உலகம் செய்தி
உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.
சுவிட்சர்லாந்தில் ஓடிக்கொண்டிருந்த ரயில் பனிச்சரிவால் தடம்புரண்டது; 80 பயணிகளின் நிலை என்ன?
சுவிட்சர்லாந்து நாட்டின் வாலாய்ஸ் மாகாணத்தில் உள்ள கோப்பேன்ஸ்டைன் அருகே திங்கட்கிழமை (பிப்ரவரி 16) அதிகாலை ஒரு பயணிகள் ரயில் பனிச்சரிவில் சிக்கித் தடம் புரண்டது.
ஏலியன்கள் நிஜம்தான்... ஆனா நான் பார்த்ததில்லை! முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பேச்சு
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, சமீபத்தில் யூடியூபர் பிரையன் டைலர் கோஹனுக்கு அளித்த பேட்டியில், வேற்று கிரக வாசிகள் (ஏலியன்கள்) இருப்பது உண்மைதான் என்று கூறி மீண்டும் விவாதத்தைக் கிளப்பியுள்ளார்.
காசா மறுசீரமைப்புக்கு 5 பில்லியன் டாலர் நிதி உதவி; டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காசாவின் மறுசீரமைப்பு மற்றும் மனிதாபிமான பணிகளுக்காக அமைதி வாரியத்தின் உறுப்பினர்கள் 5 பில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் 41,000 கோடி ரூபாய்) வழங்க முன்வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைக்குத் தயார், ஆனால் மோதலுக்கும் தயார்; ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த சிக்னல்
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார்.
எங்கள் முடிவு.. எங்கள் உரிமை! அமெரிக்காவின் ரஷ்ய எண்ணெய் கருத்துக்கு ஜெய்சங்கர் கொடுத்த மாஸ் பதிலடி
முனிச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்து மிகத் தெளிவான விளக்கத்தை அளித்தார்.
வங்கதேச தேர்தல் 2026: பிஎன்பியின் அமோக வெற்றிக்குப் பின் இந்தியாவுடன் கைகோர்க்கத் தயார் என தாரிக் ரஹ்மான் அறிவிப்பு
வங்கதேசத்தில் நடைபெற்ற 13 வது நாடாளுமன்றத் தேர்தலில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது.
மத்திய கிழக்கு நோக்கி இரண்டாவது போர் கப்பலை அனுப்பினார் டிரம்ப்; ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கு பகிரங்க அழைப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு இடையே, ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது அந்த நாட்டிற்கு நடக்கும் மிகச்சிறந்த விஷயமாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
கழுத்து எலும்புகள் உடைந்தது எப்படி? எப்ஸ்டீன் மரணத்தில் மர்மத்தை உடைக்கும் மைக்கேல் பேடன்; தூக்கிட்டுத் தற்கொலை என்ற முடிவில் சந்தேகம்
பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், 2019 ஆம் ஆண்டு நியூயார்க் சிறையில் மரணமடைந்தார்.
குர்பத்வந்த் சிங் பன்னூன் கொலை முயற்சி வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் நிகில் குப்தா குற்றத்தை ஒப்புக்கொண்டார்
அமெரிக்காவில் வசித்து வரும் காலிஸ்தானி பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனைப் படுகொலை செய்யச் சதித் திட்டம் தீட்டிய வழக்கில், இந்தியரான 54 வயது நிகில் குப்தா அமெரிக்க நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
வங்கதேசத்தில் தாரிக் ரஹ்மான் ஆட்சி: இந்தியாவின் உறவுக்கு சாதகமா? பாதகமா?
பங்களாதேஷ் நாடாளுமன்ற தேர்தலில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி (BNP) மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில், இது இந்தியாவிற்கு ஏன் ஒரு சிறந்த வாய்ப்பாகக் கருதப்படுகிறது என்பது குறித்து அரசியல் வல்லுநர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைக்கின்றனர்.
இந்தியா எதிர்ப்பு எடுபடவில்லை; தேர்தலில் சர்ஜிஸ் ஆலமை படுதோல்வி அடையைச் செய்த பங்களாதேஷிகள்
2026 ஆம் ஆண்டு பங்களாதேஷ் பொதுத்தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு முடிவாக, இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டிற்குப் பெயர் போன சர்ஜிஸ் ஆலம் தனது தொகுதியில் தோல்வியடைந்துள்ளார்.
அமெரிக்கா-சீனா உறவில் முன்னேற்றம்: ஏப்ரல் மாதம் சீனாவில் ஜி உடனான சந்திப்பை உறுதிப்படுத்திய டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொள்வதை உறுதி செய்துள்ளார், அங்கு அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பார்.
