உலகம் செய்தி
உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.
'தோஹா தாக்குதலுக்கு முன்பு நெதன்யாகு எனக்கு தகவல் தெரிவிக்கவில்லை': டிரம்ப்
கத்தாரின் தோஹாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்ததாக வெளியான செய்திகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மறுத்துள்ளார்.
இந்தியா 'பேச்சுவார்த்தை மேசைக்கு வருகிறது': டிரம்பின் வர்த்தக ஆலோசகர் நவாரோ
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்காக இந்தியா "பேச்சுவார்த்தை மேசைக்கு வருகிறது" என்று கூறியுள்ளார்.
ராவி ஆற்று வெள்ளத்தால் 40 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளத்தில் மூழ்கிய பாகிஸ்தானின் லாகூர் நகரம்
பாகிஸ்தானின் லாகூரில் 40 ராவி ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக இல்லாத வகையில், வரலாறு காணாத வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது.
ஊழல் இல்லாத ஆட்சி, இந்தியாவுடன் நெருங்கிய உறவு; நேபாளத்தின் ஜென் ஜி இயக்கம் வலியுறுத்தல்
முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியை ராஜினாமா செய்ய வைத்த இளைஞர்களின் போராட்டத்திற்குப் பிறகு, நேபாளத்தின் ஜென் ஜி இயக்கம், ஊழல் இல்லாத அரசியல் அமைப்பை உருவாக்கும் ஒரு நீண்டகால இலக்கை நோக்கிச் செயல்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்ததாக இந்திய மூதாட்டி கைது; விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் தீவிரம்
அமெரிக்கக் குடியுரிமை மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவினரால் (ICE), 73 வயதான இந்திய மூதாட்டி ஹர்ஜித் கவுர் கைது செய்யப்பட்டதற்கு எதிராகக் கலிஃபோர்னியாவில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.
"இந்தியா-ரஷ்யா உறவை முறிக்கும் முயற்சி தோல்வியடையும்": டிரம்ப் முயற்சிக்கு ரஷ்யா கடும் பதிலடி
இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான உறவைப் பாதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையாது என ரஷ்யா அறிவித்துள்ளது.
சட்டவிரோத குடியேறிகள் மீது...: இந்தியரின் தலை துண்டிக்கப்பட்டது குறித்து அதிபர் டிரம்ப் காட்டம்
டெக்சாஸின் டல்லாஸில் உள்ள ஒரு மோட்டலில் தனது மனைவி மற்றும் மகன் முன்னிலையில் தலை துண்டிக்கப்பட்ட இந்தியர் சந்திரா நாகமல்லையாவின் கொடூரமான கொலைக்குப் பிறகு, சட்டவிரோத குடியேறி குற்றவாளிகள் மீது தனது நிர்வாகம் "மென்மையாக" இருக்காது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சபதம் செய்துள்ளார்.
லண்டனில் வெளிநாட்டவர் குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த மாபெரும் பேரணியில் வன்முறை
பிரிட்டனில் வெளிநாட்டவர்களின் குடியேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வலதுசாரி ஆர்வலர் டாமி ராபின்சன் தலைமையில் லண்டன் நகரின் மையத்தில் ஒரு பெரிய பேரணி நடைபெற்றது.
சீனா மீது 100% வரை வரி விதிக்க நேட்டோ நாடுகளுக்கு டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தல்
அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வர, நேட்டோ உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
வெள்ள நிவாரண நிதியை பயங்கரவாத அமைப்பை மீண்டும் கட்டமைக்க கொடுக்கும் பாகிஸ்தான்; பகீர் தகவல்
இந்திய விமானப்படை மே 7 ஆம் தேதி தொடங்கிய ஆபரேஷன் சிந்தூர் வான் தாக்குதலில், பாகிஸ்தானில் உள்ள மார்க்கஸ் தொய்பா தலைமையகத்தை லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு மீண்டும் கட்டி வருகிறது.
