரிவான பதிலை கொடுத்துள்ளார்.

ஐநா பாதுகாப்பு சபை சீர்திருத்தம் காலத்தின் கட்டாயம்; IBSA கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா (IBSA) தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ஐநா சபையின் பாதுகாப்புச் சபையில் (UNSC) சீர்திருத்தம் கொண்டு வருவது இனி ஒரு விருப்பத் தேர்வு அல்ல, அது ஒரு கட்டாயம் என்று வலியுறுத்தினார்.

ஜி20 உச்சி மாநாடு: உலகளாவிய வளர்ச்சிக்காக 6 புதிய திட்டங்களை முன்மொழிந்தார் பிரதமர் மோடி

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற ஜி20 தலைவர்கள் உச்சிமாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி உலகளாவிய வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பை நோக்கமாகக் கொண்ட ஆறு புதிய திட்டங்களை முன்மொழிந்தார்.

22 Nov 2025
ஜி20 மாநாடு

ஜி20 உச்சி மாநாடு: ஆப்பிரிக்காவில் 3 முக்கியத் திட்டங்களை வெளியிட்ட பிரதமர் மோடி

ஆப்பிரிக்காவில் முதன்முறையாக நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின் தொடக்க அமர்வில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, உலகளாவிய வளர்ச்சிக் கட்டமைப்புகளை மறுபரிசீலனை செய்ய அழைப்பு விடுத்ததுடன், அறிவுப் பகிர்வு, திறன் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவது ஆகிய மூன்று முக்கியத் திட்டங்களை வெளியிட்டார்.

ஜி20 உச்சி மாநாடு: தென்னாப்பிரிக்காவில் இருந்து தமிழில் ட்வீட் செய்த மோடி; பின்னணி என்ன?

ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்கச் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள இந்திய வம்சாவளியினரின் கலாசார நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்ததுடன், அவர்களின் உணர்வுகளைப் பாராட்டித் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

நைஜீரியாவில் பயங்கரம்: கத்தோலிக்கப் பள்ளியில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் கடத்தல்

ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவின் வடக்குப் பகுதிகளில் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், நைஜர் மாகாணத்தில் உள்ள அகவாரா சமூகத்தில் அமைந்துள்ள செயின்ட் மேரி கத்தோலிக்கப் பள்ளியில் நேற்று அதிகாலையில் ஆயுதம் தாங்கிய கும்பல் புகுந்து, 215 மாணவ மாணவிகளையும் 12 ஆசிரியர்களையும் கடத்திச் சென்றுள்ளனர்.

21 Nov 2025
அமெரிக்கா

அமெரிக்காவில் குடியேறிகளுக்கு அதிர்ச்சி: 'கிரீன் கார்டு' பெற SNAP, Medicaid பயன்படுத்தினால் ஆபத்து?

அமெரிக்காவில் நிரந்தர வசிப்பிட உரிமையான 'கிரீன் கார்டு' பெற விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு, ட்ரம்ப் நிர்வாகம் ஒரு புதிய குடியேற்ற விதியை முன்மொழிந்துள்ளது.

சுவிஸ் ஆல்ப்ஸில் செயற்கை பூகம்பங்களை தூண்டும் விஞ்ஞானிகள்; இதுதான் காரணம்

ஸ்விட்சர்லாந்து ஆல்ப்ஸ் மலைகளுக்கு அடியில் உள்ள ஒரு சுரங்கப்பாதையில் விஞ்ஞானிகள் குழு வேண்டுமென்றே சிறிய நிலநடுக்கங்களை ஏற்படுத்தி வருகிறது.

இறுதி எச்சரிக்கை: தாலிபான்கள் உடன்படாவிட்டால் ஆப்கானிஸ்தான் ஆட்சி மாற்றத்தை முன்னெடுக்க பாகிஸ்தான் திட்டம்

பாதுகாப்பு கோரிக்கைகள் மற்றும் நல்லிணக்க முயற்சிகளுக்கு உடன்படுமாறு ஆப்கானிஸ்தான் தாலிபான் தலைமைக்கு பாகிஸ்தான் இறுதிச் செய்தியை அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

21 Nov 2025
அமெரிக்கா

உக்ரைன் ஈடுபாடு இன்றி அமெரிக்கா உருவாக்கிய ரஷ்யா- உக்ரைன் போர் நிறுத்த திட்டம்

ரஷ்யா-உக்ரைன் போரை விரைந்து முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட 28 அம்ச சமாதானத் திட்டத்தை அமெரிக்கா உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியிடம் முறைப்படி வழங்கியுள்ளது.

