உலகம் செய்தி
உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.

கடற்படை தலைமைத் தளபதி மற்றும் முக்கிய அணுசக்தி விஞ்ஞானியை நீக்கினார் சீன அதிபர் ஜி ஜின்பிங்
புதிய டிஜிட்டல் சேவை வரி விதிப்பால் கடுப்பு; கனடாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை நிராகரிப்பதாக டிரம்ப் அறிவிப்பு
டொனால்ட் டிரம்பின் நிர்வாக உத்தரவுகளுக்கு தடை விதிக்க கீழ் நீதிமன்றங்களுக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடு
நீதிமன்ற விசாரணையில் பெண் நீதிபதியை ஹனி எனக் கூறிய வழக்கறிஞர்; வைரலாகும் வீடியோ
'நாங்கள் அவரைக் கொல்லும் முன்பே கமேனி தலைமறைவாகிவிட்டார்': இஸ்ரேல்
இரு நாடுகளுக்கும் இடையிலான சமீபத்திய பதட்டங்களின் போது ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை படுகொலை செய்ய இஸ்ரேலிய இராணுவம் திட்டமிட்டிருந்ததாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.
சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தம் முடிந்தது, விரைவில் இந்தியாவுடன் 'மிகப் பெரிய' வர்த்தக ஒப்பந்தம்: டிரம்ப்
அமெரிக்கா, சீனாவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், விரைவில் இந்தியாவுடன் ஒரு "மிகப் பெரிய" ஒப்பந்தம் ஏற்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார்.
விசா பெற கடந்த 5 ஆண்டுகளின் அனைத்து social media தரவுகளையும் வெளிப்படுத்தவேண்டும்: அமெரிக்க தூதரகம்
இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் வியாழக்கிழமை, விசா விண்ணப்பதாரர்களை பின்னணி சரிபார்ப்புக்காக கடந்த ஐந்து ஆண்டுகளின் அனைத்து சமூக ஊடக பயனர்பெயர்கள் மற்றும் ஹாண்டில்களை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டது.
பஹல்காம் பற்றி குறிப்பிடாததற்காக SCO ஆவணத்தில் கையெழுத்திட மறுத்தது இந்தியா; அப்படியென்றால் என்ன?
சீனாவின் கிங்டாவோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) கூட்டத்தில், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒரு கூட்டு அறிக்கையில் கையெழுத்திட மறுத்துவிட்டார்.
இந்தியா- சீனா SCO கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்தார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
சீனாவின் கிங்டாவோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மெக்சிகோவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பேர் உயிரிழந்தனர்
மத்திய மெக்சிகோவின் இராபுவாடோவில் ஒரு மத விழாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுயவை வெகுவாக பாராட்டிய அமெரிக்கா அதிபர் டிரம்ப்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவர் மீது இருக்கும் தற்போதைய விசாரணை நிறுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை ஈரான் தூக்கிலிட்டுள்ளது
இஸ்ரேலின் உளவு நிறுவனமான Mossad-க்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை ஈரான் தூக்கிலிட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு அபிநந்தன் வர்த்தமானைக் கைப்பற்றிய பாகிஸ்தான் அதிகாரி தலிபான் மோதலில் கொல்லப்பட்டார்
2019 ஆம் ஆண்டு இந்திய விமானி அபிநந்தன் வர்தமனைக் சிறைபிடித்த பாகிஸ்தான் மேஜர் மொய்ஸ் அப்பாஸ் ஷா, கைபர் பக்துன்க்வா பகுதியில் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) பயங்கரவாதிகளுடனான மோதலில் கொல்லப்பட்டார்.
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் அணுசக்தி நிலையங்களை அழிக்கவில்லை என்கிறது அமெரிக்க உளவுத்துறை; கொதித்தெழுந்த டிரம்ப்
ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்ட வான்வழித் தாக்குதல்கள் இரண்டு அணுசக்தி நிலையங்களை முழுமையாக அழிக்கவில்லை என்று ஒரு புதிய அமெரிக்க உளவுத்துறை அறிக்கை கூறியுள்ளது.