இஸ்ரேல்-பாலஸ்தீன இரு நாட்டுத் தீர்வுக்கான நியூயார்க் பிரகடனம் ஐநா சபையில் நிறைவேற்றம்; தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் மீண்டும் சக்திவாய்ந்த 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்குப் பகுதியில் இன்று, 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நேபாளத்தின் இடைக்காலப் பிரதமராக சுசீலா கார்க்கி பதவியேற்றார்; முதல் பெண் பிரதமராக சாதனை
நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்க்கி, நாட்டின் இடைக்காலப் பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.
சார்லி கிர்க் துப்பாக்கிச் சூடு வழக்கில் முக்கிய நபர் ராபின்சன் கைது
பழமைவாதச் செயற்பாட்டாளரான சார்லி கிர்க்கை சுட்டுக் கொன்ற வழக்கில், டைலர் ராபின்சன் என்ற 22 வயது நபர் உட்டாவில் முக்கியக் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேபாளத்தின் இடைக்காலப் பிரதமராக சுசீலா கார்க்கி இன்று இரவு பதவியேற்க உள்ளதாக தகவல்
நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியான சுசீலா கார்க்கி, அந்நாட்டின் இடைக்காலப் பிரதமராக வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) இரவு பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை இடைநிறுத்திய ரஷ்யா
மூன்றரை ஆண்டுகால மோதலைத் தீர்க்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இராஜதந்திர முயற்சிகள் தேக்கமடைந்துள்ளதால், உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கிரெம்ளின் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
QUAD உச்சிமாநாட்டிற்காக டிரம்ப் இந்தியா வரக்கூடும்: இந்தியாவிற்கான அமெரிக்க தூதர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டு இறுதியில் நாற்கர பாதுகாப்பு உரையாடல் (குவாட்) தலைவர்கள் உச்சி மாநாட்டிற்காக இந்தியாவுக்கு வருகை தரக்கூடும், என இந்தியாவிற்கான தூதர் வேட்பாளர் செர்ஜியோ கோர், செனட் உறுதிப்படுத்தல் விசாரணையில் சூசகமாக தெரிவித்தார்.
'பாலஸ்தீனம் என்ற நாடு இருக்காது' என எச்சரிக்கும் இஸ்ரேல்
மேற்குக் கரை நிலத்தை வெட்டும் சர்ச்சைக்குரிய குடியேற்ற விரிவாக்கத் திட்டத்துடன் தொடர ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம், "பாலஸ்தீன நாடு இருக்காது" என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு ஆட்சிக் கவிழ்ப்பு சதி வழக்கில் 27 ஆண்டுகள் சிறை
பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, 2022 தேர்தலில் தோல்வியடைந்த பிறகு ஆட்சியில் நீடிக்க சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
சார்லி கிர்க்கின் படுகொலையில் சந்தேக நபரின் புதிய புகைப்படங்களை வெளியிட்டது FBI
உட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத்தில் பழமைவாத ஆர்வலர் சார்லி கிர்க் கொல்லப்பட்டதில் சந்தேகிக்கப்படும் ஒருவரின் புதிய புகைப்படங்களை FBI வியாழக்கிழமை வெளியிட்டு பொதுமக்களின் உதவியைக் கோரியது.
இந்தியாவின் சீனாவுடனான நெருக்கம் கவலையளிக்கிறது: புதிய அமெரிக்க தூதர் செர்ஜியா கோர் கருத்து
இந்தியா, அமெரிக்காவின் முக்கியமான நட்பு நாடாகும் என்பதைக் குறிப்பிட்டுள்ள இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் செர்ஜியா கோர், இந்தியா சீனாவுடன் நெருக்கம் காட்டுவது கவலையளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அரிவாளால் தலை துண்டிக்கப்பட்டு கொலை; குடும்பத்தினர் முன்பு அரங்கேறிய பயங்கரம்
செப்டம்பர் 10 ஆம் தேதி அமெரிக்காவின் டல்லாஸ் மோட்டலில் நடந்த அதிர்ச்சியூட்டும் தாக்குதலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அரசு நிதி, வீடு உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்பு சலுகைகளை நீக்கியது இலங்கை
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது விதவைகளுக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைகள் மற்றும் அரசு நிதியுதவி வசதிகளை ரத்து செய்யும் மசோதாவை இலங்கை நாடாளுமன்றம் செப்டம்பர் 10 அன்று நிறைவேற்றியது.
