விளையாட்டு செய்தி
கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.
பாகிஸ்தான் அணியுடன் கைகுலுக்காமல் இருந்ததற்காக இந்தியா தண்டிக்கப்பட முடியுமா?
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் சமீபத்திய ஆசியக் கோப்பை வெற்றி சர்ச்சைகளால் சூழப்பட்டுள்ளது.
உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கம்: உலக சாம்பியன் ஆனார் சென்னை வீரர் ஆனந்த்குமார்
சீனாவில் நடைபெற்ற 2025 உலக ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் ஆனந்த்குமார் வேல்குமார் ஆண்கள் 1000 மீட்டர் ஸ்பிரிண்ட் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.
WPL 2026 ஜனவரியில் தொடங்க உள்ளது: விவரங்கள் இங்கே
கிரிக்பஸின் அறிக்கையின்படி, 2026 மகளிர் பிரீமியர் லீக் (WPL) சீசன் ஜனவரி தொடக்கத்தில், முந்தைய பதிப்புகளை விட மிகவும் முன்னதாகவே தொடங்க உள்ளது.
ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்காதது சரிதான்; சூர்யகுமார் யாதவிற்கு சவுரவ் கங்குலி ஆதரவு
ஆசிய கோப்பை 2025 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தானை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பிறகு, இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கிராண்ட் சுவிஸ் பட்டத்தை வென்று கேண்டிடேட்ஸ் 2026 க்குத் தகுதி பெற்றார் ஆர்.வைஷாலி
இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆர்.வைஷாலி, சாமர்கண்டில் நடைபெற்ற ஃபிடே மகளிர் கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டியில் தனது பட்டத்தைப் பாதுகாத்து, ஃபிடே மகளிர் கேண்டிடேட்ஸ் 2026 போட்டிக்குத் தகுதி பெற்ற மூன்றாவது இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
'கைகுலுக்காம போய்ட்டாங்க'; ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் இந்திய அணி குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார்
ஆசிய கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான தோல்விக்குப் பின்னர், இந்திய வீரர்கள் தங்களுடன் கைகுலுக்க மறுத்ததாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளது.
Asia Cup: இந்தியாவின் வெற்றியை பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமர்ப்பித்த SKY
துபாயில் நடந்த சர்ச்சைக்குரிய ஆசிய கோப்பை போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிராக சூர்யகுமார் யாதவ் இந்தியாவை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார்.
மினிமேக்ஸ் கார்ட் பந்தயத்தில் சாம்பியன் பட்டம்; 10 வயது இந்திய கார் பந்தைய வீராங்கனை அத்திகா மிர் உலக சாதனை
இந்தியாவைச் சேர்ந்த 10 வயது இளம் கார் பந்தய வீராங்கனை அத்திகா மிர், யுஏஇ கார்ட் பந்தயத்தின் மினிமேக்ஸ் பிரிவில் கோப்பையை வென்ற முதல் பெண்மணி என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
ஆசிய கோப்பை 2025 INDvsPAK: டாஸ் வென்றது பாகிஸ்தான்; இந்தியா முதலில் பந்துவீச்சு
இந்தியா vs பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை 2025 குழு நிலை ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) நடைபெறுகிறது.
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வீராங்கனையை விஞ்சி ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, மகளிர் ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்தின் ஏமி சாட்டர்வெய்ட்டை முந்தி, ஏழாவது அதிக ரன்களைக் குவித்த வீராங்கனையாக புதிய சாதனை படைத்துள்ளார்.
பிசிசிஐ தலைவர் பதவிக்கு ஹர்பஜன் சிங் நியமனமா? பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் முன்மொழிவு என தகவல்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் பதவிக்கான தேர்தலில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் போட்டியிடலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புரோ கபடி லீக்: ஒழுங்கீனக் காரணங்களுக்காக தமிழ் தலைவாஸ் அணியிலிருந்து கேப்டன் பவன் செஹராவத் வெளியேற்றம்
புரோ கபடி லீக் தொடரின் நடுவே, தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனும், இந்திய கபடி அணியின் தற்போதைய கேப்டனுமான பவன் செஹராவத், ஒழுங்கீனக் காரணங்களுக்காக வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்றார் ஜாஸ்மின் லம்போரியா
இந்திய குத்துச்சண்டை வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா, 2025 உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
ஐஎஸ்எஸ்எஃப் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஈஷா சிங் தங்கம் வென்றார்
சீனாவில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் (ISSF) உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், இந்திய விளையாட்டு வீராங்கனை ஈஷா சிங், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள்; இந்தியாவின் சாதனையை முறியடித்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து கிரிக்கெட் அணி டி20 கிரிக்கெட்டில் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.
நேபாளப் போராட்டத்தில் மாட்டிக் கொண்ட இந்திய வாலிபால் குழுவினர் பத்திரமாக மீட்பு
நேபாளத்தில் நடந்து வரும் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மத்தியில் சிக்கித் தவித்த இந்திய வாலிபால் விளையாட்டு வீரர்கள் மற்றும் ஊழியர்கள் குழு, இந்தியத் தூதரகத்தால் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ தலைவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார், தேர்தல் இல்லை: அருண் துமல்
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தலைவர் அருண் துமல், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதன் புதிய தலைவரை "ஒருமனதாக" நியமிக்கும் என்று கூறியுள்ளார்.
பிசிசிஐ தலைவர் பதவிக்கான போட்டியில் சச்சின் டெண்டுகள் இருக்கிறாரா? உண்மை இதுதான்
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் பதவிக்குத் தான் பரிசீலிக்கப்படுவதாகப் பரவி வரும் வதந்திகளை அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளார்.
ஆசிய கோப்பை 2025: இந்தியா vs பாகிஸ்தான் ஆசிய கோப்பை போட்டிக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
உச்ச நீதிமன்றம், ஆசிய கோப்பைத் தொடரில் இந்தியா vs பாகிஸ்தான் இடையேயான டி20 கிரிக்கெட் போட்டிக்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க வியாழக்கிழமை (செப்டம்பர் 11) மறுத்துவிட்டது.
ஆசிய கோப்பை 2025: சிறப்பாக செயல்பட்ட குல்தீப் யாதவ் அடுத்த போட்டியில் சேர்க்கப்பட மாட்டாரா?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், இந்தியத் தேர்வுக்குழுவின் கொள்கையை நகைச்சுவையாக விமர்சித்துள்ளார்.
ராகுல் ட்ராவிடை தொடர்ந்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து விலகுகிறார் தலைமை நிர்வாக அதிகாரி ஜேக் லஷ் மெக்ரம்
ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணி, தலைமைத்துவ மாற்றங்களால் தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறது.
மருத்துவமனைக்கு சென்ற ரோஹித் சர்மா; ரசிகர்கள் கவலை
இந்திய அணியின் தற்போதைய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நேற்று இரவு மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் காணப்பட்டார்.
ஆசிய கோப்பை: கொரியாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி உலகக் கோப்பைக்கான தகுதியைப் பெற்றது இந்தியா
செப்டம்பர் 7, ஞாயிற்றுக்கிழமை ராஜ்கிரில் நடந்த இறுதிப் போட்டியில் கொரியாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி, ஆசியக் கோப்பை பட்டத்திற்கான 8 ஆண்டுகால காத்திருப்புக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைத்தது.
உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்திய ஆடவர் காம்பவுண்ட் அணி முதன் முறையாக தங்கம் வென்று சாதனை
இந்திய ஆடவர் காம்பவுண்ட் அணி, உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட வாய்ப்பு; ஆஸ்திரேலிய தொடரில் ரோஹித் ஷர்மாவுக்கு ஃபேர்வெல்?
இந்திய கிரிக்கெட்டின் அடுத்த ஒருநாள் கிரிக்கெட் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்த எந்த டி20யிலும் இந்திய அணி தோற்றதில்லை; ஆசிய கோப்பையில் வாய்ப்புக் கிடைக்குமா?
செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்க உள்ள ஆசிய கோப்பைத் தொடரில், விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சன் அணியில் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
யுஎஸ் ஓபனில் இரண்டாவது முறை; செரீனா வில்லியம்ஸுக்குப் பிறகு வரலாற்று வெற்றி பெற்ற ஆர்யனா சபலெங்கா
ஆர்யனா சபலெங்கா, யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வெற்றிகரமாகத் தக்கவைத்துக் கொண்டார்.
