LOADING...

உலகம் செய்தி

உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.

30 Dec 2025
ரஷ்யா

"அவர் வீடு மீதே தாக்குதலா?": அதிபர் புடினின் இல்லத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் குறித்து டிரம்ப் காட்டம்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் இல்லத்தை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் விவகாரத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா காலமானார்: ஒரு சகாப்தம் முடிவு

பங்களாதேஷின் முதல் பெண் பிரதமரும், அந்நாட்டின் முக்கிய அரசியல் கட்சியான 'வங்கதேச தேசியக் கட்சியின்' (BNP) தலைவருமான பேகம் கலீதா ஜியா, உடல்நலக்குறைவு காரணமாக இன்று (டிசம்பர் 30, 2025) அதிகாலை காலமானார்.

29 Dec 2025
சீனா

போர் மேகம்? தைவானைச் சூழ்வதுபோல் சீனா போர் ஒத்திகை நடத்தியதால் பரபரப்பு

தைவானைச் சுற்றி சீனா மேற்கொண்டு வரும் மிகப்பெரிய ராணுவப் பயிற்சியால் ஆசியப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

2026 புத்தாண்டைக் கொண்டாடும் முதல் நாட்டிற்கும் கடைசி நாட்டிற்கும் 26 மணிநேர வித்தியாசமா! சுவாரஸ்ய பின்னணி

ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் புத்தாண்டு ஒரே நேரத்தில் கொண்டாடப்படுவதில்லை. பூமியின் சுழற்சி மற்றும் நேர மண்டலங்கள் (Time Zones) காரணமாக, சில நாடுகள் முன்னதாகவும் சில நாடுகள் பல மணிநேரம் கழித்தும் புத்தாண்டை வரவேற்கின்றன.

29 Dec 2025
உக்ரைன்

உக்ரைன்- ரஷ்யா அமைதி திட்டம் "கிட்டத்தட்ட 95 சதவீதம்" நிறைவு: டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி ஆகியோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பு இன்று நடைபெற்றது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் நூர் கான் விமானப்படைத் தளம் தாக்கப்பட்டதை ஒப்புக்கொண்டது பாகிஸ்தான்

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் போது, பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படைத் தளம் தாக்கப்பட்டதை அந்த நாடு முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.

28 Dec 2025
மியான்மர்

உள்நாட்டுப் போருக்கு மத்தியில் மியான்மரில் பொதுத்தேர்தல்: ராணுவ ஆட்சியின் கீழ் வாக்குப்பதிவு தொடக்கம்

மியான்மரில் கடந்த 2021 ஆம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாகப் பொதுத்தேர்தல் இன்று (டிசம்பர் 28) தொடங்கியுள்ளது.

28 Dec 2025
உக்ரைன்

டிரம்ப்-ஜெலென்ஸ்கி அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக உக்ரைனில் ரஷ்யா கடும் தாக்குதல்

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 28) நடைபெறவுள்ள நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா மிகக்கடுமையான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

27 Dec 2025
சீனா

கண்ணிமைக்கும் நேரத்தில் 700 கி.மீ வேகம்! சீனாவின் மேக்லீவ் ரயில் படைத்த புதிய உலக சாதனை

சீனாவின் பாதுகாப்பு தொழில்நுட்பத்திற்கான தேசிய பல்கலைக்கழக (NUDT) ஆராய்ச்சியாளர்கள், அதிவேக போக்குவரத்து தொழில்நுட்பத்தில் ஒரு மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளனர்.