ஈரான் போர் நிறுத்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டு; 'சக்திவாய்ந்த தாக்குதல்களுக்கு' உத்தரவிட்டுள்ளது
டொனால்ட் டிரம்ப் மற்றும் கத்தார் மத்தியஸ்தம் செய்து ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, ஈரான் போர் நிறுத்தத்தை மீறியதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரான் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது, போரில் உடன் நின்ற டிரம்பிற்கு நன்றி கூறிய நெதன்யாகு
அமெரிக்காவின் மத்தியஸ்தத்தின் கீழ் ஈரானுடனான போர் நிறுத்த திட்டத்தை இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது.
இஸ்ரேல் மீதான தாக்குதல்களுக்குப் பிறகு போர்நிறுத்தத்தினை அறிவித்த ஈரான்
அமெரிக்காவின் போர் நிறுத்த அறிவிப்பு, தெஹ்ரானின் மறுப்பு, அதைத் தொடர்ந்து வெளிப்படையான யு-டர்ன் பின்னர் இஸ்ரேல் மீதான ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்கள் என பல மணிநேர முன்னேற்றங்களுக்கு பின்னர், ஈரான் இறுதியாக போர் நிறுத்தத்தை அறிவித்தது.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் முழுமையான போர்நிறுத்தம் ஏற்பட்டதாக டிரம்ப் அறிவித்தார்; மறுக்கும் ஈரான்
இஸ்ரேலும் ஈரானும் 'முழுமையான போர்நிறுத்த' ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
'ஆபரேஷன் ஹெரால்ட்ஸ் ஆஃப் விக்டரி': கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்த ஈரான்
நேற்று இரவு கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. தோஹாவில் உள்ள அல்-உதெய்த் விமானத் தளத்தின் மீதான தாக்குதல், அமெரிக்கத் தாக்குதலுக்கு பதிலடி என கூறியது.
சிந்து நதி நீர் தரவில்லையென்றால் இந்தியாவோடு போர் செய்யுமாம் பாகிஸ்தான்; சொல்கிறார் பிலவால் பூட்டோ
பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும், ராணுவ சர்வாதிகாரி ஜுல்பிகர் அலி பூட்டோ குடும்ப வாரிசுமான பிலாவல் பூட்டோ-சர்தாரி, இந்தியாவிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வருமான வரி விதிக்கும் முதல் வளைகுடா நாடு: 2028ஆம் ஆண்டு முதல் 5% வருமான வரி விதிக்க போகும் ஓமான்
2028 ஆம் ஆண்டு முதல் 5% வருமான வரி விதிக்கும் திட்டத்தை ஓமான் அறிவித்துள்ளது. அவ்வாறு செய்யும் முதல் வளைகுடா நாடாக மாறியுள்ளது.
அமெரிக்காவை தொடர்ந்து ஈரானின் ஃபோர்டோ அணுசக்தி தளத்தைத் தாக்கிய இஸ்ரேல்
அமெரிக்கா, ஈரானின் ஃபோர்டோ அணுசக்தி நிலையத்தின் மீது குண்டுவீச்சு நடத்திய ஒரு நாளுக்குப் பிறகு, இஸ்ரேல் அதன் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
நட்பு நாடான ஈரானுக்கு புடின் ஏன் உதவவில்லை? அவரது பதில் இதோ!
ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான மோதலில் தனது நாடு ஏன் தலையிடவில்லை என்பதை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஈரான் ராணுவ விமான தளங்கள் மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல்; 15 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் அழிப்பு
இஸ்ரேல் ராணுவம், ஆறு ஈரானிய ராணுவ விமான நிலையங்கள் மீது தொடர்ச்சியான இலக்குவைக்கப்பட்ட வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டு, 15 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை அழித்ததாக அறிவித்துள்ளது.
