இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
'மாணவர்கள் மீது இனி வழக்கோ கைது நடவடிக்கையோ இல்லை': CJP -மத்திய அரசுடன் எட்டப்பட்ட உடன்பாடு
நாடாளுமன்றத்தில் 'தேர்வு முறைக்கேடு தடுப்புத் திருத்தச் சட்ட மசோதா 2026' மீது இன்று காரசார விவாதம்
இந்த மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! ஆகஸ்ட் 2 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்
கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பத்திற்கான அரசுப் பணி ஆணையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்; அடுத்து என்ன?
நாதுலா கணவாய் வர்த்தகம் மீண்டும் தொடக்கம்: இந்தியா - சீனா எல்லையில் 6 ஆண்டுகளுக்கு பின் புதிய திருப்பம்
இந்தியா - சீனா இடையிலான எல்லை பகுதிகளில் பதற்றத்தை தணிக்கும் நம்பிக்கை கட்டமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சிக்கிமில் அமைந்துள்ள புகழ்பெற்ற நாதுலா கணவாய் வழியிலான எல்லை வர்த்தகம் ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் தொடங்குகிறது.
தரவுத்தளம் எவ்வாறு பாதுகாக்கப்படும்? ஆன்லைன் நீட் தேர்வு குறித்து உச்ச நீதிமன்றம் எழுப்பிய முக்கிய கேள்வி
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (இளங்கலை நீட் தேர்வு) கணினி அடிப்படையிலான ஆன்லைன் முறையில் நடத்துவது குறித்து, மத்திய அரசால் அமைக்கப்பட்ட நந்தன் நிலேகனி தலைமையிலான உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்த பிறகே முடிவெடுக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மெட்டா, X நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர நிதின் கட்கரிக்கு பம்பாய் உயர் நீதிமன்றம் அனுமதி
மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் மற்றும் எக்ஸ் நிறுவனங்களுக்கு எதிராக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒரு உரிமையியல் வழக்கைத் தாக்கல் செய்ய பம்பாய் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
புத்தரின் முதல் போதனை இடம்; யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சாரநாத்; இந்தியாவிற்கு 45வது அங்கீகாரம்
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற பௌத்த கலாச்சாரத் தலமான சாரநாத், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளது.
"மாணவராகவே மாறிட்டாரே!" ஐஐடி சென்னை இயக்குநர் வி.காமகோடி செய்த சுவாரசியமான பிராங்க்! வைரல் வீடியோ
ஐஐடி சென்னையின் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, நிறுவனத்தில் புதிதாக சேர்ந்த முதலாண்டு மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அளிக்கும் வகையில் சுவாரசியமான பிராங்க் ஒன்ற செய்து அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
வினாத்தாள் கசிவு தடுப்பு சட்டத் திருத்த மசோதா 2026: முந்தைய சட்டத்தில் இருந்து எப்படி வேறுபடுகிறது?
இந்தியாவில் நீட், யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி உள்ளிட்ட முக்கியப் போட்டித் தேர்வுகளில் நடக்கும் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுப்பதற்காக, மத்திய அரசு 2024 ஆம் ஆண்டு கொண்டுவந்த சட்டத்தில் மேலும் பல கடுமையான பிரிவுகளை சேர்த்து 'பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா 2026' என்ற புதிய மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்துள்ளது.
இனி ஆன்லைனில் அதிவேக கட்டிட அனுமதி! ஏஐ தொழில்நுட்பத்துடன் புதிய இணையதளம்! முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு
தமிழகத்தில் நகர்ப்புற பகுதிகளில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான அனுமதி வழங்கும் முறையை அதிவேகமாகவும் எளிமையாகவும் மாற்றுவதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஜூலை 31 முதல் சிக்கன் கிடைக்காது! 60,000 கடைகள் அடைப்பு! எடை மோசடிக்கு எதிராக கோழி வணிகர்கள் வேலைநிறுத்தம்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஜூலை 31 ஆம் தேதி முதல் கறிக்கோழி (பிராய்லர் கோழி) விற்பனை செய்யப்பட மாட்டாது என்றும், கோழி வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அதிரடியாக அறிவித்துள்ளது.