வேலையே செய்யாத நிறுவனத்தில் இருந்து வந்த பணிநீக்க இமெயிலால் ஷாக்; வைரலாகும் எக்ஸ் பதிவு

பெண் ஒருவருக்கு அவர் ஒருபோதும் வேலை செய்யாத நிறுவனத்திடம் இருந்து பணிநீக்க இமெயில் ஒன்று வந்த சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

பங்களாதேஷில் பள்ளி இசை நிகழ்ச்சி மீது அடிப்படைவாத கும்பல் தாக்குதல்: 20 மாணவர்கள் காயம்

பங்களாதேஷின் ஃபரித்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியின் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சி மீது மத அடிப்படைவாத கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

27 Dec 2025
மலேசியா

ஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமருக்கு 15 ஆண்டுகள் சிறை: ரூ.27,000 கோடி அபராதம்

மலேசியாவின் மிகப்பெரிய நிதி முறைகேடு வழக்கான 1MDB (1Malaysia Development Berhad) ஊழல் வழக்கில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மலேசிய உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

26 Dec 2025
ஜப்பான்

ஜப்பானில் பயங்கரம்: தொழிற்சாலையில் புகுந்து 14 பேரை கத்தியால் குத்திய மர்ம நபர்; மர்ம திரவத்தால் பீதி!

ஜப்பானின் மத்திய பகுதியில் உள்ள மிஷிமா நகரில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று (டிசம்பர் 26) மர்ம நபர் ஒருவர் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானின் அணு ஆயுதத்தால் ஆபத்து: 2001லேயே அமெரிக்காவை எச்சரித்த ரஷ்ய அதிபர் புடின்

2001 முதல் 2008 வரையிலான காலகட்டத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற ரகசியப் பேச்சுவார்த்தைகளின் ஆவணங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

26 Dec 2025
அமெரிக்கா

நைஜீரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா சக்திவாய்ந்த தாக்குதல்: டிரம்ப் அறிவிப்பு

நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் செயல்பட்டு வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்க ராணுவம் மிக சக்திவாய்ந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (டிசம்பர் 26) அறிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் மீண்டும் மீண்டும் குறிவைக்கப்படும் ஹிந்துக்கள்: நிலத்தகராறில் இந்து நபர் அடித்துக் கொலை

பங்களாதேஷில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், மிரட்டி பணம் பறிக்கும் மற்றும் நிலத்தைப் பறிக்கும் நோக்கில் இந்து நபர் ஒருவர் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

25 Dec 2025
இந்தியா

சீனா-இந்தியா உறவுகளை சீர்குலைக்க அமெரிக்கா முயற்சிப்பதாக பெய்ஜிங் குற்றம் சாட்டுகிறது

இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்துவதற்காக அமெரிக்கா தனது பாதுகாப்பு கொள்கையை சிதைப்பதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.

17 ஆண்டு காலத்திற்கு பிறகு பங்களாதேஷ் திரும்பிய தாரிக் ரஹ்மான்; இந்தியாவிற்கு பாதிப்பா?

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான், 2008-ஆம் ஆண்டு முதல் லண்டனில் தங்கியிருந்தார்.

வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை: பெட்ரோல் குண்டு வீசியதில் இளைஞர் பலி

பங்களாதேஷில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தலைநகர் டாக்காவில் நேற்று இரவு நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 21 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

'தேர்தலை தடம் புரள செய்வதற்காக யூனுஸ் ஆட்சி உஸ்மான் ஹாடியை கொன்றது': சகோதரர் குற்றசாட்டு

பங்களாதேஷ் மாணவர் தலைவர் ஷெரிப் உஸ்மான் ஹாடியின் படுகொலை பரவலான அமைதியின்மையை தூண்டியுள்ளதுடன், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளையும் எழுப்பியுள்ளது.

எப்ஸ்டீன் கோப்புகளில் அதிபர் டிரம்ப் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு; மறுக்கும் நீதித்துறை

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீதான சரிபார்க்கப்படாத பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை "பொய்யானது மற்றும் பரபரப்பானது" என்று அமெரிக்க நீதித்துறை (DOJ) நிராகரித்துள்ளது.

24 Dec 2025
அமெரிக்கா

அமெரிக்காவின் H-1B விசா குலுக்கல் முறை ரத்து: டிரம்ப் அரசு அதிரடி!

