LOADING...

இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

முன்னாள் முதல்வர் OPS புதிய கட்சியை தொடங்கினார்; டிச.15-ல் முக்கிய ஆலோசனை கூட்டம்

முன்னாள் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (OPS), தான் தலைமையேற்று நடத்தி வந்த அமைப்பை ஒரு அரசியல் கட்சியாக அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளார்.

எத்தியோப்பிய எரிமலை எதிரொலி: ஏர் இந்தியா பல விமானங்களை ரத்து செய்தது

எத்தியோப்பியாவின் ஹேலி குப்பி எரிமலை வெடித்ததால் இந்தியாவில் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளை நோக்கி சாம்பல் மேகங்கள் பரவி வருவதால், விமான போக்குவரத்து தடைபட்டுள்ளது.

25 Nov 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 26) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (நவம்பர் 26) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

வங்க கடலில் புயல் சின்னம்: தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து வலுவடைவதால், புயலாக மாற வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

25 Nov 2025
அயோத்தி

அயோத்தி ராமர் கோவில் கொடியேற்றம் இன்று: இதன் முக்கியத்துவம் என்ன? 

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் முழுமையடைந்ததை அறிவிக்கும் விதமாக, இன்று (நவம்பர் 25) 'துவஜாரோஹணம்' (கொடியேற்றம்) நிகழ்வு கோலாகலமாக நடைபெற உள்ளது.

25 Nov 2025
டெல்லி

எத்தியோப்பிய எரிமலை சாம்பல் டெல்லி வரை பரவியது; விமான போக்குவரத்து பாதுகாப்பு குறித்து DGCA அறிவிப்பு

எத்தியோப்பியாவின் ஹேலி குப்பி எரிமலை சாம்பல் மேகம் டெல்லியை திங்கள்கிழமை இரவு எட்டியதை தொடர்ந்து, விமான போக்குவரத்துத்துறை உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

24 Nov 2025
கொள்ளை

முன்னாள் MLA சுதர்சனம் கொலை வழக்கில் 'பவாரியா' கொள்ளையர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான கே. சுதர்சனம் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட பவாரியா கொள்ளைக் கும்பலை சேர்ந்த மூன்று பேருக்கு சென்னை நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்; 48 மணிநேரத்தில் புயல் உருவாகலாம் என எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புயல் உருவாகும் வாய்ப்பு இருப்பதால், தமிழ்நாட்டில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய அதிகாரி அமுதா எச்சரித்துள்ளார்.

சமர்ப்பிக்கப்பட்ட SIR படிவத்தின் நிலையை ஆன்லைனில் தெரிந்துகொள்வது எப்படி? பிழையிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் சிறப்புத் தீவிரத் திருத்தப் (SIR) பணியின்போது நீங்கள் சமர்ப்பித்த படிவத்தின் நிலை (status) என்ன என்பதை இப்போது எளிதாக ஆன்லைனில் சரிபார்க்க முடியும்.

2026-27 கல்வியாண்டு முதல் பாடத்திட்டம் படிப்படியாக மாற்றம்; அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் 2026-27 ஆம் கல்வியாண்டு முதல் படிப்படியாக மாற்றியமைக்கப்படும் என்று தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

24 Nov 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (நவம்பர் 25) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

24 Nov 2025
கடற்படை

இந்திய கடற்படைக்கு மேலும் பலம்: நீர்மூழ்கிக் கப்பல்களை வேட்டையாடும் திறன் கொண்ட 'INS Mahe' சேர்க்கை

இந்திய கடற்படையின் போர் வலிமையை அதிகரிக்கும் நோக்குடன், ஆழம் குறைந்த பகுதிகளில் நீர்மூழ்கிக் கப்பல்களை வேட்டையாடும் திறன் கொண்ட, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட INS Mahe என்ற போர்க்கப்பல் இன்று கடற்படையில் இணைக்கப்பட்டது.

24 Nov 2025
தென்காசி

தென்காசி அருகே இரண்டு தனியார் பேருந்துகள் மோதல்; 8 பேர் பலி, 28-க்கும் மேற்பட்டோர் காயம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே துரைசாமிபுரத்தில் இன்று காலை இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான கோர சம்பவத்தில் 8 பயணிகள் உயிரிழந்தனர்.

