இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
வினாத்தாள் கசிவு எதிரொலி: NTA தனது வளாக பாதுகாப்பிற்காக ₹7.5 கோடிக்கு டெண்டர் கோரியுள்ளது
தேசிய தேர்வு முகமை (NTA), ஒரு பாதுகாப்பு நிறுவனத்தை நியமிப்பதற்காக ₹7.5 கோடி மதிப்பிலான டெண்டரைக் கோரியுள்ளது.
கேரளாவில் பெருமழை: உயிரிழப்பு 9 ஆக உயர்வு, 12 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மல்யுத்த வீராங்கனைகள் வழக்கில் பிரிஜ்பூஷன் சரண் சிங் விடுதலை! டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், முன்னாள் பாஜக எம்பியுமான பிரிஜ்பூஷன் சரண் சிங் மீது ஆறு பெண் மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்த பாலியல் துன்புறுத்தல் வழக்கில், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அவரை விடுவித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் அடுத்த 1 வாரத்திற்கு மழை நீடிக்கும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் நேற்றிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை பரவலாக நல்ல மழை பதிவாகியுள்ள நிலையில், இந்த மழைப்பொழிவு அடுத்த ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 5.64 கோடி வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவை: மாநிலங்களவையில் சட்ட அமைச்சர் தகவல்
இந்தியாவில் உள்ள உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் மற்றும் கீழ்மை நீதிமன்றங்களில் ஒட்டுமொத்தமாக 5.64 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
நாளை முதல் மேலும் தீவிரமடையும் மழை! நீலகிரி, தேனி உள்பட 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
வட உள் கர்நாடகத்தில் இருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதாலும், தெற்கு குஜராத்திலிருந்து கேரளா வரை மற்றொரு தாழ்வுப் பாதை நிலவுவதாலும் தமிழகத்தில் மழை தீவிரமடையக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 10 கண் சொட்டு மருந்துகளைத் திரும்பப் பெறும் சன் பார்மா! நோயாளிகளுக்கு அவசர எச்சரிக்கை
இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான சன் பார்மா, இந்தியாவில் விற்பனையாகும் தனது 10 வகையான கண் சொட்டு மருந்து தயாரிப்புகளைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
பயணத்தை ஒத்திவையுங்கள்! சபரிமலை பக்தர்களுக்குத் தமிழ்நாடு அரசு மற்றும் தேவசம்போர்டு அவசர எச்சரிக்கை
கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு அபாயம் காரணமாக, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லத் திட்டமிட்டுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த பக்தர்கள் தங்களது பயணத்தைத் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு தமிழக அரசு மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு இணைந்து அவசர எச்சரிக்கை விடுத்துள்ளன.
பவர்கட் அலெர்ட்! நாளை (ஆகஸ்ட் 02) மின் விநியோகம் நிறுத்தப்படும் முக்கிய இடங்கள்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
100 வாரங்கள், பிரம்மாண்ட விழிப்புணர்வு! போதையற்ற இளைஞர்கள் தேசிய இயக்கத்தைத் தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி
நாட்டின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களை போதைப் பழக்கத்திலிருந்து பாதுகாக்கும் வகையிலும், அவர்களை சமுதாய மாற்றத்திற்கான தூதர்களாக மாற்றும் நோக்கிலும் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான போதையற்ற இளைஞர்கள் (Nasha Mukt Yuva for Viksit Bharat Sankalp Abhiyan) என்ற பிரம்மாண்ட இயக்கத்தைப் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாகத் தொடக்கி வைத்தார்.
காவல்துறை சீருடையில் நாசவேலை திட்டம்! ஜந்தர் மந்தர் போராட்டம் மற்றும் முதல்வரைக் குறிவைத்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி கைது
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான மாணவர் அமைப்புகளின் போராட்டத்தின் போது, காவல்துறை சீருடையில் ஊடுருவி பெரிய அளவிலான நாசவேலைகளை செய்யத் திட்டமிட்ட ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதியை மேற்கு வங்க மாநில சிறப்பு அதிரடிப் படை கைது செய்துள்ளது.