ஈரான் மோதல்களுக்கு மத்தியில் குடிமக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்திய அமெரிக்க அதிகாரிகள்
அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போர் சூழலில், சைபர் தாக்குதல்கள், பழிவாங்கும் வன்முறை மற்றும் உள்நாட்டு தீவிரவாத நடவடிக்கைகள் நடைபெறக்கூடும் என்று அமெரிக்கா தன்னாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவை அடிப்பது உறுதி; நேரம், இடத்தை ராணுவம் உறுதி செய்யும் என ஐநா கூட்டத்தில் ஈரான் அறிவிப்பு
ஐநா சபையின் அவசர பாதுகாப்பு கவுன்சில் அமர்வில், ஈரான் அமெரிக்காவிற்கு ஒரு கூர்மையான எச்சரிக்கையை விடுத்து, தனது அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க வான்வழித் தாக்குதல்களுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என அறிவித்துள்ளது.
அமெரிக்கா தாக்குதலை தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியை மூட ஈரான் திட்டம்; கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயமா?
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈரானில் மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதற்கான நடவடிக்கைக்கு ஈரானின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக அரசு நடத்தும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
"எதிரி நாடு மிகப்பெரிய தவறு செய்துவிட்டது, தண்டிக்கப்பட வேண்டும்" என அமெரிக்க தாக்குதல்கள் குறித்து ஈரான் தலைவர் கண்டிப்பு
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதல்களை ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி கடுமையாகக் கண்டித்தார்.
ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதற்கு ஈரான் நாடாளுமன்றம் ஒப்புதல்; எண்ணெய் விலைகள் உயரும் அபாயம்; இந்தியாவுக்கு பாதிப்பா?
ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, உலகின் மிக முக்கியமான எண்ணெய் கப்பல் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதற்கு ஈரான் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) அமெரிக்கப் படைகள் இஸ்ரேலுடன் இணைந்து, ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய மூன்று முக்கிய ஈரானின் அணுசக்தி நிலையங்களை குண்டுவீசித் தாக்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஈரான் இஸ்ரேல் மீது புதிய ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதால் மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரித்தது.
அற்புதமான வெற்றி; ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலுக்குப் பிறகு டொனால்ட் டிரம்ப் அமெரிக்க மக்களுக்கு உரை
மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) அமெரிக்க போர் விமானங்கள் ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுமழை பொழிந்து தாக்குதல் நடத்தியுள்ளது.
தனக்கு பிறகு யார்? போர்ப் பதற்றங்களுக்கு மத்தியில் 3 வாரிசுகளை அறிவித்தார் ஈரான் தலைவர் அலி கமேனி
இஸ்ரேலுடனான ஈரானின் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, தனது மகன் மொஜ்தபா கமேனியை பரிசீலனையில் இருந்து விலக்கி, தனக்கு பிறகு தலைமைப் பொறுப்புக்கான வாரிசுரிமைத் திட்டங்களைத் தொடங்கும் அரிய நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க ராணுவ விமானங்கள் குண்டுமழை பொழிந்து தாக்குதல்
இஸ்ரேல்-ஈரான் மோதலின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்களான ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் எஸ்ஃபஹான் மீது அமெரிக்கப் படைகள் நேரடி வான்வழித் தாக்குதல்களை நடத்தியதை உறுதிப்படுத்தினார்.
ஈரான் முழுவதும் துல்லியத் தாக்குதல்களில் மூன்று உயர்மட்ட தளபதிகளை ஒரே நாளில் கொன்றது இஸ்ரேல்
ஈரானுடனான மோதலில், இஸ்ரேல் சமீபத்திய உயர் துல்லிய வான்வழித் தாக்குதல்களில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (ஐஆர்ஜிசி) மூன்று உயர் தளபதிகளைக் கொன்றது.
இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதற்காக டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டுமாம்; பாகிஸ்தான் பரிந்துரை
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய மோதலைத் தணிப்பதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ராஜதந்திர முயற்சிகளை மேற்கோள் காட்டி, 2026 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு அவரை பரிந்துரைப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
துருக்கியில் அழகுசாதன அறுவை சிகிச்சை செய்யப்போய் சடலமாக திரும்பிய மொசாம்பிக் பாடகி
ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கின் 31 வயதான பாடகியும் சமூக ஊடக இன்ஃபுளூயன்சருமான அனா பார்பரா புர் புல்ட்ரினி, துருக்கியின் இஸ்தான்புல்லில் அழகை மெருகேற்றுவதற்கான காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு இறந்தார்.
