உலகம் செய்தி
உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.
கள்ளக்காதல் வைத்ததற்காக ஊழியர்களை டிஸ்மிஸ் செய்த சிஇஓ; நெட்டிசன்களிடையே விவாதத்தைக் கிளப்பிய சம்பவம்
பணியிடத்தில் தனிப்பட்ட ஒழுக்க நெறிமுறைகளின் எல்லைகள் குறித்து இணையத்தில் விவாதத்தைத் தூண்டியுள்ள நிலையில், கார்டோன் வென்ச்சர்ஸ் (Cardone Ventures) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான நடாலி டாசன், நிறுவனத்தில் சக ஊழியருடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட இரு ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ததாக அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ராணுவத் தலைவருக்கு வாழ்நாள் அதிகாரம் அளிக்கப்பட்டது
பாகிஸ்தான் நாடாளுமன்றம், ராணுவத் தலைவரின் அதிகாரங்களை விரிவுபடுத்தும் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பைக் கட்டுப்படுத்தும் ஒரு அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது.
வேட்டைக்காகப் பொதுமக்கள் சுட்டுக் கொலை: போஸ்னியா போரின் கொடூர பின்னணி அம்பலம்
ஐரோப்பாவில் 1992 முதல் 1995 வரை நீடித்த சரைவோ முற்றுகையின் போது, பணக்கார இத்தாலியர்கள் சிலர் பெரும் தொகையைச் செலுத்தி, வேடிக்கைக்காக அப்பாவிப் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளைக் கொல்ல போஸ்னியாவுக்குச் சென்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து மிலன் அரசு குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
43 நாள் நீடித்த அரசு முடக்கம் முடிவுக்கு வந்தது: அரசாங்க நிதி மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்டார்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அரசுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான மசோதாவில் கையெழுத்திட்டதன் மூலம், அந்நாட்டின் வரலாற்றில் மிக நீண்ட காலமாக, அதாவது சாதனை அளவான 43 நாட்களுக்கு நீடித்திருந்த அரசு முடக்கம் முடிவுக்கு வந்தது.
டிரம்பின் அதிரடி H-1B விசா கொள்கை: "அமெரிக்கர்களுக்குப் பயிற்சி கொடுத்துவிட்டு, தாய்நாடு திரும்ப வேண்டும்"
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தில் கருவூலத் துறைச் செயலாளராக பணியாற்றி வரும் ஸ்காட் பெஸ்ஸென்ட் டிரம்பின் புதிய H-1B விசா கொள்கையின் நோக்கத்தை விளக்கியுள்ளார்.
தொடர் குண்டுவெடிப்புகள் மற்றும் தீ வைப்புத் தாக்குதல்கலால் உச்சகட்ட பதற்றத்தில் பங்களாதேஷ்
டாக்காவில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் மற்றும் தீ வைப்பு தாக்குதல்களை தொடர்ந்து வங்கதேசம் உச்சக்கட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
சீனாவில் உள்ள ஹாங்கி பாலம் திறக்கப்பட்ட சில மாதங்களிலேயே இடிந்து விழுந்தது: காண்க
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் புதிதாக கட்டப்பட்ட ஹாங்கி பாலத்தின் ஒரு பகுதி செவ்வாய்க்கிழமை இடிந்து விழுந்தது.
'எங்களிடம் திறமையான தொழிலாளர்கள் அதிகம் இல்லை': H-1B விசாவை ஆதரிக்கும் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், H-1B விசா சீர்திருத்தங்கள் குறித்த தனது கடுமையான நிலைப்பாட்டை மென்மையாக்கியதாகத் தெரிகிறது.
எல்லை தாண்டிய தாக்குதலுக்குத் தயார்! ஆப்கானிஸ்தானுக்குப் பாகிஸ்தான் கடும் எச்சரிக்கை
இஸ்லாமாபாத் மற்றும் தெற்கு வசிரிஸ்தானில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானுக்குள் பாகிஸ்தான் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் செவ்வாய்க்கிழமை எச்சரித்தார்.