காசி தமிழ்ச் சங்கமம் 4.0: டிசம்பர் 2-இல் துவங்குகிறது

மத்திய அரசின் கல்வி அமைச்சகம் சார்பில், தமிழ்நாடு மற்றும் காசி (வாரணாசி) ஆகிய இரு பண்டைய கலாசார மையங்களுக்கு இடையேயான பிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் காசி தமிழ்ச் சங்கமத்தின் நான்காவது பதிப்பு, வரும் டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்குகிறது.

'சென்யார்' புயல் உருவாக வாய்ப்பு: தென் மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை

வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வானிலை மாற்றங்கள் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் சமீபத்திய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யா காந்த் இன்று பதவியேற்பு; அவரது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகள் ஒரு பார்வை

இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக (CJI) நீதிபதி சூர்யா காந்த் இன்று பதவியேற்க உள்ளார்.

நிலுவை வழக்குகளைக் குறைக்க முன்னுரிமை; புதிதாக பொறுப்பேற்கும் தலைமை நீதிபதி சூர்ய காந்த் வலியுறுத்தல்

இந்தியத் தலைமை நீதிபதியாகப் பதவியேற்க உள்ள நீதிபதி சூர்ய காந்த், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளைச் சமாளிக்கவும், நாடு முழுவதும் வழக்குகளைத் தீர்க்க மத்தியஸ்த முறையை ஊக்குவிக்கவும் ஒரு தெளிவான செயல்திட்டத்தை வெளியிட்டுள்ளார்.

SIR பணியால் 37 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகன் மீண்டும் குடும்பத்துடன் இணைந்த அதிசயம்

மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR - Special Intensive Revision) பணியின் மூலம், ஒரு குடும்பம் 37 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன தங்கள் மகனுடன் மீண்டும் இணைந்த அதிசயம் நடந்துள்ளது.

23 Nov 2025
பீகார்

பீகாரில் தாய்ப்பாலில் யுரேனியம் கண்டுபிடிப்பு: 70% குழந்தைகளுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு என ஆய்வில் கண்டுபிடிப்பு

பீகார் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் தாய்ப்பாலில் யுரேனியம் (U-238) என்ற கதிரியக்கத் தனிமம் அபாயகரமான அளவில் இருப்பது சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் புயல் சின்னம்: தென் தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதையடுத்து, தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 23) நான்கு தென் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

23 Nov 2025
ரேஷன் கடை

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: 2026 ரேஷன் கடைகளுக்கான விடுமுறை பட்டியல் வெளியானது

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் 2026 ஆம் ஆண்டுக்கான விடுமுறைப் பட்டியலை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது.

23 Nov 2025
சபரிமலை

சபரிமலை பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் முக்கிய அறிவிப்பு

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்குத் திருவிழாக்களில் கலந்துகொள்ளும் தமிழக பக்தர்களுக்கு வசதியாகத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளது.

23 Nov 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (நவம்பர் 24) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் ஒரு நம்பகமான ஆர்கெஸ்ட்ரா: 22 நிமிடங்களில் இலக்குகள் அழிக்கப்பட்டது குறித்து ராணுவத் தளபதி பேச்சு

இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, இந்திய ஆயுதப் படைகள் 22 நிமிடங்களில் 9 பயங்கரவாத இலக்குகளை அழித்த ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை ஒரு "நம்பகமான ஆர்க்கெஸ்ட்ரா" என்று வர்ணித்துள்ளார்.

22 Nov 2025
ஈரோடு

சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்; முதல்வர் இரங்கல்

புகழ்பெற்ற தமிழ் இலக்கிய ஆளுமையும், கவிஞருமான ஈரோடு தமிழன்பன் இன்று சனிக்கிழமை (நவம்பர் 22) தனது 92வது வயதில் உடல்நலக் குறைவால் காலமானார்.

22 Nov 2025
தமிழகம்

புதுமைப் பெண் திட்டத்தில் அதிக பயனாளிகள் உள்ள டாப் 5 மாவட்டங்கள் இவைதான்; திட்டக்குழு தகவல்

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி தொடர ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் 'புதுமைப் பெண்' திட்டத்தில் அதிகப் பயனாளிகளைக் கொண்ட முதல் ஐந்து மாவட்டங்களின் பட்டியலை மாநிலத் திட்டக்குழு வெளியிட்டுள்ளது.