E20 எதிர்ப்பு: ஆகஸ்ட் 4 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி டாக்ஸி சங்கத்தினர் பேரணி
டெல்லி டாக்சி, சுற்றுலாப் போக்குவரத்து மற்றும் சுற்றுலா நடத்துநர்கள் சங்கம், ஆகஸ்ட் 4 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி ஒரு எதிர்ப்புப் பேரணியை அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
'வெறும் போராட்டத்திற்காக தடியடி நடத்த முடியாது': மாணவர் போராட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்றம்
அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமை அரசியலமைப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும், வெறும் போராட்டத்திற்காக தடியடி நடத்துவதை நியாயப்படுத்த முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் திங்களன்று வலியுறுத்தியது.
மாணவர் போராட்டக்காரர்கள் மீது RAF வீரர்கள் பெல்லட் துப்பாக்கிகளால் சுட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது
டெல்லியின் கன்னாட் பிளேஸ் பகுதியில், ஜூலை 20 அன்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற பேரணியின் போது, விரைவு அதிரடிப் படை (RAF) வீரர்கள் போராட்டக்காரர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதாக ஒரு விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
NTA தேர்வு முறைகேடு சீர்திருத்தம்: நந்தன் நிலேகணி தலைமையில் உருவாகும் 6 பேர் கொண்ட உயர்நிலைக் குழுவில் இருப்பவர்கள் யார்?
தேசியத் தேர்வு முகமை (NTA) நடத்தும் நுழைவுத் தேர்வுகளில் நிலவும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில் உயர்நிலைப் பணிக்குழு அமைக்கப்படுவதாகப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
'E20 ஜனதா கட்சி': சிஜேபி பாணியில் சமூக வலைத்தளங்களில் உருவெடுத்த புதிய போராட்டம்
காக்ரோச் ஜனதா கட்சியின்(CJP) வைரல் வளர்ச்சி மற்றும் கல்வி அமைச்சரின் ராஜினாமாவை தொடர்ந்து, தற்போது 'ஈ20 ஜனதா கட்சி' என்ற புதிய இணையதள இயக்கம் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக உருவெடுத்துள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் காவல்துறை வன்முறை விவகாரத்தில் புயலைக் கிளப்ப தயாராகும் எதிர்க்கட்சிகள்
வார இறுதி இடைவேளைக்கு பிறகு இன்று மீண்டும் கூடவுள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், நீட் வினாத்தாள் கசிவு, மாணவர்கள் மீதான டெல்லி காவல்துறையின் தடியடி மற்றும் புதிய முறைகேடு தடுப்புச் சட்ட மசோதா உள்ளிட்ட பல விவகாரங்களால் கடும் அமளி நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வு முறைகளில் சீர்திருத்தம் கொண்டுவர நந்தன் நிலேகனி தலைமையில் சிறப்பு பணிக்குழு: பிரதமர் மோடி அறிவிப்பு
இந்தியாவில் தற்போதைய தேர்வு முறைகளில் அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பெரிய அளவிலான சீர்திருத்தங்களை செய்வதற்காக, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
"8 மாவட்டங்களில் சதம் அடிக்கும் வெயில்!" - வெப்பநிலை உயரும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் ஜூலை 30-ஆம் தேதி வரை 8 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலாளரைத் தாக்கிய மு.க.அழகிரி மகள் கயல்விழி மீது வழக்குப் பதிவு செய்தது காவல்துறை; எஸ்பிஐ அறிக்கை வெளியீடு
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி மீது, சென்னை அடையாற்றில் உள்ள எஸ்பிஐ வங்கி அதிகாரியைத் தாக்கி, கெட்ட வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்ததாகக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இன்றைய அரசியல் முற்றிலும் சீரழிந்துவிட்டது! தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சித்தராமையா அறிவிப்பு
கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா, வரும் 2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு கோயில்களில் புதிய கொடிமரம் அமைக்க புதிய விதிமுறைகள்: அறநிலையத்துறை அதிரடி உத்தரவு!