நேபாள பிரதமர் பதவிக்கான சிறந்த வேட்பாளராக ஒரு பொறியாளர் பெயரும் அடிபடுகிறது; யார் அவர்?
ஊழலுக்கு எதிரான வன்முறை போராட்டங்கள் நாட்டையே உலுக்கியதால், நேபாளம் தலைமை மாற்றத்தின் விளிம்பில் உள்ளது.
பதவியிழந்தும் இந்தியா மீதான வெறுப்பை விடாத நேபாள முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி
நேபாளத்தின் முன்னாள் பிரதமரான கே.பி.சர்மா ஒலி, வன்முறைப் போராட்டங்களுக்கு மத்தியில் தனது பதவி நீக்கத்திற்குப் பிறகு முதல் முறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
19 மாதங்களுக்கு பின்னர் தந்தையை சந்தித்தார் இளவரசர் ஹாரி; மீண்டும் இணைகிறதா அரச குடும்பம்?
சசெக்ஸ் டியூக் இளவரசர் ஹாரி, சமீபத்தில் தனது தந்தை மன்னர் சார்லஸ் III ஐ லண்டனில் உள்ள கிளாரன்ஸ் ஹவுஸில் "தனியார் தேநீர்" விருந்தில் சந்தித்தார்.
"இஸ்ரேலின் 9/11 தருணம்": தோஹா தாக்குதல் குறித்து நெதன்யாகு
கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் அதிகாரிகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய சமீபத்திய இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆதரித்தார்.
'உங்களுக்கு நாங்க சொல்லி தரோம்': சிறுபான்மையினர் கருத்துக்கு சுவிட்சர்லாந்திற்கு இந்தியா பதிலடி
இந்தியாவில் சிறுபான்மையினர் நடத்தப்படுவது குறித்து சுவிட்சர்லாந்து தெரிவித்த கருத்துகளுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
நேபாள இடைக்கால அரசாங்கத்திற்குத் தலைமை தாங்க முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்க்கி சம்மதம்
நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்திற்குத் தலைமை தாங்க, முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்க்கி தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகத்தில் அரசியல் கொலை; டிரம்பின் கூட்டாளியான சார்லி கிர்க் சுட்டுக் கொல்லப்பட்டார்
அமெரிக்காவின், டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ என்ற இளைஞர் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியும், இணை நிறுவனருமான கன்சர்வேடிவ் ஆர்வலர் சார்லி கிர்க், புதன்கிழமை உட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்வின் போது கொல்லப்பட்டார்.
நேபாள Gen Z இடைக்கால தலைவராக முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்க்கியை தேர்வு செய்துள்ளனர்
Gen Z இயக்கத்தின் உறுப்பினர்கள் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கியை நேபாளத்தின் இடைக்காலத் தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்ய ட்ரோன்கள் வான்வெளிக்குள் நுழைந்ததை அடுத்து உஷார் நிலையில் போலந்து; விமான நிலையங்கள் மூடல்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலின் போது அதன் வான்வெளியில் அத்துமீறி நுழைந்த ட்ரோன்களை போலந்து இராணுவம் புதன்கிழமை அதிகாலை சுட்டு வீழ்த்தியதாக அறிவித்தது.
பிரான்சின் புதிய பிரதமராக செபாஸ்டியன் லெகோர்னுவை நியமித்தார் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்
பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் செவ்வாயன்று தனது பாதுகாப்பு அமைச்சரும், நெருங்கிய கூட்டாளியுமான செபாஸ்டியன் லெகோர்னுவை புதிய பிரதமராக நியமித்தார்.
