விளையாட்டு செய்தி
கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.
142 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை! லார்ட்ஸ் மைதானத்தில் ஆலி ராபின்சன் மெகா சாதனை
பாகிஸ்தான் அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியின் 2வது நாளில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆலி ராபின்சன் 142 ஆண்டுகால வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.
51 வயதில் 5 விக்கெட்டுகள்! ஆஸ்திரேலிய ஜாம்பவானின் 96 ஆண்டுகால சாதனையைத் தகர்த்த ஐல் ஆஃப் மேன் வீராங்கனை
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஆண், பெண் இரு பாலரிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மிக மூத்த பந்துவீச்சாளர் என்ற மகத்தான உலக சாதனையை ஐல் ஆஃப் மேன் அணியின் 51 வயது சுழற்பந்து வீச்சாளர் ஜோஅன் ஹிக்ஸ் படைத்துள்ளார்.
52 ஆண்டுகளுக்கு பிறகு வரலாற்று சாதனை! ஹாக்கி உலகக்கோப்பையில் அசத்திய இந்திய மகளிர் அணிக்கு ₹50 லட்சம் பரிசு
FIH மகளிர் ஹாக்கி உலகக்கோப்பை 2026 தொடரில் சலீமா டேடே தலைமையிலான இந்திய ஹாக்கி அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5வது இடத்தைப் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
ஒரே அணியை 2 முறை வீழ்த்திய முதல் அசோசியேட் நாடு! தென்னாப்பிரிக்காவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து நமீபியா சாதனை
நமீபியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில், வலுவான தென்னாப்பிரிக்க அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நமீபியா அணி உலகக் கிரிக்கெட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானின் மோசமான வசதிகளால் கடுப்பான பிசிசிஐ; ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு பி அணியை அனுப்ப திட்டம்
ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் தங்களுக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ மற்றும் ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் ஆகியவை தெரிவித்துள்ளன.
7 போட்டிகள், ஒரு தவறாவது நடந்தாலும் வாய்ப்பு போச்சு! WTC ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெறப்போவது எப்படி?
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை டிராவில் முடித்ததைத் தொடர்ந்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி 51.52% வெற்றி சதவீதத்துடன் (PCT) ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறது.
கிராண்ட் செஸ் டூர் பட்டத்தை வென்று பிரக்ஞானந்தா வரலாற்று சாதனை: ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தி சாம்பியன்
இந்தியாவின் 21 வயதான இள இளம் செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய 15 வயது டெல்லி சிறுவன் வந்தன் அலன்கார்; செஸ் உலகில் புதிய சாதனை
டெல்லியை சேர்ந்த 15 வயதான வந்தன் அலன்கார் சவாய் என்ற சிறுவன், Chess.com இணையதளம் நடத்திய டைட்டில்டு டியூஸ்டே பிளிட்ஸ் செஸ் போட்டியில் உலகின் முதன்மை வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி மாபெரும் சாதனை படைத்துள்ளார்.
Ind vs Aus: இந்திய U-19 கிரிக்கெட் அணியில் டிராவிட் மற்றும் சேவாக் மகன்கள் தேர்வு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான்களான ராகுல் டிராவிட் மற்றும் வீரேந்தர் சேவாக் ஆகியோரின் மகன்களான அன்வய் டிராவிட் மற்றும் ஆர்யவீர் சேவாக் ஆகியோர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆசிய சாம்பியனை வீழ்த்திய சேலத்துக்காரர்! புடாபெஸ்ட் ஓபன் ஸ்குவாஷ் காலிறுதியில் வேலவன் செந்தில்குமார் அபாரம்
ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வரும் புடாபெஸ்ட் ஓபன் 2026 சர்வதேச தொழில்முறை ஸ்குவாஷ் தொடரில், தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த இந்திய நட்சத்திர வீரர் வேலவன் செந்தில்குமார் அபாரமாக விளையாடி வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
பும்ராவின் 2 ஆண்டுகால ஆதிக்கம் காலி! முதன்முறையாக ஐசிசி நம்பர் 1 டெஸ்ட் பந்துவீச்சாளரானார் மிட்செல் ஸ்டார்க்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் 36 வயதான முன்னணி இடதுகை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதன்முறையாக முதலிடத்தை பிடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
'உலகக்கோப்பை ஒன்றும் ஒத்திகை அல்ல': இந்திய ஹாக்கி அணியின் வீழ்ச்சியால் கொதித்தெழுந்த முன்னாள் வீரர் பி.ஆர். ஶ்ரீஜேஷ்
நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நடைபெற்று வரும் 2026 ஹாக்கி உலகக்கோப்பை தொடரில், இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரண்டு அணிகளுமே அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் இரண்டாம் சுற்றோடு வெளியேறியுள்ளன.