தமிழ்நாடு முழுவதிலும் உள்ள இந்துசமய அறநிலையத்துறைக்குட்பட்ட திருக்கோயில்களில் பழுதடைந்த பழைய கொடிமரங்களை அகற்றிவிட்டு புதிய கொடிமரங்களைப் பிரதிஷ்டை செய்வதற்கும், புதிதாகக் கட்டப்படும் கோயில்களில் கொடிமரங்களை அமைப்பதற்கும் மிகக் கடுமையான புதிய வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
யுத்தகளத்தில் ஏஐ பயன்பாடு! 140 இந்திய ராணுவ வீரர்களுக்கு அதிநவீன சைபர் பாதுகாப்பு பயிற்சி வழங்கியது ஐஐடி
ரஷ்யா - உக்ரைன் உள்ளிட்ட பல்வேறு போர்களிலும் ஏஐ உள்ளிட்ட தொழில்நுட்ப பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், இந்திய ராணுவத்தின் சென்ட்ரல் கமாண்டை சேர்ந்த 140 வீரர்களுக்கு, ஐஐடி கான்பூர் நிறுவனம் தனது சிறப்பு சைபர் பாதுகாப்பு சான்றிதழ் திட்டத்தின் மூலம் பயிற்சி அளித்துள்ளது.
தமிழகத்தில் நாளை (ஜூலை 27) மின் தடை ஏற்படும் இடங்கள்! உடனே செக் பண்ணுங்க
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டுகள் சிறை! ஜூலை 27ல் நாடாளுமன்றத்தில் 'பொதுத் தேர்வுகள் சட்டத் திருத்த மசோதா 2026' தாக்கல்
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்புகள் மற்றும் மாணவர்களின் போராட்டங்களைத் தொடர்ந்து, மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
புதிய மத்திய கல்வி அமைச்சராக பிரஹலாத் ஜோஷி நியமனம்
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு சர்ச்சையைத் தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார்.
மத்திய அரசு அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றதால் போராட்டத்தை திரும்பப் பெற்றது CJP
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையில் நடைபெற்று வந்த நாடு தழுவிய போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
ShakthiSAT செயற்கைக்கோள் திட்டத்திற்குத் தேர்வு; 14 வயது அரசு பள்ளி மாணவி சாதனை
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதான கந்துலா ஜெஸ்ஸி என்ற அரசுப் பள்ளி மாணவி, சர்வதேச விண்வெளித் திட்டமான மிஷன் சக்திசாட் (Mission ShakthiSAT) செயற்கைக்கோள் உருவாக்கக் குழுவில் பங்கேற்கத் தேர்வாகி சாதனை படைத்துள்ளார்.
மாணவர் போராட்டங்களுக்குப் பணிந்தது அரசு! மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் தொடர்பாக நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் நடத்தி வந்த தீவிர போராட்டங்களின் எதிரொலியாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அரசியலில் இருந்து விலகினார் மருத்துவர் ராமதாஸ்! பாமகவை இனி அன்புமணி ராமதாஸ் பார்த்துக் கொள்வார் என அறிவிப்பு
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனருமான மருத்துவர் எஸ்.ராமதாஸ், தனது வயது மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
24 மணி நேரத்தில் 303 மில்லியன் பார்வைகள்! ஐஷோஸ்பீடின் உலக சாதனையை முறியடித்த பிரதமர் மோடியின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ
வினாத்தாள் கசிவைத் தடுப்பது மற்றும் தேர்வு முறைகளை சீரமைப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ, வெறும் 24 மணி நேரத்திற்குள் 303 மில்லியன் (30.3 கோடி) பார்வைகளைக் கடந்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.
பாதுகாப்புத் துறையில் வரலாற்று சாதனை! இந்தியாவின் முதல் 350 கிலோ டர்போஜெட் என்ஜின் தயார்
இந்திய பாதுகாப்புத் துறை மற்றும் விண்வெளித் தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய வரலாற்று சாதனையாக, நாட்டின் முதல் 350 கிலோ திறன் கொண்ட உள்நாட்டு எக்ஸ்பெண்டபிள் டர்போஜெட் என்ஜின் (Expendable Turbojet Engine) வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது.
