இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
ஹார்முஸ் வழியாக இந்திய கொடியிடப்பட்ட எண்ணெய் கப்பல்கள் பாதுகாப்பாக கடக்க ஈரான் அனுமதி
ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக இந்தியக் கொடியிடப்பட்ட எண்ணெய் டேங்கர் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் உள்ள சமையல் எரிவாயு இணைப்புகள் எவ்வளவு? தமிழகத்திற்கு எந்த இடம்?
LPG சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் எவ்வளவு சமையல் எரிவாயு இணைப்புகள் இருக்கின்றன என்பது குறித்த தரவுகள் இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.
சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி: மக்களவையில் அமித் ஷா ஆவேச உரை
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம், புதன்கிழமை அன்று குரல் வாக்கெடுப்பு மூலம் தோற்கடிக்கப்பட்டது.
சிலிண்டர் தட்டுப்பாடா? யாரும் பயப்பட வேண்டாம்! மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு மற்றும் புதிய கட்டுப்பாடுகள்
அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக உலகளவில் எரிசக்தி சூழலில் நிச்சயமற்ற நிலை நிலவினாலும், இந்தியாவில் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் சீராக உள்ளதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய வரலாற்றில் முதல்முறை! தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்க எதிர்க்கட்சிகள் அதிரடி முடிவு; முழு பின்னணி
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகப் பதவி நீக்கத் தீர்மானத்தைக் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீவிரமாக முயன்று வருகின்றன.
கடலூர் மக்களுக்கு அதிர்ச்சி! வணிக சிலிண்டர் விநியோகம் முழுமையாக நிறுத்தம்; உணவகங்கள் மூடப்படும் அபாயம்!
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு, இன்று அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தியாவில் முதல்முறை! கோமா நிலையில் இருந்த இளைஞருக்கு கருணைக்கொலை செய்ய அனுமதி; உச்ச நீதிமன்றத்தின் உருக்கமான தீர்ப்பு
கடந்த 13 ஆண்டுகளாக நிரந்தர கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த 32 வயதான ஹரீஷ் ராணாவுக்கு 'செயலற்ற கருணைக்கொலை' செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அமெரிக்காவுடன் நெருக்கம் காட்டினாலும் இந்தியாவை ஈரான் கைவிடாதது ஏன்? இரு நாடுகளுக்கும் இடையிலான ரகசிய ராஜதந்திரம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ப் பதற்றங்களுக்கு மத்தியிலும், ஈரான் மற்றும் இந்தியா இடையிலான உறவு மிகவும் நிதானமான மற்றும் நடைமுறைச் சாத்தியமான ஒன்றாகத் தொடர்கிறது.
சாலையில் இருந்த பள்ளத்தால் உயிர் பிழைத்த மூளைச்சாவு அடைந்த அதிசய பெண்மணி
இந்தியாவில் குண்டும் குழியுமான சாலைகளை பார்ப்பது சாதாரண விஷயம் தான். பெரிய பள்ளங்களினால் வாகன விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழந்த கதைகளைத் தான் கேட்டிருப்போம். ஆனால் பெரும் பள்ளத்தினால் ஒருவர் உயிர் பிழைத்த கதை இது.
1.5 லட்சம் காலாவதியான அமுல் தயாரிப்புகளில் தேதியை மாற்றி விற்பனை செய்ய முயற்சி
ஜெய்ப்பூரில் காலாவதியான 1.5 லட்சம் கிலோ அமுல் (Amul) தயாரிப்புகளை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்து அழித்தனர். சுமார் 27 லாரிகளில் ஏற்றப்பட்ட இந்த பொருட்கள் நான்கு நாட்களாக குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டன.
உடல் குறைபாடு ஒரு தடையல்ல! முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி வென்ற கோவை இளைஞர் அப்துல்லா அப்ரித்: வியக்க வைக்கும் பின்னணி
கோயம்புத்தூரைச் சேர்ந்த 25 வயதான அப்துல்லா அப்ரித், நாட்டின் மிக உயரிய தேர்வான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தனது முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று (அகில இந்திய அளவில் 942வது ரேங்க்) சாதனை படைத்துள்ளார்.
