LOADING...

இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

புல்வாமா பாணியில் செங்கோட்டை தாக்குதல்? ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி தகவல்

டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடந்த சமீபத்திய கார் குண்டுவெடிப்புத் தாக்குதல், புல்வாமா தாக்குதலின் பாணியைப் போலவே உள்ளது என்றும், இது ஜெய்ஷ்-இ-முகமது (Jaish-e-Mohammad) பயங்கரவாத அமைப்பின் தெளிவான அடையாளம் என்றும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் கே.ஜே.எஸ். தில்லான் தெரிவித்துள்ளார்.

21 Nov 2025
டெல்லி

டெல்லி குண்டு வெடிப்பு: சிரியா தொடர்புகள், துருக்கி சந்திப்பு உள்ளிட்ட வெளிநாட்டுத் பின்னணி அம்பலம்

டெல்லியில் 15 பேர் பலியான குண்டு வெடிப்புக்கு பின்னால் உள்ள வெளிநாட்டு தீவிரவாத வலையமைப்பை தேசிய புலனாய்வு முகமை (NIA) கண்டறிந்துள்ளது.

டெல்லி பள்ளிகளில் வெளிப்புற செயல்பாடுகளுக்குத் தடை: காற்று மாசுபாட்டால் உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லியில் காற்று மாசுபாடு கடுமையான நிலையை எட்டியுள்ளதால், உச்ச நீதிமன்றத்தின் நேரடி உத்தரவைத் தொடர்ந்து, டெல்லி அரசுப் பள்ளிகளில் வெளிப்புற விளையாட்டுகள் மற்றும் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

21 Nov 2025
டெல்லி

டெல்லியைத் தொடரும் நச்சுப் புகைமூட்டம்: தொடர்ந்து 7 ஆவது நாளாக 'மிக மோசமான' காற்றுத் தரம்

டெல்லியில் காற்றுத் தரம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) காலை சற்று மேம்பட்டிருந்தாலும், தொடர்ந்து ஏழாவது நாளாக 'மிக மோசமான' (Very Poor) பிரிவிலேயே நீடிப்பதால், குடியிருப்பாளர்கள் அடர்ந்த புகைமூட்டத்தால் மூச்சுத் திணறலுக்கு ஆளாகியுள்ளனர்.

21 Nov 2025
கொல்கத்தா

வங்கதேசத்தில் நிலநடுக்கம்: கொல்கத்தாவில் உணரப்பட்ட நில அதிர்வு

பங்களாதேஷ் தலைநகர் டாக்கா அருகே இன்று (வெள்ளிக்கிழமை) ரிக்டர் அளவில் 5.5 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

21 Nov 2025
ஜி20 மாநாடு

வரலாற்றுச் சிறப்புமிக்க ஜி20 மாநாட்டில் பங்கேற்க தென்னாபிரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி

டெல்லியில் இருந்து தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணத்தை இன்று தொடங்கினார்.

நாட்டின் 80% மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு இல்லை: ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் உள்ள மாற்றுத்திறனாளிகளில் 80% க்கும் அதிகமானோர் இன்னும் மருத்துவக் காப்பீடு பெறவில்லை என்றும், விண்ணப்பிப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் சட்டப்பூர்வ பாதுகாப்புகள் இருந்தபோதிலும் முறையான விளக்கம் இன்றி நிராகரிக்கப்படுவதாகவும் புதிய ஆய்வறிக்கை ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு; கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவு

2025-2026 நடப்பு கல்வியாண்டுக்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களைத் திருத்தம் செய்ய வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தமிழகப் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

வில்லங்கச் சான்றிதழ் போலவே இனி பட்டா வரலாற்றையும் அறியலாம்; தமிழக அரசின் புதிய திட்டம்

சொத்து தொடர்பான உரிமையாளர் விவரங்களை மக்கள் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில், வில்லங்கச் சான்றிதழைப் (Encumbrance Certificate - EC) போலவே பட்டாவின் முழுமையான வரலாற்றை அறிந்துகொள்ளும் புதிய ஆன்லைன் நடைமுறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

21 Nov 2025
கர்நாடகா

கர்நாடக காங்கிரஸில் புதிய சர்ச்சை: டெல்லி விரைந்த DKS ஆதரவு எம்.எல்.ஏக்கள்

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முதல்வர் பதவியை சுழற்சி முறையில் பகிர வேண்டும் என வலியுறுத்தி, துணை முதல்வர் டி.கே. சிவகுமாரின்(DKS) ஆதரவு எம்.எல்.ஏக்கள் 10 பேர் டெல்லிக்கு விரைந்துள்ளனர்.