அமெரிக்காவில் பணிபுரிய வழங்கப்படும் மிகவும் பிரபலமான H-1B விசா வழங்கும் முறையில் மிகப்பெரிய மாற்றத்தை அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

வங்கதேச அரசியல் தலைவர் சுடப்பட்ட வழக்கில் பகீர் திருப்பம்: போதை விருந்து.. மர்மப் பெண்.. சிக்கிய ரகசியங்கள்!

உள்நாட்டு ஊடகத்தை மேற்கோள் காட்டி இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தியின்படி, வங்கதேசத்தில் தேசிய குடிமக்கள் கட்சி (NCP) தலைவர் மொதலேப் ஷிக்தர் சுடப்பட்ட வழக்கில், போதைப்பொருள் மற்றும் மர்ம பெண் தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

23 Dec 2025
இந்தியா

டித்வா பேரிடரில் சிக்கிய இலங்கைக்கு 450 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கிய இந்தியா

கடுமையான புயல் மற்றும் தொடர் வெள்ளப்பெருக்கால் நிலைகுலைந்துள்ள அண்டை நாடான இலங்கைக்கு, இந்தியா 450 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ₹3,700 கோடி) நிதியுதவியை அவசரக்கால உதவியாக அறிவித்துள்ளது.

23 Dec 2025
விசா

இந்த சமூக ஊடக பதிவுகள் உங்கள் H-1B விசாக்களை முடக்கும் வாய்ப்பு உள்ளது, உஷார்!

Renewal-காக இந்தியா திரும்பும் இந்திய H-1B விசா தொழிலாளர்கள் பெரும் இடையூறுகளை எதிர்கொண்டுள்ளனர்.

உஸ்மான் ஹாதி கொலைக்கு எதிரான போராட்டத்தில் மற்றொரு மாணவர் தலைவர் தலையில் சுடப்பட்டார்

பங்களாதேஷில் ஏற்கனவே உஸ்மான் ஹாதி படுகொலையினால் ஏற்பட்ட கொந்தளிப்பு தணியாத நிலையில், போராட்டத்தின் போது மற்றொரு முக்கிய மாணவர் தலைவர் சுடப்பட்டிருப்பது அந்நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய ராணுவத்தில் 50 இந்தியர்கள் இன்னும் தவிப்பு; 26 பேர் உயிரிழப்பு

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்திற்காக போராட கட்டாயப்படுத்தப்பட்ட அல்லது பணியமர்த்தப்பட்ட இந்தியர்களின் நிலை குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

உஸ்மான் ஹாதி கொலை வழக்கு: துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அடையாளம் காணப்பட்டது

பங்களாதேஷின் 'இன்குலாப் மஞ்ச்' (Inqilab Mancha) அமைப்பின் செய்தித் தொடர்பாளரும், இளம் தலைவர் மற்றும் ஆர்வலருமான ஷெரீப் உஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கொலையாளியை அடையாளம் கண்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

வங்கதேசம்: ஷெரீப் உஸ்மான் ஹாடியின் கொள்கைகளை பின்பற்றுவதாக யூனுஸ் சபதம்

கடந்த வாரம் கொல்லப்பட்ட தீவிரவாத மாணவர் தலைவர் ஷெரீஃப் ஒஸ்மான் ஹாடியின் கொள்கைகளை நிலைநிறுத்துவதாக பங்களாதேஷ் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் சபதம் செய்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா: ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி, 10 பேர் காயம்

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கிற்கு வெளியே உள்ள ஒரு நகரமான பெக்கர்ஸ்டாலில் ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 21 அன்று நடந்த ஒரு பெரிய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர் என்று AFP அறிக்கை தெரிவித்துள்ளது.

