LOADING...

இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

02 Dec 2025
பிரதமர்

சேவா தீர்த்: ஆளுநர் மாளிகையை தொடர்ந்து பெயர் மாற்றம் செய்யப்படுகிறது பிரதமர் அலுவலகம்

மத்திய விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும், இந்திய பிரதமர் அலுவலகத்தின் (PMO) புதிய வளாகத்திற்கு 'சேவா தீர்த்த்' (Seva Teerth) என்று அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது.

டிசம்பர் 9, 10-ம் தேதிகளில் நாடாளுமன்றத்தில் 'SIR' குறித்து விவாதம் நடைபெறும்

இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில், எதிர்க்கட்சிகளின் தொடர் வலியுறுத்தலை அடுத்து, வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision - SIR) குறித்த விவாதம், டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

'Sanchar Sathi' செயலியை நீக்கலாம்': எதிர்ப்புகளுக்குப் பிறகு மத்திய அமைச்சர் தகவல்

எதிர்க்கட்சிகள் தனியுரிமை கவலைகளை எழுப்பி, சர்ச்சைக்குரிய பெகாசஸ் ஸ்பைவேருடன் ஒப்பிட்டுப் பேசியதை அடுத்து, Sanchar Sathi செயலி பயனர்களுக்கு விருப்பமானது என்று மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெளிவுபடுத்தியுள்ளார்.

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' அறிவிப்பு; காற்றழுத்த தாழ்வு எப்போது கரையை கடக்கும்?

'டிட்வா' புயலின் எச்சம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டுள்ள நிலையில், அதன் தாக்கத்தால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

8வது ஊதியக் குழு: அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும் திட்டம் இல்லை

மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழுவின் பணிகள் தொடங்கவிருக்கும் நிலையில், அகவிலைப்படியை (Dearness Allowance) அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும் எந்த திட்டமும் தற்போது பரிசீலனையில் இல்லை என்று மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

02 Dec 2025
இண்டிகோ

'மனித வெடிகுண்டு' மிரட்டல்: குவைத் - ஹைதராபாத் இண்டிகோ விமானம் திருப்பி விடப்பட்டது

குவைத்திலிருந்து ஹைதராபாத் நோக்கி வந்த இண்டிகோ விமானத்தில் 'மனித வெடிகுண்டு' இருப்பதாக அச்சுறுத்தல் மின்னஞ்சல் வந்ததைத் தொடர்ந்து, அந்த விமானம் இன்று மும்பைக்கு திருப்பி விடப்பட்டது.

02 Dec 2025
கனமழை

சென்னையை புரட்டிப்போட்ட கனமழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

'டிட்வா' புயலின் தாக்கத்தால், சென்னையில் கடந்த முன்தினம் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

டிஜிட்டல் கைது மோசடி: நாடு முழுவதும் விசாரிக்க சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் முழு அதிகாரம்

இந்தியாவில் அதிவேகமாகப் பரவி வரும் டிஜிட்டல் கைது மோசடி வழக்குகளைக் கையாள்வதற்கு உடனடியாக தேசிய அளவில் கவனம் தேவை என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

01 Dec 2025
விடுமுறை

சென்னை, திருவள்ளூருக்கு இன்று ரெட் அலர்ட்: 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

வங்கக்கடலில் உருவான டித்வா புயல் வலுவிழந்த போதிலும், அதன் தாக்கம் காரணமாகச் சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

01 Dec 2025
கோவை

மனைவியைக் கொன்று, சடலத்துடன் செல்ஃபி எடுத்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பதிவிட்ட கணவன்; கோவையில் பகீர்

தமிழ்நாட்டில் அதிர்ச்சிக்குள்ளாக்கும் சம்பவமாக, கோவையில் பிரிந்து வாழ்ந்த மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கணவன், அவரது சடலத்துடன் செல்ஃபி புகைப்படம் எடுத்து அதனைத் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பதிவேற்றம் செய்துள்ளார்.

01 Dec 2025
ரஷ்யா

புடின் வருகை: ரஷ்யாவிடமிருந்து போர் விமானங்கள், ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வாங்க இந்தியா திட்டம்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்த வாரம் இந்தியாவுக்கு வரவிருக்கும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் போர் விமானங்கள் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வாங்குவது குறித்து இந்தியா விவாதிக்கத் திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 2025: எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளான திங்கட்கிழமை (டிசம்பர் 1), இரு அவைகளிலும் உறுப்பினர்கள் எழுப்பிய அமளி காரணமாக, மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டும் ஒத்திவைக்கப்பட்டன.