21 Nov 2025
டெல்லி

டெல்லி மாணவர் தற்கொலை: தலைமை ஆசிரியை உட்பட 4 பேர் சஸ்பெண்ட்

டெல்லியில் உள்ள செயின்ட் கொலம்பா பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, பள்ளி ஊழியர்கள் நான்கு பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு ஊதியம்; தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்குச் சாதகமான முக்கிய அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

உங்களுக்கு வரும் அமலாக்கத்துறை சம்மன் உண்மையா, போலியா? ஆன்லைன் மோசடியைத் தவிர்க்கும் வழிகள்

அமலாக்கத்துறை (Enforcement Directorate) பெயரில் போலியான சம்மன்கள் புழக்கத்தில் விடப்பட்டு, மோசடி மற்றும் மிரட்டிப் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், சம்மனின் உண்மைத் தன்மையைச் சரிபார்க்கும் வழிமுறைகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகம் எச்சரிக்கையுடன் வெளியிட்டுள்ளது.

20 Nov 2025
திரிபுரா

திரிபுராவில் பயணிகள் ரயில் மற்றும் பிக்அப் வேன் மோதிக்கொண்ட விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது

திரிபுராவின் தலாய் மாவட்டத்தில் உள்ள எஸ்.கே. பாரா ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை பிற்பகல் பயணிகள் ரயில் பிக்அப் வேன் மீது மோதியதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

20 Nov 2025
பெங்களூர்

பெங்களூரில் அதிர்ச்சி: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போல் வேடமிட்டு ₹7.11 கோடி கொள்ளை

இந்தியாவின் லூவர் கொள்ளைக்கு ஒப்பாகக் கருதப்படும் துணிகரச் சம்பவத்தில், பெங்களூரில் புதன்கிழமை (நவம்பர் 19) ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அதிகாரிகள் எனப் போலியாக வேடமிட்ட ஒரு கும்பல், ₹7.11 கோடி ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

20 Nov 2025
விஜய்

சேலத்தில் விஜயின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு; காவல்துறை சொன்ன காரணம் என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், டிசம்பர் 4 ஆம் தேதி சேலத்தில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக கட்சி நிர்வாகிகளால் கோரப்பட்ட மூன்று இடங்களுக்கான அனுமதியை சேலம் மாநகரக் காவல்துறை மறுத்துள்ளது.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒரே மாதிரியான தேசிய கொள்கை தேவை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

இந்தியாவில் உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வெளிப்படையாகவும், திறமையாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், தேசிய கொள்கை (National Policy) மற்றும் சீரான விதிகளை உருவாக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

20 Nov 2025
டெல்லி

தனிமையில் வாடும் கைதிகளுக்காக பசு சிகிச்சை அறிமுகம்; திகார் சிறையில் புதிய முயற்சி

டெல்லியில் உள்ள திகார் சிறைச்சாலையில், கைதிகளின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், தனிமையைக் கையாள உதவவும் புதிய முயற்சியாக பசு சிகிச்சை (Cow Therapy) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

20 Nov 2025
கடற்படை

பாகிஸ்தானுக்கு சீனாவில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் கிடைத்தது குறித்து இந்திய கடற்படை தலைவர் கூறியது என்ன?

சீனா பாகிஸ்தானுக்கு வழங்கும் மேம்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்களை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக இந்திய கடற்படை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

2007, 2008 குண்டுவெடிப்புகளிலும் அல் ஃபலா பல்கலைக்கழகத்தின் தொடர்பு; வெளியான அதிர்ச்சித் தகவல்

அல் ஃபலா பல்கலைக்கழகத்தை (Al Falah University) மையமாகக் கொண்ட பயங்கரவாத நெட்வொர்க் குறித்து டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு தாக்கல் செய்த இரகசிய அறிக்கை, அந்த கல்வி நிறுவனத்தைச் சுற்றியுள்ள ஆழமான அச்சுறுத்தலை வெளிப்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்புப் பயணம்: டிச. 4-இல் மீண்டும் தொடக்கம் 

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் நடிகர் விஜய், தன்னுடைய மக்கள் சந்திப்புப் பயணத்தை டிசம்பர் 4ஆம் தேதி சேலத்தில் தொடங்கவுள்ளதாக இணையத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன.

20 Nov 2025
சசி தரூர்

பிரதமர் மோடியை புகழ்ந்ததால் காங்கிரஸ் கட்சியின் கோபத்தை எதிர்கொள்ளும் சசி தரூர்

காங்கிரஸ் தலைவர் சசி தரூர் பிரதமர் நரேந்திர மோடியை சமீபத்தில் புகழ்ந்து பேசியது அவரது கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

20 Nov 2025
கேரளா

கேரளா: 16 வயது மகனை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேரத் தூண்டிய தாய் மீது UAPA வழக்கு பதிவு

கேரளாவில் பதினாறு வயது இளைஞரை தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பில் சேருமாறு தூண்டியதாக, அவரது தாய் மற்றும் அவரது பார்ட்னர் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டமான UAPA (Unlawful Activities Prevention Act)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மசோதாக்கள் மீதான ஆளுநரின் அதிகாரம்: காலவரையின்றி நிறுத்தி வைக்கத் தடை: உச்ச நீதிமன்றம்

மாநில சட்டப்பேரவைகளால் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் முடிவெடுப்பதில் ஏற்படும் காலதாமதம் குறித்த வழக்கில், இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

8வது ஊதியக் குழு விதிமுறைகள்: 10 ஆண்டு சுழற்சி மாறுகிறதா? மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் சலசலப்பு

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 8வது ஊதியக் குழுவின் பரிந்துரை விதிமுறைகள் (ToR) சமீபத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டன.