யஷஸ்வி ஜெய்ஸ்வால், அசிதா பெர்னாண்டோ ஆகியோருக்கு ICC தண்டனை
ஒரு முக்கிய நிகழ்வாக, இந்திய பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இலங்கை பந்துவீச்சாளர் அசிதா பெர்னாண்டோ ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தண்டனை விதித்துள்ளது.
இம்ரான் கானுக்கு மருத்துவ உதவி வழங்க பாகிஸ்தான் பிரதமருக்கு 21 முன்னாள் கிரிக்கெட் கேப்டன்கள் கடிதம்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் கேப்டனுமான இம்ரான் கானுக்கு மனிதநேய அடிப்படையிலும், உரிய மருத்துவ சிகிச்சையும் வழங்க கோரி இந்திய ஜாம்பவான்கள் சுனில் கவாஸ்கர், கபில் தேவ் உட்பட 21 சர்வதேச கிரிக்கெட் அணிகளின் முன்னாள் கேப்டன்கள் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பிற்கு கூட்டு அவசரக் கடிதம் எழுதியுள்ளனர்.
ஒரே தொடரில் 2 சதங்கள்! சச்சின், டிராவிடின் 27 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் தேவ்தத் படிக்கல்
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியின் 26 வயதான இடதுகை பேட்டர் தேவ்தத் படிக்கல் மீண்டும் ஒரு சதத்தைப் பதிவு செய்து அசத்தியுள்ளார்.
மைதானத்தில் எதிரணி பந்துவீச்சாளருடன் மோதல்! யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு 5 டெஸ்ட் போட்டிகள் தடை விதிக்கப்படுமா?
கொழும்பில் நடைபெற்று வரும் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோவுடன் மைதானத்திலேயே காரசாரமான மோதலில் ஈடுபட்டார்.
4 ஐபிஎல் கோப்பைகள், 38 வயதில் ஓய்வு! அனைத்து வடிவ கிரிக்கெட்டிலிருந்தும் விலகுவதாக கரண் சர்மா அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளரும், 4 முறை ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றிய சாதனையாளருமான கரண் சர்மா, சர்வதேச மற்றும் உள்நாட்டுப் போட்டிகள் உட்பட அனைத்து வடிவக் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கொழும்பு டெஸ்டில் அதிர்ச்சி! லஹிரு குமாரா பந்து வீச்சில் காயம்; பாதியில் வெளியேறிய ரிஷப் பண்ட்
இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட் இடது மணிக்கட்டில் காயமடைந்து பாதியில் வெளியேறினார்.
WTC வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மிட்செல் ஸ்டார்க் வரலாற்று சாதனை
ஆஸ்திரேலியாவின் மேக்கே நகரில் நடைபெற்று வரும் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றது திரீசா - காயத்ரி ஜோடி
புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் பிடபிள்யூஎஃப் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் திரீசா ஜாலி - காயத்ரி கோபிசந்த் இணை வெண்கலப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளது.
மகளிர் ஹாக்கி உலகக்கோப்பை 2026: இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதா?
பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்று வரும் எஃப்ஐஎச் மகளிர் ஹாக்கி உலகக்கோப்பை 2026 தொடரின் இரண்டாம் சுற்றுப் போட்டியில், இந்திய அணி நெதர்லாந்திடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
முக்கியமான நேரத்தில் தசைப்பிடிப்பு! சீன வீராங்கனையிடம் போராடி தோற்ற பிவி சிந்து - விக்டர் குமார் விளக்கம்
புதுடெல்லியில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2026 தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.
மீண்டும் ஒத்திவைக்கப்படுகிறதா இந்திய கிரிக்கெட் தொடர்? தேதிகள் மாற்றம் குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் விளக்கம்
இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்திற்கு சென்று 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2026: காலிறுதிக்கு முன்னேறி அசத்திய திரீசா - காயத்ரி ஜோடி
புதுடெல்லியில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2026 தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி ஜோடியான திரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.
மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவை 6-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியது
2026 FIH ஹாக்கி உலகக் கோப்பையின் 'டி' பிரிவுக்கான தனது இரண்டாவது போட்டியில், இந்திய மகளிர் ஹாக்கி அணி தென்னாப்பிரிக்காவை அபாரமாக வீழ்த்தி வெற்றி பெற்றது.
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: உலக நெ.1 வீரா் ஷி யூக்கியை வீழ்த்தி ஆயுஷ் ஷெட்டி அபார சாதனை
டெல்லியில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில், 21 வயதான இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
திருமணத்திற்கு பின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த ரொனால்டோ: ஓய்வு பெறுகிறாரா கால்பந்து நாயகன்?
கால்பந்து உலகின் தலைசிறந்த வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்டகாலத் தோழியான ஜார்ஜினா ரோட்ரிகஸை திருமணம் செய்த சில நாட்களிலேயே, தற்போது தொடங்கியுள்ள 2026-27 சீசன் தான் தனது கடைசி கால்பந்து தொடராக இருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
வரலாற்றுச் சாதனை: 58 ஆண்டுகால சாதனையை முறியடித்து தேவ்தத் படிக்கல் புதிய மைல்கல்
இலங்கையின் காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளில், இந்திய கிரிக்கெட் அணியின் இளம் பேட்டர் தேவ்தத் படிக்கல் தனது அறிமுக டெஸ்ட் சதத்தைப் பிரம்மாண்டமான டாடி ஹன்ட்ரட் ஆக மாற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்றுச் சாதனை! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் வங்கதேசம் அதிரடி ஏற்றம்
டார்வினில் உள்ள மராரா கிரிக்கெட் மைதானத்தில் ஆகஸ்ட் 16 அன்று நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச கிரிக்கெட் அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
வெறும் 100 ரூபாய்க்கு கால்பந்து அணி விற்பனை! ஐஎஸ்எல் தொடரிலிருந்து விலகிய டாடா ஸ்டீல்: சர் சர்ச்சில் பிரதர்ஸ் ஒப்பந்தம்
இந்திய சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் விளையாடி வந்த ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியின் 100 சதவீதப் பங்குகளை டாடா ஸ்டீல் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
2036 ஒலிம்பிக்கை இந்தியா நடத்தும்! சுதந்திர தின உரையில் பிரம்மாண்ட திறமை தேடல் திட்டத்தை அறிவித்த பிரதமர் மோடி
நாட்டின் 80வது சுதந்திர தின விழாவில் செங்கோட்டையிலிருந்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, விளையாட்டுத் துறையில் இந்தியா அடைய வேண்டிய முக்கிய இலக்குகளைத் தெளிவுபடுத்தினார்.