அமெரிக்கா பல்கலைக்கழகங்களின் நிதிக்கு வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கை அவசியம் என்கிறார் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார்.
இஸ்லாமாபாத் குண்டுவெடிப்பு: இந்தியா மீது ஷெபாஸ் ஷெரீஃப் குற்றச்சாட்டு; 'போர் நிலை' என பாதுகாப்பு அமைச்சர் கருத்து
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகம் அருகே கார் வெடித்து பலர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் இந்தியா மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தியாவை தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் கார் வெடிப்பு: நீதிமன்றத்திற்கு வெளியே கார் வெடித்து பலர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு வெடிப்பு ஏற்பட்டது.
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: விரைவில் கட்டணக் குறைப்புகள் இருக்கும் என டிரம்ப் தகவல்
இந்தியாவுடனான புதிய மற்றும் சமநிலைப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் அமெரிக்கா முன்னேற்றம் கண்டுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மருத்துவ அதிசயம்: மூளையே இல்லாமல் பிறந்த பெண் 20வது பிறந்தநாள் கொண்டாட்டம்
அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தைச் சேர்ந்த அலெக்ஸ் சிம்ப்ஸன் (20) என்ற இளம் பெண், தனது 20வது பிறந்தநாளை அண்மையில் கொண்டாடியதன் மூலம் மருத்துவர்களின் கணிப்பை முறியடித்து ஒரு மருத்துவ அதிசயமாக உருவெடுத்துள்ளார்.
அரசாங்க முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை எட்டியுள்ளது அமெரிக்க செனட் சபை
அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட கால முடக்கத்தை சில நாட்களுக்குள் முடிவுக்கு கொண்டுவருவதற்காக, குறைந்தது எட்டு செனட் ஜனநாயக மையவாதிகளை கொண்ட இரு கட்சிக் குழு, செனட் குடியரசுக் கட்சித் தலைவர்களுடனும் வெள்ளை மாளிகையுடனும் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
டிசம்பர் 10 முதல் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தத் தடை; ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு
ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் திங்களன்று (நவம்பர் 10) வெளியிட்ட முக்கிய அறிவிப்பில், நாட்டில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படுவதாக தெரிவித்தார்.
அமெரிக்கர்களுக்கு USD 2,000 ஈவுத்தொகையை அறிவித்தார் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை தனது கட்டணக் கொள்கையை இரட்டிப்பாக்கினார்.
டிரம்ப் ஆவணப்பட சர்ச்சையால் பிபிசி தலைமை இயக்குநர், செய்தி தலைமை அதிகாரி ராஜினாமா
BBC தலைமை இயக்குநர் டிம் டேவி மற்றும் பிபிசி செய்தி பிரிவின் தலைமை செயல் அதிகாரி டெபோரா டர்னஸ் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
ஜப்பானில் 6.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி தாக்குதல்
வடக்கு பசிபிக் கடலில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஜப்பானில் மூன்று சிறிய சுனாமி அலைகள் தாக்கியுள்ளன.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி; உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்க தாலிபான்கள் மறுப்பு
ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான சமீபத்திய அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாகத் தாலிபான்கள் சனிக்கிழமை (நவம்பர் 9) உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தியாவைத் தொடர்ந்து நேபாளத்தின் திரிபுவன் விமான நிலையத்திலும் தொழில்நுட்பக் கோளாறால் விமானச் சேவை நிறுத்தம்
நேபாளத்தின் முக்கிய விமான நிலையமான தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதை விளக்குகளில் சனிக்கிழமை (நவம்பர் 8) தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
மாலியில் 5 இந்தியர்கள் கடத்தல்: தீவிரவாத அச்சுறுத்தலுக்கு மத்தியில் அதிர்ச்சிச் சம்பவம்
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் மின்மயமாக்கல் திட்டங்களில் பணியாற்றி வந்த ஐந்து இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை (நவம்பர் 8) தெரிவித்தனர்.