21 Dec 2025
அமெரிக்கா

எப்ஸ்டீன் ஆவணங்களில் இருந்து மாயமான டிரம்ப் புகைப்படம்! அமெரிக்க நீதித்துறை இணையதளத்தில் இருந்து 16 கோப்புகள் மாயம்

மறைந்த கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ரகசிய ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை (DOJ) வெளியிட்டு வரும் நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் சம்பந்தப்பட்ட சில முக்கிய கோப்புகள் திடீரென மாயமாகியுள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இம்ரான் கானுக்கு மற்றுமொரு அடி: தோஷகானா வழக்கில் 17 ஆண்டுகள் சிறை - பாகிஸ்தானில் பரபரப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது முன்னாள் மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு தோஷகானா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் நீதிமன்றம் இன்று (டிசம்பர் 20) 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

20 Dec 2025
அமெரிக்கா

அமெரிக்க அரசியலில் இந்திய வம்சாவளியினரின் எழுச்சி: சான் கார்லோஸ் நகரின் மேயராக பிரணிதா வெங்கடேஷ் பதவியேற்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் கார்லோஸ் (San Carlos) நகரின் புதிய மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரணிதா வெங்கடேஷ் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

20 Dec 2025
சிரியா

சிரியாவில் அமெரிக்காவின் அதிரடி: 3 வீரர்கள் பலியானதற்குப் பழிவாங்க 'ஆபரேஷன் Hawkeye' தொடக்கம்

சிரியாவின் பால்மைரா பகுதியில் அண்மையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் மூன்று அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, அமெரிக்க ராணுவம் 'ஆபரேஷன் Hawkeye தாக்குதல் என்ற பெயரில் பெரும் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

19 Dec 2025
ஐ.எஸ்.ஐ.எஸ்

பாண்டி கடற்கரை துப்பாக்கிச் சூட்டை 'பெருமைக்குரிய விஷயம்' என்று ஐ.எஸ்.ஐ.எஸ். குறிப்பிட்டுள்ளது

ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் சமீபத்தில் நடந்த துப்பாக்கி சூட்டை இஸ்லாமிய அரசு பாராட்டியுள்ளது.

பாலைவன தேசத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை: துபாய், அபுதாபி ஸ்தம்பிப்பு; காரணம் என்ன?

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முக்கிய நகரங்களான துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் நேற்று (டிசம்பர் 18) இரவு முதல் பெய்து வரும் அதீத கனமழையால் அந்நாடே வெள்ளத்தில் மிதக்கிறது.

பாண்டி பீச் தாக்குதல்: ஆஸ்திரேலியாவில் 'துப்பாக்கி மீட்பு' திட்டத்தை அறிவித்தார் பிரதமர் அந்தோணி அல்பானீஸ்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் சமீபத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து, அந்நாட்டுப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.

19 Dec 2025
கனடா

தாய்மை பொதுவானது: அனாதை குட்டியை தத்தெடுத்த ஒரு பனி கரடி 

ஒரு விசித்திரமான அதே நேரத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக, கனடிய ஆராய்ச்சியாளர்கள் ஒரு பெண் பனி கரடி ஒரு அனாதை குட்டியை தத்தெடுத்த அரிய நிகழ்வை பதிவு செய்துள்ளனர்.

எப்ஸ்டீன் வழக்கில் புதிய திருப்பம்: பில் கேட்ஸ், வுடி ஆலன் உள்ளிட்ட பிரபலங்களின் ரகசிய புகைப்படங்கள் வெளியீடு

பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி சிறையிலேயே மரணமடைந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீனின் பண்ணை வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட 68 புதிய புகைப்படங்களை அமெரிக்க நாடாளுமன்ற மேற்பார்வைக் குழு இன்று வெளியிட்டுள்ளது.

