பாகிஸ்தான்: செய்தி
'ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தான் அமெரிக்காவின் உதவியை நாடியது': புதிய ஆவணங்கள் அம்பலப்படுத்தியது
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, வாஷிங்டனிடம் உதவி கோர பாகிஸ்தான் மேற்கொண்ட தீவிர முயற்சிகளை அமெரிக்க வெளியுறவு முகவர்கள் பதிவுச் சட்டத்தின் (FARA) கீழ் வெளியிடப்பட்ட ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
'2026 எப்படி இருக்கும் என்றால்..': மீண்டும் இந்தியாவை சீண்டும் பாகிஸ்தான் ஜெனரல்
பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி, இந்தியாவிற்கு எந்தவிதமான தூண்டுதலும் இல்லாத அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.
ISI வலையில் சிக்கிய 15 வயது பஞ்சாப் சிறுவன்; மேலும் பல சிறார்கள் உளவாளிகளாக இருக்கலாம் என சந்தேகம்
இந்திய எல்லை பகுதிகளில் பாதுகாப்பை சீர்குலைக்க பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ (ISI) உளவு அமைப்பு புதிய சதித்திட்டத்தைத் தீட்டியுள்ளது.
இந்தியா எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதை யாரும் ஆணையிட முடியாது: பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் எச்சரிக்கை
பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரிப்பதற்காக பாகிஸ்தானை கடுமையாக சாடிய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்தியா தன்னைத்தானே பாதுகாத்து கொள்ள உரிமை உண்டு என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் சீனா மத்தியஸ்தம் செய்ததாக கூறியதற்கு இந்தியாவின் ரியாக்ஷன்
இந்த ஆண்டு தொடக்கத்தில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஏற்பட்ட இராணுவ மோதலின் போது இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்கு சீனா மத்தியஸ்தம் செய்ததாக சீனாவின் கூற்றை இந்தியா நிராகரித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூரின் போது "நாங்களும் மத்தியஸ்தம் செய்தோம்": சீனா கிளப்பும் புதிய சர்ச்சை
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்' மோதலின் போது, பதற்றத்தை தணிக்க தாங்களும் முக்கிய பங்காற்றியதாக சீனா உரிமை கொண்டாடியுள்ளது.
இந்தியா -பாகிஸ்தான் இடையே மீண்டும் போர் பதற்றம் ஏற்படுமென அமெரிக்க ஆய்வு மையம் கணிப்பு
2026-ஆம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே மீண்டும் ஆயுதமேந்திய மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த 'கவுன்சில் ஆன் ஃபாரின் ரிலேஷன்ஸ்' (CFR) எனும் புகழ்பெற்ற ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் நூர் கான் விமானப்படைத் தளம் தாக்கப்பட்டதை ஒப்புக்கொண்டது பாகிஸ்தான்
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் போது, பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படைத் தளம் தாக்கப்பட்டதை அந்த நாடு முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.
பாகிஸ்தானின் அணு ஆயுதத்தால் ஆபத்து: 2001லேயே அமெரிக்காவை எச்சரித்த ரஷ்ய அதிபர் புடின்
2001 முதல் 2008 வரையிலான காலகட்டத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற ரகசியப் பேச்சுவார்த்தைகளின் ஆவணங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
விற்பனையானது பாகிஸ்தான் ஏர்லைன்ஸ்! ரூ.4,300 கோடிக்கு வாங்கியது ஆரிப் ஹபீப் குழுமம்
நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த பாகிஸ்தானின் தேசிய விமான நிறுவனமான 'பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்' (PIA), நீண்ட இழுபறிக்கு பிறகு இன்று தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது.
இணையத்தை ஆக்கிரமிக்கும் 'துரந்தர்' தூத்சோடா: ஆரோக்கியமா அல்லது ஆபத்தா?