20 Nov 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

20 Nov 2025
டெல்லி

டெல்லியில் தீவிரமடைந்த காற்று மாசு: சிவப்பு மண்டலத்தில் நுழைந்தது AQI

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்று மாசு நிலைமை இன்று (வியாழக்கிழமை) மீண்டும் மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளது.

பீகார் முதல்வராக 10-வது முறையாக பதவியேற்கிறார் நிதிஷ் குமார்: பிரதமர் மோடி பங்கேற்பு

பீகார் மாநிலத்தின் முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் (JDU) தலைவர் நிதிஷ் குமார், இன்று பதவி ஏற்கிறார்.

லட்சத்தீவுக்கு நகர்ந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது மேற்கு நோக்கி நகர்ந்து லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.

19 Nov 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (நவம்பர் 20) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

பண நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஜெய்ஷ், இந்தியாவை தாக்க நன்கொடைகளை நாடுகிறதாம்

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத குழுவான ஜெய்ஷ்-இ-முகமது, இந்தியாவிற்கு எதிரான புதிய "பிதாயீன்" (தற்கொலை) தாக்குதலுக்கு நிதி தேடுவதாக உளவுத்துறை வட்டாரங்கள் NDTV இடம் தெரிவித்தன.

கோவை மேடையில் பாண்டியனின் உரையை கேட்டு "சிறுவயதில் தமிழ் கற்றிருக்கலாமே" என வருந்திய பிரதமர்

மத்திய அரசின் முக்கியத் திட்டமான பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி(PM-KISAN) திட்டத்தின் 21வது தவணைத் தொகையை இன்று பிரதமர் நரேந்திர மோடி கோவையில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிட்டார்.

19 Nov 2025
தமிழ்நாடு

தமிழக சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு 2026: விண்ணப்பப் பதிவு நாளை தொடக்கம்!

பணியில் உள்ள ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு(TN TET) 2026-ன் சிறப்பு தகுதித் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு நாளை(நவம்பர் 20) தொடங்கப்பட உள்ளது.

புட்டபர்த்தி சாய்பாபா நூற்றாண்டு விழா: சிறப்பு 100 ருபாய் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர்

புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100-வது பிறந்தநாள் நூற்றாண்டு விழா ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் கோலாகலமாகத் துவங்கி நடைபெற்று வருகிறது.

'வாக்கு திருட்டு' குற்றச்சாட்டு தொடர்பாக ராகுல் காந்தியை 272 முன்னாள் நீதிபதிகள், அதிகாரிகள் கடுமையாக சாடியுள்ளனர்

ஓய்வுபெற்ற நீதிபதிகள், அதிகாரிகள், முன்னாள் ராணுவ அதிகாரிகள் மற்றும் இராஜதந்திரிகள் என 200க்கும் மேற்பட்டோர் அடங்கிய குழு, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு (ECI) எதிரான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை கடுமையாக சாடியுள்ளது.

தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி: தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவாகி மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளது.

ஃபரிதாபாத் அல்-ஃபலா பல்கலைக்கழக நிறுவனர் அமலாக்கத்துறையினரால் கைது

பணமோசடி வழக்கில், ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் அல்-ஃபலா குழுமத்தின் தலைவர் ஜவாத் அஹ்மத் சித்திக் என்பவரை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.

18 Nov 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 19) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (நவம்பர் 19) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

18 Nov 2025
மெட்ரோ

மதுரை, கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு! 'குறைந்த மக்கள் தொகையை' காரணம் காட்டியது மத்திய அரசு

தமிழ்நாடு அரசு முன்மொழிந்த கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு குறிப்பிட்ட புதிய பாதைக்கான முன்மொழிவு ஆகியவற்றை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

18 Nov 2025
சென்னை

சென்னை பெருநகரப் போக்குவரத்து: அடுத்த 25 ஆண்டுகளுக்கான மாஸ்டர் பிளான் வெளியீடு! 

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, அடுத்த 25 ஆண்டுகளுக்கான பொது போக்குவரத்து திட்டங்களை சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து அதிகார அமைப்பு (CUMTA) வெளியிட்டுள்ளது.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: ரூ. 1300 கோடி செலவில் 24 தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைப்பு

உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா, வருகின்ற நவம்பர் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்குகிறது.

