உலகம் செய்தி
உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.
பிரிட்டனில் மீண்டும் ஏர் டிராஃபிக் கண்ட்ரோல் கோளாறு: 1000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து
பிரிட்டனின் தேசிய வான்வழிப் போக்குவரத்து சேவை அமைப்பான NATS அமைப்பின் விமானத் தரவு செயலாக்க கணினியில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பிரிட்டன் முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுப் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க போர்க்கப்பலை குறிவைத்த ஈரான்; பதிலடி தாக்குதலில் 5 ஈரான் எண்ணெய் கப்பல்கள் அழிப்பு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க கடற்படை போர்க்கப்பலை குறிவைத்து ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈரானின் 5 கச்சா எண்ணெய் கப்பல்களை அமெரிக்க ராணுவம் தாக்கி அழித்துள்ளது.
பாபா வங்கா கணிப்பு 2027: சூப்பர் ஹியூமன்களை உருவாக்கப் போகும் விசித்திர நோய்?
பல்கேரியாவின் புகழ்பெற்ற ஞானி, குறிசொல்லி பாபா வங்கா, 2027-ஆம் ஆண்டிற்காக கணித்துள்ள புதிய தீர்க்கதரிசன விவரங்கள் வெளியாகியுள்ளன.
'அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி...': இந்தியாவைப் புகழ்ந்து தள்ளிய ஈரான்
புதுடெல்லியில் நடைபெறவுள்ள 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, இந்தியாவுடனான உறவை "மிகவும் நன்று" எனக் குறிப்பிட்டிருக்கும் ஈரான், இரு நாடுகளுக்கும் இடையேயான கூட்டாண்மைக்குத் தான் "மிகப்பெரிய முக்கியத்துவம்" அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியா விமான நிலையங்கள் திறப்பு: அனக் கிரக்கடோவா எரிமலை சாம்பல் குறைந்ததால் சேவை சீரமைப்பு
இந்தோனேசியாவில் அனக் கிரக்கடோவா எரிமலை வெடித்து சிதறியதால் ஏற்பட்ட சாம்பல் புகை காரணமாக மூடப்பட்டிருந்த தலைநகர் ஜகார்த்தாவின் பிரதான விமான நிலையம் உட்பட பல விமான நிலையங்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை மீண்டும் திறக்கப்பட்டு இயங்கத் தொடங்கியுள்ளன.
ஈபிள் கோபுரத்தில் ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்: இந்து அமைப்பின் வருகையின் போது பெண் ஊழியர்கள் ஒதுக்கப்பட்டதாக சர்ச்சை
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஈபிள் கோபுரம், திங்கள்கிழமை அன்று ஊழியர்களின் திடீர் வேலைநிறுத்தம் காரணமாக முற்றிலும் மூடப்பட்டது.
ரஷ்யாவில் காவலில் வைக்கப்பட்ட கான்பூர் பொறியாளர்: ராணுவத்தில் சேர வற்புறுத்துவதாக மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த பொறியாளர் சந்தன் குப்தா மாஸ்கோவில் காவல் துறையினரால் சட்டவிரோதமாக காவலில் அடைக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி சினேகா குப்தா பரபரப்பான வீடியோ வெளியிட்டுள்ளார்.
நிலாவும் அமெரிக்காவிற்கு சொந்தமானதாம்: பிதற்றலின் உச்சத்தில் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சந்திரன் அமெரிக்காவிற்கு சொந்தமானது என்று உரிமை கோரியுள்ளார்.