பங்களாதேஷ் தேர்தல்: தாரிக் ரஹ்மான் தலைமையில் பிஎன்பி (BNP) வெற்றியை நோக்கி முன்னேற்றம்; புதிய ஆட்சி அமைகிறது!
பங்களாதேஷில் நடைபெற்று முடிந்த 13-வது நாடாளுமன்ற தேர்தலில், தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி (BNP) பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை கடந்து தனிப்பெரும் வெற்றியை பெற்றுள்ளது.
அமெரிக்க போலீசாரால் கொல்லப்பட்ட இந்திய மாணவியின் குடும்பத்திற்கு ₹262 கோடி இழப்பீடு
2023 ஆம் ஆண்டு வேகமாக வாகனம் ஓட்டிய காவல்துறை அதிகாரியால் கொல்லப்பட்ட 23 வயது இந்திய பட்டதாரி மாணவி ஜாஹ்னவி கந்துலாவின் குடும்பத்தினருடன் சியாட்டில் நகரம் ஒரு வழக்கைத் தீர்த்து வைத்துள்ளது.
எகிப்து பிரமிடு அருகே 2,000 ஆண்டுகள் பழமையான தமிழ் கல்வெட்டுகள்; தமிழனின் கடல் வணிகத்திற்கு புதிய சான்று
சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்திற்கு பயணம் மேற்கொண்ட ஒரு தமிழ் வணிகர், அங்குள்ள புகழ்பெற்ற 'ராஜாக்களின் பள்ளத்தாக்கில்' தனது அடையாளத்தை பதித்து சென்றுள்ளார்.
வங்கதேசத்தில் இன்று 'மெகா' தேர்தல்! 30 ஆண்டுகளில் முதல்முறையாக 'பேகம்கள்' இல்லாத களம்
கடந்த 18 மாதங்களாக முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால ஆட்சியின் கீழ் இருந்த பங்களாதேஷ், இன்று (பிப்ரவரி 12, 2026) தனது அடுத்த அரசை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தலை சந்திக்கிறது.
தாய்லாந்து பள்ளியில் துப்பாக்கிச் சூடு: மாணவர்கள், ஆசிரியர்களை பிணைக்கைதிகளாக பிடித்த மர்மநபர்
தாய்லாந்தின் சாங்க்லா (Songkhla) மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில், புதன்கிழமை அன்று துப்பாக்கி ஏந்திய இளைஞர் ஒருவர் புகுந்து அங்கிருந்தவர்களை பிணைக்கைதிகளாக பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'அமெரிக்கா பாகிஸ்தானை டாய்லெட் பேப்பரை விட மோசமாக நடத்தியது': பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், தேசிய சட்டமன்றத்தில் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டார்.
கனடா பள்ளியில் பயங்கரம்: மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி, பலர் படுகாயம்
கனடாவின் டம்பிளர் ரிட்ஜ் நகரில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை மதியம் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்தனர்.
திடீரென இந்திய வரைபடத்தை தனது அதிகாரப்பூர்வ தளத்திலிருந்து நீக்கியது அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம்
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் (USTR), இந்தியாவுடனான புதிய வர்த்தக ஒப்பந்தத்தை அறிவிக்கும்போது பயன்படுத்திய சர்ச்சைக்குரிய இந்திய வரைபடத்தை தற்போது தனது அதிகாரப்பூர்வ தளத்திலிருந்து நீக்கியுள்ளது.
இந்தியா-அமெரிக்க ஒப்பந்தம் குறித்த fact sheet-ஐ வெளியிட்டது வெள்ளை மாளிகை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தார்.
இந்தியா-பாகிஸ்தான் உலகக் கோப்பை சர்ச்சையின் மத்தியில், அடிப்பட்ட 'அசிம் முனீர்' பெயர்; ஏன்?
பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையேயான டி20 உலகக் கோப்பை போட்டியை திட்டமிடுவது தொடர்பான சர்ச்சையில், பீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீரை குறிப்பிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
அமெரிக்கா - வங்கதேசம் இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம்; 19 சதவீதமாக குறைந்தது இறக்குமதி வரி
அமெரிக்கா மற்றும் வங்கதேசம் இடையே திங்களன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
10 நாடுகள், 15 ராஜினாமாக்கள்! உலகையே அதிரவைக்கும் 'எப்ஸ்டீன் கோப்புகள்'; சிக்கிய அரசியல்வாதிகள் மற்றும் கோடீஸ்வரர்கள் யார்?
அமெரிக்க நிதி ஆலோசகர் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்புடைய 30 லட்சம் பக்கங்கள் கொண்ட ரகசிய ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டது.