டென்னிஸில் புதிய சகாப்தம்: 23 ஆண்டுகளில் ஜாம்பவான்கள் இறுதிப்போட்டியில் பங்கேற்காத முதல் காலண்டர் கிராண்ட்ஸ்லாம்
டென்னிஸ் உலகின் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ள ஜானிக் சின்னர் மற்றும் கார்லோஸ் அல்கராஸ் இடையே புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது.
செப்டம்பர் 28 இல் பிசிசிஐ வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு; புதிய தலைவர் மற்றும் ஐபிஎல் சேர்மன் தேர்வு
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) வருடாந்திர பொதுக்கூட்டம் (AGM) செப்டம்பர் 28ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய ஏ அணி அறிவிப்பு; ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமனம்
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான பல வடிவ கிரிக்கெட் தொடருக்கான இந்திய ஏ அணி, பிசிசிஐயால் அறிவிக்கப்பட்டுள்ளது.
காலண்டர் கிராண்ட்ஸ்லாம்: டென்னிஸ் வரலாற்றின் மிக அரிய சாதனை படைத்த வீரர்களின் பட்டியல்
டென்னிஸ் உலகில், ஒரு ஆண்டில் நடைபெறும் நான்கு முக்கியப் போட்டிகளான ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் மற்றும் யுஎஸ் ஓபன் ஆகிய அனைத்தையும் வெல்வது காலண்டர் கிராண்ட்ஸ்லாம் என்று அழைக்கப்படுகிறது.
ஆசிய கோப்பை 2025: இந்தியாவுக்கு எதிராக களமிறங்கும் 12 இந்திய வம்சாவளி வீரர்கள்; முழு விபரம்
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை 2025 போட்டியில் பங்கேற்க தயாராகி வருகிறது.
யுஎஸ் ஓபன் அரையிறுதியில் தோல்வி; முடிவுக்கு வந்தது யுகி பாம்ப்ரியின் கிராண்ட் ஸ்லாம் கனவு
இந்தியாவின் யுகி பாம்ப்ரி மற்றும் அவரது நியூசிலாந்து ஜோடி மைக்கேல் வீனஸ் ஆகியோரின் குறிப்பிடத்தக்க யுஎஸ் ஓபன் பயணம், ஆண்கள் இரட்டையர் அரையிறுதிப் போட்டியில் முடிவுக்கு வந்தது.
பிசிசிஐயின் தலைவராக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் நியமிக்கப்பட வாய்ப்பு: பரபரப்புத் தகவல்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐயில் மற்றொரு தலைமை மாற்றம் ஏற்படவுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; விசித்திரமான சாதனை படைத்தது கனடா அணி
சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை நடந்திராத ஒரு விசித்திரமான சம்பவம், ஸ்காட்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கனடா அணிக்கு நடந்தது.
யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாமில் முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறி யுகி பாம்ப்ரி சாதனை
இந்தியாவின் யுகி பாம்ப்ரி மற்றும் அவரது நியூசிலாந்து ஜோடி மைக்கேல் வீனஸ், யுஎஸ் ஓபன் 2025 போட்டியின் இரட்டையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறி புதிய வரலாறு படைத்துள்ளனர்.
இந்திய அணியின் மூத்த லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு
25 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிறகு, இந்திய அணியின் அனுபவமிக்க லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி 2.0: ஐபிஎல் போட்டிகளை பார்ப்பதற்கு இனி அதிகம் செலவு செய்ய வேண்டும்; புதிய வரி எவ்வளவு?
கிரிக்கெட் ரசிகர்கள் இனி ஐபிஎல் போட்டிகளை மைதானத்தில் நேரடியாகக் காண அதிக பணம் செலவழிக்க நேரிடும்.
இந்தியாவில் நடைபெறும் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரை பாகிஸ்தான் புறக்கணிக்க வாய்ப்பு
சென்னையில் நடைபெறவிருக்கும் 2025 FIH ஆண்கள் ஜூனியர் உலகக் கோப்பையை பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பு (PHF) புறக்கணிக்க வாய்ப்புள்ளது.
ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக்கில் அஸ்வின் ரவிச்சந்திரன் இடம்பெறுவாரா?
முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் விரைவில் ஆஸ்திரேலியாவின் முதன்மையான டி20 லீக்கான பிக் பாஷ் லீக்கில் (BBL) அறிமுகமாகலாம்.
டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் அறிவிப்பு
ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தவும், 2027 ஆண்கள் ஒருநாள் உலகக் கோப்பைக்கு தான் உச்ச நிலையில் இருப்பதை உறுதி செய்யவும், மிட்செல் ஸ்டார்க் சர்வதேச Twenty20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2026 BWF உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடத்தப்படும் என அறிவிப்பு
இந்திய பேட்மிண்டன் விளையாட்டுக்கு ஒரு பெரிய கவுரவமாக, உலகின் மதிப்புமிக்க BWF உலக சாம்பியன்ஷிப் 2026 போட்டிகளை டெல்லி நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் உலகக்கோப்பையை விட அதிகம்; மகளிர் உலகக்கோப்பைக்கான பரிசுத் தொகையை வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தியது ஐசிசி
ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025 போட்டிக்கான மொத்தப் பரிசுத் தொகையை $13.88 மில்லியன் (சுமார் ₹122.5 கோடி) ஆக உயர்த்தி அறிவித்துள்ளது.
ரசிகர்கள் பாதுகாப்புக்கான ஆறு அம்ச அறிக்கையை வெளியிட்டது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
கடந்த ஜூன் மாதம் நடந்த துயரமான கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி, ரசிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவு அளிக்கவும் ஒரு விரிவான ஆறு அம்ச அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஒரே சீசனில் அனைத்து கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும் காலிறுதிக்குத் தகுதி பெற்ற வயதான வீரர்; நோவக் ஜோகோவிச் புதிய சாதனை
செர்பிய டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச், தனது 38 வது வயதிலும் டென்னிஸ் உலகின் சாதனைகளைத் தொடர்ந்து முறியடித்து வருகிறார்.
ஃபிட்னஸ் டெஸ்டில் தேர்ச்சி: ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் ரோஹித் ஷர்மா பங்கேற்பது உறுதி எனத் தகவல்
இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் வடிவத்திற்கான கேப்டன் ரோஹித் ஷர்மா, பெங்களூரில் உள்ள பிசிசிஐ தேசிய கிரிக்கெட் அகாடமியில் (CoE) நடைபெற்ற ஃபிட்னஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
₹450 கோடி வரை இலக்கு; இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய ஸ்பான்சரை தேடும் பிசிசிஐ
ஆன்லைன் ஃபேண்டஸி கேமிங் தளங்களுக்குச் சமீபத்தில் மத்திய அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து, ட்ரீம்11 நிறுவனம் இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஸ்பான்சர் ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடித்துக்கொண்டது.
ஆசிய கோப்பையில் இந்திய ஹாக்கி அணி அடுத்தடுத்து வெற்றி; சூப்பர் ஃபோர் சுற்றுக்குத் தகுதி
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் இரண்டாவது போட்டியில் ஜப்பானை எதிர்கொண்ட இந்திய ஹாக்கி அணி, 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.
உலக சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் தோல்வி; வெண்கலம் வென்றனர் சாத்விக்-சிராக் ஜோடி
BWF உலக சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதிப் போட்டியில், இந்தியாவின் முன்னணி ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் தோல்வியைத் தழுவி வெண்கலப் பதக்கத்தைப் பெற்றனர்.
இந்தியாவில் நடைபெறும் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்பதாக ஹாக்கி இந்தியா அறிவிப்பு
விளையாட்டுத் துறை ராஜதந்திரத்தில் ஒரு முக்கிய முன்னேற்றமாக, பாகிஸ்தான் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறும் FIH ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கவுள்ளது.
ஆசிய கோப்பை 2025 போட்டிக்கான நேரங்கள் மாற்றம்; புதிய நேரம் என்ன?
ஐக்கிய அரபு அமீரகத்தில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக, ஆசிய கோப்பை 2025 தொடரில் 19 போட்டிகளில் 18 போட்டிகளின் தொடக்க நேரம் மாற்றப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2026க்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் விலகல்
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் டிராவிட், தான் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற ஒரே சீசனுக்குப் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து விலகியுள்ளார்.
ஐபிஎல் வெற்றி விழா கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ₹25 லட்சம் நிதியுதவி; ஆர்சிபி அறிவிப்பு
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி 2025 ஐபிஎல் பட்டத்தை வென்றதைத் தொடர்ந்து, பெங்களூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 ரசிகர்கள் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ₹25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என ஆர்சிபி அணி அறிவித்துள்ளது.