ரூ.125க்கு விற்க வேண்டிய பெட்ரோல் ரூ.95க்கு கிடைக்க காரணம்! எத்தனால் கலப்பு குறித்து மத்திய அரசு விளக்கம்
மத்திய கிழக்கு ஆசியப் பகுதியில் போர் பதற்றம் தீவிரமடைந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 135 டாலராக உயர்ந்திருந்த போதும், இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.125 வரை உயராமல் ரூ.94.77 என்ற அளவிலேயே கட்டுக்குள் இருந்ததற்கு 20 சதவீத எத்தனால் கலப்பு (E20) கொள்கையே முக்கியக் காரணம் என மத்திய மத்திய பெட்ரோலிய அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
மாணவர்களுக்கு இனி சிரமம் இல்லை! நீட் 2026 கலந்தாய்வில் அதிரடி மாற்றங்கள்! ஒரே நாடு ஒரே கவுன்சிலிங் கோரிக்கை
மருத்துவக் கலந்தாய்வுக் குழு இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு முறையில் பல்வேறு முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
கல்வித் துறையை நவீனமயமாக்க மத்திய அரசு உறுதி! ஸ்டார்ட்-அப் சாதனைகளுக்கு இளைஞர்களே காரணம்! மைசூரில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி
கர்நாடக மாநிலம் மைசூரில் அமைக்கப்பட்டுள்ள சுவாமி விவேகானந்தர் பண்பாட்டு இளைஞர் மையமான விவேக ஸ்மாரகா கட்டிடத்தைத் திறந்து வைத்துப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
வினாத்தாள் கசிவு செய்தால் 10 ஆண்டு சிறை! புதிய சட்டத் திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்தச் சட்டம் 2026க்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது அதிகாரப்பூர்வ ஒப்புதலை அளித்துள்ளார்.
ஜிஎஸ்டி வசூலில் புதிய மைல்கல்! ஜூலை மாத வசூல் ₹2.11 லட்சம் கோடியாக உயர்வு
இந்தியாவின் பொருளாதாரக் கட்டமைப்பு மற்றும் நுகர்வுத் திறன் தொடர்ந்து வலிமையாக இருப்பதை உறுதி செய்யும் வகையில், கடந்த ஜூலை 2026 மாதத்தில் நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் 15.4 சதவீதம் உயர்ந்து ₹2.11 லட்சம் கோடியைத் தொட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு மீண்டும் ஒரு நற்செய்தி! பிஎம் கிசான் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு! ₹3.15 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
நாட்டின் லட்சக்கணக்கான விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு, அதாவது 2030-31 நிதியாண்டு வரை நீட்டிக்கப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
₹84,000 கோடியில் மாபெரும் திட்டம்! ஆழ்கடல் கச்சா எண்ணெய் ஆராய்ச்சிக்காக சமுத்திர மந்தன்! மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அமைச்சரவை இந்தியாவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில் ₹84,084 கோடி மதிப்பிலான சமுத்திர மந்தன் என்ற தேசிய கடல்சார் ஆராய்ச்சித் திட்டத்திற்கு தற்போது முறைப்படி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஐபி அதிகாரி கொடூரக் கொலை! ஆம் ஆத்மி முன்னாள் நிர்வாகி தாஹிர் உசேனுக்கு ஆயுள் தண்டனை
கடந்த 2020 ஆம் ஆண்டு வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தின் போது, இந்தியாவின் உள்நாட்டு உளவு அமைப்பான மத்திய நுண்ணறிவுப் பிரிவு (ஐபி) அதிகாரி அங்கித் சர்மாவை கடத்தி கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் நிர்வாகி தாஹிர் உசேன் உட்பட 5 பேருக்கு டெல்லி கர் கர்டூமா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
"இந்த 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!" நாளை பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும்! வானிலை மையம் தகவல்
தமிழகக் கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக, நாளை (ஆகஸ்ட் 1) தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் பல மாவட்டங்களுக்கு ஆபத்து! அசாம் வெள்ளப் பலி 80 ஆக உயர்வு! மத்திய அரசிடம் சிறப்பு நிதி கோரிய முதல்வர்
அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழை மற்றும் தீவிர வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.
பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற்றார் ஜம்மு காஷ்மீர் முதல்வர்! 17 ஆண்டுக்கால திருமண பந்தத்திற்கு முற்றுப்புள்ளி
ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் அவரது பிரிந்து வாழும் மனைவி பாயல் அப்துல்லா ஆகிய இருவருக்கும் பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் விவாகரத்து வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆகஸ்ட் தொடக்கத்தில் பருவமழை வலுப்பெறும்: இந்திய வானிலை ஆய்வு மையம்
இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) கூற்றுப்படி, இந்தியாவின் தென்மேற்குப் பருவமழை ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் வலுப்பெற வாய்ப்புள்ளது.