இனி உடல் பருமன் இருந்தால்கூட அமெரிக்க விசா கிடைக்காமல் போகலாம்; புதிய கட்டுப்பாடுகளை விதித்தது டிரம்ப் நிர்வாகம்
அமெரிக்காவில் விசா வழங்கும் கொள்கையில் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
மத்திய ஆசியாவில் புதிய புவிசார் அரசியல் நகர்வு: 'ஆபிரகாம் ஒப்பந்தத்தில்' கஜகஸ்தான் இணைந்தது ஏன்?
மத்திய ஆசிய நாடான கஜகஸ்தான் உத்தியோகபூர்வமாக 'ஆபிரகாம் ஒப்பந்தத்தில்' (Abraham Accords) இணைந்துள்ளது.
இந்தியாவிலிருந்து வந்த கடைசி நிமிட தொலைபேசி அழைப்பு; ஷேக் ஹசீனா உயிர் தப்பியது இப்படித்தான்
கடந்த ஆண்டு பங்களாதேஷில் மாணவர் தலைமையிலான போராட்டங்களுக்கு மத்தியில், அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் உயிரை இந்தியாவிடமிருந்து வந்த ஒரு அவசர தொலைபேசி அழைப்பு காப்பாற்றியிருக்கலாம் என்ற ஒரு பரபரப்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
வீட்டிற்குள் சட்டவிரோத பள்ளியை நடத்தியதாக ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி மீது குற்றச்சாட்டு
மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா சான் ஆகியோர் பாலோ ஆல்டோவில் உள்ள தங்கள் வீட்டில் உரிமம் பெறாத பள்ளியை நடத்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தோனேசிய பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது குண்டுவெடிப்பு: 54 மாணவர்கள் காயம்
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) தொழுகையின்போது மசூதிக்குள் அடுத்தடுத்து பல வெடிப்புகள் நிகழ்ந்ததில், பெரும்பாலும் மாணவர்கள் உட்பட குறைந்தது 54 பேர் காயமடைந்தனர்.
மியான்மர் சைபர் மோசடி மையங்களில் இருந்து 270 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்
ஒரு பெரிய சர்வதேச மீட்பு நடவடிக்கையில், வியாழக்கிழமை தாய்லாந்திலிருந்து 270 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
தற்கொலை எண்ணம் இல்லாதவர்களையும் தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூறி ஓபன்ஏஐ மீது 7 வழக்குகள் பதிவு
சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றங்களில் ஓபன்ஏஐ நிறுவனத்தின் மீது ஏழு புதிய வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
அமெரிக்கா அதிபர் டிரம்ப் அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வருகை தர திட்டமிட்டுள்ளார்
பிரதமர் நரேந்திர மோடியுடனான தனது பேச்சுவார்த்தைகள் "மிகவும் சிறப்பாக நடந்து வருவதாக" அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் Gen Z மாணவர்கள் போராட்டம் வெடிப்பு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி, இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த வன்முறைப் போராட்டங்களுக்குப் பிறகு, தற்போது கல்வித்துறை மாற்றங்களை எதிர்த்து Gen Z மாணவர்கள் தலைமையில் மற்றொரு பெரிய போராட்டத்தைச் சந்தித்துள்ளது.
தென்னாப்பிரிக்க ஜி20 மாநாட்டை புறக்கணிக்க போவதாக டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு; என்ன காரணம்?
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நவம்பர் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கும் ஜி20 மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
$102 மில்லியன் நகைக் கொள்ளையின் போது லூவ்ரே அருங்காட்சியத்தின் பாஸ்வார்ட் இதுதானா? ரொம்ப ஒர்ஸ்ட் பா!