BWF உலக சாம்பியன்ஷிப்பின் காலிறுதியில் தோல்வி; சாதனை படைக்கும் வாய்ப்பை இழந்தார் பிவி சிந்து
இந்தியாவின் பேட்மிண்டன் நட்சத்திரம் பிவி சிந்து, BWF உலக சாம்பியன்ஷிப்பின் காலிறுதிப் போட்டியில் இந்தோனேசியாவின் புத்ரி குசுமா வர்தானியிடம் தோல்வியடைந்தார்.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ள ஐபிஎல்லின் ஸ்லாப்கேட் வீடியோ; நடந்தது என்ன?
கிரிக்கெட் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய 2008 ஆம் ஆண்டின் இழிவான ஸ்லாப்கேட் சம்பவம், 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தற்காலிக தலைவர் ராஜீவ் சுக்லா தலைமையில் புதிய ஸ்பான்சரை இறுதி தேடும் பணியை முடுக்கி விட்டுள்ளது பிசிசிஐ
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் பதவியிலிருந்து விலகியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அர்ஜென்டினாவில் கடைசி போட்டி இதுதான்? ஓய்வு பெறுவதை மறைமுகமாகக் குறிப்பிட்ட லியோனல் மெஸ்ஸி
அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, தேசிய அணியில் தனது எதிர்காலம் குறித்து முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார்.
டயமண்ட் லீக் இறுதிப் போட்டி 2025 இல் நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றார்: விவரங்கள்
இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
BWF உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையை வீழ்த்தினார் பிவி சிந்து
இந்தியப் பேட்மிண்டன் நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து, BWF உலக சாம்பியன்ஷிப் போட்டியில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான வாங் ஜி யியை நேரடியாக இரண்டு செட்களில் வீழ்த்தி அசத்தினார்.
பயங்கரவாதம் எல்லாம் பழைய கதை; வரலாற்று சிறப்புமிக்க பகல்-இரவு கிரிக்கெட் போட்டியை நடத்தியது புல்வாமா
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் வரலாற்றில் முதல் முறையாக, புதன்கிழமை (ஆகஸ்ட் 27) அன்று நடைபெற்ற முதல் பகல்-இரவு கிரிக்கெட் போட்டியைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர்.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, பயிற்சியாளராக தொடர சேதேஷ்வர் புஜாரா விருப்பம்
இந்திய அணியின் முன்னாள் வீரர் சேதேஷ்வர் புஜாரா, எதிர்காலத்தில் தேசிய கிரிக்கெட் அகாடமி (NCA) என்று அழைக்கப்படும் BCCI-யின் சிறப்பு மையத்தில் பயிற்சியாளராகவோ அல்லது பணிபுரியவோ விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஆர்சிபி கேர்ஸ்: மூன்று மாத சமூக ஊடக மௌனத்திற்கு பிறகு புதிய அறிவிப்பை வெளியிட்ட ஆர்சிபி நிர்வாகம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி, கடந்த 84 நாட்களாக நீடித்த தனது சமூக ஊடக மௌனத்தைக் கலைத்துள்ளது.
TNCA விட்டு வெளியேறினார் விஜய் சங்கர்; திரிபுரா அணியில் இணைய திட்டம்
எதிர்பாராத திருப்பமாக, தமிழக முன்னாள் கேப்டன் விஜய் சங்கர் தனது சொந்த மாநிலத்தை விட்டு திரிபுராவில் சேர முடிவு செய்துள்ளார்.
ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் ரவிச்சந்திரன் அறிவிப்பு
ஒரு பெரிய மாற்றமாக, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
US ஓபன்: முன்கூட்டியே வெளியேறிய பிறகு வீனஸ் வில்லியம்ஸ் மனநிலை
டென்னிஸ் ஜாம்பவான் வீனஸ் வில்லியம்ஸ் 2025 யுஎஸ் ஓபனில் தொடக்கச் சுற்றில் தோல்வியடைந்தார்.
காமன்வெல்த் சாம்பியன்ஷிப் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று மீராபாய் சனு புதிய சாதனை
இந்தியப் பளுதூக்குதல் நட்சத்திரமும், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவருமான மீராபாய் சானு திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25) நடந்த காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று மீண்டும் சர்வதேச களத்திற்குத் திரும்பியுள்ளார்.