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் 'துரந்தர்' (Dhurandhar) திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு 'தூத்சோடா' பானம் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இம்ரான் கானுக்கு மற்றுமொரு அடி: தோஷகானா வழக்கில் 17 ஆண்டுகள் சிறை - பாகிஸ்தானில் பரபரப்பு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது முன்னாள் மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு தோஷகானா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் நீதிமன்றம் இன்று (டிசம்பர் 20) 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு சர்வதேச அளவில் அவமானம்: 56,000 பிச்சைக்காரர்களை திருப்பி அனுப்பிய சவுதி அரேபியா
வெளிநாடுகளுக்கு சென்று பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து, சவுதி அரேபியா ஒரே நேரத்தில் 56,000 பாகிஸ்தானியர்களை நாடு கடத்தியுள்ளது.
பாகிஸ்தானுக்கு கிடுக்கிப்பிடி; நிதி உதவியைப் பெற கூடுதலாக 11 நிபந்தனைகள் விதித்தது ஐஎம்எஃப்
பாகிஸ்தானுக்கான 7 பில்லியன் டாலர் மதிப்புள்ள விரிவாக்கப்பட்ட நிதி உதவியின் கீழ், சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) மேலும் 11 புதிய கட்டமைப்பு நிபந்தனைகளை விதித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு $686 மில்லியன் F-16 போர் விமான ஆதரவு தொகுப்புக்கு அமெரிக்கா ஒப்புதல்; இந்தியாவிற்கு அச்சுறுத்தலா?
அமெரிக்கா, பாகிஸ்தானின் F-16 போர் விமானங்களுக்கான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம், உபகரணங்கள் மற்றும் ஆதரவை வழங்குவதற்காக 686 மில்லியன் டாலர் (சுமார் ₹5,700 கோடி) மதிப்புள்ள தொகுப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்துடனான அமெரிக்க உறவு, இந்தியா-அமெரிக்க உறவில் ஒரு சவால்: அமைச்சர் ஜெய்சங்கர் மகன் கருத்து
இந்திய-அமெரிக்க உறவில் உள்ள முக்கிய சவால்களில் ஒன்று, பாகிஸ்தானின் ராணுவத் தலைமைத்துவத்துடனான அமெரிக்காவின் புதுப்பிக்கப்பட்ட ஈடுபாடுதான் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் மகனும், அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன் அமெரிக்காவின் செயல் இயக்குநருமான துருவா ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் சட்டமன்றம் 'நாட்டுக்கு எதிரான' செயல்களுக்காக இம்ரான் கான் மற்றும் PTI-க்கு தடை விதித்தது
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் சட்டமன்றம், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது அரசியல் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) மீது தடை விதிக்கக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கேள்வி கேட்ட பெண் நிருபரை பார்த்து கண்ணடித்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தொடர்பான கேள்வியின்போது, ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் பெண் பத்திரிகையாளர் ஒருவரைப் பார்த்து கண் சிமிட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் மீண்டும் மோதல்: 4 பொதுமக்கள் பலி என தாலிபான் குற்றச்சாட்டு
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் சனிக்கிழமை (டிசம்பர் 6) அதிகாலையில் இரு தரப்புக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது.
பாகிஸ்தான் கடல் எல்லை அருகே அரபிக்கடலில் இந்திய விமானப் படை ஒத்திகை அறிவிப்பு; NOTAM வெளியீடு
இந்திய விமானப்படை (IAF), அரபிக்கடலில் பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து சுமார் 200 கடல் மைல் தொலைவில் டிசம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் ராணுவ ஒத்திகை ஒன்றை நடத்தவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
IMF அழுத்தத்தினை சமாளிக்க பாகிஸ்தான் மிகப்பெரிய விமான நிறுவனத்தை விற்பனை செய்யப்போகிறது
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அழுத்தத்தின் கீழ், பாகிஸ்தான் தனது தேசிய விமான நிறுவனமான பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தை (PIA) தனியார்மயமாக்கும் நடவடிக்கையில் முன்னேறி வருகிறது.
