பயங்கரவாதம்: செய்தி
23 May 2025
உலக வங்கிபாகிஸ்தான் பொருளாதாரத்தைத் தாக்கும் இந்தியா, உலக வங்கி மற்றும் FATF அமைப்பை அணுக போவதாக தகவல்
கடன்கள் மற்றும் பிணை எடுப்புகளை பெரிதும் நம்பியுள்ள பாகிஸ்தானின் பொருளாதாரத்தை இறுக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
22 May 2025
பிரதமர் மோடி"என் நரம்புகளில் ரத்தம் அல்ல, சிந்தூர் ஓடுகிறது: பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் விலை கொடுத்தே ஆகும் என்று பிரதமர் உறுதி
ராஜஸ்தானின் பிகானரில் உள்ள தேஷ்னோக்கில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
22 May 2025
ஜம்மு காஷ்மீர்காஷ்மீரில் பயங்கரவாதிகளை சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர்; தொடரும் துப்பாக்கிச் சண்டை
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சத்ரூவின் சிங்போரா பகுதியில் வியாழக்கிழமை காலை பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
21 May 2025
லஷ்கர்-இ-தொய்பாலாகூரில் நடந்த விபத்தில் LeT இணை நிறுவனர் படுகாயம்; ISI பாதுகாப்பில் மருத்துவமனையில் சிகிச்சை
தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) இணை நிறுவனர் அமீர் ஹம்சா, லாகூரில் உள்ள தனது வீட்டில் நடந்த விபத்தில் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
21 May 2025
இந்தியாபாகிஸ்தான் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் உலகநாடுகளுக்கு இன்று கிளம்புகிறது MPக்கள் குழு
பாகிஸ்தானின் பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்த சர்வதேச தலைவர்களை சந்திக்கும் ஏழு நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுக்களில் முதலாவது குழு, இன்று புறப்படும்.
20 May 2025
இந்தியாஅமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல்
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் "இடைநிறுத்தப்பட்டுள்ளது" என்றும் "முடிவடையவில்லை" என்றும் இஸ்ரேலுக்கான இந்திய தூதர் ஜே.பி. சிங் வலியுறுத்தியுள்ளார்.
18 May 2025
லஷ்கர்-இ-தொய்பா2005 பெங்களூரு, 2006 நாக்பூர் தாக்குதல்கள் உட்பட இந்தியாவின் 3 பெரிய தாக்குதல்களுக்குக் காரணமான லஷ்கர் பயங்கரவாதி கொலை
இந்தியாவில் பல உயர்மட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா(LeT) அமைப்பின் உயர்மட்டத் தலைவரான சைஃபுல்லா காலித், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கொல்லப்பட்டதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
18 May 2025
இந்தியாஇந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ராஜதந்திர MPக்கள் குழுவில் யார் எங்கு செல்கிறார்கள்; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும்!
கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த ஒரு கொடிய பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய அரசாங்கம் ஏழு அனைத்துக் கட்சிக் குழுக்களை அறிவித்துள்ளது.
18 May 2025
பாகிஸ்தான்"நாங்களும் அனுப்புவோம்": இந்தியாவைத் தொடர்ந்து, பாகிஸ்தானும் மற்ற நாடுகளுக்கு எம்.பி.க்களை அனுப்பவுள்ளதாம்!
பாகிஸ்தானில் இருந்து வெளிப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான தனது போராட்டத்தை முன்னிலைப்படுத்த, உலகம் முழுவதும் ஏழு அனைத்துக் கட்சிக் குழுக்களை அனுப்புவதாக இந்திய அரசாங்கம் கூறிய சில மணி நேரங்களிலேயே முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ-சர்தாரி தலைமையிலான குழுவை முக்கிய வெளிநாட்டு தலைநகரங்களுக்கு அனுப்பும் திட்டத்தை இஸ்லாமாபாத் வெளியிட்டது.