அமெரிக்க மிரட்டலுக்கு பணியாத ஈரான்; ஓமான் பேச்சுவார்த்தையில் நீடிக்கும் இழுபறி
அமெரிக்காவின் ராணுவ மிரட்டல்கள் மற்றும் புதிய பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும், தனது யுரேனியம் செறிவூட்டும் திட்டத்தை கைவிட போவதில்லை என்று ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
உலகமே போற்றும் இந்திய ஆசிரியை; ஒரு மில்லியன் டாலர் குளோபல் டீச்சர் விருதை வென்றார் ரூபல் நாகி
துபாயில் நடைபெற்ற உலக அரசாங்க உச்சி மாநாட்டின் போது, இந்திய ஆசிரியை ரூபல் நாகிக்கு குளோபல் டீச்சர் விருது 2026 (Global Teacher Prize) வழங்கப்பட்டது.
இந்தியா-மலேசியா இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள்: பிரதமர் மோடி மற்றும் அன்வர் இப்ராஹிம் சந்திப்பின் முழு விவரம்
மலேசியாவிற்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஞாயிற்றுக்கிழமை அன்று கோலாலம்பூரில் உள்ள பெர்தானா புத்ரா வளாகத்தில் சிறப்பான ராணுவ மரியாதையுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது.
கால்வான் மோதல் நடந்த சில நாட்களில் சீனா செய்த ரகசிய வேலை; அம்பலப்படுத்திய அமெரிக்கா; இந்தியாவுக்கு சிக்கலா?
கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கிடையே நடந்த நேரடி மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
மாணவர் விடுதியில் நுழைந்த மர்ம நபர்; ரஷ்யாவில் இந்திய மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்; ஒருவர் கவலைக்கிடம்
ரஷ்யாவின் பாஷ்கோர்டோஸ்தான் குடியரசில் உள்ள உஃபா நகரில் அமைந்துள்ள அரசு மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதியில், சனிக்கிழமை (பிப்ரவரி 8) அன்று நடந்த கொடூரமான கத்திக்குத்துத் தாக்குதலில் நான்கு இந்திய மாணவர்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
மலேசியாவில் மலரப்போகும் புதிய இந்தியா; கோலாலம்பூரில் பிரதமர் மோடி அதிரடி; தமிழக மாணவர்களுக்கு திருவள்ளுவர் ஸ்காலர்ஷிப் மற்றும் புதிய தூதரகம்
பிரதமர் நரேந்திர மோடி மலேசியாவிற்கு மேற்கொண்டுள்ள இரண்டு நாள் பயணத்தின் ஒரு பகுதியாக, சனிக்கிழமை மாலை கோலாலம்பூரில் உள்ள இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றினார்.
வங்கதேசத்தில் யாருடைய ஆட்சி? தேர்தலுக்குப் பிறகு இந்தியாவுடனான உறவில் ஏற்படப்போகும் அதிரடி மாற்றங்கள்; முக்கிய சாத்தியக்கூறுகள்
வங்கதேசத்தில் வரும் பிப்ரவரி 12, 2026 அன்று பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. 2024 இல் ஷேக் ஹசீனாவின் ஆட்சி அகற்றப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இது என்பதால், இந்தியா மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
டீல் இல்லையென்றால் விளைவுகள் கடுமையாக இருக்கும்; ஈரானை எச்சரித்த டிரம்ப்; ஓமன் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஓமன் நாட்டில் மிகச் சிறந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய எண்ணெய்க்காக இந்தியா மீது விதிக்கப்பட்டிருந்த 25% வரி நீக்கம்: அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இந்தியப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கூடுதல் 25% அபராத வரியை அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளது.
எப்ஸ்டீன் சர்ச்சையை மூடிமறைக்க, டிரம்ப் நிர்வாகம் UFO ரகசியங்களை வெளியிடபோகிறதாம்
ஏரியா 51 உட்பட அமெரிக்காவில் உள்ள ரகசிய UFO வசதிகள் பற்றிய தகவல்களை வெளியிட டிரம்ப் நிர்வாகம் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
வங்கதேச தேர்தல் 2026: இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா? முக்கியக் கட்சிகள் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள் என்ன?
ஷேக் ஹசீனாவின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு, வரும் பிப்ரவரி 12-ம் தேதி பங்களாதேஷில் முதல் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இஸ்லாமாபாத் வழிபாட்டு தலத்தில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் 68 பேர் பலி, 169க்கும் மேற்பட்டோர் காயம்
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள ஷெஹ்சாத் டவுன் பகுதியில் உள்ள இமாம் பர்காவுக்கு வெளியே வெள்ளிக்கிழமை தற்கொலை குண்டுதாரி ஒருவர் தன்னைத்தானே வெடிக்க செய்து கொண்டதாக கூறப்படுகிறது, இதில் 68 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 169 பேர் காயமடைந்தனர்.