உலகிலேயே அதிகம் பார்வையிடப்பட்ட பாரிஸின் அருங்காட்சியகமான லூவ்ரே, அக்டோபர் 19 அன்று $102 மில்லியன் மதிப்புள்ள நகை கொள்ளைக்கு இலக்காகியது.
மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் சர்ச்சை: கூட்டமாக வெளிநடப்பு செய்த போட்டியாளர்கள்
மிஸ் யுனிவர்ஸ் போட்டியை நடத்தும் தாய்லாந்தை சேர்ந்த ஒரு அதிகாரி மிஸ் மெக்ஸிகோவை பகிரங்கமாக கண்டித்ததை அடுத்து, போட்டிக்கு முந்தைய விழாவில் பல போட்டியாளர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பிலிப்பைன்ஸில் பேரழிவு: கல்பேகி சூறாவளியால் 114 பேர் பலி; அதிபர் அவசர நிலையைப் பிரகடனம்
பிலிப்பைன்ஸில் வீசிய கல்பேகி சூறாவளி (Typhoon Kalmaegi), இந்த ஆண்டின் மிக மோசமான இயற்கை பேரழிவாக மாறியுள்ளது.
'8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன': இந்தியா-பாகிஸ்தான் போர் குறித்து டிரம்ப் புது தகவல்
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்த மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை கூறியுள்ளார்.
"சமாதானப் பேச்சு வார்த்தை தோல்வியடைந்தால் போர் தான்!": தாலிபானுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் காஜா ஆசிப் எச்சரிக்கை
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே எல்லை பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், துருக்கியில் இன்று மீண்டும் அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.
அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட கால அரசு முடக்கம்
அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கிய அமெரிக்க அரசாங்க முடக்கம் தற்போது 36வது நாளை எட்டியுள்ளது. இது அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட முடக்கமாகும், இது 2019 ஆம் ஆண்டில் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற முதல் காலத்தில் 35 நாட்கள் என்ற முந்தைய சாதனையை முறியடித்தது.
இந்தியாவும் இஸ்ரேலும் இராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன
தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் மேம்பட்ட ஆயுத அமைப்புகளின் கூட்டு மேம்பாட்டிற்கும் இந்தியாவும் இஸ்ரேலும் ஒரு பெரிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
நியூயார்க் நகரின் புதிய முதல் பெண்மணி: ஜோஹ்ரான் மாம்டானியின் மனைவி ரமா துவாஜி யார்?
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம் அரசியல்வாதி ஜோஹ்ரான் மாம்டானி, நியூயார்க் நகர மேயர் தேர்தலில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
வரலாற்று வெற்றி! நியூயார்க் மேயரானார் இந்திய வம்சாவளி ஜோஹ்ரான் மாம்டானி
அமெரிக்காவின் நிதி மற்றும் கலாச்சார தலைநகரமான நியூயார்க் நகர மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ஜோஹ்ரான் மாம்டானி மாபெரும் வெற்றியை பதிவு செய்து, நகரத்தின் புதிய மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
"ஹமாஸுடன் தொடர்புடைய CAIR அமைப்பு தான் நியூயார்க் மேயர் வேட்பாளர் ஜோஹ்ரன் மாம்தாணிக்கு நிதி வழங்குகிறது": சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு
நியூயார்க் நகர மேயர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியை சேர்ந்த சோசலிச வேட்பாளரான ஜோஹ்ரன் மாம்தாணி (Zohran Mamdani) குறித்த முக்கிய நிதி விவகாரங்களை சமூக ஆர்வலர் லிண்டா சௌர்சோர் வெளிப்படுத்தியதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது.
ஆங்கில புலமைத் தேர்வு நடத்தி 7,000க்கும் மேற்பட்ட இந்திய லாரி ஓட்டுநர்களை பணி நீக்கம் செய்த அமெரிக்கா
அமெரிக்காவில் கட்டாயமாக்கப்பட்ட ஆங்கில மொழிப் புலமை தேர்வுகளில் தோல்வியடைந்த காரணத்தால், 7,000-க்கும் மேற்பட்ட சரக்கு லாரி ஓட்டுநர்கள் பணி செய்ய தகுதியற்றவர்களாக நீக்கப்பட்டுள்ளனர்.