வெறுப்புப் பேச்சை ஏற்க முடியாது! இந்தியர்களுக்கு எதிரான ஆன்லைன் இனவெறி கருத்துகள்; சிங்கப்பூர் பிரதமர் கடும் கண்டனம்
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியினரை இலக்கு வைத்து சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட இனவெறி மற்றும் அந்நிய வெறுப்பு சார்ந்த கருத்துகள் தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகள் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ஆபாசத் துறையை சட்டப்பூர்வமாக்கி வரி வசூலிக்கத் திட்டம்; போர் நிதி திரட்ட உக்ரைன் எடுத்த முடிவு
ரஷ்யாவுடனான போர் நீடித்து வரும் சூழலில், தனது பாதுகாப்பு நிதி தேவைகளை பூர்த்தி செய்யவும், கூடுதல் வரி வருவாயை பெருக்கவும் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள ஆபாச படத் துறையை (Pornography Industry) சட்டப்பூர்வமாக்க உக்ரைன் அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
ஓடுதளத்தை விட்டு வெளியேறி வாகனங்கள் மீது மோதிய அமேசான் விமானம்; 5 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசான் பிரைம் ஏர் நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று தரை இறங்கும்போது ஓடுதளத்தை விட்டு வெளியேறி விபத்துக்குள்ளானதில், குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹார்முஸ் ஜலசந்தியில் புதிய 'தடை செய்யப்பட்ட மண்டலம்': ஈரானின் முடிவும், பெட்ரோல் விலை உயர்வும்
அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே புதிய 'தடை செய்யப்பட்ட மண்டலம்' அமைக்கப்படும் என ஈரானின் பாதுகாப்புத் தலைவர் மொஹ்சென் ரெசாய் அறிவித்துள்ளார்.
பக்கத்து வீட்டு ரகசியங்களை புரணி பேசியே 2 வீடுகள் வாங்கிய 67 வயது பெண்; கொலம்பியாவில் நடந்த விசித்திர சம்பவம்
கொலம்பியா நாட்டை சேர்ந்த 67 வயது பெண் ஒருவர், தனது பகுதியில் உள்ள பக்கத்து வீடுகளின் ரகசியங்கள் மற்றும் வதந்திகளை சேகரித்து பணத்திற்கு விற்பனை செய்து வருகிறார்.
4 டாலரைக் கடந்து வரலாறு காணாத உயர்வு! அமெரிக்காவில் விண்ணை முட்டும் பெட்ரோல் விலை; காரணம் என்ன?
அமெரிக்க மக்கள் இந்த லேபர் டே வார இறுதியில் வரலாறு காணாத மிக அதிக பெட்ரோல் விலையை எதிர்கொண்டு வருகிறார்கள்.
மிஸ் வேர்ல்ட் 2026: உலக அழகி பட்டம் வென்றார் ஜோஹேரி மோலா: யார் இவர்?
வியட்நாமின் நட்ராங் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற 73வது மிஸ் வேர்ல்ட் 2026 அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றில், டொமினிகன் குடியரசை சேர்ந்த ஜோஹேரி மோலா டோமிங்குஸ் வெற்றி பெற்று புதிய உலக அழகியாக முடிசூட்டப்பட்டுள்ளார்.
மீண்டும் வெடித்தது கடல் போர்! அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது ஈரானிய ஏவுகணை வீச்சு; அமெரிக்கா பதிலடி எச்சரிக்கை
அமெரிக்க கடற்படையின் விமானம் தாங்கிக் கப்பல் மற்றும் தாக்குதல் போர்க்கப்பல் ஆகியவற்றைக் குறிவைத்து ஈரானியப் புரட்சிகர காவல் படையின் (ஐஆர்ஜிசி) விண்வெளிப் பிரிவு பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உக்ரைன் மீதான தாக்குதலை 3 நாட்களுக்கு நிறுத்தி வைக்க ரஷ்ய அதிபர் புடின் உத்தரவு; காரணம் என்ன?
உக்ரைன் தலைநகர் கீவ் மீதான வான்வழித் தாக்குதல்களை மூன்று நாட்களுக்குத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
வரலாற்றில் முதன்முறையாக உலகில் குழந்தைகளை விட முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
மனித வரலாற்றிலேயே முதன்முறையாக ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை விட 65 வயதைக் கடந்த முதியவர்களின் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியகத்தின் புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.