2028 ஆம் ஆண்டுக்குள் உலகம் 1.5°C புவி வெப்பமடைதல் வரம்பைத் தாண்டும்
2028 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மனிதர்கள் அதிக அளவு பசுமை இல்ல வாயுவை வெளியிடுவார்கள், இதனால் புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்துவது என்பது சாத்தியமற்றதாகிவிடும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தியா மாணவர்களை மீட்டுச் செல்வதற்காக மூடப்பட்ட வான்வெளியை திறந்தது ஈரான்
ஈரான் தனது தடைசெய்யப்பட்ட வான்வெளியை இந்தியாவின் மீட்பு விமானங்களுக்காக மட்டும் திறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எதுவா இருந்தாலும் போர் முடிந்த பிறகுதான்; அமெரிக்க பேச்சுவார்த்தையை நிராகரித்தது ஈரான்
நடந்து வரும் மோதலில் இஸ்ரேலுடன் இணைந்து செயல்படுவதாக குற்றம் சாட்டி, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை ஈரான் உறுதியாக நிராகரித்துள்ளது.
அமெரிக்கா போரில் சேர முடிவு செய்துள்ள நிலையில், ஐரோப்பாவும் ஈரானும் பேச்சுவார்த்தை நடத்துகின்றன
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஈரானை மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவர ஐரோப்பிய நாடுகள் பாடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
ஈரான் தலைவர் கொமேனிக்கும் உத்தரப்பிரதேசத்திற்கும் உள்ள வரலாற்றுத் தொடர்பு; வியக்கவைக்கும் பின்னணி!
உத்தரபிரதேசத்தின் பராபங்கி மாவட்டத்தில் உள்ள அமைதியான கிராமமான கிந்தூர், ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஸ்தாபகத் தந்தை அயதுல்லா ருஹோல்லா கொமேனியுடன் அதன் மூதாதையர் தொடர்பு காரணமாக எதிர்பாராத விதமாக உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது.
ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேலுடன் கை கோர்க்குமா அமெரிக்கா? இரண்டு வாரங்களுக்குள் முடிவெடுக்கப்படும் என அறிவிப்பு
இஸ்ரேல்-ஈரான் மோதல் எட்டாவது நாளில் நுழைந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரு நாடுகளும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசிக்கொண்டு சரமாரியாக தாக்கின.
'வன்முறையை ஊக்குவிக்க காலிஸ்தானியர்கள் கனடாவைப் பயன்படுத்துகிறார்கள்': இந்தியாவின் கூற்றை உறுதிப்படுத்திய உளவு நிறுவனம்
கனடாவின் உயர்மட்ட புலனாய்வு அமைப்பான கனடிய பாதுகாப்பு புலனாய்வு சேவை (CSIS), காலிஸ்தானி தீவிரவாதிகள் தங்கள் மண்ணில் இருந்து செயல்படுவதை முதல் முறையாக உறுதிப்படுத்தியுள்ளது.
வாஷிங்டன் மேல் பறந்த அமெரிக்காவின் டூம்ஸ்டே விமானம்; இஸ்ரேல்-ஈரான் மோதலுக்கு மத்தியில் இந்த விமானம் பறந்தது ஏன்?
அமெரிக்காவின் மிகவும் வகைப்படுத்தப்பட்ட இ-4பி இரவு கண்காணிப்பு விமானம், பெரும்பாலும் டூம்ஸ்டே விமானம் என்று குறிப்பிடப்படுகிறது.
இஸ்ரேலிய மருத்துவமனையை தாக்கிய ஈரானிய ஏவுகணை; டஜன் கணக்கானவர்கள் காயம்
வியாழக்கிழமை ஈரான், இஸ்ரேலை நோக்கி ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை வீசியதைத் தொடர்ந்து, பீர்ஷெபாவில் உள்ள இஸ்ரேலின் சொரோகா மருத்துவமனை "பரவலான சேதத்தை" சந்தித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் மோதலை முடிவுக்கு கொண்டு வந்ததற்காக பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் முனிருக்கு டிரம்ப் பாராட்டு
புதன்கிழமை (ஜூன் 18) வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனிரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்றார்.