சென்னையில் சிஎன்ஜி தட்டுப்பாடா? நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்
சென்னையின் முக்கிய பகுதிகளில் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்திய கடற்படைக்கு புதிய பலம்! டிஆர்டிஓவின் அசத்தல் கண்டுபிடிப்பு; வானிலிருந்து கடலில் உள்ள கப்பல்களுக்கு பொருட்களை எளிதாக அனுப்பலாம்
இந்தியக் கடற்படையின் தளவாடத் திறனை மேம்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ADC-150 (Air-Droppable Container) கன்டெய்னரின் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) மற்றும் இந்திய கடற்படை வெற்றிகரமாக முடித்துள்ளன.
தென் தமிழகத்திற்கு ஜாக்பாட்! மதுரை விமான நிலையத்திற்கு 'சர்வதேச அந்தஸ்து' வழங்கியது மத்திய அரசு
தென் தமிழக மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
பொதுத்தேர்வு 2026: 12 ஆம் வகுப்பு கணிதத் தேர்வில் ரிக்ரோல் கியூஆர் கோடு சர்ச்சை; சிபிஎஸ்இ விளக்கம்
மார்ச் 9 ஆம் தேதி நடைபெற்ற சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு கணிதத் தேர்வு சமூக வலைதளங்களில் ஒரு வினோதமான காரணத்திற்காகப் பேசப்பட்டு வருகிறது.
எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு வதந்தி: முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு; உற்பத்தி 10% அதிகரிப்பு
இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாகப் பரவி வரும் செய்திகளுக்கு மத்திய அரசு இன்று (மார்ச் 10) முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
நெருக்கடி நேரத்திலும் உதவும் இந்தியா! எரிபொருள் தட்டுப்பாட்டால் தவிக்கும் வங்கதேசத்திற்கு பைப்லைன் மூலம் 5,000 டன் டீசல்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போர் சூழலால் உலகளவில் எரிசக்தி பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அண்டை நாடான வங்கதேசத்திற்கு இந்தியா டீசல் விநியோகத்தைத் தொடங்கியுள்ளது.
மார்ச் 16 வரை விடாது பெய்யும் மழை! தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மார்ச் 16 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இனி பதுக்கினால் சிறை! எல்பிஜி தட்டுப்பாட்டைச் சமாளிக்க மத்திய அரசு எடுத்த பிரம்மாஸ்திரம்; அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் சொல்வது என்ன?
இந்தியாவில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைச் சமாளிக்கவும், சீரான விநியோகத்தை உறுதி செய்யவும் மத்திய அரசு அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், 1955 ஐ செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) அன்று அமல்படுத்தியுள்ளது.
85% இறக்குமதி பாதிப்பு! நள்ளிரவில் பிரதமர் மோடி நடத்திய உயர்மட்டக் கூட்டம்; கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டைப் போக்க மெகா பிளான்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைச் சமாளிக்க, பிரதமர் நரேந்திர மோடி இன்று பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருடன் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்.
தவறு நடந்துவிட்டது! நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது NCERT; எட்டாம் வகுப்பு பாடப்புத்தங்கள் வாபஸ்
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் நீதித்துறை குறித்து இடம் பெற்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) இன்று நாளிதழ்களில் நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கோரியுள்ளது.
சம்பளம், சலுகைகள் எவையும் வேண்டாம்: 543 எம்பிக்களில் இந்த 2 பேர் மட்டும் தனி ரகம்; யார் இவர்கள்?
நாடாளுமன்றத்தில் அரசியல் மோதல்கள் ஒருபுறம் இருந்தாலும், எம்பிக்களின் சம்பளம் மற்றும் சலுகைகள் உயர்வு என்று வரும்போது அனைத்துக் கட்சியினரும் பொதுவாக ஒன்றுபடுவார்கள்.
பெங்களூரில் ஹோட்டல்கள் நாளை முதல் இயங்காது? எரிவாயு தட்டுப்பாடு குறித்து உணவகங்கள் சங்கம் எச்சரிக்கை
பெங்களூரில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு வழங்கப்படும் வர்த்தக எல்பிஜி சிலிண்டர்களின் விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டதால், நாளை (செவ்வாய்க்கிழமை, மார்ச் 10, 2026) முதல் நகரின் பெரும்பாலான உணவகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியால் ஈர்ப்பு: பிரமோஸ் வாங்க ரூ.2,900 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்கிறது இந்தோனேசியா
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பிரமோஸ் ஏவுகணைகளின் துல்லியமான தாக்குதல் திறனைத் தொடர்ந்து, இந்தோனேசியா இந்த ஏவுகணை அமைப்பை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை உறுதி செய்துள்ளது.