மத்திய ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு ராஜினாமா! காரணம் என்ன?
மத்திய ரயில்வே மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த ரவ்னீத் சிங் பிட்டு, வெள்ளிக்கிழமை தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நீட் முறைகேடு விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை! 47 அதிகாரிகளை அதிரடியாகப் பணிநீக்கம் செய்தது என்டிஏ! குற்றவியல் நடவடிக்கைக்கும் திட்டம்
நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்கள் தொடர்பாக நாடு முழுவதும் பலத்த எதிர்ப்புகளும் போராட்டங்களும் நிலவி வருகின்றன.
மாணவர்களின் ஆலோசனைகளுக்கு நன்றி! நீட் தேர்வு முறைகேடு குறித்துத் நள்ளிரவில் பிரதமர் மோடி வெளியிட்ட புதிய வீடியோ
டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீவிரப் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நள்ளிரவில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாதுகாப்பு அச்சுறுத்தல்! Bitchat செயலியை முடக்க GitHub-க்கு இந்திய அரசு உத்தரவு; முழு விபரம்
இணைய இணைப்பு, மொபைல் நெட்வொர்க் அல்லது மையக் கட்டுப்பாட்டு சர்வர்கள் எதுவுமின்றி புளூடூத் மெஷ் தொழில்நுட்பம் மூலம் இயங்கும் Bitchat எனும் தகவல்தொடர்பு செயலியின் GitHub இணைப்புகளை உடனடியாக முடக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
வினாத்தாள் கசிவுகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்
தேர்வுத் தாள் கசிவுகளுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மாநிலங்களின் கட்டுப்பாட்டில் மருத்துவக் கல்வி வேண்டும்: அமைச்சர் அருண்ராஜ் வலியுறுத்தல்
நீட் (NEET) மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மருத்துவக் கல்வியை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலேயே கொண்டுவர வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நீதிமன்ற வீடியோக்களை சோஷியல் மீடியாவில் பகிர தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்ற நடவடிக்கைகளின் ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளை உரிய அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதற்கும் பகிர்வதற்கும் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யவேண்டும்: மத்திய அரசிடம் கெடு விதித்த CJP
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்திப் போராடி வரும் 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP), தனது முதன்மை கோரிக்கை குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு சனிக்கிழமை பிற்பகல் வரை கெடு விதித்துள்ளது.
காவிரி மற்றும் மேகதாது விவகாரம்: ஆகஸ்ட் 3-இல் பெங்களூரு செல்கிறார் முதல்வர் விஜய்
காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாகக் கர்நாடக அரசுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தத் தமிழக முதல்வர் விஜய் ஆகஸ்ட் 3-ஆம் தேதி பெங்களூரு செல்லவுள்ளார்.
'ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 21 உயிர்கள் பலி': இந்தியாவில் புதிய உச்சத்தைத் தொட்ட சாலை விபத்து மரணங்கள்
இந்தியாவில் 2025-ஆம் ஆண்டில் நாட்டில் சாலை விபத்து மரணங்கள் 1,83,382 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு மக்களவையில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி அடித்துக் கொலை! சக கைதி செய்த கொடூரம்!
சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கொலை வழக்கில் கைதாகி சிகிச்சை பெற்று வந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கைதியான ஜாகீர் (27) என்பவர் சக கைதியால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீட் போராட்டங்களை குறி வைக்கும் பாகிஸ்தானை தளமாக கொண்ட விஷமிகள்; 480 கணக்குகளை முடக்கிய டெல்லி காவல்துறை
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) வினாத்தாள் கசிவு தொடர்பாக நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்கள் குறித்து போலிச் செய்திகளை பரப்பியதாக கூறப்படும் பாகிஸ்தானை சேர்ந்த சுமார் 480 சமூக ஊடகக் கணக்குகளை டெல்லி காவல்துறை முடக்கியுள்ளது.