21 Nov 2025
பிரிட்டன்

பிரிட்டனின் புதிய குடியுரிமை கொள்கை: யாருக்கு பாதிப்பு ஏற்படும்?

பிரிட்டன் அரசு, கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குடியேற்ற கொள்கைகளில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை அறிவித்துள்ளது.

பிரேசில் COP30 பருவநிலை மாநாட்டில் தீ விபத்து: 21 பேர் காயம்

பிரேசிலின் பெலெம் (Belém) நகரில் நடைபெற்று வரும் COP30 பருவநிலை உச்சி மாநாட்டின் அரங்கில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.

இந்தோனேசியாவின் செராம் தீவில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் செராமில் திங்களன்று 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) உறுதிப்படுத்தியது.

20 Nov 2025
நேபாளம்

நேபாளத்தில் வெடித்த Gen Z போராட்டம்; ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது 

இந்தியாவின் பீகார் மாநில எல்லையை ஒட்டியுள்ள நேபாளத்தின் பாரா மாவட்டத்தில் இரண்டாவது நாளாக தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது.

20 Nov 2025
விசா

கிரியேட்டிவ் துறை நிபுணர்கள் ஓமனில் 10 ஆண்டுகள் தங்கி பணிபுரிய வாய்ப்பு; புதிய விசா அறிமுகம்

படைப்பாற்றல் மற்றும் அறிவார்ந்த ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் வகையில், ஓமன் நாடு புதிய கலாச்சார விசா பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளது.

திறமையான குடியேறிகளை அமெரிக்கா வரவேற்கும்: H1B விவகாரத்தில் நிலைப்பாட்டை மாற்றிய டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், திறமையான குடியேறிகளை நாட்டிற்கு வரவேற்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

20 Nov 2025
இஸ்ரேல்

காசா மற்றும் லெபனானில் இஸ்ரேல் புதிய தாக்குதல்: 25 பேர் கொல்லப்பட்டதாக தகவல்

இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) வியாழக்கிழமை (நவம்பர் 20) காசா நகரம் மற்றும் கான் யூனிஸ் பகுதிகளில் ஒரு புதிய தாக்குதலை நடத்தியுள்ளன.

20 Nov 2025
ரஷ்யா

சைலண்டாக டிரம்ப் செய்த வேலை; 28 அம்ச ரஷ்யா - உக்ரைன் அமைதி திட்டத்திற்கு ஒப்புதல்

நீண்ட காலமாக தொடர்ந்து வரும் ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இறங்கியுள்ளார்.

எப்ஸ்டீன் பாலியல் வழக்கு: ரகசிய ஆவணங்களை வெளியிட அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு

அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான ரகசிய ஆவணங்களை உடனடியாக வெளியிட வேண்டும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

20 Nov 2025
அமெரிக்கா

இந்திய ராணுவத்திற்கு மேலும் வலுசேர்க்கும் அமெரிக்கா: ரூ.823 கோடி மதிப்பிலான ஆயுத விற்பனைக்கு ஒப்புதல்

இந்தியாவின் பாதுகாப்பு திறனை மேம்படுத்தும் வகையில், சுமார் 93 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.823 கோடி) மதிப்பிலான அதிநவீன ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

'நாங்கள் செங்கோட்டையையும், காஷ்மீரின் காடுகளையும் தாக்கினோம்': பாகிஸ்தான் அமைச்சரின் பெரிய ஒப்புதல் வாக்குமூலம்

அதிர்ச்சியூட்டும் வகையில், செங்கோட்டை அருகே சமீபத்தில் நடந்த கார் குண்டுவெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டதில் பாகிஸ்தான் தலைவர் சவுத்ரி அன்வாருல் ஹக் தனது நாட்டின் தொடர்பை ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.

சிட்னியில் கார் மோதி 8-மாத கர்ப்பிணியான இந்திய வம்சாவளி ஐடி பொறியாளர் உயிரிழப்பு

சிட்னியின் ஹார்ன்ஸ்பை புறநகர் பகுதியில் நடந்த ஒரு பயங்கரமான கார் விபத்தில் எட்டு மாத கர்ப்பிணியான இந்திய வம்சாவளி பெண் ஒருவர் உயிரிழந்தார்.