நடிகர் விஜய்க்கு மீண்டும் சிபிஐ பிடி! கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கரூர் மாநாட்டு நெரிசல் விபத்து தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
நடுவானில் திடீர் திருப்பம்! டெல்லியிலிருந்து கிளம்பிய இண்டிகோ விமானம் 7 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் இந்தியாவுக்கே திரும்பியது ஏன்?
டெல்லியிலிருந்து இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகருக்குப் புறப்பட்ட இண்டிகோ விமானம், சுமார் 7 மணி நேரம் பறந்த நிலையில், ஈரான் போர் சூழல் காரணமாகப் பாதி வழியில் மீண்டும் டெல்லிக்கே திரும்பியுள்ளது.
50 சீட்டுடன் துணை முதல்வர் பதவி: ஆந்திரா ஃபார்முலாவுடன் விஜயை இணைக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி கடைசி கட்ட முயற்சி?
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) இணைய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
கடற்கரையில் திருமணம் செய்ய ஆசையா? நடுத்தர மக்களுக்காகவே தமிழக அரசின் 'பீச் வெட்டிங்' திட்டம்; கட்டணம் மற்றும் முன்பதிவு விவரங்கள்
தமிழகத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், நடுத்தர மக்களின் "கடற்கரைத் திருமண" கனவை நனவாக்கவும் தமிழக அரசு ஒரு அதிரடித் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
ஒவ்வொரு இந்தியரையும் காப்பதே இலக்கு! ஈரான் போர்க்களத்திலிருந்து தப்பிய 67,000 பேர்; மாநிலங்களவையில் அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றங்கள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் இன்று (மார்ச் 9) மாநிலங்களவையில் விரிவான விளக்கமளித்தார்.
போலீஸ் பிடியில் இளைஞர் உயிரிழப்பு! மானாமதுரை கைதி மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் விசாரணை கைதி ஆகாஷ் டெலிசன் (26) உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
NEET UG 2026: விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மார்ச் 11 வரை நீட்டிப்பு; என்டிஏ அறிவிப்பு
இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் (MBBS) மற்றும் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான இளங்கலை நீட் (NEET UG) 2026 தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நீட்டித்துள்ளது.
இந்திய அணுசக்தி துறையில் வரலாற்றுச் சாதனை: முதல் பெண் தலைவராக தமிழக பெண் ஆர்.எம். நாச்சம்மை நியமனம்
இந்தியாவின் அணுசக்தித் திட்ட வரலாற்றில் ஒரு மகத்தான தருணமாக, செயல்பாட்டில் உள்ள ஒரு அணுமின் நிலையத்தின் செயல்பாடுகளைக் கவனிக்கும் முதல் பெண் தலைமை கண்காணிப்பாளராக ஆர்.எம்.நாச்சம்மை நியமிக்கப்பட்டுள்ளார்.
71 கிமீ நீளமுள்ள இந்தியாவின் முதல் ரிங் மெட்ரோ! டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த புதிய வழித்தடங்கள்
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் மெட்ரோ ரயில் சேவையின் அடுத்தகட்ட விரிவாக்கத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 8) முறைப்படி தொடங்கி வைத்தார்.
வெயில் பிளக்கப்போகுது! 3 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை; சென்னை உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
விக்சித் பாரதத்தின் வழிகாட்டி பெண்கள்! மகளிர் தினத்தில் பெண் சக்தியைப் போற்றிய பிரதமர் மோடி
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு (மார்ச் 8, ஞாயிற்றுக்கிழமை), இந்தியப் பெண்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
சிக்கன் நெக் பகுதியில் புதிய யூனியன் பிரதேசமா? தீயாய் பரவிய தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு
பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் சில மாவட்டங்களை ஒன்றிணைத்து புதிய யூனியன் பிரதேசத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலை மத்திய அரசு சனிக்கிழமை (மார்ச் 7) திட்டவட்டமாக மறுத்துள்ளது.