டெல்லியில் 5 நீதிமன்ற வளாகங்கள், 2 CRPF பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு, தலைநகரில் உள்ள ஐந்து நீதிமன்ற வளாகங்கள் மற்றும் இரண்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) பள்ளிகளுக்கு இன்று (நவம்பர் 18) வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில்கள் வந்துள்ளதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

முக்கிய மாவோயிஸ்ட் தலைவர் மத்வி ஹிட்மா ஆந்திராவில் சுட்டுக் கொலை

ஆந்திராவின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தின் மாரேடுமில்லி காடுகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சிறப்புப் போலீஸ் படையினருடன் நடந்த மோதலில், முக்கிய மாவோயிஸ்ட் தலைவர் மத்வி ஹிட்மா உட்பட ஆறு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.

"தற்கொலைத் தாக்குதல் என்பது...": செங்கோட்டை குண்டுவெடிப்பு குற்றவாளி டாக்டர் உமரின் காணொளி வெளியானது

டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு சதித் திட்டத்தின் மூளையாகச் செயல்பட்ட டாக்டர் உமர் உன் நபியின் (Dr. Umar un Nabi) இதுவரை காணப்படாத ஒரு புதிய காணொளி தற்போது புலனாய்வுத் துறையினரின் கையில் கிடைத்துள்ளது.

டெல்லி குண்டுவெடிப்பு சதிக்கு நிதியுதவி: அல்-ஃபலா பல்கலைக்கழகம் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

சமீபத்தில் டெல்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு மற்றும் ஃபரிதாபாத் பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய நிதியுதவி குறித்து, அல்-ஃபலா பல்கலைக்கழகம்(Al-Falah University) மீதான நிதி மோசடி விசாரணையை அமலாக்கத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

18 Nov 2025
டெல்லி

டெல்லி குண்டுவெடிப்பு சதியில் ஈடுபட்ட முக்கிய சதிகாரர் கைதில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

தலைநகர் டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு சதித் திட்டத்தின் முக்கிய குற்றவாளியான டாக்டர் உமரின் நெருங்கிய கூட்டாளி ஒருவரை தேசியப் புலனாய்வு முகமை (NIA) நேற்று கைது செய்துள்ளது.

இருமல் மருந்துகள் இனி மருத்துவரின் பரிந்துரையுடன் மட்டுமே விற்கப்படும்: மத்திய அரசு முடிவு

நாடு முழுவதும் கலப்பட இருமல் மருந்துகளை உட்கொண்டதன் விளைவாக குழந்தைகள் உயிரிழந்த தொடர் சம்பவங்களை தொடர்ந்து, சில வகையான இருமல் மற்றும் சளி மருந்துகளை இனி மருத்துவரின் Prescription இல்லாமல் விற்கத் தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி: கடலூர், விழுப்புரம், புதுச்சேரியில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

17 Nov 2025
டெல்லி

டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு: உயிரிழப்பு 14 ஆக அதிகரிப்பு

டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே கடந்த வாரம் நடந்த கார் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

17 Nov 2025
சென்னை

SIR படிவத்தை நிரப்புவதில் சந்தேகமா? சென்னையில் நாளை முதல் உதவி மையங்கள் தொடக்கம்

சென்னை மாவட்டத்தில் 2026 பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் (SIR) தீவிரமடைந்துள்ளன.

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தீர்ப்பு: இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக, டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) அளித்த தீர்ப்பை இந்தியா முறைப்படி கவனத்தில் கொண்டதாக திங்கட்கிழமை (நவம்பர் 17) அறிவித்தது.

17 Nov 2025
டெல்லி

டெல்லி செங்கோட்டை குண்டு வெடிப்பு: டாக்டர் உமர் 'ஷூ வெடிகுண்டு' தீவிரவாதியா?

டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய திருப்பமாக, தற்கொலை போராளி டாக்டர் உமர் உன் நபி தனது காலணியில் (Shoe) வெடிகுண்டை மறைத்து வைத்துத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

'இது 88 மணி நேர டிரெய்லர்': 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து இந்திய ராணுவ தளபதி கடும் எச்சரிக்கை

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்திய இராணுவம் நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' (Operation Sindoor) குறித்த அனுபவப் பாடங்களை இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி நேற்று வெளியிட்டார்.

17 Nov 2025
தமிழகம்

நாளை முதல் SIR பணிகளை புறக்கணிப்பதாக வருவாய்த் துறை சங்கம் அறிவிப்பு; காரணம் என்ன?

அதிகப்படியானப் பணி நெருக்கடி மற்றும் கூடுதல் பணிப்பளுவைக் களைய வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கம் செவ்வாய் கிழமை (நவம்பர் 18) முதல் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை (SIR) முழுமையாகப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது.