இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
மம்தா பானர்ஜி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது
மேற்கு வங்கத்தின் முன்னாள் முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் (TMC) தலைவருமான மம்தா பானர்ஜி, தான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
மும்பை கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை, விமானச் சேவைகள் பாதிப்பு; தொடரும் ரெட் அலர்ட்
மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அதிதீவிர கனமழை காரணமாக மக்கள் வாழ்க்கை முடங்கியுள்ளது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: கொங்கு மண்டலத்தில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, தற்பொழுது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
58 இன்ஜினியரிங் கல்லூரிகளை மூட ஏஐசிடிஇ உத்தரவு; தமிழகத்தில் எத்தனை கல்லூரிகள் மூடல்?
இந்தியாவில் உள்ள தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களைக் கண்காணித்து முறைப்படுத்தும் தேசிய சட்டப்பூர்வ அமைப்பான அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏஐசிடிஇ), நடப்பு 2025-26 கல்வியாண்டில் நாடு முழுவதும் உள்ள 58 பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளைப் படிப்படியாக மூட அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐஐஎம் கோழிக்கோடு வரலாற்று சாதனை: எம்பிஏ பாடப்பிரிவில் 66% மாணவிகள் சேர்க்கை
இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐஐஎம் கோழிக்கோடு, நடப்பு 2026-28 கல்வியாண்டிற்கான தனது முதன்மை எம்பிஏ படிப்பில் சாதனை அளவாக 66 சதவீத மாணவிகளை சேர்த்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது.
உலக பாஸ்போர்ட் இன்டெக்ஸ் 2026: இந்தியா 125 ஆவது இடத்திற்கு சரிவு; உலகளாவிய தரவரிசைப் பட்டியல் வெளியீடு
சர்வதேச குடியுரிமை மற்றும் ஆலோசனை நிறுவனமான குளோபல் சிட்டிசன் சொல்யூஷன்ஸ் வெளியிட்டுள்ள 5 ஆவது வருடாந்திர குளோபல் பாஸ்போர்ட் இன்டெக்ஸ் (GPI) 2026 தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் உலக அளவில் 125 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி: இன்ஸ்டாகிராமில் உள்ள குழந்தை வன்கொடுமை விளம்பரங்களை உடனடியாக நீக்க உத்தரவு
பிரபல சமூக ஊடக நிறுவனமான மெட்டா குழுமத்தின் கீழ் இயங்கும் இன்ஸ்டாகிராம் செயலியில், குழந்தை பாலியல் வன்கொடுமை மற்றும் சுரண்டல் தொடர்பான கட்டண விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நாளை (ஜூலை 6) மின்தடை ஏற்படும் பகுதிகள்: மின்சார வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்!
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேட் இன் இந்தியா செமிகண்டக்டர் சிப்கள் மூலம் ஏஐ புரட்சி: ஜப்பானுக்கு முதல் ஏற்றுமதி தொடக்கம்
இந்தியாவை உலகளாவிய தொழில்நுட்ப மையமாக மாற்றும் விக்சித் பாரத் இலக்கின் ஒரு முக்கிய பகுதியாக, குஜராத்தின் சானந்த் நகரில் அமைக்கப்பட்டுள்ள சிஜி செமி நிறுவனத்தின் புதிய செமிகண்டக்டர் சிப் பேக்கேஜிங் மற்றும் டெஸ்டிங் ஆலையைப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூலை 4) திறந்து வைத்தார்.
இயற்கை எரிவாயு விநியோகக் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்; மத்திய அரசு உத்தரவு
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) வரத்து மீண்டும் வழக்கம் போல் சீராகத் தொடங்கியுள்ளதால், எரிவாயு விநியோகஸ்தர்கள் மீது விதிக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற்றுள்ளதாகப் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் சனிக்கிழமை (ஜூலை 4) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
அடுத்த வாரம் ஆஸ்திரேலியா செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி: மெல்போர்ன் உச்சிமாநாட்டில் அந்தோனி அல்பானிஸை சந்திக்கிறார்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் ஆஸ்திரேலியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் சனிக்கிழமை (ஜூலை 4) அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஜூலை 10 வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் அலெர்ட்
வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, தற்பொழுது ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கடலோரப் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று நிலைகொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20இல் தொடக்கம்: கிரண் ரிஜிஜு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்திய நாடாளுமன்றத்தின் இந்த ஆண்டுக்கான மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சனிக்கிழமை (ஜூலை 4) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஜெய்ஷ், லஷ்கர் அமைப்புகளை சேர்ந்த 23 நபர்களை பயங்கரவாதிகளாக அறிவித்தது மத்திய அரசு; UAPA சட்டத்தின் கீழ் நடவடிக்கை
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையின் ஒரு பகுதியாக, பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் 23 நபர்களைச் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் பயங்கரவாதிகளாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சார்பதிவாளர், வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் செல்ல தேவையில்லை: இணையவழி பட்டா மாறுதல் நடைமுறையை எளிமைப்படுத்தியது தமிழக அரசு
தமிழ்நாட்டில் நிலம் வாங்குபவர்கள் பட்டா மாறுதல் செய்வதற்காக இனி சார்பதிவாளர் அலுவலகத்திற்கோ அல்லது வட்டாட்சியர் அலுவலகத்திற்கோ நேரில் சென்று அலையத் தேவையில்லை என்ற மிக முக்கியமான அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
பிஎம் வித்யாலக்ஷ்மி திட்டம்: பிணை இல்லாமல் 7.5 லட்சம் ரூபாய் வரை கல்விக்கடன் பெறுவது எப்படி?
இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உயர் கல்வி பயில விரும்பும் மாணவர்களின் நிதிச் சுமையை குறைப்பதற்காக மத்திய அரசு பிஎம் வித்யாலக்ஷ்மி என்ற புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
மியான்மர் சைபர் கிரைம் கும்பலிடம் சிக்கி கிரிப்டோகரன்சி மோசடி செய்யக் கட்டாயப்படுத்தப்படும் 25 மகாராஷ்டிர இளைஞர்கள்; பகீர் தகவல்
அதிக சம்பளத்துடன் கூடிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற போலி விளம்பரங்களை நம்பி ஏமாந்த மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த 25 இளைஞர்கள், தாய்லாந்து-மியான்மர் எல்லையில் உள்ள கொடூரமான சைபர் மோசடி முகாம்களில் தற்பொழுது சிக்கித் தவித்து வருகின்றனர்.
பணமோசடிக்கு பிறகு அயோத்தி ராமர் கோயிலில் கடுமையாக்கப்பட்ட நெறிமுறைகள் என்ன?
கோயில் நன்கொடையிலிருந்து பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் திருடப்பட்டதைத் தொடர்ந்து, அயோத்தியில் உள்ள ராமர் கோயில் தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கியுள்ளது.
அமர்நாத் யாத்திரை தொடங்கியது, 20,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் புனிதத் தலத்திற்கு புறப்பட்டனர்
ஆண்டுதோறும்ஒரு முக்கிய இந்து புனித யாத்திரையான அமர்நாத் யாத்திரை, ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் மற்றும் பால்தால் அடிவார முகாம்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் புறப்படுவதோடு தொடங்கியுள்ளது.
ஆதார் செயலி இப்போது 6 மாதங்களுக்கு இலவச மின்னஞ்சல் அப்டேட்களை வழங்குகிறது
இந்திய தனி அடையாள ஆணையம் (UIDAI), பயனர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சேர்க்க அல்லது புதுப்பிக்க அனுமதிக்கும் ஒரு புதிய அம்சத்தை ஆதார் செயலியில் அறிமுகப்படுத்தியுள்ளது.
திடீரென சிங்கப்பூர் மருத்துவமனையில் எ.வ.வேலு அனுமதி; லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் வழக்கறிஞர்கள் கொடுத்த கடிதம்
தமிழக நெடுஞ்சாலைத்துறையில் சாலைகளை அமைக்காமலேயே, அமைத்ததாகக் கூறி பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் பேரில், திமுக மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு (DVAC) போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேக் இன் இந்தியா திட்டத்தில் ஆகாஷ் தரங் மற்றும் எம்பி-ஏடிஜிஎம் ஏவுகணை கொள்முதலுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்
இந்திய ஆயுதப் படைகளை அதிநவீன தொழில்நுட்பங்களுடன் உலகத் தரத்திற்கு நவீனப்படுத்துவதற்காக, 52,000 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு உள்கட்டமைப்பு மற்றும் ஆயுதக் கொள்முதல் திட்டங்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
40 ஆண்டுகளில் முதல்முறை: நியூசிலாந்திற்கு பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் ஜூலை 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நியூசிலாந்திற்குப் பயணம் செய்யவுள்ள தகவலை அந்நாட்டுப் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ல் தொடக்கம்: முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்
நாடாளுமன்றத்தின் இந்த ஆண்டுக்கான மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 20ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெற வாய்ப்புள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது
தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் நிகழ்வாக, முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி தற்போதைய திமுக எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓடும்போதே ஈ-ரிக்சாக்களை முடக்கும் ஆபத்தான சீன ஆப்ஸ்களுக்கு மத்திய அரசு தடை! பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம்
இந்தியாவில் தற்பொழுது எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், ஓடிக்கொண்டிருக்கும் ஈ-ரிக்சாக்களை மொபைல் ஆப் மூலமாக தூரத்திலிருந்தே அணைத்து முடக்கும் அதிர்ச்சி தரும் புதிய மோசடி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.