டெல்லி போராட்ட குழுவினர் மதியம் 12:30 மணிக்கு கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் மத்திய அமைச்சர்களை சந்திக்கின்றனர்
காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) வெள்ளிக்கிழமை அன்று புது டெல்லியில் உள்ள இந்திய அரசியலமைப்பு மன்றத்தில் மத்திய அமைச்சர்களைச் சந்திக்க உள்ளது.
வானில் எதிரிகளை வேட்டையாடும் இந்திய ஏவுகணை! குஷா ஏவுகணை சோதனை வெற்றி! எஸ்-400க்கு மாற்றாகப் புதிய சாதனை
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ), உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட குஷா நீண்ட தூர மேற்பரப்பில் இருந்து வான்வழி இலக்குகளைத் தாக்கும் ஏவுகணை அமைப்பின் (LRSAM) முதல் பறத்தல் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
மத்திய அரசின் உயர்கல்வித் துறை செயலாளர் வினீத் ஜோஷி மாற்றம்! புதிய செயலாளராக நரேஷ் பால் கங்வார் நியமனம்
நீட் தேர்வு முறைகேடு புகார்கள் தொடர்பாக டெல்லி ஜாந்தர் மந்தர் உள்ளிட்ட இடங்களில் நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரத போராட்டத்தை முடிக்க மத்திய அரசு தந்த உறுதிமொழிகள் இவைதான்
நீட் தேர்வு தாள் கசிவு விவகாரம் மற்றும் தேர்வு துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக குரல் கொடுத்து வந்த பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், மத்திய அரசிடமிருந்து எழுத்துப்பூர்வ உறுதிமொழி பெற்றதைத் தொடர்ந்து தனது 26 நாள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்துள்ளார்.
ஜந்தர் மந்தர் போராட்டம்: டெல்லி பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு வெளியிட்ட அவசர எச்சரிக்கை
வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக டெல்லியின் ஜந்தர் மந்தரில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்களில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொள்ள வேண்டாம் என டெல்லி பல்கலைக்கழகம்(DU) அறிவுறுத்தியுள்ளது.
வினாத்தாள் கசிவுக்கு கடுமையான தண்டனை: நள்ளிரவு வெளியான பிரதமர் மோடியின் வீடியோ செய்தி
டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி (CJP) அமைப்பின் தலைமையிலும் எதிர்க்கட்சிகள் சார்பிலும் வினாத்தாள் கசிவுக்கு எதிராக தீவிரப் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டம் நிறைவு: மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் 26 நாள் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக பங்கேற்ற சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், 26 நாட்களாக மேற்கொண்டு வந்த சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை நிறைவு செய்தார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாணவர்கள் போராட்டத்திற்கு இறங்கி வந்த மத்திய அரசு; எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அழைப்பு
நீட் தேர்வுத்தாள் கசிவு விவகாரத்தில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என மத்திய அரசு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.
மாணவர்களே உஷார்! தேசிய விளையாட்டு உதவித்தொகை அறிவிப்பு உண்மையா? விளையாட்டு அமைச்சகம் மற்றும் PIB விளக்கம்
சமூக வலைதளங்களில் KheloGram என்ற பெயரில் பரப்பப்பட்டு வரும் தேசிய விளையாட்டு உதவித்தொகை தொடர்பான விளம்பரம் முற்றிலும் போலியானது என்று இந்திய மத்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகத்தின் (PIB) உண்மை சரிபார்ப்புப் பிரிவு எச்சரித்துள்ளது.
CJP போராட்டத்திற்கு மத்தியில் தேசிய பாதுகாப்பு சட்டம் (NSA) அமல்படுத்தப்பட்டுள்ளதா? உண்மை என்ன?
X தளத்தில் வைரலான ஒரு பதிவில், 1980 ஆம் ஆண்டின் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ், ஜூலை 19 முதல் அக்டோபர் 18, 2026 வரை மூன்று மாத காலத்திற்கு தடுப்புக் காவல் அதிகாரங்களை பயன்படுத்த டெல்லி காவல்துறை ஆணையருக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளதாகக் கூறப்பட்டது.