செப்டம்பரில் இந்தியா வருகிறார் சீனா அதிபர் ஷி ஜின்பிங்: டெல்லி பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க திட்டம்
புதுடெல்லியில் வரும் செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்தியா வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜிக்கு இடைக்காலப் பாதுகாப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம்
டாஸ்மாக் ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சரும் தி.மு.க சட்டமன்ற உறுப்பினருமான வி. செந்தில் பாலாஜி கைது செய்யப்படுவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
அடுத்தடுத்து பெயர் மாற்றம்! முதலமைச்சரின் தாயுமானவர் திட்டப் பெயரும் நீக்கம்; முழு விபரம்
தமிழகத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
உங்கள் பகுதியில் நாளை (ஆகஸ்ட் 1) மின்தடையா? உடனே செக் பண்ணுங்க!
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பை சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மகாராஷ்டிராவில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழப்பு, பலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என அச்சம்
மகாராஷ்டிராவின் பிவண்டியில் உள்ள நான்கு மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று வியாழக்கிழமை இரவு இடிந்து விழுந்தது.
முற்றிலும் இலவச சிகிச்சையா? ஹெபடைடிஸ் பி நோய் குறித்து மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சமீபகாலமாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் இந்தியாவில் ஹெபடைடிஸ் பி நோய்க்கு இலவசமாகச் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்ற செய்தி பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் கூடுதல் கட்டணத்தை மாணவர்களிடமே திருப்பித் தர முடிவு? அரசு எச்சரிக்கையால் பலன்
தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடக் கூடுதலாக வசூலிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை மாணவர்களிடமே திருப்பி அளிக்கப் பல்வேறு தனியார் மருத்துவக் கல்லூரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேற்கு ஆசிய மோதலில் இதுவரை 16 இந்தியர்கள் உயிரிழப்பு: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் ஈரானுக்கும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் இடையே தீவிரமடைந்து வரும் போர் சூழலில் சிக்கி இதுவரை 10 மாலுமிகள் உட்பட 16 இந்தியர்கள் உயிரிழந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கடற்படைக்கு கிடைத்த புதிய பலம்; ஆழ்கடல் மீட்புப் பணிகளுக்கான 'நிபுண்' கப்பல் ஒப்படைப்பு
இந்திய பாதுகாப்பு துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் (HSL) நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரித்த இரண்டாவது டைவிங் சப்போர்ட் கப்பலான'நிபுண்', விசாகப்பட்டினத்தில் இந்தியக் கடற்படையிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடிக்கு எதிராக போலி வீடியோ பரப்பிய விவகாரத்தில் மெட்டா இந்தியா தலைவர் மீது வழக்குப் பதிவு
பிரதமர் நரேந்திர மோடியை மையப்படுத்தி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட விவகாரத்தில், மெட்டா நிறுவனத்தின் இந்தியத் தலைவர் அருண் ஸ்ரீனிவாஸ் மற்றும் சில சமூக வலைதளப் பயனர்கள் மீது ஹைதராபாத் சைபர் கிரைம் காவல்துறையினர் FIR பதிவு செய்துள்ளனர்.
'வந்தே மாதரம்' பாடலை அவமதித்தால் குற்றச் செயலாக கருதும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
தேசிய கௌரவத்திற்கு அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா, 2026-ஐ நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
தமிழ்நாட்டிற்கு 3,500 கன அடி நீர் திறக்க உத்தரவு: மேகதாது விவகாரத்தில் சூடுபிடிக்கும் காவிரி பிரச்சினை
தமிழ்நாட்டிற்கு நாள்தோறும் 3,500 கன அடி நீர் வீதம் அடுத்த 15 நாட்களுக்கு திறந்துவிட வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்திருந்த நிலையில், அதை செயல்படுத்த காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) கர்நாடக அரசுக்கு அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.
