விளையாட்டு செய்தி
கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

வைல்ட் கார்டு என்ட்ரி ஏற்பு; ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் களம் காண்கிறார் வீனஸ் வில்லியம்ஸ்
வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் அதிகமுறை ஐந்து விக்கெட்டுகள்; கபில்தேவின் நீண்டகால சாதனையை முறியடித்தார் ஜஸ்ப்ரீத் பும்ரா
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, வெளிநாடுகளில் அதிக முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.
தொடர் தோல்வியால் துவளும் இந்திய ஆடவர் கால்பந்து அணி; ஃபிஃபா தரவரிசையில் 9 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி
இந்திய ஆடவர் கால்பந்து அணி ஃபிஃபா உலக தரவரிசையில் ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதன் மிகக் குறைந்த இடத்திற்குச் சரிந்துள்ளது.
கிரிக்கெட்டில் தொடர்ந்து ஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர்; கர்டிஸ் கேம்பர் சாதனை
தொழில்முறை கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக ஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை அயர்லாந்து ஆல்ரவுண்டர் கர்டிஸ் கேம்பர் பதிவு செய்துள்ளார்.
INDvsENG 3வது டெஸ்ட்: இரண்டாவது நாளிலும் பங்கேற்காத ரிஷப் பண்ட்; காயத்தில் இருந்து மீள்வாரா?
இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் இடது ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டதால் லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் 2வது நாளில் விளையாடவில்லை.
வீரர்கள் சுற்றுப் பயணத்தின்போது குடும்பத்துடன் இருப்பதற்கான பிசிசிஐ விதிக்கு விராட் கோலி அதிருப்தி; கவுதம் காம்பிர் பதில்
வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது வீரர்களின் குடும்பங்கள் அவர்களுடன் வரக்கூடிய நேரத்தை கட்டுப்படுத்தும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) புதிய கொள்கை தொடர்பான விவகாரத்தில் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பிர் தனது மௌனத்தை உடைத்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,000 ரன்கள் எடுத்த முதல் கிரிக்கெட் வீரர் ஆனார் ஜோ ரூட்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பேட்டிங் ஜாம்பவான் ஜோ ரூட், இந்தியாவுக்கு எதிராக 3000 டெஸ்ட் ரன்கள் எடுத்த வரலாற்றில் முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த ஆசிய விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் சாதனை
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கம்ரான் அக்மல் மற்றும் எம்எஸ் தோனியை முந்தி இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்சுகளைப் பிடித்த ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக டாஸ் இழப்பில் புதிய சாதனை படைத்தது இந்திய கிரிக்கெட் அணி
சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 13 டாஸ்களை இழந்த அணி என்ற புதிய உலக சாதனையை இந்திய கிரிக்கெட் அணி படைத்துள்ளது.
பழம்பெருமை வாய்ந்த லார்ட்ஸ் மைதானத்தின் பெவிலியனில் சச்சின் டெண்டுல்கரின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு முன்னதாக வரலாற்று சிறப்புமிக்க பெவிலியனில் சச்சின் டெண்டுல்கரின் உருவப்படம் திறக்கப்பட்டது.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய மகளிர் அணி வென்றது
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, நான்காவது டி20 போட்டியில் இங்கிலாந்தை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார்
இங்கிலாந்தின் ஹாரி புரூக் சமீபத்திய ஐசிசி ஆண்கள் டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் தனது சக வீரர் ஜோ ரூட்டை வீழ்த்தி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
ஐபிஎல்லில் மிகவும் மதிப்புமிக்க அணியாக சிஎஸ்கேவை முந்தியது RCB: விவரங்கள்
உலகளாவிய முதலீட்டு வங்கியான ஹௌலிஹான் லோகியின் ஆய்வின்படி, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அதன் பிராண்ட் மதிப்பில் மிகப்பெரிய ஏற்றத்தைக் கண்டுள்ளது.