அமெரிக்க மாணவர் விசாவுக்கு புதிய நிபந்தனை: மாணவர்களின் சோசியல் மீடியா விவரங்கள் கட்டாயம்
அமெரிக்கா, மாணவர்கள் விசா (F-1 Visa) வழங்கும் செயல்முறையை மீண்டும் தொடங்கியுள்ளது.
ஈரான் மீது இந்த வார இறுதியில் தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வருகிறது
ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் வரும் நாட்களில் ஈரான் மீது இராணுவத் தாக்குதலுக்குத் தயாராகி வருகின்றனர்.
இஸ்ரேல் மீது ஏவப்பட்ட ஈரானின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை பற்றிய அனைத்தும்
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தனது ஹைப்பர்சோனிக் ஏவுகணையான ஃபட்டா-1 ஐ இஸ்ரேலில் ஏவியதாக அறிவித்தது.
வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் ராணுவத் தலைவருக்கு விருந்து வைக்கும் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனிருக்கு மதிய விருந்து அளிக்க உள்ளார்.
சைபர் தாக்குதல்களைத் தடுக்க ஈரான் இணைய சேவையை முடக்கியது
ஈரான் தனது குடிமக்களுக்கான இணைய அணுகலைக் கட்டுப்படுத்தத் தொடங்கியுள்ளதாகவும், உலகளாவிய இணையத்திலிருந்து முற்றிலுமாக துண்டிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஈரானிய அணுசக்தி தளங்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் இணைய அமெரிக்கா திட்டம்?
ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களில் இணைவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
வாஷிங்டன் நகரில் பாகிஸ்தான் ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீருக்கு எதிராக பாகிஸ்தானிய-அமெரிக்கர்கள் பேரணி
வாஷிங்டன் டிசியில் உள்ள ஃபோர் சீசன்ஸ் ஹோட்டலுக்கு வெளியே பாகிஸ்தானிய அமெரிக்கர்கள் ஒன்றுகூடி, ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனிருக்கு எதிராகவும், பாகிஸ்தான் மக்களுக்கு எதிரான அவரது குற்றங்கள் என்று அவர்கள் கூறியதைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்று பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) எக்ஸ்-இல் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடியின் கனடா வருகையின் போது காலிஸ்தானியர்கள் 'பதுங்கியிருந்து தாக்குதல்' நடத்த சதித்திட்டம்
G7 உச்சி மாநாட்டில் பங்கேற்க கனடா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக "பதுங்கியிருந்து" போராட்டம் நடத்த காலிஸ்தான் தீவிரவாதிகள் ஆல்பர்ட்டாவின் கனனாஸ்கிஸில் கூடினர் என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
5வது நாளாக தொடரும் இஸ்ரேல்-ஈரான் மோதல்; போர்நிறுத்தத்தை முன்மொழிந்த அமெரிக்கா
இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையிலான மோதல் ஐந்தாவது நாளை எட்டியபோதும், அது குறைவதற்கான எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை.
உலக நெருக்கடிகளுக்கும், பீட்சாவிற்கும் இருக்கும் தொடர்பு என்ன? வெள்ளைமாளிகையை கேள்விக்குள்ளாகிய 'பீட்சா குறியீடு'
இஸ்ரேல் - ஈரான் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பீட்சா ஆர்டர்களையும் உலகளாவிய நெருக்கடிகளையும் இணைக்கும் ஒரு வினோதமான கோட்பாடு மீண்டும் வெளிப்பட்டுள்ளது.
ஜப்பானின் கன்சாய் சர்வதேச விமான நிலையம் மூழ்கிக் கொண்டிருக்கிறது!