நைஜீரியாவில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை
நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற தனது எச்சரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய மாணவர்களின் 74 சதவீத விண்ணப்பங்கள் கனடாவால் நிராகரிப்பு; காரணம் என்ன?
சர்வதேச மாணவர்கள் அனுமதிக்கு கனடா விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகள், இந்தியாவில் இருந்து விண்ணப்பிக்கும் மாணவர்களைப் பெரிதும் பாதித்துள்ளதாக அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன.
'பாகிஸ்தான், சீனா அணு ஆயுத சோதனை செய்கின்றன; அமெரிக்காவும் அதைச் செய்ய வேண்டும்': டிரம்ப்
பாகிஸ்தான் உட்பட பல நாடுகள் ரகசிய அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
இந்தியாவில் முதல் தாலிபான் தூதரை நியமிக்க ஆப்கானிஸ்தான் திட்டம்; இருதரப்பு உறவில் அடுத்த முன்னேற்றம்
ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தக்கி சமீபத்தில் இந்தியாவுக்கு வருகை தந்ததையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மேம்படுத்தப்பட உள்ளன.
'உலகை 150 முறை தகர்க்க போதுமான அணுகுண்டுகள் நம்மிடம் உள்ளன': எச்சரிக்கும் டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அணு ஆயுத சோதனையை மீண்டும் தொடங்குவதற்கான தனது முடிவை ஆதரித்து, வாஷிங்டன் மட்டுமே தனது ஆயுதங்களை சோதிக்காத நாடாக இருக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 7 பேர் பலி; 150க்கும் மேற்பட்டோர் காயம்!
ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 7 பேர் பலியாகினர் என்றும், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் உள்ளூர் சுகாதாரத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் அதிசக்தி வாய்ந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் Khabarovsk அறிமுகம்
ரஷ்யாவின் கடற்படை வலிமையை அதிகரிக்கும் விதமாக, சக்தி வாய்ந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான Khabarovsk ஐ அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரே பெலூசோவ் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார்.
உபர் டிரைவராக பணியாற்றுபவர் ₹1,450 கோடி சொத்துக்கு சொந்தக்காரரா! ஷாக் ஆன தொழில்முனைவோர்
இந்தியத் தொழில்முனைவோர் நவ் ஷா, ஃபியூஜியில் உபர் காரில் மேற்கொண்ட ஒரு சாதாரணப் பயணம், வாழ்க்கையின் உண்மையான வெற்றி மற்றும் மனிதநேயம் குறித்த மறக்க முடியாத பாடமாக மாறியுள்ளது.
லண்டன் ரயில் பயணத்தில் திடீர் கத்திக்குத்துத் தாக்குதலால் அதிர்ச்சி; பலருக்கு காயம்
லண்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் ஒன்றில் சனிக்கிழமை (நவம்பர் 1) இரவு நடந்த திடீர் கத்திக்குத்துத் தாக்குதலில் குறைந்தபட்சம் 10 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடவுள் ஆசீர்வதிக்கட்டும்; அமெரிக்கா-சீனா உறவு குறித்து டொனால்ட் டிரம்ப் சமூக வலைதளத்தில் பதிவு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சனிக்கிழமை (நவம்பர் 1) அன்று ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான தனது சந்திப்பு இரு நாடுகளுக்கும் மிகச் சிறந்ததாக அமைந்தது என்றும், இது இரு நாடுகளுக்கிடையே நிலையான அமைதி மற்றும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
500 மில்லியன் டாலர் கடன் மோசடி: இந்திய வம்சாவளி தொழில்முனைவோர் பாங்கிம் பிரம்மபட் மீது குற்றச்சாட்டு
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட இந்திய வம்சாவளித் தொலைத்தொடர்பு தொழில்முனைவோரான பாங்கிம் பிரம்மபட், சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள மிகப் பெரிய கடன் மோசடி வழக்கில் சிக்கியுள்ளதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.
போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்; பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே நவம்பர் 6 அன்று அடுத்தகட்ட பேச்சுவார்த்தை
எல்லை மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை துருக்கியின் இஸ்தான்புல்லில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு சண்டை நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக துருக்கி வியாழக்கிழமை (அக்டோபர் 30) அன்று அறிவித்தது.
பிரிட்டிஷ் மன்னர் சார்லஸின் உத்தரவு: இளவரசர் ஆண்ட்ரூவின் அனைத்துப் பட்டங்கள், மரியாதைகள் நீக்கம்
பிரிட்டனின் இளவரசர் ஆண்ட்ரூவுக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து அரச பட்டங்கள் மற்றும் மரியாதைகள் நீக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் லூவ்ரே அருங்காட்சியகத் திருட்டில் முக்கியக் குற்றவாளி உட்பட மேலும் 5 பேர் கைது
பாரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் நடந்த $102 மில்லியன் மதிப்புள்ள நகைத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக, பிரதானக் குற்றவாளி உட்பட மேலும் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பாரிஸ் பொது வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இறங்கி வந்த அமெரிக்கா; இந்தியாவை தாஜா செய்ய சபஹார் துறைமுகத் திட்டத்திற்கான பொருளாதாரத் தடை விலக்கு நீட்டிப்பு
இந்தியாவின் மத்திய ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான இணைப்பு முயற்சிகளுக்குப் பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், சபஹார் துறைமுகத் திட்டத்திற்கான (Chabahar Port) பொருளாதாரத் தடை விலக்கு காலத்தை அமெரிக்கா நீட்டித்துள்ளது.
ஜி ஜின்பிங்குடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்; சீனா மீதான வரிகளை 10 சதவீதம் குறைப்பாக டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
தென் கொரியாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை (அக்டோபர் 30) அன்று சீனாவுடனான வர்த்தகத்தின் பல முக்கியப் பிரச்சினைகளில் ஒரு முடிவை எட்டியுள்ளதாக அறிவித்தார்.
அமெரிக்காவில் தானியங்கி பணி அனுமதி நீட்டிப்பு ரத்து: ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பு!
அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டவர்களுக்கான பணி அங்கீகார ஆவணங்களின் (Employment Authorization Documents - EADs) தானியங்கி நீட்டிப்பு முறையை (Automatic Extension) முடிவுக்கு கொண்டு வருவதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு துறை (Department of Homeland Security - DHS) அறிவித்துள்ளது.
30 ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருந்த அணு ஆயுதச் சோதனைகளை உடனடியாகத் தொடங்க டிரம்ப் உத்தரவு!
உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அணு ஆயுத சோதனைகளை உடனடியாக மீண்டும் தொடங்க உத்தரவிட்டுள்ளார்.
டிரம்ப் - ஜி ஜின்பிங் சந்திப்பு: 6 வருடங்களுக்கு பின் சந்தித்துக்கொண்ட உலக ஆளுமைகள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோருக்கு இடையேயான முக்கியமான சந்திப்பு தென் கொரியாவின் பூசானில் இன்று (அக்டோபர் 30, 2025) நடைபெற்றது.
'அழகான மனிதர் ஆனால்...கடுமையானவர்': மோடியை பாராட்டிய டிரம்ப்
தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) தலைமை நிர்வாக அதிகாரிகள் உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டினார்.
கரீபியன் தீவில் ஆட்டத்தை காட்டிய மெலிசா சூறாவளி கியூபாவை நோக்கி நகர்கிறது
"மெலிசா" சூறாவளி ஜமைக்காவில் பேரழிவு சக்தியுடன் கரையை கடந்துள்ளது, இது இதுவரை பதிவானவற்றில் மிகவும் வலிமையான சூறாவளிகளில் ஒன்றாக மாறியுள்ளது.