RCB அணியின் யஷ் தயாள் மீது பாலியல் துன்புறுத்தல் புகார்: காசியாபாத் காவல்துறை விசாரணை
காசியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், பாலியல் துன்புறுத்தல் மற்றும் சுரண்டல் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததை அடுத்து, ஆர்சிபி மற்றும் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் யஷ் தயாள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
லார்ட்ஸ் டெஸ்டில் பிரஷித் கிருஷ்ணாவுக்கு கல்தா? இந்தியாவின் எதிர்பார்க்கப்படும் பிளெயிங் லெவன்
எட்ஜ்பாஸ்டனில் இங்கிலாந்துக்கு எதிரான ஆதிக்கம் செலுத்தும் 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணி, லார்ட்ஸில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், கிட்டத்தட்ட அதே பிளேயிங் லெவனுடன் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜிம்பாப்வே vs தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட்: 367* ரன்கள் எடுத்து ஐந்து சாதனைகளை முறியடித்த வியான் முல்டர்
புலாவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்காவின் தற்காலிக கேப்டன் வியான் முல்டர் அசாதாரணமாக ஆட்டமிழக்காமல் 367 ரன்கள் எடுத்து சாதனை புத்தகங்களில் தனது பெயரைப் பொறித்தார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக தோல்வி; மோசமான சாதனை படைத்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி
பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக ஏற்பட்ட முதல் தோல்வியைத் தொடர்ந்து, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக தோல்விகளைப் பதிவு செய்த அணி என்ற மோசமான சாதனையை இங்கிலாந்து கிரிக்கெட் அணி படைத்துள்ளது.
டெல்லி பிரீமியர் லீக் ஏலத்தில் வீரேந்திர சேவாக் மகனை வாங்க போட்டி போட்ட அணிகள்
டெல்லி பிரீமியர் லீக் 2025 ஏலம் அடுத்த தலைமுறை கிரிக்கெட் நட்சத்திரங்கள் மீது உறுதியாக கவனத்தை ஈர்த்ததோடு, வீரேந்திர சேவாக்கின் மூத்த மகன் ஆர்யவீர் ஒரு பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை மீறினாரா ஷுப்மன் கில்? வெற்றிக்கு மத்தியில் புதிய சர்ச்சை
எட்ஜ்பாஸ்டனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஷுப்மன் கில்லின் சாதனை ஆட்டம் கிரிக்கெட் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
எம்.எஸ் தோனிக்கு 44வது பிறந்தநாள்: 'தல'யின் ஐபிஎல் சாதனைகள் மற்றும் இந்திய கிரிக்கெட் பங்களிப்புகள் ஒரு பார்வை!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் பரிணாமமான முகமாக திகழும் மகேந்திர சிங் தோனி (எ) எம்.எஸ்.தோனி இன்று (ஜூலை 7) தனது 44வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
எட்ஜ்பாஸ்டன் போட்டி: 2வது டெஸ்டில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
பர்மிங்காமின் எட்ஜ்பாஸ்டனில் நடந்த 2வது டெஸ்டில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா வரலாறு படைத்தது.
2027 ஒருநாள் உலகக்கோப்பை வாய்ப்பையும் இழக்கிறதா வெஸ்ட் இண்டீஸ்? தரவரிசையில் பின்னடைவால் சிக்கல்
சமீபத்திய ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் அணி தரவரிசையில் 10வது இடத்திற்கு சரிந்ததால், 2027 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கான பாதையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பெரும் பின்னடைவை எதிர்கொள்கிறது.
விம்பிள்டன் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் 100வது வெற்றி பெற்று நோவக் ஜோகோவிச் சாதனை
செர்பிய டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் மதிப்புமிக்க கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டனில் 100 ஒற்றையர் வெற்றிகளைப் பதிவு செய்த இரண்டாவது ஆடவர் மற்றும் ஒட்டுமொத்தமாக மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
INDvsENG 2வது டெஸ்ட்: கேப்டனாக எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்தார் ஷுப்மன் கில்
இந்தியாவின் இளம் டெஸ்ட் கேப்டன் ஷுப்மன் கில், நடந்து கொண்டிருக்கும் ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி 2025 டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தனது அசாதாரண ஃபார்மால் தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறார்.
INDvsENG 2வது டெஸ்ட்: ஐந்தாவது நாள் ஆட்டம் மழையால் பாதிக்க வாய்ப்பு
எட்ஜ்பாஸ்டனில் ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி 2025 இன் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக மறக்க முடியாத வெற்றியைப் பெறும் முனைப்பில் இந்தியா உள்ளது.
கேப்டனாக ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்து விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் ஷுப்மன் கில்
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் என்ற சாதனையை ஷுப்மன் கில் படைத்துள்ளார்.