பங்களாதேஷில் கொழுந்துவிட்டு எரியும் வன்முறை: மாணவர் தலைவர் மறைவால் பதற்றம், இந்தியத் தூதரகம் முற்றுகை

சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த வங்கதேச மாணவர் போராட்ட குழுவின் முன்னணி தலைவர் ஷரீப் உஸ்மான் ஹாடியின் மரண செய்தி வெளியானதை தொடர்ந்து, வங்கதேசம் முழுவதும் போராட்டங்களும் வன்முறையும் வெடித்துள்ளன.

ஓமான் நாட்டின் உயரிய விருது: நெல்சன் மண்டேலா, ராணி எலிசபெத் வரிசையில் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாடுகளுக்கானத் தனது அரசுமுறைப் பயணத்தின் இறுதிக்கட்டமாக ஓமான் நாட்டிற்குச் சென்றுள்ளார்.

பாகிஸ்தானுக்கு சர்வதேச அளவில் அவமானம்: 56,000 பிச்சைக்காரர்களை திருப்பி அனுப்பிய சவுதி அரேபியா

வெளிநாடுகளுக்கு சென்று பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து, சவுதி அரேபியா ஒரே நேரத்தில் 56,000 பாகிஸ்தானியர்களை நாடு கடத்தியுள்ளது.

18 Dec 2025
விசா

அமெரிக்க விசா நேர்காணல்கள் 2026 அக்டோபர் வரை  தள்ளிவைப்பு! இந்திய ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி

அமெரிக்காவில் பணிபுரிய விசா கோரி விண்ணப்பித்துள்ள நூற்றுக்கணக்கான இந்தியர்களின் நேர்காணல் தேதிகள் திடீரென 2026 அக்டோபர் வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

சிட்னி நாயகன் அகமது அல் அகமது: பழ வியாபாரியின் துணிச்சலுக்குப் பின்னால் இருந்த ராணுவப் பயிற்சி!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள புகழ்பெற்ற பாண்டி பீச்சில், கடந்த டிசம்பர் 14 அன்று யூதர்களின் 'ஹனுக்கா' பண்டிகைக் கொண்டாட்டத்தின் போது நடந்தத் துப்பாக்கிச் சூடு உலகையே உலுக்கியது.

18 Dec 2025
அமெரிக்கா

அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு டிரம்ப்பின் 'கிறிஸ்துமஸ் பரிசு': $1,776 ஊக்கத்தொகை அறிவிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு "வாரியர் டிவிடெண்ட்" (Warrior Dividend) என்ற பெயரில் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

18 Dec 2025
துபாய்

துபாய், அபுதாபி & ஷார்ஜாவில் மேகவெடிப்பு போன்ற மழைக்கு வாய்ப்பு என தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு

வளைகுடா நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதீத கனமழை பெய்யக்கூடும் என சுயாதீன வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

17 Dec 2025
இந்தியா

இந்தியா -எத்தியோப்பியா இடையேயான வரலாற்றுப் பாலம்: மாலிக் அம்பர் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்

பிரதமர் நரேந்திர மோடி எத்தியோப்பியா சென்றிருந்தபோது, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் மாலிக் அம்பர் என்பவரை பற்றி குறிப்பிட்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று பிணைப்பை நினைவு கூர்ந்தார்.

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கி கௌரவம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய அரச விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரத்தை பெறுவது பெருமைக்குரிய விஷயம் என்று பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

17 Dec 2025
அமெரிக்கா

அதிகரிக்கும் குடியேற்ற கட்டுப்பாடுகள்; 7 நாடுகளுக்கு அமெரிக்காவில் நுழைய தடை விதித்தார் டிரம்ப்

தேசிய பாதுகாப்பு, பொதுப் பாதுகாப்பு, ஆவணச் சரிபார்ப்பில் உள்ள பலவீனங்கள் மற்றும் விசா காலாவதிக்குப் பின் அதிக நாட்கள் தங்கியிருத்தல் விகிதங்கள் ஆகியவற்றை காரணம் காட்டி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு புதிய பிரகடனத்தில் கையெழுத்திட்டார்.