செர்னோபிலில் காணப்பட்ட வினோத நீல நாய்கள்: அவை உண்மையானவையா என ஆராய்ச்சியாளர்கள் கவலை
உக்ரைனில் உள்ள செர்னோபில் அணுமின் நிலையத்திற்கு அருகில் பிரகாசமான நீல நிற ரோமங்களுடன் தெருநாய்கள் நடமாடுவதை காட்டும் ஒரு விசித்திரமான வீடியோ வைரலாகி வருகிறது.
காசா மீது 'உடனடி, சக்திவாய்ந்த' தாக்குதலுக்கு நெதன்யாகு உத்தரவு! முறிவடைந்த போர் நிறுத்தம்?
அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் அமல்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மத்தியில், இஸ்ரேலியப் படைகள் காசா மீது உடனடியாகவும், 'சக்திவாய்ந்த' முறையிலும் தாக்குதல்களை நடத்த வேண்டும் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு துருக்கியில் 6.1 ரிக்டர் நிலநடுக்கம்: கட்டிடங்கள் சரிந்தன, உயிர் சேதம் இல்லை
மேற்கு துருக்கியின் பாலிகேசிர் (Balikesir) மாகாணத்தில் உள்ள சிந்திர்கி (Sindirgi) நகரத்தை மையமாகக் கொண்டு, திங்கட்கிழமை இரவு (அக்டோபர் 27, 2025) 6.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.
மெலிசா சூறாவளி: உலகத்தின் அதி தீவிரமான புயல் ஜமைக்காவை தாக்க வருகிறது
"மெலிசா" சூறாவளி மிக வேகமாக தீவிரமடைந்து, மணிக்கு 175 மைல் (280 கிமீ/மணி) வேகத்தில், அரிய வகை 5 ஆக வலுவடைந்து, இந்த ஆண்டின் பூமியின் வலிமையான புயலாக மாறியுள்ளது.
அமெரிக்க பிரதமர் டிரம்ப், ஜப்பானின் தகைச்சி ஆகியோர் முக்கியமான கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், ஜப்பானின் புதிய பிரதமர் சானே தகைச்சியும் முக்கியமான கனிமங்கள் மற்றும் அரிய மண் தாதுக்களின் விநியோகத்தை பாதுகாப்பதற்கான ஒரு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
ஆழமடையும் பாகிஸ்தான்- பங்களாதேஷ் நட்பு: இந்தியா கவலைப்பட வேண்டுமா?
பாகிஸ்தானின் உயர்மட்ட இராணுவ அதிகாரி ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா சமீபத்தில் டாக்காவில் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸை சந்தித்தார்.
அமெரிக்கக் கடலோரப் பகுதிகளில் அடையாளம் தெரியாத நீருக்கடியில் உள்ள பொருட்கள் அதிகரிப்பால் பீதி
அமெரிக்கக் கடலோரப் பகுதிகளில் அடையாளம் தெரியாத நீருக்கடியில் உள்ள பொருட்கள் (USO) கணிசமாக அதிகரித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நிலைப்பாட்டால் பாகிஸ்தான்- தாலிபான் அமைதி பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒரு முட்டுக்கட்டையை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
பிரிட்டனில் மீண்டும் இந்திய வம்சாவளி பெண் மீது இனரீதியான பாலியல் வன்கொடுமை; குற்றவாளியை கண்டுபிடிக்க காவல்துறை தீவிரம்
பிரிட்டனின் வடக்கு இங்கிலாந்தின் வால்சால், பார்க் ஹால் பகுதியில் சனிக்கிழமை மாலை 20 வயதுடைய ஒரு பெண் இனரீதியான வெறுப்பால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதைத் தொடர்ந்து, தகவலுக்காக வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறை பொதுமக்களிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.