INGvsENG 2வது டெஸ்ட்: பெரிய ஸ்கோர் அடித்தும் மோசமான சாதனை படைத்த இங்கிலாந்து
எட்ஜ்பாஸ்டனில் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பேட்டிங் யூனிட் மோசமான காரணத்திற்காக அதன் பெயரை சாதனை புத்தகங்களில் பொறித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; 25 பந்துகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாதனை
மகளிர் கிரிக்கெட்டில் கென்னிங்டன் ஓவலில் நடந்த இந்தியா vs இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி சாதனை புத்தகங்களில் தனது பெயரைப் பொறித்தது.
குரோஷியாவில் நடந்த 2025 கிராண்ட் செஸ் டூர் ரேபிட் பிரிவில் முதலிடம் பிடித்து பட்டம் வென்றார் டி.குகேஷ்
வெள்ளிக்கிழமை (ஜூலை 4) குரோஷியாவின் ஜாக்ரெப்பில் நடந்த கிராண்ட் செஸ் டூர் (GCT) 2025 ரேபிட் & பிளிட்ஸ் போட்டியில் ரேபிட் பட்டத்தை வென்றதன் மூலம் இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் டி.குகேஷ் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டினார்.
INDvsENG 2வது டெஸ்ட்: பிசிசிஐ விதியை மீறிய ரவீந்திர ஜடேஜா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
எட்ஜ்பாஸ்டனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் போது பிசிசிஐ புதிதாக செயல்படுத்திய நிலையான இயக்க நடைமுறைகளில் (SOP) ஒன்றை மீறியதற்காக இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கவனத்தை ஈர்த்துள்ளார்.
INDvsENG 2வது டெஸ்ட்: அதிக ரன்களை விட்டுக்கொடுத்த ஜடேஜாவின் மோசமான சாதனையை சமன் செய்தார் பிரஷித் கிருஷ்ணா
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அதிக ரன்களை விட்டுக்கொடுத்து மோசமான சாதனை படைத்துள்ளார்.
அரசியல் சிக்கல்களால் இந்தியா vs வங்கதேச கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல்
ஆகஸ்டில் திட்டமிடப்பட்டிருந்த இந்தியா vs வங்கதேசம் இடையேயான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒயிட் பால் கிரிக்கெட் தொடர் இப்போது திட்டமிட்டபடி நடக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
INDvsENG 2வது டெஸ்ட்: 587 ரன்கள் குவித்து பாகிஸ்தானின் சாதனையை முறியடித்தது இந்திய கிரிக்கெட் அணி
பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்களை குவித்தது.
பலவீனமானவர் என்ற மேக்னஸ் கார்ல்சனின் கருத்துக்கு வெற்றியால் பதிலடி கொடுத்த டி.குகேஷ்
வியாழக்கிழமை (ஜூலை 3) குரோஷியாவின் ஜாக்ரெப்பில் நடந்த கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் ஆறாவது சுற்றில் நோர்வேயின் மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்து உலக செஸ் சாம்பியனான டி.குகேஷ் தனது நிலையை வலுப்படுத்தினார்.
2028 ஒலிம்பிக்கிற்கான ஒளிபரப்பு ஏலங்களுக்கு அழைப்பு விடுத்த IOC
2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கின் உரிமைகளைப் பெற ஆர்வமுள்ள ஒளிபரப்பாளர்களுக்கான டெண்டர் செயல்முறையை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) திறந்துள்ளது.
பாகிஸ்தான் ஹாக்கி அணியை இந்தியாவில் விளையாட அனுமதிக்க மத்திய அரசு முடிவு என தகவல்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ஆகியவற்றைத் தொடர்ந்து அதிகரித்த பதட்டங்கள் இருந்தபோதிலும், ஆகஸ்ட் மாதம் வரவிருக்கும் ஆடவர் ஹாக்கி ஆசிய கோப்பை மற்றும் நவம்பரில் ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்கும் என தெரிகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான யு-19 ஒருநாள் போட்டியில் சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்தார் வைபவ் சூர்யவன்ஷி
புதன்கிழமை (ஜூலை 2) நார்தாம்ப்டனில் உள்ள கவுண்டி மைதானத்தில் இந்தியா யு-19 மற்றும் இங்கிலாந்து யு-19 அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
திருமணமான 10 நாட்களில் கார் விபத்தில் பலியான போர்ச்சுகல் அணியின் பிரபல கால்பந்து வீரர்
லிவர்பூல் ஃபார்வர்ட் மற்றும் போர்த்துகீசிய கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா தனது 28 வயதில் வடமேற்கு ஸ்பெயினில் நடந்த கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
INDvsENG: அடுத்தடுத்த சதங்களுடன் விராட் கோலி, சுனில் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்தார் ஷுப்மன் கில்
இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் ஷுப்மன் கில், நடந்து கொண்டிருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ச்சியாக சதங்களை அடித்து, சாதனை படைத்துள்ளார்.