ஐஐடி கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்; கைது செய்யாமல் ஐஐடி செய்த காரியம்
ஐஐடி கான்பூரில் பி.டெக் சைபர் செக்யூரிட்டி பாடப்பிரிவில் சேர்க்கை கிடைக்காத விரக்தியில், அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை ஹேக் செய்த மாணவனுக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்காமல், அவருக்கு தனது மையத்தில் இன்டர்ன்ஷிப் பயிற்சி வாய்ப்பு வழங்க ஐஐடி நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.
'எல் நினோ' தாக்கம் ஆய்வு: வெதர்மேன் பிரதீப் ஜான் உட்பட 7 பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழ்நாடு அரசு
தமிழ்நாட்டில் 'எல் நினோ' (El Niño) வானிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் மழைப்பொழிவு குறைவு குறித்த விரிவான ஆய்வு செய்யத் தமிழ்நாடு அரசு புதிய வல்லுநர் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு புகார்: 3.70 லட்சம் மின் இணைப்புகளில் நேரடி ஆய்வு செய்ய மின்வாரியம் உத்தரவு
தமிழகத்தில் கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு ஜூலை மாதத்தில் வீட்டு மின் கட்டணம் வழக்கத்தை விடப் பல மடங்கு உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் மத்தியில் பரவலான புகார்கள் எழுந்தன.
CJP -யின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து ஜந்தர் மந்தரில் மீண்டும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது
எதிர்காலப் போராட்டங்களின்போது போராட்ட தடுப்புகள் அகற்றப்படுவதைத் தடுக்கும் வகையில், டெல்லி காவல்துறை ஜந்தர் மந்தரில் மீண்டும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை புதிய வழக்குப்பதிவு
தமிழகத்தில் 2021 முதல் 2025 வரை டாஸ்மாக் பார் உரிமங்கள், போக்குவரத்து ஒப்பந்தங்கள், மதுபான விநியோகம் மற்றும் டெண்டர் ஒதுக்கீடுகளில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட 7 பேர் மற்றும் சில நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் புதிதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஏர் இந்தியா AI-171 விபத்து: எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சில் கோளாறு இல்லை என மத்திய அரசு விளக்கம்
கடந்த ஆண்டு 260 பேரின் உயிரைப் பறித்த ஏர் இந்தியா AI-171 விமான விபத்து தொடர்பான விசாரணையில், விமானத்தின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சில் (Locking Mechanism) எந்தவித கோளாறும் இல்லை என முதன்மை உபகரண உற்பத்தியாளர் நடத்திய சோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தேசிய கீதம் போல் வந்தே மாதரம் பாடலுக்கும் பாதுகாப்பு: நாடாளுமன்றத்தில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் தேசியச் சின்னங்கள் மற்றும் தேசியப் பாடலின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில், 'தேசியக் கௌரவ அவமதிப்புத் தடுப்பு (திருத்த) மசோதா, 2026 மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா என்றும் அழைக்கப்படும் பொதுத் தேர்வுகள் (முறைகேடு தடுப்பு) திருத்த மசோதா, 2026, மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மக்களவையில் ஜென் Z வார்த்தைகளை பயன்படுத்திய ராகுல் காந்தி; மரபுக்கு எதிரானது என NDA MPகள் கண்டனம்
புதன்கிழமை அன்று மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது உரையில் 'முட்டாள்கள்' மற்றும் 'அந்த்பக்தர்கள் ' என்ற வார்த்தைகளை பயன்படுத்தியதை அடுத்து அமளி ஏற்பட்டது.
தோல்விக்குப் பின் மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கை: கொளத்தூர் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சோதனை எப்படி என்ன நடக்கும்?
கடந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த மனுவின் அடிப்படையில், அங்கு பயன்படுத்தப்பட்ட 14 வாக்குச்சாவடிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) மைக்ரோகண்ட்ரோலர் மற்றும் மெமரி சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன.
சுதந்திர தினத்தன்று பெட்ரோல் குண்டுத் தாக்குதல்களை நடத்த ISI திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது
பஞ்சாபில், பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டெலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) ஆதரவுடனான பயங்கரவாதத் தந்திரங்கள் பெருமளவில் அதிகரிக்கக்கூடும் என உளவுத்துறை அறிக்கைகள் எச்சரித்துள்ளன.
உங்கள் பகுதியில் நாளை (ஜூலை 30) மின்தடையா? உடனே செக் பண்ணுங்க!
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.