செப்டம்பரில் அதிரடி மாற்றம்! பிசிசிஐயின் புதிய இயக்குநராக விவிஎஸ் லட்சுமணன் நியமனம்?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தின் தற்போதைய தலைவருமான விவிஎஸ் லட்சுமணன், இந்திய கிரிக்கெட் வாரியத்தில் மிகப்பெரிய பொறுப்பை ஏற்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காமன்வெல்த் ஃபென்சிங் சாம்பியன்ஷிப்பில் முதன்முறையாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா
நைஜீரியாவின் லாகோஸ் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் ஃபென்சிங் சாம்பியன்ஷிப் 2026 போட்டிகளில், இந்திய வாள்வீச்சு அணி 35 பதக்கங்களை குவித்து முதன்முறையாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
"நேருக்கு நேர் மோதல் கிடையாது!" ஆசிய விளையாட்டில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி; வெளியான புதிய அறிவிப்பு
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026ல் இந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க மோதல்கள் குறித்து உலகெங்கிலும் உள்ள விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம் இடைநீக்கம்: விளையாட்டு அமைச்சகம் அதிரடி நடவடிக்கை
நிர்வாகச் சீர்கேடு, வீரர்கள் நலனில் அலட்சியம் மற்றும் தேர்வில் வெளிப்படைத்தன்மையின்மை போன்ற காரணங்களால் இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனத்தின் (TTFI) அங்கீகாரத்தை மத்திய விளையாட்டு அமைச்சகம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
'மீண்டும் கேப்டன் பதவி வேணும்': மும்பை இந்தியன்ஸை விட்டு விலகத் திட்டமிட்ட ஹர்திக் பாண்டியா?
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, மீண்டும் தனது பழைய அணியான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு திரும்ப பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவர் முன்வைத்த கேப்டன்ஷிப் நிபந்தனையால் அந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிறிஸ்டியானோ ரொனால்டோ - ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் திருமணம்: 10 ஆண்டு காதலுக்கு பின் போர்ச்சுகலில் கோலாகலம்
போர்ச்சுகல் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (41), தனது நீண்ட நாள் காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸை (32) ஆகஸ்ட் 11, செவ்வாய்க்கிழமை அன்று முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
திருமண ஆசை காட்டி ஏமாற்றம்? டெல்லி கேப்பிடல்ஸ் நட்சத்திர வீரர் அபிஷேக் போரெல் அதிரடி கைது
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான அபிஷேக் போரெல், பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை மற்றும் மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டுகளின் கீழ் ஹூக்ளி மாவட்டம் மகரா காவல் துறையினரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
சௌரவ் கங்குலிக்கும், அவரது மனைவிக்கும் கொலை மிரட்டல் விடுத்த மர்மநபர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி மற்றும் அவரது மனைவி டோனா ஆகியோருக்கு கடந்த ஆறு மாதங்களாக தொடர்ச்சியான கடிதங்கள் மூலம் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
இலங்கை டெஸ்ட் தொடர்: காயம் காரணமாக சாய் சுதர்சன் விலகல்; சர்பராஸ் கான் மாற்று வீரராக தேர்வு
இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் காயம் காரணமாக விலகியுள்ளார்.
மகன் ரொனால்டோ ஜூனியருடன் 2030 ஃபிஃபா உலகக்கோப்பையில்? கிறிஸ்டியானோ ரொனால்டோ ஓய்வை அறிவிக்காததன் பின்னணி
போர்ச்சுகல் கால்பந்து அணியின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 45வது வயதில், வரவிருக்கும் 2030 ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரில் தனது மகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஜூனியருடன் இணைந்து விளையாட வாய்ப்புள்ளதாக சர்வதேச கால்பந்து வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.
உயரம் தாண்டுதலில் இந்தியா வரலாற்று சாதனை! உலக யு20 சாம்பியன்ஷிப்பில் பஸாந்த் குமார் மேக்வால் வெள்ளிப் பதக்கம் வென்றார்
உலக யு20 தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் உயரம் தாண்டுதல் போட்டியில், இந்திய இளம் வீரர் பஸாந்த் குமார் மேக்வால் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி காலமானார்: சோகத்தில் ரசிகர்கள்
கால்பந்து உலகின் தலைசிறந்த வீரரான லியோனல் மெஸ்ஸியின் தந்தையும் அவரது பிரதான முகவருமான ஜார்ஜ் மெஸ்ஸி தனது 68வது வயதில் காலமானார்.
