இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
விவசாயிகள் போராட்டத்திற்குப் பணிந்தது அரசு! செய்யாறு மேல்மா கிராமத்தில் சிப்காட் நில எடுப்பு அரசாணை ரத்து
டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாக வெளியான தகவல்! அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு குறித்து விளக்கம்
குடை எடுக்க மறந்துடாதீங்க! நாளை கோவை உட்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; வானிலை மையம் அறிக்கை
பாஸ்போர்ட் வாங்குவோருக்கு புதிய விதிகள்! உயர்த்தப்பட்ட கட்டணங்கள் & குழந்தைகளுக்கான முக்கிய மாற்றங்கள்; முழு விபரம்
20 ஆண்டுகளுக்கு முந்தைய கொடூர வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சுரேந்திர கோலி தற்கொலை
இந்தியாவையே உலுக்கிய 2006 ஆம் ஆண்டின் நொய்டா நிதாரி தொடர் சிறுவர்கள் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, பின்னர் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சுரேந்திர கோலி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அரசியல் களத்தில் அண்ணாமலையின் அடுத்த நகர்வு! வி த லீடர்ஸ் அமைப்பின் பொதுச்செயலாளராக கரு.நாகராஜன் நியமனம்
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் சமூக செயல்பாட்டாளருமான கே.அண்ணாமலை நடத்தி வரும் வி த லீடர்ஸ் (We The Leaders) அமைப்பின் கட்டமைப்பை மாநிலம் முழுவதும் வலுப்படுத்தும் நோக்கில் புதிய நிர்வாக நியமனம் செய்யப்பட்டுள்ளது.
உலகில் முதன்முறை: செராமிக் இம்ப்ளான்ட் மூலம் ரோபோடிக் முழங்கால் மாற்று சிகிச்சை; இந்திய மருத்துவர்கள் சாதனை
மருத்துவ உலகின் அதிநவீனத் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து, டெல்லியை சேர்ந்த மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு! செப்டம்பர் 19-ல் விரல் ரேகை சரிபார்ப்பு சிறப்பு முகாம்
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் படி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் செப்டம்பர் 19 ஆம் தேதி விரல் ரேகை சரிபார்ப்பு சிறப்பு முகாம் நடத்தப்படும் என உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர் அறிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் மறைவு; தலைவர்கள் இரங்கல்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் (79) உடல்நலக் குறைவு காரணமாக தனது இல்லத்தில் செப்டம்பர் 17 வியாழக்கிழமை காலை காலமானார்.
அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு அஞ்சமாட்டோம்! 140 கோடி மக்களின் ஆற்றல் பாதுகாப்பே இந்தியாவின் முதன்மை இலக்கு; மத்திய அரசு பதிலடி
ரஷ்யா மற்றும் ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கவும், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் மீது 100 சதவீதம் வரை அபராத சுங்க வரி விதிக்கவும் அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு அதிகாரம் அளிக்கும் புதிய மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
செமிகான் இந்தியா 2026: வளரும் தொழில்நுட்பங்களில் இந்தியா முன்னணியில் இருக்க வேண்டும்! பிரதமர் மோடி சிஇஓக்களிடம் வலியுறுத்தல்
இந்தியாவை உலகளாவிய செமிகண்டக்டர் உற்பத்தி மையமாக மாற்றுவது குறித்து முன்னணி சர்வதேச நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் (சிஇஓக்கள்) பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உயர்நிலை ஆலோசனை நடத்தினார்.
ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் பாகிஸ்தானுக்கு உரிமையில்லை! பாகிஸ்தான்-சீனா எல்லைக் குழுவுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு
இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பாகிஸ்தான்-சீனா எல்லைக் கூட்டு ஆணையத்தின் தொடக்கக் கூட்டத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து, அதனை முற்றிலுமாக நிராகரித்துள்ளது.
மருத்துவப் பொருட்களின் அதிகப்படியான விலை உயர்வு: மத்திய அரசிற்கு மகாராஷ்டிரா FDA கடிதம்
மருத்துவமனைகளில் உள்நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருத்துவ பொருட்களின் விலையை மத்திய அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்று மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பின் (FDA) ஆணையர் துகாராம் முண்டே கோரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தானின் 2 அழகு கிரீம்களுக்கு இந்தியாவில் தடை; ஆபத்தான வேதிப்பொருட்கள் குறித்து மத்திய அரசு எச்சரிக்கை
பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் இரண்டு பிரபல அழகு கிரீம்களுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு வாரியம் (CDSCO) தடை விதித்து பொதுமக்களுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரபிக்கடலில் பதற்றம்: இந்திய போர்க்கப்பல் மீது மோதிய பாகிஸ்தான் கப்பல்
சர்வதேச கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படை போர்க்கப்பல் மீது பாகிஸ்தான் நாட்டின் கடற்படை கப்பல் அதிவேகமாக வந்து மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடியை சந்தித்த 81 வயது பள்ளி நண்பர்: நிலத்தைத் திரும்பக் கொடுத்த பாஜக MLA; என்ன நடந்தது?
மகாராஷ்டிரா மாநிலம் மீரா ரோட் பகுதியைச் சேர்ந்த 81 வயதான அஸ்கர் அலி வோரா என்ற முதியவர், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து முறையிட்டதைத் தொடர்ந்து, பாஜக எம்.எல்.ஏ நரேந்திர மேத்தா ஆக்கிரமித்திருந்த அவரது நிலம் அவரிடமே மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு சோதனை: பின்னணி என்ன?
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் பல கோடி ரூபாய் அளவில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இல்லம் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு (CCIB) காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
லண்டனில் முதல்வரை பார்க்க குவிந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள்: பாதுகாப்பு காரணங்களால் ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சி
லண்டனின் புகழ்பெற்ற 'தி ஷார்ட்' வானளாவிய கட்டடத்திற்கு அருகே தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் கலந்துகொள்ள இருந்த பொது நிகழ்ச்சி, பாதுகாப்புக் காரணங்களைச் சுட்டிக்காட்டி லண்டன் காவல்துறையினரால் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
தமிழக முதல்வர் விஜயின் லண்டன் பயணம் வெற்றி: ரூ.15,300 கோடி முதலீடுகள் ஈர்ப்பு, 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு
தமிழக முதல்வர் விஜய் மேற்கொண்ட லண்டன் அரசுமுறை பயணத்தின் வாயிலாக ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீட்டு முன்மொழிவுகள் மற்றும் உறுதிமொழிகள் பெறப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் தகவல்
தெற்கு உள் கர்நாடகா முதல் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெண்டருக்கு முன்பே முடிந்த பணி? முதலமைச்சர் விஜய் ஆட்சியில் முதல் முறைகேடு புகார்
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தாம்பரம் மாநகராட்சியில் ரூ.45 லட்சம் மதிப்பிலான டெண்டர் நடைமுறையில் பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அறப்போர் இயக்கம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 16) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: திமுக எம்பி ஆ.ராசா மீது 7 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
தமிழக அரசியலில் முன்னணி தலைவர்கள் மீதான சட்டநடவடிக்கைகளும், மேடைப் பேச்சுக்கள் தொடர்பான சட்டப் போராட்டங்களும் தொடர்ச்சியாகப் பெரும் அரசியல் புயலைக் கிளப்பி வருகின்றன.
டெல்லி விமான நிலையத்தில் பெரும் பாதுகாப்பு விதிமீறல்: குடிவரவு சோதனையின்றி ஜெர்மனி சென்ற 3 வெளிநாட்டவர்கள்
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மிகப்பெரிய பாதுகாப்பு மற்றும் நடைமுறை விதிமீறல் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மத்திய அரசு அழுத்தத்தின் எதிரொலி: குழந்தைகள் பாதுகாப்பு குறித்து காவல் துறையிடம் புகாரளிக்க ஒப்புக்கொண்ட மெட்டா நிறுவனம்
சமூக வலைத்தளங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான புகார்களை உடனடியாக உரிய காவல் துறை மற்றும் சட்ட அமலாக்கப் பிரிவினரிடம் அறிக்கையாக அளிக்க மெட்டா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
சென்னையில் உருவாகும் GCC காரிடார்! ₹1,000 கோடி முதலீட்டில் 2,600 புதிய வேலைவாய்ப்புகள்; தமிழ்நாடு அரசு புதிய ஒப்பந்தம்
தமிழ்நாட்டை தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறையில் சர்வதேச அளவில் முன்னிலைப்படுத்தும் நோக்கில், இரண்டு புதிய உலகளாவிய திறன் மையங்களை (GCC) நிறுவுவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் ₹1,000 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
தேசிய பொறியாளர்கள் தினம் 2026: இந்தியாவை உயர்த்திய மாபெரும் பொறியாளர்! வரலாறும் சிறப்பு அம்சங்களும்
இந்தியாவின் புகழ்பெற்ற பொறியாளரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான சர் எம்.விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்தியாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15 ஆம் தேதி தேசிய பொறியாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
காவல்துறை காரில் இருந்து குதித்து அதிர்ச்சி மரணம்! மனைவியின் தலையைத் துண்டித்து ஃபிரிட்ஜில் வைத்த கொடூரன்; அசாமில் பரபரப்பு
அசாம் மாநிலம் கௌஹாத்தியில் மனைவியை கொடூரமாகக் கொலை செய்து, அவரது துண்டிக்கப்பட்ட தலையை ஃபிரிட்ஜில் வைத்த வழக்கில் கைதான ராமானுஜ் கோஸ்வாமி (30) என்ற நபர், நகரும் காவல்துறை வாகனத்தில் இருந்து குதித்து உயிரிழந்தார்.