சக்கரவியூகம் போன்ற விவாத வலைகள்: முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் கருத்து

இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து கடந்த ஜூலை 2025 இல் ராஜினாமா செய்த பிறகு, ஜக்தீப் தன்கர் முதல் முறையாகப் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இனி கிராஜுவிட்டி பெற 5 ஆண்டுகள் தேவையில்லை; புதிய தொழிலாளர் சட்டத்தில் ஒரு ஆண்டாகக் குறைப்பு

மத்திய அரசு தொழிலாளர் சட்டங்களில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, நிரந்தரமல்லாத நிலையான கால ஊழியர்கள் (Fixed-Term Employees) கிராஜூவிட்டி (Gratuity) பெறுவதற்கான குறைந்தபட்ச சேவைக்காலம் ஐந்து ஆண்டுகளில் இருந்து ஓராண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி சைபர் கிரைம் மோசடி: ஓய்வுபெற்ற நபரிடம் ₹1.47 கோடி அபேஸ்

மும்பையில், ஓய்வுபெற்ற ஒருவரிடம் போலி பங்குச் சந்தை வர்த்தகத் திட்டங்கள் மூலம் ₹1.47 கோடி ரூபாய் மோசடி செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

22 Nov 2025
இந்தியா

100 நாள் வேலைத் திட்டம்: 99.67% தொழிலாளர்களின் ஆதார் விவரங்கள் உறுதி' வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MGNREGA) கீழ் பணியாற்றும் 99.67% தொழிலாளர்களின் ஆதார் விவரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகம், புதுச்சேரிக்கு கனமழை எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சனிக்கிழமை (நவம்பர் 22) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என்றும், அது வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

22 Nov 2025
சென்னை

18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்... சென்னையில் டபுள் டக்கர் பேருந்துகள் விரைவில் அறிமுகம்

சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னை மாநகரில் மீண்டும் இரட்டை அடுக்கு கொண்ட டபுள் டக்கர் (Double Decker) பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாநகரப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மருத்துவ சாதனங்களில் பாகுபாடு கூடாது: மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு உத்தரவு

இந்திய மருத்துவச் சாதனங்களுக்கான உச்ச கண்காணிப்பு அமைப்பான மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO), மருத்துவமனைகள் இறக்குமதி செய்யப்பட்ட சாதனங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதைக் கண்டித்து ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

21 Nov 2025
சென்னை

மூன்று பேரும் குற்றவாளிகள்தான்; பவாரியா கும்பல் வழக்கில் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கில் தொடர்புடைய பவாரியா கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் குற்றவாளிகள் எனச் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) தீர்ப்பளித்துள்ளது.

துபாய் விமானக் கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜாஸ் போர் விமானம் விபத்து; விமானி உயிரிழப்பு

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற துபாய் விமானக் கண்காட்சி 2025 இல் சாகசப் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய விமானப்படையின் தேஜாஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானது.

21 Nov 2025
பெங்களூர்

பெங்களூரு ஓலா ஊழியர் தற்கொலை வழக்கு CCB விசாரணைக்கு மாற்றம்

பெங்களூருவில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் பணியாற்றிய பொறியாளர் கே. அரவிந்த் கண்ணன் தற்கொலை வழக்கை, பெங்களூரு நகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு (Central Crime Branch - CCB) விசாரணைக்கு மாற்றியுள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு; குரூப் 1 முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 மற்றும் குரூப் 1ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டுள்ளது.

21 Nov 2025
கல்வி

டைம்ஸ் உயர்கல்வி தரவரிசையில் அதிக கல்வி நிறுவனங்கள் இடம் பெற்ற நாடாக உருவெடுத்தது இந்தியா

டைம்ஸ் உயர் கல்வி (THE) வெளியிட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான பல்துறை அறிவியல் தரவரிசையில் (Interdisciplinary Science Rankings - ISR) 88 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.

புல்வாமா பாணியில் செங்கோட்டை தாக்குதல்? ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி தகவல்

டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடந்த சமீபத்திய கார் குண்டுவெடிப்புத் தாக்குதல், புல்வாமா தாக்குதலின் பாணியைப் போலவே உள்ளது என்றும், இது ஜெய்ஷ்-இ-முகமது (Jaish-e-Mohammad) பயங்கரவாத அமைப்பின் தெளிவான அடையாளம் என்றும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் கே.ஜே.எஸ். தில்லான் தெரிவித்துள்ளார்.

21 Nov 2025
டெல்லி

டெல்லி குண்டு வெடிப்பு: சிரியா தொடர்புகள், துருக்கி சந்திப்பு உள்ளிட்ட வெளிநாட்டுத் பின்னணி அம்பலம்

டெல்லியில் 15 பேர் பலியான குண்டு வெடிப்புக்கு பின்னால் உள்ள வெளிநாட்டு தீவிரவாத வலையமைப்பை தேசிய புலனாய்வு முகமை (NIA) கண்டறிந்துள்ளது.

டெல்லி பள்ளிகளில் வெளிப்புற செயல்பாடுகளுக்குத் தடை: காற்று மாசுபாட்டால் உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லியில் காற்று மாசுபாடு கடுமையான நிலையை எட்டியுள்ளதால், உச்ச நீதிமன்றத்தின் நேரடி உத்தரவைத் தொடர்ந்து, டெல்லி அரசுப் பள்ளிகளில் வெளிப்புற விளையாட்டுகள் மற்றும் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

21 Nov 2025
டெல்லி

டெல்லியைத் தொடரும் நச்சுப் புகைமூட்டம்: தொடர்ந்து 7 ஆவது நாளாக 'மிக மோசமான' காற்றுத் தரம்

டெல்லியில் காற்றுத் தரம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) காலை சற்று மேம்பட்டிருந்தாலும், தொடர்ந்து ஏழாவது நாளாக 'மிக மோசமான' (Very Poor) பிரிவிலேயே நீடிப்பதால், குடியிருப்பாளர்கள் அடர்ந்த புகைமூட்டத்தால் மூச்சுத் திணறலுக்கு ஆளாகியுள்ளனர்.

21 Nov 2025
கொல்கத்தா

வங்கதேசத்தில் நிலநடுக்கம்: கொல்கத்தாவில் உணரப்பட்ட நில அதிர்வு

பங்களாதேஷ் தலைநகர் டாக்கா அருகே இன்று (வெள்ளிக்கிழமை) ரிக்டர் அளவில் 5.5 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

21 Nov 2025
ஜி20 மாநாடு

வரலாற்றுச் சிறப்புமிக்க ஜி20 மாநாட்டில் பங்கேற்க தென்னாபிரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி

டெல்லியில் இருந்து தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணத்தை இன்று தொடங்கினார்.

நாட்டின் 80% மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு இல்லை: ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் உள்ள மாற்றுத்திறனாளிகளில் 80% க்கும் அதிகமானோர் இன்னும் மருத்துவக் காப்பீடு பெறவில்லை என்றும், விண்ணப்பிப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் சட்டப்பூர்வ பாதுகாப்புகள் இருந்தபோதிலும் முறையான விளக்கம் இன்றி நிராகரிக்கப்படுவதாகவும் புதிய ஆய்வறிக்கை ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு; கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவு

2025-2026 நடப்பு கல்வியாண்டுக்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களைத் திருத்தம் செய்ய வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தமிழகப் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

வில்லங்கச் சான்றிதழ் போலவே இனி பட்டா வரலாற்றையும் அறியலாம்; தமிழக அரசின் புதிய திட்டம்

சொத்து தொடர்பான உரிமையாளர் விவரங்களை மக்கள் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில், வில்லங்கச் சான்றிதழைப் (Encumbrance Certificate - EC) போலவே பட்டாவின் முழுமையான வரலாற்றை அறிந்துகொள்ளும் புதிய ஆன்லைன் நடைமுறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

21 Nov 2025
கர்நாடகா

கர்நாடக காங்கிரஸில் புதிய சர்ச்சை: டெல்லி விரைந்த DKS ஆதரவு எம்.எல்.ஏக்கள்

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முதல்வர் பதவியை சுழற்சி முறையில் பகிர வேண்டும் என வலியுறுத்தி, துணை முதல்வர் டி.கே. சிவகுமாரின்(DKS) ஆதரவு எம்.எல்.ஏக்கள் 10 பேர் டெல்லிக்கு விரைந்துள்ளனர்.