வர்த்தக தடைகள் குறித்து இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும்: டிரம்ப்
வர்த்தக தடைகளை நிவர்த்தி செய்வதற்காக இந்தியாவுடன் தனது நிர்வாகம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
காத்மாண்டு மேயர் பாலேந்திர ஷா: நேபாளத்தின் அடுத்த பிரதமராக Gen Zயின் விருப்பம் இவரா?
நேபாளத்தில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், காத்மாண்டு மேயர் பாலேந்திர ஷா ஒரு சாத்தியமான தலைவராக உருவெடுத்துள்ளார்.
நேபாள முன்னாள் பிரதமரின் வீட்டை போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தியதில் அவரது மனைவி மரணம்
நேபாள முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் மனைவி ரபி லட்சுமி சித்ரகார், தல்லுவாவில் உள்ள அவர்களின் வீட்டை கலகக்காரர்கள் தீவைத்ததில், பலத்த காயமடைந்து இறந்தார்.
அரசியல் பதட்ட உச்சத்தில் நேபாளம்: பிரதமர் ஒலியின் ராஜினாமாவை தொடர்ந்து அதிபர் ராம் சந்திர பவுடல் ராஜினாமா
நேபாள நாட்டை உலுக்கிய ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மத்தியில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஜனாதிபதி ராம் சந்திர பவுடலும் பதவி விலகியுள்ளார்.
இளைஞர்கள், கலவரத்திற்கான காரணம்: வங்கதேச போராட்டம் vs நேபாள போராட்டம்- ஒரு பார்வை
சமூக ஊடகங்களின் மீது விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நேபாளத்தில் வெடித்த இளைஞர்கள் தலைமையிலான போராட்டம், அந்நாட்டின் ஆட்சியை ஆட்டம் காண வைத்தது.
நேபாள இராணுவத் தலைவர் பதவி விலகுமாறு கேட்டுக் கொண்டதையடுத்து பிரதமர் ஒலி ராஜினாமா
நேபாள அரசாங்கத்தின் சமூக ஊடகத் தடைக்கு எதிரான வன்முறைப் போராட்டங்கள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை நேபாளப் பிரதமர் கே.பி. சர்மா ஒலி ராஜினாமா செய்ததாக அவரது உதவியாளர் பிரகாஷ் சில்வால் உறுதிப்படுத்தினார்.
அதிகரிக்கும் போராட்டங்களுக்கு இடையே துபாய்க்குத் தப்பிச் செல்லத் திட்டமிடும் நேபாளப் பிரதமர் கே.பி.ஒலி
நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி, சமூக ஊடக தளங்கள் மீது விதித்த தடை, பெரும் சீற்றத்தினை அந்நாட்டில் ஏற்படுத்தியுள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த பிரான்ஸ் பிரதமர்; அரசியல் நெருக்கடியை எதிர்கொள்ளும் ஜனாதிபதி மக்ரோன்
நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த பின்னர், பிரதமர் பேய்ரூவின் அரசாங்கம் பிரெஞ்சு நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டது.
Gen Z போராட்டங்களில் 20 பேர் கொல்லப்பட்டதை அடுத்து சமூக ஊடகத் தடையை நீக்கிய நேபாள அரசு
வன்முறை மோதல்களில் குறைந்தது 20 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதுடன், 300 பேர் காயமடைந்ததை அடுத்து, நேபாள அரசாங்கம் திங்களன்று இரவு சமூக ஊடக தளங்கள் மீதான தடையை நீக்கியது.
ஜெருசலேம் நுழைவாயிலில் பயங்கரவாத தாக்குதல்; 5 பேர் கொல்லப்பட்டனர்
ஜெருசலேமின் ராமோட் சந்திப்பு நுழைவாயிலில் இரண்டு பேர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 22 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.