போண்டி துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் இந்தியா பாஸ்போர்ட் கொண்டிருந்தனரா? வெளியான அதிர்ச்சி தகவல்கள் 

16 பேரை கொன்ற சிட்னி பாண்டி கடற்கரை துப்பாக்கி சூட்டில் சந்தேக நபர்கள் " இஸ்லாமிய அரசு சித்தாந்தத்தால்" இயக்கப்பட்டவர்கள் என்று ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

16 Dec 2025
ஜோர்டான்

ஜோர்டான் பட்டத்து இளவரசரே கார் ஓட்டி சென்று மோடியை அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் சென்றார்!

மூன்று நாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக ஜோர்டானுக்கு வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜோர்டான் நாட்டின் பட்டத்து இளவரசர் அல் ஹுசைன் பின் அப்துல்லா II ஒரு சிறப்பான மரியாதையை செலுத்தியுள்ளார்.

IS கொள்கையால் தூண்டப்பட்டது பாண்டி கடற்கரை தாக்குதல் என ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பாண்டி கடற்கரை பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவம், ஐ.எஸ். (Islamic State) பயங்கரவாத கொள்கையால் தூண்டப்பட்ட செயல் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இன்று அறிவித்துள்ளார்.

BBC-க்கு எதிராக டிரம்ப் ரூ.80,000 கோடி வழக்கு: உரையை திரித்து கூறியதாக குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரிட்டனை சேர்ந்த புகழ்பெற்ற ஒலிபரப்பு நிறுவனமான பிபிசி (BBC)-க்கு எதிராக மிக பெரிய அளவில் சட்ட போராட்டத்தில் இறங்கியுள்ளார்.

ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி; மன்னர் இரண்டாம் அப்துல்லா நேரில் வரவேற்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜோர்டான் நாட்டுக்கு அதிகாரப்பூர்வப் பயணமாகச் சென்றடைந்தார்.

15 Dec 2025
அமெரிக்கா

இனி ஐரோப்பாவுக்கு உலக அரசியலில் வேலையில்லை; Core 5 குழுவை உருவாக்கத் திட்டமிடுகிறதா அமெரிக்கா?

உலகளாவிய அதிகாரக் கட்டமைப்புகள் மாறிக் கொண்டிருக்கும் வேளையில், புதிய உலகக் கூட்டமைப்பான 'கோர் 5' (Core 5 அல்லது C5) பற்றியப் பேச்சுகள் சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

15 Dec 2025
உலகம்

தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் எதிரொலியால், உலகின் பிரபலமான அருங்காட்சியகம் மூடப்படும் அபாயம்

உலகிலேயே அதிகம் பார்வையிடப்படும் அருங்காட்சியகமான பாரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகம், தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் காரணமாக இந்த வாரம் மூடப்படும் அபாயத்தை எதிர்கொள்கிறது.

சிட்னி பாண்டி கடற்கரை தாக்குதலில் ஹீரோவாக மாறிய பொதுமகன்: வைரல் ஆகும் வீடியோ

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபலமான பாண்டி கடற்கரை பகுதியில், யூதர்களின் முக்கியமான பண்டிகையான ஹனுக்கா கொண்டாட்டத்தின் முதல் நாளில் நடத்தப்பட்ட கோரமான தாக்குதல் உலகை உலுக்கியுள்ளது.

சிட்னி பாண்டி கடற்கரை தீவிரவாத தாக்குதல் பலி எண்ணிக்கை 16 என உயர்வு; தந்தை-மகன் இணைந்து நடத்திய துப்பாக்கி சூடு?

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபலமான பாண்டி கடற்கரை பகுதியில், நேற்று யூத பண்டிகையான ஹனுக்காவை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட கோரமான தாக்குதலில், 16 பேர் கொல்லப்பட்டனர், சுமார் 40 பேர் காயமடைந்தனர்.