முன்னாள் மனைவிக்கு ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க முகமது ஷமிக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்
இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தனது மனைவி ஹசின் ஜஹானுக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சஞ்சு சாம்சனை வாங்க போட்டிபோடும் IPL அணிகள்; முன்னிலையில் CSK
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து விக்கெட் கீப்பர்-பேட்டர் சஞ்சு சாம்சனை வாங்குவதில் தங்கள் ஆர்வத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
அரசியல் சூழ்நிலையில் இந்தியா vs வங்கதேசம் தொடர் நடப்பது சந்தேகம் தான்!
ஆகஸ்ட் 17 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ள இந்தியா-பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர் இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளது.
INDvsENG 2வது டெஸ்ட்: விளையாடும் லெவனை அறிவித்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி
லீட்ஸில் மறக்கமுடியாத வெற்றியைப் பெற்ற அதே லெவனில் நம்பிக்கையை கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி, பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் நடக்க உள்ள இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் விளையாடும் லெவனை அறிவித்துள்ளது.
INDvsENG: எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் இரண்டாவது டெஸ்டில் ஜஸ்ப்ரீத் பும்ரா பங்கேற்பாரா? புதிய அப்டேட்
இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணிக்கு குறிப்பிடத்தக்க ஊக்கம் கிடைத்துள்ளது.
கோவை டு விம்பிள்டன்; யார் இந்த ஸ்ரீராம் பாலாஜி? விம்பிள்டனில் கலக்குவாரா?
விம்பிள்டன் 2025 லண்டனில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஆல் இங்கிலாந்து கிளப்பில் நடந்து வருகிறது.
பெல்ஜியம் ஜிடி3 கார் பந்தய சாம்பியன்ஷிப்பில் நடிகர் அஜித் அணி முதலிடம் பிடித்தது
தமிழ் சினிமா நடிகர் அஜித் குமார் தனது தொப்பியில் மற்றொரு மணிமகுடத்தைச் சேர்த்துள்ளார்.
இனி லைன் ஜட்ஜ்களுக்கு வேலையில்லை; விம்பிள்டன் 2025இல் அமலாகும் புதிய மாற்றங்கள் என்னென்ன?
விம்பிள்டன் 2025 அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது, உலகின் சிறந்த டென்னிஸ் நட்சத்திரங்களையும் மில்லியன் கணக்கான ரசிகர்களையும் SW19 இன் புகழ்பெற்ற புல் மைதானங்களுக்கு ஈர்த்துள்ளது.
ஆர்பிஎல் 2025: முதல் ரக்பி பிரீமியர் லீக் பட்டத்துடன் வரலாறு படைத்த சென்னை புல்ஸ்
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) அன்று மும்பையில் உள்ள ஷாஹாஜி ராஜே போசலே விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் டெல்லி ரெட்ஸ் அணியை 41-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, சென்னை புல்ஸ் அணி தனது முதல் ரக்பி பிரீமியர் லீக் (ஆர்பிஎல்) பட்டத்தை அபாரமாக வென்று வரலாறு படைத்தது.
சிக்ஸர் அடித்த சில நிமிடங்களில் பரிதாபமாக மைதானத்திலேயே மாரடைப்பால் கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு
பஞ்சாப் மாநிலம் ஃபிரோஸ்பூரில் நடந்த ஒரு உள்ளூர் கிரிக்கெட் போட்டியில், ஒரு வீரர் சிக்ஸர் அடித்த சில நிமிடங்களில் மைதானத்திலேயே சரிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இங்கிலாந்தை பந்தாடியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி; முதல் டி20யில் 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
சனிக்கிழமை (ஜூன் 28) அன்று இங்கிலாந்தின் டிரென்ட் பிரிட்ஜில் நடந்த முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக்கோப்பை 2025: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஒரே குழுவில் இடம்
வரவிருக்கும் ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை 2025 க்கான பி பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.