கட்டிடக்கலை வடிவமைப்பு, செயல்திறன், ஊழியர்கள் மற்றும் சாமான்கள் விநியோகத்திற்காக விருது பெற்ற விமான நிலையமான ஜப்பானின் கன்சாய் சர்வதேச விமான நிலையம் (KIX) மூழ்கிக் கொண்டிருக்கிறது.
அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து வெளியேற ஈரான் திட்டமிட்டுள்ளது; இதனால் என்ன அச்சுறுத்தல்?ஒப்பந்தம் என்ன கூறுகிறது?
அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்து (NPT) விலகுவதற்கான மசோதாவை ஈரானிய நாடாளுமன்றம் தயாரித்து வருவதாகவும், எனினும் பேரழிவு ஆயுதங்களை உருவாக்குவதற்கு தெஹ்ரான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் ஈரான் வெளியுறவு அமைச்சகம் திங்களன்று தெரிவித்துள்ளது.
இது போருக்கான யுகம் அல்ல; பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண பிரதமர் மோடி வலியுறுத்தல்
திங்கட்கிழமை (ஜூன் 16) சைப்ரஸுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நடந்து வரும் இஸ்ரேல்-ஈரான் மோதலுக்கு மத்தியில் உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான அவசரத் தேவையை வலியுறுத்தினார்.
ஆர்டர் ஆஃப் மாகாரியோஸ் III: பிரதமர் மோடிக்கு சைப்ரஸின் மிக உயரிய சிவிலியன் விருது வழங்கி கௌரவிப்பு
திங்கட்கிழமை (ஜூன் 16) அன்று, சைப்ரஸின் மிக உயர்ந்த குடிமக்கள் விருதான கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மாகாரியோஸ் III விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது.
பிரபல வாஷிங்டன் போஸ்ட் மீது சைபர் தாக்குதல்; பத்திரிகையாளர்களின் மின்னஞ்சல் கணக்குகள் கசிவு
வாஷிங்டன் போஸ்ட் அதன் சில பத்திரிகையாளர்களின் மின்னஞ்சல் கணக்குகளை குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்திய மாணவர்களை வெளியேற்றுவதற்காக ஈரான் நில எல்லைகளைத் திறந்துள்ளது
தெஹ்ரான் மற்றும் இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், இந்திய மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக ஈரான் தனது நில எல்லைகளைத் திறந்துள்ளது. இந்திய மாணவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற இந்தியா கோரியதைத் தொடர்ந்து இது வந்துள்ளது.
இஸ்ரேல் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்த பாகிஸ்தான் உதவும் எனக் கூறிய ஈரான்; உடனடியாக நிராகரித்த பாகிஸ்தான்
ஈரான் மீது இஸ்ரேல் அணு ஆயுதங்களை கொண்டு தாக்கினால், பாகிஸ்தான் இஸ்ரேலுக்கு எதிராக அணு ஆயுதத் தாக்குதலை நடத்தும் என்று ஈரானிய மூத்த அதிகாரி ஒருவர் கூறி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
டிரம்பைக் கொல்ல ஈரான் சதி, அவரை முதல் எதிரியாக கருதுகிறது: இஸ்ரேல் பிரதமர் பகீர் குற்றச்சாட்டு
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், ஈரான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை தனது அணுசக்தி திட்டத்திற்கு அச்சுறுத்தலாகக் கருதுவதால் அவரைக் கொல்ல முயற்சிப்பதாகக் கூறினார்.
பிரிட்டனின் வெளிநாட்டு உளவுப்பிரிவான எம்ஐ 6 அமைப்புக்கு முதல் முறையாக பெண் தலைவராக நியமனம்
பிரிட்டன் ரகசிய புலனாய்வு சேவைகளில் ஒன்றான எம்ஐ 6 உளவுத்துறையின் தலைவராக முதல்முறையாக பிளேஸ் மெட்ரெவேலி என்ற பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார்.
45 மில்லியன் டாலருக்கு பிரயோஜனமில்லை; சமூக வலைதளங்களில் கேலிக்கூத்தாக மாறிய அமெரிக்க ராணுவ அணிவகுப்பு
அமெரிக்க ராணுவத்தின் 250வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பிரமாண்டமான ராணுவ அணிவகுப்பு சமூக வலைதளங்களில் கேலிக்கு உள்ளாகி உள்ளது.