'இந்தியாவுடன் போரை ஆசிம் முனீர் விரும்புகிறார்': இம்ரான் கானின் சகோதரி குற்றச்சாட்டு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சகோதரி அலீமா கான், ஜெனரல் அசிம் முனீர் இந்தியாவுடன் போரை விரும்புவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
"உடல்நிலை நலமாக உள்ளார். எனினும்...": போராட்டத்திற்கு பின்னர் சிறையில் இம்ரான் கானை சந்தித்த அவரின் சகோதரி
இம்ரான் கானின் சகோதரிகளில் ஒருவர், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பாகிஸ்தான் பிரதமரை அடியாலா சிறையில் சந்திக்க அனுமதிக்கப்பட்டார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் ஆதரவாளர்கள் மெகா போராட்டம்; பொதுக்கூட்டங்களுக்கு தடை
பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதித்து பாகிஸ்தான் அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தியது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்; பின்னணி என்ன?
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாகிஸ்தான் நாட்டினருக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது.
'உயிரோடு இருப்பதற்கான ஆதாரம் இல்லை': உலகளாவிய தலையீட்டை நாடும் இம்ரான் கானின் மகன்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மகன் காசிம் கான், தனது தந்தையின் பாதுகாப்பு குறித்த அச்சங்களுக்கு மத்தியில் சர்வதேச தலையீட்டிற்கு பொது வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் இனி அசிம் முனீர் தான் எல்லாம்; முப்படைகள் மற்றும் அணு ஆயுதங்களின் தலைவராக நியமனம்
பாகிஸ்தான் ராணுவத் தளபதி சையத் அசிம் முனீர் வியாழக்கிழமை (நவம்பர் 27) நாட்டின் முதல் முப்படைகளின் தலைமை தளபதியாக (Chief of Defence Forces - CDF) பதவியேற்றுள்ளார்.
இம்ரான் கான் இறந்துவிட்டதாக வதந்திகள் பரவியதை அடுத்து பாகிஸ்தான் சிறைச்சாலை பதிலளித்துள்ளது
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறைக்குள் கொல்லப்பட்டதாக வதந்திகள் பரவியதை அடுத்து, அவர் உயிருடன் இருப்பதாகவும், நலமுடன் இருப்பதாகவும் பாகிஸ்தானின் அடியாலா சிறை நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இம்ரான் கான் படுகொலை செய்யப்பட்டாரா? அசிம் முனீர் அவரைக் கொன்றதாக தகவல்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைக்குள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை சந்திக்க வேண்டுமென சகோதரிகள் போராட்டம்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆகஸ்ட் 5, 2023 அன்று கைது செய்யப்பட்ட பின்னர் தற்போது ராவல்பிண்டியின் அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
'ஆபரேஷன் சிந்துார்'இன் போது உரி நீர்மின் நிலையத்தை தாக்க முற்பட்ட பாகிஸ்தான்; முறியடித்த CISF படை
இந்திய பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது பதிலடி கொடுக்கும் விதமாக, ஜம்மு காஷ்மீரில் உள்ள உரி நீர்மின் திட்டங்களை (Uri Hydro Electric Power Projects - UHEP-I & II) இலக்கு வைத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF) வீரர்கள் முறியடித்துள்ளனர்.
பாகிஸ்தான் படை தலைமையகத்தில் தற்கொலைத் தாக்குதல்; உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள துணை ராணுவப் படையின் தலைமையகமான ஃபிரன்டியர் கார்ப்ஸ் (Frontier Corps -FC) தலைமையகத்தின் மீது திங்கட்கிழமை காலை துப்பாக்கி ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆபரேஷன் சிந்தூர் ஒரு நம்பகமான ஆர்கெஸ்ட்ரா: 22 நிமிடங்களில் இலக்குகள் அழிக்கப்பட்டது குறித்து ராணுவத் தளபதி பேச்சு
இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, இந்திய ஆயுதப் படைகள் 22 நிமிடங்களில் 9 பயங்கரவாத இலக்குகளை அழித்த ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை ஒரு "நம்பகமான ஆர்க்கெஸ்ட்ரா" என்று வர்ணித்துள்ளார்.