'அன்னபூரணி சூப்பர் 6 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் வரை!' பெண்களைக் கவர விஜய் வெளியிட்ட மெகா தேர்தல் வாக்குறுதிகள்
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அதிரடியான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார்.
'சாகும் வரை சிறை!' கோவை மாணவி வழக்கில் குற்றவாளிகளுக்கு வாழ்நாள் தண்டனை & பாதிக்கப்பட்டவருக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோவையில் கல்லூரி மாணவி ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகிளா நீதிமன்றம் இன்று (மார்ச் 7) அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு: புதிய அறிவிப்பு வெளியீடு
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதற்றத்தை கருத்தில் கொண்டு, மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறவிருந்த சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மத்திய கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஒத்திவைத்துள்ளது.
'நாங்க யார்கிட்டயும் பர்மிஷன் கேட்கல!' ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்காவிற்கு இந்தியா கொடுத்த கெத்தான பதில்
ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு சனிக்கிழமை (மார்ச் 7) தெரிவித்துள்ளது.
பெண் ஏன் அடிமையானாள்? பெரியார் முதல் கலைஞர் வரை; மகளிர் தின வாழ்த்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை
சர்வதேச மகளிர் தினத்தை (மார்ச் 8) முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை அன்று மாநிலப் பெண்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
எல்லாவற்றையும் விட மனிதநேயமே முக்கியம்! ஈரான் போர்க்கப்பலுக்கு கொச்சியில் அனுமதி கொடுத்ததன் காரணம் இதுதான்
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரானிய கடற்படைக் கப்பலான ஐஆர்ஐஎஸ் லாவன் கொச்சி துறைமுகத்தில் அடைக்கலம் புக இந்தியா அனுமதி அளித்தது.
கொச்சியில் தஞ்சம் புகுந்த மற்றொரு ஈரான் போர்க்கப்பல்; 183 வீரர்களுக்கு இந்தியா புகலிடம்
இலங்கை அருகே ஈரானின் ஐஆர்ஐஎஸ் டெனா போர்க்கப்பல் அமெரிக்காவால் மூழ்கடிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பே, ஈரானின் மற்றொரு போர்க்கப்பலான ஐஆர்ஐஎஸ் லவன் கொச்சி துறைமுகத்தில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கமேனியை வீழ்த்திய இஸ்ரேலிய தொழில்நுட்பத்தினை பயன்படுத்த இந்தியா திட்டம்?
பிப்ரவரி 28 அன்று ஈரானின் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனி மீதான தாக்குதலில் இஸ்ரேலின் 'புளூ ஸ்பாரோ' ஏவுகணை முக்கிய பங்காற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யுபிஎஸ்சி 2025 முடிவுகள் வெளியீடு; தமிழகத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி தேசிய அளவில் இரண்டாம் இடம்! முழு விவரங்கள்
மத்திய பொதுப்பணி ஆணையம் (யுபிஎஸ்சி), 2025 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீசஸ் தேர்வின் இறுதி முடிவுகளை வெளியிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி பதவியேற்பு
உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று, சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி இன்று பதவியேற்றார்.
கர்நாடகாவை தொடர்ந்து 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடையை விதித்தது ஆந்திரா
ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களில் தடை விதிப்பதாக அறிவித்துள்ளார்.
இரண்டாவது, மூன்றாவது குழந்தை பெறும் தம்பதிகளுக்கு ₹25,000 வழங்குவதாக ஆந்திர அரசு அறிவிப்பு
பெரிய குடும்பங்களை ஊக்குவிப்பதற்காக ஆந்திர பிரதேச அரசு ஒரு புதிய மக்கள்தொகை கொள்கையை முன்மொழிந்துள்ளது, இதில் வரைவு கொள்கை அதிக குழந்தைகளை கொண்ட குடும்பங்களுக்கு நிதி உதவி மற்றும் நலத்திட்டங்களை முன்மொழிகிறது.
16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக வலைதள தடை விதித்த முதல் மாநிலம்: கர்நாடகா அரசு அதிரடி
கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு முழுமையான தடை விதிக்கப்படுவதாக முதலமைச்சர் சித்தராமையா இன்று அறிவித்துள்ளார்.