21 Nov 2025
டெல்லி

டெல்லி மாணவர் தற்கொலை: தலைமை ஆசிரியை உட்பட 4 பேர் சஸ்பெண்ட்

டெல்லியில் உள்ள செயின்ட் கொலம்பா பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, பள்ளி ஊழியர்கள் நான்கு பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு ஊதியம்; தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்குச் சாதகமான முக்கிய அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

உங்களுக்கு வரும் அமலாக்கத்துறை சம்மன் உண்மையா, போலியா? ஆன்லைன் மோசடியைத் தவிர்க்கும் வழிகள்

அமலாக்கத்துறை (Enforcement Directorate) பெயரில் போலியான சம்மன்கள் புழக்கத்தில் விடப்பட்டு, மோசடி மற்றும் மிரட்டிப் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், சம்மனின் உண்மைத் தன்மையைச் சரிபார்க்கும் வழிமுறைகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகம் எச்சரிக்கையுடன் வெளியிட்டுள்ளது.

20 Nov 2025
திரிபுரா

திரிபுராவில் பயணிகள் ரயில் மற்றும் பிக்அப் வேன் மோதிக்கொண்ட விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது

திரிபுராவின் தலாய் மாவட்டத்தில் உள்ள எஸ்.கே. பாரா ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை பிற்பகல் பயணிகள் ரயில் பிக்அப் வேன் மீது மோதியதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

20 Nov 2025
பெங்களூர்

பெங்களூரில் அதிர்ச்சி: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போல் வேடமிட்டு ₹7.11 கோடி கொள்ளை

இந்தியாவின் லூவர் கொள்ளைக்கு ஒப்பாகக் கருதப்படும் துணிகரச் சம்பவத்தில், பெங்களூரில் புதன்கிழமை (நவம்பர் 19) ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அதிகாரிகள் எனப் போலியாக வேடமிட்ட ஒரு கும்பல், ₹7.11 கோடி ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

20 Nov 2025
விஜய்

சேலத்தில் விஜயின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு; காவல்துறை சொன்ன காரணம் என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், டிசம்பர் 4 ஆம் தேதி சேலத்தில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக கட்சி நிர்வாகிகளால் கோரப்பட்ட மூன்று இடங்களுக்கான அனுமதியை சேலம் மாநகரக் காவல்துறை மறுத்துள்ளது.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒரே மாதிரியான தேசிய கொள்கை தேவை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

இந்தியாவில் உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வெளிப்படையாகவும், திறமையாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், தேசிய கொள்கை (National Policy) மற்றும் சீரான விதிகளை உருவாக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

20 Nov 2025
டெல்லி

தனிமையில் வாடும் கைதிகளுக்காக பசு சிகிச்சை அறிமுகம்; திகார் சிறையில் புதிய முயற்சி

டெல்லியில் உள்ள திகார் சிறைச்சாலையில், கைதிகளின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், தனிமையைக் கையாள உதவவும் புதிய முயற்சியாக பசு சிகிச்சை (Cow Therapy) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

20 Nov 2025
கடற்படை

பாகிஸ்தானுக்கு சீனாவில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் கிடைத்தது குறித்து இந்திய கடற்படை தலைவர் கூறியது என்ன?

சீனா பாகிஸ்தானுக்கு வழங்கும் மேம்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்களை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக இந்திய கடற்படை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

2007, 2008 குண்டுவெடிப்புகளிலும் அல் ஃபலா பல்கலைக்கழகத்தின் தொடர்பு; வெளியான அதிர்ச்சித் தகவல்

அல் ஃபலா பல்கலைக்கழகத்தை (Al Falah University) மையமாகக் கொண்ட பயங்கரவாத நெட்வொர்க் குறித்து டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு தாக்கல் செய்த இரகசிய அறிக்கை, அந்த கல்வி நிறுவனத்தைச் சுற்றியுள்ள ஆழமான அச்சுறுத்தலை வெளிப்படுத்தியுள்ளது.