01 Dec 2025
தமிழகம்

அனைத்துக் கல்லூரிகளிலும் பேரிடர் மேலாண்மை குழு அமைக்க உயர்கல்வித் துறை உத்தரவு

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், புயல் மற்றும் இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் வகையில், அனைத்து வகைக் கல்லூரிகளிலும் பேரிடர் மேலாண்மைக் குழுவை அமைக்குமாறு உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

01 Dec 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (டிசம்பர் 2) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

30 Nov 2025
இந்தியா

2080க்குள் இந்தியாவின் மக்கள் தொகை 190 கோடியை நெருங்கி நிலைபெறும்: ஆய்வில் தகவல்

இந்தியாவில் மேம்பட்ட கல்வி, பெண் கல்வியறிவு மற்றும் குடும்பக் கட்டுப்பாடு நடவடிக்கைகள் காரணமாக, நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் வெகுவாகக் குறைந்து வருகிறது.

வேகம் குறைந்தது; டித்வா புயலின் தற்போதைய நிலை என்ன? வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள டிட்வா புயலின் நகரும் வேகம் குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

30 Nov 2025
எய்ட்ஸ்

உலக எய்ட்ஸ் நாள் 2025: புதிய தொற்று இல்லாத தமிழ்நாடு உருவாக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

ஆண்டுதோறும் டிசம்பர் 1 ஆம் தேதி அனுசரிக்கப்படும் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 'புதிய எச்ஐவி தொற்று இல்லாத தமிழ்நாடு' என்ற இலக்கை அடையத் தமிழக மக்களுக்குச் செய்தி வெளியிட்டுள்ளார்.

30 Nov 2025
இந்தியா

வாடகை ஒப்பந்த விதிகள் 2025: கட்டாய ஆன்லைன் பதிவு, வைப்புத் தொகைக்கு வரம்பு; அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை

இந்தியாவில் வீடுகளை வாடகைக்கு விடும் செயல்முறையை எளிதாக்கவும், வெளிப்படைத்தன்மையுடனும் ஒழுங்கமைக்கப்பட்டதாகவும் மாற்றும் வகையில் மத்திய அரசு புதிய வாடகை விதிகள் 2025ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

SIR திருத்தப் பணிக்கான கால அவகாசம் 7 நாட்கள் நீட்டிப்பு; டிசம்பர் 16இல் வரைவுப் பட்டியல் வெளியீடு

இந்தியத் தேர்தல் ஆணையம், 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிக்கான (SIR) கால அட்டவணையை 7 நாட்கள் நீட்டித்துள்ளது.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் பக்தர்கள் மலையேற தடை

திருவண்ணாமலையில் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ள கார்த்திகை தீபத் திருவிழாவில், பக்தர்கள் அண்ணாமலையார் மலை மீது ஏறிச் சென்று தீபத்தைக் காண மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

30 Nov 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 1) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (டிசம்பர் 1) தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தின் உடுமலைப்பேட்டையில் மட்டும் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இனி ராஜ் பவன் கிடையாது; மக்கள் பவன் என ஆளுநர் மாளிகை பெயர் மாற்றம்

மத்திய உள்துறை அமைச்சகம் ராஜ் பவன் என்று இருந்த ஆளுநர் மாளிகைகளின் பெயரை மக்கள் பவன் (லோக் பவன்) என மாற்ற ஒப்புதல் வழங்கியுள்ளது.

30 Nov 2025
ரோபோ

எந்தப் பயிற்சியும் இன்றிச் செயல்படும் ரோபோ ஆசிரியரை உருவாக்கி அரசு பள்ளி மாணவர் சாதனை

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாஹரைச் சேர்ந்த 17 வயது மாணவர் ஆதித்யா, எவ்விதமான ரோபாட்டிக்ஸ் பயிற்சியும் பெறாமல், முழுமையாகச் செயல்படக்கூடிய சோபியா (Sophia) என்ற ரோபோ ஆசிரியரை உருவாக்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

SIR பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்குவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இந்தியத் தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலைத் தயாரித்தல் மற்றும் திருத்துதல் பணிகளில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLOs) மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான (BLO Supervisors) ஊதியத்தை இரு மடங்காக உயர்த்தி அறிவித்துள்ளது.