அறிமுக டெஸ்டில் சதமடித்து 61 ஆண்டுகால சாதனையை முறியடித்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ்
கிரேம் பொல்லாக்கின் 61 ஆண்டுகால சாதனையை முறியடித்து, லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்த தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் இளம் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார்.
டி.குகேஷை பின்னுக்குத் தள்ளி இந்திய செஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்தார் பிரக்ஞானந்தா
செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆர் பிரக்ஞானந்தா உஸ் செஸ் கோப்பை மாஸ்டர்ஸ் 2025 இல் தனது வியத்தகு வெற்றிக்குப் பிறகு இந்திய செஸ் போட்டி தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியதோடு, உலக அளவில் 4வது இடத்தைப் பிடித்துள்ளார்.
தொடர்ந்து மைதானத்திற்கு வெளியே கார்களை சேதப்படுத்திய பந்து; வரலாற்றுச் சிறப்புமிக்க கிரிக்கெட் மைதானம் மூடல்
இங்கிலாந்தின் டான்பரியில் உள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க கிரிக்கெட் மைதானம், அருகிலுள்ள கார் பார்க்கிங்கில் ஒருவர் பந்து தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.
வங்கதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு; கேப்டனாக சரித் அசலங்கா நியமனம்
ஜூலை 2, 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அல் நாசர் அணியில் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ரொனால்டோவின் ஒப்பந்தம் நீட்டிப்பு; ஊதியம் எவ்ளோன்னு தெரியுமா?
கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி புரோ லீக் கிளப் அல் நாசருடன் இரண்டு ஆண்டு ஒப்பந்த நீட்டிப்பில் கையெழுத்திட்டதன் மூலம் ஐரோப்பிய கால்பந்திற்கு திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
குடும்பத்தை விட தேசிய கடமைக்கு முக்கியத்துவம்; கே.எல்.ராகுல் குறித்து நெகிழ்ந்த டெல்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர் ஹேமங் பதானி
கே.எல்.ராகுலின் இந்திய கிரிக்கெட்டிற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பை டெல்லி கேபிடல்ஸ் தலைமை பயிற்சியாளர் ஹேமங் பதானி பாராட்டியுள்ளார்.
டி20 இன்னிங்ஸ்களில் பவர்பிளேவிற்கு புதிய விதிகளை அறிமுகம் செய்கிறது ஐசிசி
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளின் ஆட்ட நிலைமைகளில் ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டு வருகிறது.
சூர்யகுமார் யாதவ் விளையாட்டு ஹெர்னியா அறுவை சிகிச்சை மேற்கொண்டார்: விவரங்கள் இங்கே!
இந்திய அணியின் டி20 அணித் தலைவரான சூர்யகுமார் யாதவ், ஜெர்மனியின் முனிச்சில் வெற்றிகரமாக விளையாட்டு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்கில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா: விவரங்கள்
இந்தியாவின் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவரும், நடப்பு உலக சாம்பியனுமான நீரஜ் சோப்ரா, ஜூன் 24 அன்று ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்றார்.
நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ரிஷப் பந்தை கண்டித்த ICC
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது நடுவரின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்ததற்காக இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கண்டித்துள்ளது.
வெளிநாட்டில் ஒரே டெஸ்டில் இரண்டு சதங்கள் அடித்த முதல் விக்கெட் கீப்பர்; ரிஷப் பண்ட் சாதனை
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட், லீட்ஸில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில், இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து புதிய வரலாறு படைத்தார்.
இங்கிலாந்தில் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த ஆசிய வீரர் என்ற சாதனை படைத்தார் கே.எல்.ராகுல்
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல், இங்கிலாந்தில் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த ஆசிய தொடக்க வீரர் என்ற பெருமையைப் பெற்று கிரிக்கெட் வரலாற்றில் இடம்பிடித்தார்.