இறுதி எச்சரிக்கை: தாலிபான்கள் உடன்படாவிட்டால் ஆப்கானிஸ்தான் ஆட்சி மாற்றத்தை முன்னெடுக்க பாகிஸ்தான் திட்டம்
பாதுகாப்பு கோரிக்கைகள் மற்றும் நல்லிணக்க முயற்சிகளுக்கு உடன்படுமாறு ஆப்கானிஸ்தான் தாலிபான் தலைமைக்கு பாகிஸ்தான் இறுதிச் செய்தியை அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானுக்கு சீனாவில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் கிடைத்தது குறித்து இந்திய கடற்படை தலைவர் கூறியது என்ன?
சீனா பாகிஸ்தானுக்கு வழங்கும் மேம்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்களை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக இந்திய கடற்படை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
'நாங்கள் செங்கோட்டையையும், காஷ்மீரின் காடுகளையும் தாக்கினோம்': பாகிஸ்தான் அமைச்சரின் பெரிய ஒப்புதல் வாக்குமூலம்
அதிர்ச்சியூட்டும் வகையில், செங்கோட்டை அருகே சமீபத்தில் நடந்த கார் குண்டுவெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டதில் பாகிஸ்தான் தலைவர் சவுத்ரி அன்வாருல் ஹக் தனது நாட்டின் தொடர்பை ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.
பண நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஜெய்ஷ், இந்தியாவை தாக்க நன்கொடைகளை நாடுகிறதாம்
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத குழுவான ஜெய்ஷ்-இ-முகமது, இந்தியாவிற்கு எதிரான புதிய "பிதாயீன்" (தற்கொலை) தாக்குதலுக்கு நிதி தேடுவதாக உளவுத்துறை வட்டாரங்கள் NDTV இடம் தெரிவித்தன.
'இது 88 மணி நேர டிரெய்லர்': 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து இந்திய ராணுவ தளபதி கடும் எச்சரிக்கை
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்திய இராணுவம் நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' (Operation Sindoor) குறித்த அனுபவப் பாடங்களை இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி நேற்று வெளியிட்டார்.
வாஷிங்டனில் செல்வாக்கு செலுத்தும் முயற்சிகளில் இந்தியாவை விட பாகிஸ்தான் மூன்று மடங்கு அதிகமாக செலவிட்டது: அறிக்கை
அமெரிக்காவின் வாஷிங்டனில் பரப்புரை முயற்சிகளில் பாகிஸ்தான் இந்தியாவை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாக செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் ராணுவத் தலைவருக்கு வாழ்நாள் அதிகாரம் அளிக்கப்பட்டது
பாகிஸ்தான் நாடாளுமன்றம், ராணுவத் தலைவரின் அதிகாரங்களை விரிவுபடுத்தும் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பைக் கட்டுப்படுத்தும் ஒரு அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது.
பயங்கரவாதம் தொடர்ந்தால் 'ஆபரேஷன் சிந்தூர் 2.0' நிச்சயம்: பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி உபேந்திர திவேதி கடும் எச்சரிக்கை
பயங்கரவாதம் மற்றும் எல்லை தாண்டிய தாக்குதல்களைப் பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ளாவிட்டால், அதற்கு எதிரான இந்தியாவின் அடுத்த இராணுவ நடவடிக்கை 'ஆபரேஷன் சிந்தூர் 2.0' என்ற பெயரில் நிச்சயம் தொடரப்படும் என்றும், அப்போது இந்திய ராணுவம் எந்தவிதக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்காது என்றும் இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்லாமாபாத் குண்டுவெடிப்பு: இந்தியா மீது ஷெபாஸ் ஷெரீஃப் குற்றச்சாட்டு; 'போர் நிலை' என பாதுகாப்பு அமைச்சர் கருத்து
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகம் அருகே கார் வெடித்து பலர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் இந்தியா மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தியாவை தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் கார் வெடிப்பு: நீதிமன்றத்திற்கு வெளியே கார் வெடித்து பலர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு வெடிப்பு ஏற்பட்டது.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி; உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்க தாலிபான்கள் மறுப்பு
ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான சமீபத்திய அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாகத் தாலிபான்கள் சனிக்கிழமை (நவம்பர் 9) உறுதிப்படுத்தியுள்ளனர்.