ஐநா புதிய உலக வரைபடம் ஒப்புதல்: ஆப்பிரிக்கா பெரிதாகவும், அமெரிக்கா சிறியதாகவும் மாற்றம்
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க வாக்கெடுப்பில், 16 ஆம் நூற்றாண்டு முதல் பயன்பாட்டில் உள்ள மெர்கேட்டர் உலக வரைபடத்திற்குப் பதிலாகப் புதிய ஈக்வல் எர்த் வரைபடத்தைப் பயன்படுத்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அமைதிப் பேச்சுகளுக்கு அமெரிக்கத் தூதர்கள் வருகை; தற்காலிகமாக வான்வழித் தாக்குதல் நிறுத்தப்படுவதாக ஜெலென்ஸ்கி அறிவிப்பு
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே 4.5 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சிறப்புத் தூதர்கள் இரு நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்கின்றனர்.
ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக் கூடாது! பிக்ஏக்ஸ் மலையைத் தாக்க அமெரிக்கா திட்டம்; டிரம்ப் புதிய எச்சரிக்கை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானின் பிக்ஏக்ஸ் நிலத்தடி அணு ஆயுத மையத்தை அமெரிக்க ராணுவம் மிக விரைவில் தாக்கும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
உடம்பை லேசாக சொறிந்து விட்டால் போதும்! மாதம் ₹14 லட்சம் சம்பாதிக்கும் வித்தியாசமான தொழில்; வியப்பில் இணையவாசிகள்
சீனாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஷென்சென் நகரை சேர்ந்த 32 வயதான ஜாங் ஷியாவோகியோ என்பவர், சுமா என்ற பெயரில் இரண்டு மசாஜ் மையங்களைத் திறந்துள்ளார்.
'இந்தியா அன்றே எச்சரித்தது, நாங்கள்தான் கேட்கவில்லை!' பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வேவர் பகிரங்க ஒப்புதல்
சர்வதேச வர்த்தகத்தில் பிற முக்கிய வல்லரசு நாடுகளை சார்ந்திருப்பதனால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து இந்திய பிரதமர் மோடி ஐரோப்பிய நாடுகளுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே எச்சரிக்கை விடுத்தார் என்றும், ஆனால் ஐரோப்பிய நாடுகள் அதை அலட்சியப்படுத்திவிட்டன என்றும் பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வேவர் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
நேபாள வெள்ளப் பெருக்கு: 9 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட பொறியாளர் மரணத்தின் பிடியிலிருந்து தப்பியது எப்படி?
நேபாளத்தில் திரிசூலி 3A நீர்மின் நிலையச் சுரங்கப்பாதைக்குள் சிக்கிய தொழிலாளர்களில் இருவர் 9 நாட்களுக்கு பிறகு அதிசயமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இத்தாலியின் மிக நீண்ட காலம் பிரதமராக பணியாற்றிய மெலோனிக்கு மோடி வாழ்த்து
இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய இத்தாலியின் வரலாற்றில், மிக நீண்ட காலம் தொடர்ச்சியாக பிரதமராக பதவி வகித்தவர் என்ற சாதனையை படைத்த தனது இத்தாலிய சகா ஜார்ஜியா மெலோனிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
500 ஆண்டுகால வரைபட வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி! ஆப்பிரிக்காவின் உண்மையான அளவை வெளியிட ஐநாவில் வாக்கெடுப்பு
பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் உலக வரைபடத்திற்குப் பதிலாக, ஆப்பிரிக்கக் கண்டத்தின் உண்மையான பரப்பளவைத் துல்லியமாகக் காட்டும் புதிய உலக வரைபடத்தை அதிகாரப்பூர்வமாக ஏற்பது குறித்து ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) முக்கிய வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
நேபாளத்தில் 600 பள்ளிச் சிறுவர்கள் மாயம்; 1,282 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை
நேபாளத்தில் கடந்த மாதம் ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து, அந்நாட்டின் ரசுவா மற்றும் நுவாகோட் மாவட்டங்களில் மட்டும் சுமார் 600 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
9 நாட்களுக்கு பின் நேபாளச் சுரங்கத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய 2 பேர் உயிருடன் மீட்பு; மேலும் குரல்கள் கேட்ப்பதால் பரபரப்பு
நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்திற்கு பிறகு, திரிசூலி 3A நீர்மின் நிலைய சுரங்கப்பாதையிலிருந்து 9 நாட்களுக்கு பிறகு இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
உக்ரைன் ஆயுதப் பேர ஊழல்: எஸ்டோனியா பாதுகாப்பு அமைச்சர் ஹன்னோ பெவ்கூர் ராஜினாமா, பின்னணியில் இந்திய நிறுவனம்
உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட 70 மில்லியன் யூரோ (சுமார் ₹768.50 கோடி) மதிப்பிலான பீரங்கி தோட்டாக்கள் கொள்முதல் ஒப்பந்தத்தில் முறைகேடு நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
டாடா கெமிக்கல்ஸ் ஆலையை மூட கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ அதிரடி உத்தரவு; பின்னணி என்ன?