இந்தியாவின் முதல் கடல்சார் விமான நிலையம்: மும்பை அருகே கடலுக்குள் அமைகிறது பிரம்மாண்ட 'Offshore' ஏர்போர்ட்
இந்திய ஏவியேஷன் துறையில் ஒரு மிகப்பெரிய உள்கட்டமைப்புப் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், நாட்டின் முதலாவது கடல்சார் விமான நிலையத்தை (Offshore Airport) அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளை மகாராஷ்டிர மாநில அரசு தொடங்கியுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை(ஜூலை 4) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
சென்னை டூ திருச்சி இனி 3 மணி நேரம் தான்! 20,000 கோடியில் புதிய எக்ஸ்பிரஸ்பேவே திட்டம்
சென்னையிலிருந்து திருச்சிக்கு தற்போதைய பயண நேரத்தை பாதியாக குறைக்கும் வகையில், 300 கிலோமீட்டர் நீளமுள்ள புதிய அதிவேக பசுமை வழிச்சாலை திட்டத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகளை இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
கரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர் விஜய்: 41 குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை
தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்துள்ள நிலையில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வரும் ஜூலை 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அயோத்தி விமான நிலையத்திற்கு அதிகபட்ச நிதி ஒதுக்கீடு! உடான் திட்டத்தை 2037 வரை நீட்டிக்க பிரதமர் மோடி திட்டம்
மத்திய அரசின் மிக முக்கியமான பிராந்திய விமான இணைப்புத் திட்டமான உடான் (UDAN) தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இத்திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 10,169 கோடி ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.
INS திரிகண்ட் கப்பலின் மின்னல் வேக ஆபரேஷன்! 21 மாலுமிகளை கடற்கொள்ளையர்களிடம் இருந்து பத்திரமாக மீட்டது இந்திய கடற்படை
சர்வதேச கடல் பகுதியில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய கடற்படை மீண்டும் ஒருமுறை தனது உறுதிப்பாட்டை நிரூபித்துள்ளது.
துணை மருத்துவப் படிப்புகள் 2026: விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு! கட்டண விவரங்கள் வெளியீடு
தமிழ்நாட்டில் பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படும் பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப கால அவகாசத்தை நீட்டித்து மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியா - ஜப்பான் மாநாடு 2026: ஜப்பான் பிரதமர் சனாயே டகாயிச்சியை 'தங்கை' என அழைத்த பிரதமர் மோடி
உலகளவில் பல்வேறு அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்கள் நிகழ்ந்து வரும் சூழலில், இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான நட்புறவை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்லும் 'இந்தியா - ஜப்பான் வருடாந்திர மாநாடு' டெல்லியில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.
அண்ணாமலையின் 'வி தி லீடர்ஸ்' அமைப்பின் முதல் மாநாடு: ஜூலை 12-ல் பொள்ளாச்சியில் பிரம்மாண்ட ஏற்பாடு
பாஜகவிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகி, 'வி தி லீடர்ஸ்' என்ற புதிய அமைப்பை தொடங்கி நடத்தி வரும் அண்ணாமலை, தனது இயக்கத்தின் முதல் பிரம்மாண்ட மாநாடு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு: இந்தியாவில் இருந்து செல்லும் முக்கிய அரசியல் தலைவர்கள் யார்?
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் ஜூலை 4 முதல் 9 ஆம் தேதி வரை ஈரானில் நடைபெற உள்ளன.
தவெக-வில் ஐக்கியமான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்; எடப்பாடிக்கு எதிராக செங்கோட்டையன் ஆவேச பேச்சு!
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட அரசியல் விழாவில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றி கழகத்தில் முறைப்படி இணைந்தனர்.