தொடர்ந்து மூன்றாவது நாளாக நீடிக்கும் ஈரான்-இஸ்ரேல் தாக்குதல்; 230க்கும் மேற்பட்டோர் பலி
இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்ந்து மூன்றாவது நாளாக தீவிரமடைந்துள்ளது, இரு நாடுகளும் கடுமையான ஏவுகணைத் தாக்குதல்களை பரிமாறிக் கொண்டன.
ஈரானில் உள்ள இந்திய குடிமக்களுக்கு எச்சரிக்கை; அவசர உதவிக்கான தொடர்பு எண்களை வெளியிட்டது தூதரகம்
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில், ஈரானில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாகவும் விழிப்புடன் இருக்கவும் தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் ஒரு புதிய ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் பராமரிப்பை மேற்கொண்டது துருக்கி நிறுவனமா? துருக்கி அரசு விளக்கம்
ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட பிறகு விபத்துக்குள்ளான ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனருக்கு, தனது தேசிய விமான பராமரிப்பு நிறுவனமான துருக்கிய டெக்னிக் பராமரிப்பை மேற்கொண்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவிய நிலையில், துருக்கி அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஜகா வாங்கியது அமெரிக்கா; ராணுவ அணிவகுப்புக்கு பாகிஸ்தான் ராணுவத் தளபதியை அழைக்கவேயில்லை என வெள்ளை மாளிகை நிராகரிப்பு
அமெரிக்க ஆயுதப் படைகளின் 250வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், வாஷிங்டனில் நடைபெறவிருக்கும் அமெரிக்க ராணுவ அணிவகுப்புக்கு பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் அழைக்கப்பட்டதாகக் கூறப்படுவதை வெள்ளை மாளிகை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
பற்றி எரிகிறது தெஹ்ரான்; ஈரானின் பாதுகாப்பு அமைச்சகம் உள்ளிட்ட இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) அதிகாலை ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது.
வரைபடத்தில் ஜம்மு காஷ்மீரை பாகிஸ்தானின் அங்கமாக தவறாக சித்தரித்த இஸ்ரேல்; இந்தியர்களின் எதிர்ப்பை அடுத்து மன்னிப்பு கோரியது
எக்ஸ் சமூக ஊடக தளத்தில் ஜம்மு காஷ்மீரை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக தவறாகக் காட்டிய வரைபடத்தைப் பகிர்ந்த பின்னர் இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) மன்னிப்பு கோரியது.
இஸ்ரேல் மீது தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்; ஈரான் மக்கள் சுதந்திரம் பெறும் நாள் நெருங்கிவிட்டதாக நெதன்யாகு உரை
ஈரானில் ராணுவ அதிகாரிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் உட்பட 78 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் முந்தைய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வெள்ளிக்கிழமை (ஜூன் 13) இரவு இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ச்சியான பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
இஸ்ரேல்-ஈரான் மோதலால் பதற்றம் அதிகரிப்பு; பிரதமர் மோடிக்கு போன் போட்டு விளக்கம் அளித்த பெஞ்சமின் நெதன்யாகு
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசியில் அழைத்து விளக்கம் அளித்துள்ளார்.
'எதுவும் மிச்சமில்லாமல் போவதற்கு முன்பு ஒப்பந்தம் போடுங்கள்': ஈரானை எச்சரிக்கும் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை ஈரானை அணுசக்தி ஒப்பந்தத்தை இறுதி செய்யுமாறு எச்சரித்தார்.
போயிங் 787 விமானத்தை தரையிறக்க 'உடனடி காரணம் இல்லை' என்று அமெரிக்கா கூறுகிறது
நேற்று அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளாகி 240க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலிய தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் காமெனியின் உயர் ஆலோசகர் கொல்லப்பட்டார்
வெள்ளிக்கிழமை இஸ்ரேலின் முன்னோடியில்லாத தாக்குதலில் ஈரானின் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்கள் மூவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.