கென்யாவின் காஜியாடோ பகுதியில் உள்ள மகடி ஏரியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்திய நிறுவனமான டாடா கெமிக்கல்ஸ் தனது ஆலை செயல்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
இந்தியர்களுக்கு அடுத்த அதிர்ச்சி! அமெரிக்க இபி-1 கிரீன் கார்டு பெற புதிய சிக்கல்
அமெரிக்காவில் வேலைவாய்ப்பு சார்ந்த இபி-1 (EB-1) கிரீன் கார்டு பெறக் காத்திருக்கும் இந்தியர்களுக்கு அந்நாட்டு அரசு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
7 மாதங்களுக்குப் பின் திடீர் திருப்பம்: ஈரானுடன் போரை முடிவுக்குக் கொண்டுவர ட்ரம்ப் ரகசியத் திட்டம்
ஈரானுடனான ராணுவ மோதல் தொடங்கி ஏழு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இப்போரை அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு கொண்டுவருவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது மூத்த அதிகாரிகளுடன் ரகசியமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேபாள வெள்ள பேரிடர் நடந்த இடத்திலிருந்து நூறு மைல் தொலைவில் திபெத்தில் 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
சீனாவின் திபெத் பகுதியில் வியாழக்கிழமை 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஹார்முஸ் நீரிணையில் அக்னிப் பரீட்சை: 40 வணிக கப்பல்களை பாதுகாப்பாக கடத்திய அமெரிக்கப் படை
ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க ராணுவம் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய பாதுகாக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ஈரானுடன் வர்த்தகம் செய்தால் பொருளாதாரத் தடை: இந்தியாவிற்கு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ எச்சரிக்கை
SCO உச்சிமாநாட்டின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானை சந்தித்துப் பேசிய சில நாட்களில், ஈரானுக்கு பொருளாதார ரீதியாக உதவும் நாடுகளுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து இந்தியா, சீனா, அமெரிக்காவிடம் காலநிலை இழப்பீடு கோரியுள்ளது நேபாளம்
1,000-க்கும் மேற்பட்டோரின் உயிரை பறித்த பேரழிவுகரமான திடீர் வெள்ளப்பெருக்கை தொடர்ந்து, இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய பசுமை இல்ல வாயுக்களை வெளியிடும் நாடுகளிடமிருந்து நேபாளம் காலநிலை இழப்பீடு கோரியுள்ளது.
ஈரானில் திருமண விழாவில் விழுந்த அமெரிக்க ஏவுகணை பாகங்கள்: சிறுவன் உட்பட 4 பேர் பரிதாப பலி
தெற்கு ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள கூஹெஸ்டாக் பகுதியில் திருமண நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு குடியிருப்பு வீட்டின் மீது அமெரிக்க ஏவுகணையின் சிதறிய பாகங்கள் விழுந்து தாக்கியதில், சிறுவன் ஒருவன் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
இந்தியாவிற்கு மேலும் எஸ்-400 அலகுகளை ரஷ்யா வழங்க முன்வந்துள்ளது
ரஷ்யா தனது நீண்ட தூரம் சென்று தரையிலிருந்து வான் குறிவைத்து தாக்கும் எஸ்-400 "ட்ரியம்ஃப்" ஏவுகணை அமைப்பின் மேலும் ஐந்து அலகுகளை இந்தியாவிற்கு விற்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.