திருமணம் செய்வதாகக் கூறி மோசடி! முகமது ஷமியின் தம்பி கைஃப் மீது பாய்ந்தது எஃப்ஐஆர்
இந்தியக் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் சகோதரரும் பெங்கால் ரஞ்சி அணி வீரருமான முகமது கைஃப் மீது லக்னோவைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் விஜய் இங்கிலாந்து பயணம்: லண்டனில் ரூ. 11,000 கோடி மெகா முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்து
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக அரசுமுறை பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில், தமிழக தொழில் துறையில் ஒரு மிகப்பெரிய வரலாற்று சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
மணிக்கு 50 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று! நாளை 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை; வானிலை மையம் தகவல்
தமிழ்நாட்டில் நாளை (செப்டம்பர் 15) நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய தீயணைப்பு வீரருக்கு சிறப்புப் பதக்கம்! 180 பேருக்கு அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை (செப்டம்பர் 15) முன்னிட்டு, தமிழகத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 180 காவல்துறை, சீருடை மற்றும் சார்நிலை அலுவலர்களுக்கு முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
உலகத் தலைவர்களுக்கு நடுவே யார் இந்த இந்தியர்? மோடி - ஜின்பிங் அருகே நின்று வைரலான 36 வயது அதிகாரி
டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகிய மூவரும் கைகளைக் கோர்த்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்த புகைப்படம் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது.
ஒரே போன் நம்பரில் 2,000 ஃபேன்சி எண்கள்; 'VAHAN' தளத்தில் நடந்த முறைகேடு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய தலைமை தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரியின் (CAG) மாநில வருவாய் குறித்த அறிக்கையில், வாகனங்களுக்கான ஃபேன்சி எண்கள் ஒதுக்கீட்டில் பெரும் முறைகேடுகள் மற்றும் ரூ.133.15 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனப் படைகள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் திரும்பப் பெறப்பட்டாலும் நீடிக்கும் பதற்றம்; பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை
இந்திய-சீன எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் படைப் பிரிவுகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தனது புதிய ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.
18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு 2026: ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 140 அம்ச பிரகடனம்
இந்தியாவின் தலைமையின் கீழ் புதுடெல்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு, 140 அம்சங்கள் அடங்கிய புதுடெல்லி பிரகடனத்தை ஒருமனதாக ஏற்றுக்கொண்டு நிறைவடைந்தது.
பொது சிவில் சட்டம் (UCC) 2029-க்குள் 21 மாநிலங்களில் அமல்படுத்தப்படும்: மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் 2029 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இடைத்தேர்தல் 2026: நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு; 5 முனை போட்டியால் சூடாகும் தேர்தல் களம்
தமிழ்நாட்டின் மதுராந்தகம், தாராபுரம் மற்றும் புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி (NTK) தனது வேட்பாளர்களை அறிவித்து தனித்து களம் காண்கிறது.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 15) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தின் மின் விநியோக கட்டமைப்பை சீரமைக்கவும், மின் விபத்துகளை தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
NEET-UG இனி கணினி வழித் தேர்வாக மாற்றம்? NTA இயக்குனர் அபிஷேக் சிங் முக்கிய அறிவிப்பு
இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவ நுழைவு தேர்வான NEET-UG, பாரம்பரிய OMR Sheet முறையிலிருந்து கணினி வழி தேர்வாக விரைவில் மாற்றப்படவுள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை (NTA) தெரிவித்துள்ளது.
செப்.19 வரை தமிழகத்தில் கொட்டப்போகும் மழை; வானிலை ஆய்வு மையம் தகவல்
தென்மேற்கு மத்தியப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு விதர்பா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து மன்னார் வளைகுடா வரை, தமிழகப் பகுதிகள் வழியாக ஒரு வளிமண்டலக் காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.
தவெகவுக்கு ஆதரவு இல்லை! தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி என இடதுசாரிகள் அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவையில் காலியாக உள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
சீனாவிற்கு நேரடி எச்சரிக்கை! ஜி ஜின்பிங் எதிரிலேயே பிரதமர் மோடி அதிரடி பேச்சு; பிரிக்ஸ் மாநாட்டில் முக்கிய பிரகடனம்
புதுடெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் நிறைவு அமர்வில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தொழில் துறைக்கு அவசியமான முக்கியத் தாதுக்கள் (Critical Minerals) மற்றும் தொழில்நுட்பங்களை சில நாடுகள் ஆயுதமாக பயன்படுத்துவது உலகளாவிய வளர்ச்சிக்குத் தடையை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.
விதியை ஏற்றுக்கொள்பவராக அல்ல, உருவாக்குபவராக மாற வேண்டும்! 18வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி முன்வைத்த 10 முக்கிய அம்சங்கள்
புதுடெல்லி பாரத மண்டபத்தில் நடைபெற்ற 18வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் திறந்த நிலை அமர்வில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வளர்ந்து வரும் தெற்குலக (Global South) நாடுகள் சர்வதேச அரங்கில் வெறும் விதிகளை ஏற்றுக்கொள்பவராக இல்லாமல், புதிய விதிகளை உருவாக்குபவராக மாற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.