'வாழ்க்கையை சீரழித்துவிட்டீர்கள்': பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி
நாடு முழுவதும் போட்டி தேர்வுகளில் தொடர்ந்து நடைபெறும் தேர்வுத்தாள் கசிவு சர்ச்சைகள் மற்றும் மாணவர்களின் போராட்டங்கள் தொடர்பாக, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.
விரைவில் இந்தியாவில் பருவமழை? 10,000 கி.மீ நீளமுள்ள மழை மேகத்தை படம்பிடித்த செயற்கைக்கோள்
வட இந்தியாவிலிருந்து தென் கொரியா வரை 7,000 முதல் 10,000 கி.மீ. வரை நீண்டுள்ள ஒரு பிரம்மாண்டமான பருவமழை பட்டை, செயற்கைக்கோள் படங்களில் பதிவாகியுள்ளது.
சாப்பாட்டு அரிசி விலை கிடுகிடு உயர்வு: பொன்னி, RNR கிலோவுக்கு ரூ.15 வரை திடீர் ஏற்றம்; காரணம் என்ன?
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக அரிசியின் சில்லறை விற்பனை விலை கிலோவுக்கு ₹5 முதல் ₹15 வரை அதிரடியாக உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு வானிலை நிலவரம்: 6 மாவட்டங்களில் சதமடித்த வெயில்; இன்று மழைக்கு வாய்ப்பா?
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக குறைந்திருந்த வெப்பத்தின் தாக்கம் நேற்று மீண்டும் அதிகரித்துள்ளது.
வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு
நீட் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடு தழுவிய அளவில் மாணவர்களின் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் மோதல்: நீட் போராட்டக்காரர்கள் மீதான தடியடி, இணைய சேவை முடக்கம்
டெல்லியின் மத்தியப் பகுதியான கன்னாட் பிளேஸ் மற்றும் ஜந்தர் மந்தர் அருகே நீட் தேர்வு முறைக்கேடுகளுக்கு எதிராகப் போராடி வரும் மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே புதன்கிழமை இரவு கடுமையான மோதல் வெடித்தது.
'தேர்வுத் தாள் கசிவை அரசியல் ஆக்காதீர்கள்': எதிர்க்கட்சிகளுக்கு பாஜக தலைவர் ஜே.பி. நட்டா கடும் கண்டனம்
NEET-UG வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் மாணவர்களின் போராட்டங்கள் தொடர்பாக, அரசியல் கட்சிகள் ஆதாயம் தேட முயலக் கூடாது என மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா கோரிக்கை விடுத்துள்ளார்.
NEET வழக்கு போராட்டம்: உண்ணாவிரதத்தை முடிக்க சோனம் வாங்சுக் அரசுக்கு நிபந்தனை
NEET-UG வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நியாயம் கேட்டு உண்ணாவிரதம் இருந்து வரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், மத்திய அமைச்சர்கள் நேரில் சந்தித்து விடுத்த கோரிக்கையை தொடர்ந்து தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடிக்கச் சம்மதம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்' எனப் பெயர் மாற்றம்
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கவும், பசியின்றி அவர்கள் ஆரோக்கியத்துடன் கல்வியை கற்கவும் 'காலை உணவுத் திட்டம்' ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
அனந்த்நாக்கில் ரோந்துப் படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காவலர் கொல்லப்பட்டார்
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் புதன்கிழமை அன்று, பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுபவர்கள் காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில், ஒரு காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டார்.
போராட்டம் தொடர்பான மனு குறித்து தலைமை நீதிபதியின் சர்ச்சையான கருத்து
ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சியின் தர்ணா போராட்டத்தில், மாணவர் போராட்டக்காரர்கள் மீது காவல்துறை நடத்திய அடக்குமுறையில் தலையிடக் கோரும் மனுவை அவசரமாகப் பட்டியலிட இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் மறுத்துவிட்டார்.
நீட் போராட்டம் குறித்து ராகுல் காந்தி 5 கோரிக்கைகளைப் பட்டியலிட்டுள்ளார்
செவ்வாயன்று நடந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசுக்கு ஐந்து கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.