30 Nov 2025
தமிழகம்

டிட்வா புயல் கோரத் தாண்டவம்: டெல்டாவில் 1.35 லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின

டிட்வா புயலின் தாக்கத்தால் தமிழ்நாடு முழுவதும் கனமழை கொட்டி வருகிறது. டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் பெய்த தொடர் மழையால் சுமார் 1.35 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

29 Nov 2025
சென்னை

டித்வா புயல் எச்சரிக்கை: சென்னையில் 75 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீச வாய்ப்பு

வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் டித்வா புயல் சென்னையை நெருங்கும்போது, புயலாகவே நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

29 Nov 2025
விடுமுறை

மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: டிசம்பர் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு; இந்த 2 மாவட்டங்களில் மட்டும்!

தமிழகத்தில் டிசம்பர் 3 ஆம் தேதியன்று திருவண்ணாமலை மற்றும் கன்னியாகுமரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்: குளிர்காலக் கூட்டத்தொடரில் அனைவருக்கும் செவிசாய்ப்போம் என மத்திய அமைச்சர் உறுதி

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் திங்கட்கிழமை (டிசம்பர் 1) தொடங்கவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

29 Nov 2025
சபரிமலை

ஐயப்ப பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: விமானங்களில் இருமுடி எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டிக் கொண்டு செல்லும் பக்தர்களுக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.

நெருங்கும் டித்வா புயல்: 9 துறைமுகங்களில் 4ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள டித்வா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதன் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் 4ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

29 Nov 2025
சிபிஎஸ்இ

மனப்பாடம் செய்து தேர்வெழுதும் முறைக்கு டாட்டா.. 2026 பொதுத்தேர்வு கேள்வித்தாள் அமைப்பில் பெரிய மாற்றம் செய்தது சிபிஎஸ்இ

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), 2026 ஆம் ஆண்டுப் பொதுத்தேர்வுக்கான கேள்வித்தாள் அமைப்பில் ஒரு பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது.

29 Nov 2025
பாமக

பாமக யாருக்குச் சொந்தம்? ராமதாஸ் கடிதத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில்

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தற்போதையத் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே நீடித்து வந்த மோதலில், இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு முக்கிய முடிவை வெளியிட்டுள்ளது.

டித்வா புயல் எதிரொலி; தமிழகத்தில் பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள டித்வா புயல் வட தமிழகக் கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை (நவம்பர் 29) ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

28 Nov 2025
கோவா

உலகின் மிக உயரமான ராமர் சிலையை கோவாவில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்

தெற்கு கோவாவில் உள்ள ஸ்ரீ சமஸ்தான கோகர்ண ஜீவோட்டம் மடத்தில் 77 அடி உயர ராமரின் வெண்கல சிலையை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

28 Nov 2025
விடுமுறை

டித்வா புயல் எச்சரிக்கை: கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள டித்வா புயல் வட தமிழகம் மற்றும் புதுச்சேரிக் கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதால், சனிக்கிழமை (நவம்பர் 29) கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மகாதீபம்: டிசம்பர் 2 முதல் கனரக மற்றும் இலகுரக வாகனங்களுக்குத் தடை; மாற்றுப் பாதைகள் அறிவிப்பு

திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், டிசம்பர் 2, 2025 காலை 8:00 மணி முதல் டிசம்பர் 5, 2025 காலை 6:00 மணி வரை திருவண்ணாமலை வழியாக கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் வந்து செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை; இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தென் தமிழகம் மற்றும் உள் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒரே நாடு, ஒரே தேர்தல்: சட்டமன்றங்களின் கால மாற்றங்களுக்கு சட்ட ஆணையம் ஆதரவு 

ஒரே நேரத்தில் தேர்தல் மசோதாக்களை ஆய்வு செய்யும் கூட்டு நாடாளுமன்ற குழுவிடம் (JPC) 23வது சட்ட ஆணையம், மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களின் ஐந்தாண்டு காலத்தை நாடாளுமன்றம் திருத்த முடியும் என்று தெரிவித்துள்ளது.