பத்திரிகையாளர் கஷோகி கொலைக்கும் சவுதி இளவரசருக்கும் தொடர்பில்லை: உளவுத்துறையின் அறிக்கையை நிராகரித்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை(MBS), பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கில் சம்மந்தமில்லை என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

19 Nov 2025
அமெரிக்கா

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 200 இந்தியர்கள்: சல்மான்கான் வழக்கில் தேடப்பட்ட அன்மோல் பிஷ்னோயும் அதில் அடக்கம்

சட்டவிரோதமாக குடியேறிய 197 பேர் மற்றும் சில முக்கிய குற்றவாளிகள் உட்பட மொத்தம் 200 இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியுள்ளது.

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து வங்கதேசத்தில் கொதிப்பு; 2 பேர் கொல்லப்பட்டனர்

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) திங்களன்று மரண தண்டனை விதித்ததை தொடர்ந்து வங்கதேசத்தில் வன்முறை மோதல்கள் நடந்தன.

18 Nov 2025
ஈரான்

இந்தியர்களுக்கு விசா-இல்லா நுழைவை ரத்து செய்த ஈரான்: மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை

இந்திய பயணிகளுக்கான விசா இல்லாத நுழைவை ஈரானிய அரசு ரத்து செய்துள்ளது.

கிரீன் கார்டு விதிகளை கடுமையாக்க டிரம்ப் பரிசீலனை; யார் பாதிக்கப்படுவார்கள்? 

ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பயணத் தடையால் பாதிக்கப்பட்ட நாடுகளின் குடிமக்களுக்கு கடுமையான கிரீன் கார்டு விதிமுறைகளை அமெரிக்க நிர்வாகம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டியது இந்தியாவின் கடமை; பங்களாதேஷ் வலியுறுத்தல்

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாத்துஸ்ஸமான் கான் கமல் ஆகியோரை உடனடியாக நாடு கடத்த வேண்டும் என்று பங்களாதேஷ், இந்தியாவை வலியுறுத்தியுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த கிளர்ச்சியின் போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக கூறி, ஒரு சிறப்புத் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்துள்ளது உலகெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்; ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு

பங்களாதேஷில் கடந்த ஜூலை 2024 மாணவர் போராட்டத்தின் போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், பதவியில் இருந்து நீக்கப்பட்டப் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது இரண்டு மூத்த உதவியாளர்களுக்கு எதிரானத் தீர்ப்பை சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) இன்று வழங்கியது.

17 Nov 2025
ரஷ்யா

ரஷ்யாவின் கூட்டாளிகள் மீதான 500% கட்டணத் திட்டங்களை ஆதரித்த டிரம்ப்; இந்தியாவும் இதில் அடங்கும்

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 500% வரை வரி விதிக்கும் புதிய செனட் மசோதாவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவில் கோர விபத்து: இந்திய ஹஜ் பயணிகளின் பஸ் - டேங்கர் மோதல்; 42 பேர் பலி

சவுதி அரேபியாவில் மெக்காவிலிருந்து மதீனாவுக்கு சென்று கொண்டிருந்த இந்திய உமரா யாத்ரீகர்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில், 42 இந்தியப் பயணிகள்பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

வங்கதேசத்தில் பதற்றம்: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான வழக்கில் இன்று தீர்ப்பு

பங்களாதேஷின் முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனா மீது சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) வழங்கவிருக்கும் தீர்ப்புக்கு முன்னதாக, தலைநகர் டாக்காவில் (Dhaka) குண்டுவெடிப்புகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

நவம்பர் 17: அடக்குமுறைக்கு எதிரான மாணவர் வீரத்தின் அத்தியாயம்; சர்வதேச மாணவர் தினத்தின் வரலாற்றுப் பின்னணி

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 17 ஆம் தேதி சர்வதேச மாணவர் தினம் (International Students Day) கொண்டாடப்படுகிறது.

16 Nov 2025
மெக்சிகோ

மேயர் கொலை, போதைப்பொருள் வன்முறைக்கு எதிராக மெக்சிகோவில் Gen Z இளைஞர்கள் மாபெரும் போராட்டம்

மெக்சிகோவில் மேயர் கார்லோஸ் மான்சோ கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் கும்பல் வன்முறை, ஊழல் மற்றும் பாதுகாப்பின்மை ஆகியவற்றைக் கண்டித்தும், மெக்சிகோ சிட்டி உட்படப் பல நகரங்களில் பல்லாயிரக்கணக்கான Gen Z இளைஞர்கள் சனிக்கிழமை (நவம்பர் 15) மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.