"மெஸ்ஸி மீது வெடிகுண்டு வீச திட்டம்!" உலகக்கோப்பையில் திட்டமிடப்பட்ட அச்சுறுத்தல்; அதிர்ச்சி அறிக்கை
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் போது அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸியைக் குறிவைத்து மனித வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்ட அதிர்ச்சித் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு இலவச அனுமதி: இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளைக் காண மைதானத்திற்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உயரிய நோக்கில், இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒரு முக்கிய மற்றும் வரவேற்கத்தக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஓய்வு அறிவித்த சில நாட்களிலேயே ஆஸ்திரேலிய ஜாம்பவானின் அணியில் இணைந்த அஜிங்க்யா ரஹானே; முழு விபரம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் முன்னணி விக்கெட் கீப்பருமான அஜிங்க்யா ரஹானே, சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் சமீபத்தில் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, முதன்முறையாக வெளிநாட்டு லீக் தொடரில் களமிறங்கவுள்ளார்.
சீனியர் வீரர்களுக்கும் சலுகை கிடையாது! யோ-யோவை விடக் கடினமான ப்ராங்கோ டெஸ்ட்; பிசிசிஐ அதிரடி உத்தரவு
டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியான தோல்விகளையும் வீரர்களின் காயம் தொடர்பான பல்வேறு சிக்கல்களையும் தொடர்ந்து சந்தித்து வருகிறது.
காமன்வெல்த் போட்டிகள் நிறைவு: பாகிஸ்தான் வீரா் குத்ரத்துல்லா உட்பட பல வீரா்கள் மாயம்
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2026 நிறைவடைந்த நிலையில், போட்டிகளில் பங்கேற்ற பாகிஸ்தான் பாக்சிங் வீரர் குத்ரத்துல்லா மற்றும் உகாண்டா நாட்டை சேர்ந்த 4 வீரர்கள் உட்பட பல விளையாட்டு வீரர்கள் தங்களது அணிகளுடன் தாயகம் திரும்பாமல் மாயமாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஜித் அகர்கருக்கு பதிலாக VVS லக்ஷ்மன் களமிறங்குவாரா? நமக்குத் தெரிந்தவை
தைனிக் ஜாக்ரன் அறிக்கையின்படி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) விவிஎஸ் லட்சுமனை சாத்தியமான மாற்று நபராகப் பரிசீலித்து வருவதால், இந்தியாவின் தலைமை தேர்வாளராக அஜித் அகர்கரின் பதவிக்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
துணைக்கண்டத்தில் கோலோச்சிய இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் பற்றிய ஒரு பார்வை
இலங்கைக்கு எதிரான இந்தியாவின் வரவிருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் சுழற்பந்து வீச்சு முக்கிய பங்கு வகிக்க உள்ளது.
திலீப்பிற்கு பதிலாக புதிய பயிற்சியாளர்! இந்திய கிரிக்கெட் அணியின் ஃபீல்டிங் கோச்சாக சுபதீப் கோஷ் நியமனம்
ஆடவர் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஃபீல்டிங் பயிற்சியாளராக அசாம் மற்றும் ரயில்வே அணிகளுக்காக விளையாடியுள்ள முன்னாள் உள்நாட்டு கிரிக்கெட் வீரர் சுபதீப் கோஷ் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை டெஸ்ட் தொடர்: பும்ரா காயம் காரணமாக நீக்கம், ஜம்மு காஷ்மீர் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி சேர்க்கை
இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா காயம் காரணமாக விலகியுள்ளார்.
2030-ல் இந்தியாவில் காமன்வெல்த்: கிளாஸ்கோவில் இருந்து அகமதாபாத்திற்கு கைமாறிய கொடி
கிளாஸ்கோவில் நடைபெற்ற 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் கோலாகலமான நிறைவு விழாவுடன் முடிவுக்கு வந்துள்ளன.
முழுமையாக மொட்டை அடித்து நேர்த்திக்கடன்! திருப்பதி ஏழுமலையான் கோயிலில் காதலியுடன் சாமி தரிசனம் செய்த ஹர்திக் பாண்டியா
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற திருப்பதி வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார்.