இந்திய ஹாக்கி அணியின் நட்சத்திர ஃபார்வர்டு வீரர் லலித் உபாத்யாய் சர்வதேச ஹாக்கி போட்டிகளில் இருந்து ஓய்வு
மூத்த இந்திய ஹாக்கி ஃபார்வர்டு வீரரும் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான லலித் உபாத்யாய், சர்வதேச ஹாக்கியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 18 ஆண்டுகளை நிறைவு செய்தார் ரோஹித் ஷர்மா; இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி பகிர்ந்து நெகிழ்ச்சி
இந்தியாவின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ரோஹித் ஷர்மா, ஜூன் 23, 2025 அன்று சர்வதேச கிரிக்கெட்டில் 18 ஆண்டுகள் நிறைவடைந்தார்.
ஐசிசி 2026 டி20 உலகக்கோப்பைக்கு கனடா கிரிக்கெட் அணி தகுதி பெற்றது
கனடாவின் கிங் சிட்டியில் நடந்த அமெரிக்க தகுதிச் சுற்றில் பஹாமாஸை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் கனடா ஆடவர் ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026க்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவி கிடைத்தால் ஏற்பேன் என சவுரவ் கங்குலி கருத்து
முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி, எதிர்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளர் பொறுப்பு வந்தால் ஏற்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
INDvsENG முதல் டெஸ்ட்: மூன்றாம் நாள் ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடுவது ஏன்?
லீட்ஸில் இந்தியா vs இங்கிலாந்து இடையே நடந்து வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாளில், மோட்டார் நியூரான் நோயால் (MND) பாதிக்கப்பட்டு 61 வயதில் காலமான முன்னாள் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டேவிட் சிட் லாரன்ஸுக்கு இரு அணிகளும் அஞ்சலி செலுத்தின.
இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் வரலாற்றில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் ஜோ ரூட்
இங்கிலாந்து மண்ணில் இந்தியா vs இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த சச்சின் டெண்டுல்கரின் நீண்டகால சாதனையை முறியடித்து இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் கிரிக்கெட் வரலாற்றில் தனது பெயரைப் பதித்துள்ளார்.
INDvsENG முதல் டெஸ்ட்: ஓலி போப் சதம் மூலம் இரண்டாம் நாளில் மீண்டெழுந்தது இங்கிலாந்து
இந்தியா vs இங்கிலாந்து இடையே ஹெடிங்கிலியில் நடந்து வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2வது நாளில் இங்கிலாந்து வலுவான பதிலடி கொடுத்து மீண்டது.
INDvsENG முதல் டெஸ்ட்: மூன்று சதங்கள் அடித்தும் சோகமான சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணி
ஹெடிங்லியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் 2வது நாளில் இந்திய கிரிக்கெட் அணி அதிர்ச்சியூட்டும் சரிவை சந்தித்தது.
INDvsENG முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 471 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா; மழையால் இங்கிலாந்து பேட்டிங் தொடங்குவதில் தாமதம்
ஹெடிங்கிலியில் நடைபெற்று வரும் இந்தியா vs இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாளில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 471 ரன்களுக்கு ஆல் அவுட்ஆனது.
எம்எஸ் தோனியின் சாதனை முறியடிப்பு; டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இந்திய விக்கெட்-கீப்பர் ஆனார் ரிஷப் பண்ட்
லீட்ஸில் உள்ள ஹெடிங்லியில் இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாளில், இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் எம்எஸ் தோனியின் நீண்ட கால சாதனையை முறியடித்துள்ளார்.
ஆர்.பிரக்ஞானந்தா FIDE செஸ் தரவரிசையில் டி.குகேஷை முந்தி ஐந்தாவது இடத்திற்கு முன்னேற்றம்
இந்தியாவின் இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா நேரடி FIDE தரவரிசையில் நடப்பு உலக சாம்பியனான டி.குகேஷை முந்தி 2777.2 மதிப்பீட்டுடன் உலகளவில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
டெஸ்ட் வரலாற்றில் மூன்றாவது முறை; கூட்டாக சாதனை படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் முதல் நாளில் சதங்களை அடித்து வரலாறு படைத்துள்ளனர்.
SENA நாடுகளில் அதிக ரன்கள்; எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்தார் ரிஷப் பண்ட்
லீட்ஸில் உள்ள ஹெடிங்லியில் இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில், SENA நாடுகளில் அதிக டெஸ்ட் ரன்கள் எடுத்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற எம்எஸ் தோனியின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார்.