17 May 2025
இந்தியாபாகிஸ்தானை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்துவோம்; அசாதுதீன் ஒவைசி உறுதி
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க, வெளிநாடுகளுக்குச் செல்லும் மத்திய அரசின் அனைத்துக் கட்சிக் குழுவில் ஏஐஎம்ஐஎம் தலைவரும் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசியும் இணைந்துள்ளார்.
17 May 2025
ஆபரேஷன் சிந்தூர்பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, பயங்கரவாதத்திற்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை என்ற நாட்டின் வலுவான செய்தியை உலக அரங்கில் வலுப்படுத்த அரசு அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவை அமைத்துள்ளது.
16 May 2025
ராஜ்நாத் சிங்பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழிக்க வெறும் 23 நிமிடங்கள் தான்; ராஜ்நாத் சிங் அதிரடி
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பூஜ் விமானப்படை நிலையத்திற்கு வருகை தந்தபோது, இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியைப் பாராட்டினார்.
15 May 2025
ஜம்மு காஷ்மீர்கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி அமீர் நசீர் வானி, தனது தாயார் வீடியோ காலில் உணர்ச்சிவசப்பட்டு விடுத்த வேண்டுகோளை மீறி சரணடைய மறுப்பதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
15 May 2025
ஜம்மு காஷ்மீர்ஜம்மு-காஷ்மீரின் அவந்திபோராவில் என்கவுண்டர்: தீவிரவாதிகளை தேடித்தேடி வேட்டையாடும் இந்திய ராணுவம்
ஜம்மு-காஷ்மீரின் அவந்திபோராவில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
15 May 2025
மணிப்பூர்இந்தியா-மியான்மர் எல்லையில் பதற்றம்: 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
இந்தியா-மியான்மர் எல்லை பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 10 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
14 May 2025
சைபர் பாதுகாப்புபாகிஸ்தான் ஹேக்கர்களின் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் சைபர் தாக்குதல்களை இந்தியா எவ்வாறு முறியடித்தது?
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானால் திட்டமிடப்பட்ட இந்திய வலைத்தளங்களில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான சைபர் தாக்குதல்களை மகாராஷ்டிரா காவல்துறை கண்டறிந்துள்ளது.
13 May 2025
ஜம்மு காஷ்மீர்Operation Keller: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 லஷ்கர் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
செவ்வாய்க்கிழமை ஷோபியனின் ஜின்பதர் கெல்லர் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் குறைந்தது மூன்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
13 May 2025
ஜம்மு காஷ்மீர்ஜம்மு-காஷ்மீரின் ஷோபியனில் லஷ்கர் தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே மோதல்; ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீரின் சோபியான் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் நான்கு பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
10 May 2025
எஸ்.ஜெய்சங்கர்தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் எந்த சமரசமும் கிடையாது; போர் நிறுத்தத்திற்குப் பின் இந்தியா உறுதி
இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ பதட்டங்களைத் தணிக்கும் நோக்கில், இன்று மாலை 5:00 மணி முதல் நிலம், வான் மற்றும் கடல் வழியாக அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டன.
10 May 2025
இந்தியாஎந்தவொரு தீவிரவாத தாக்குதலும் இனி போராக கருதப்படும்; இந்தியாவின் கொள்கையில் மாற்றம் என தகவல்
ஒரு பெரிய கொள்கை மாற்றமாக, இந்தியாவுக்கு எதிராக எதிர்காலத்தில் நடத்தப்படும் எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் போர் நடவடிக்கையாக கருதப்படும் என்று இந்திய அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
09 May 2025
ஜம்மு காஷ்மீர்எல்லை தாண்ட முயன்ற பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 7 பேர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர்
ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) ஒரு பெரிய ஊடுருவல் முயற்சியை முறியடித்தது.
08 May 2025
அல் கொய்தா'ஒவ்வொரு அநீதிக்கும் பழிவாங்குவோம்': ஆபரேஷன் சிந்தூருக்கு பின்னர் அல்-கொய்தா மிரட்டல்
'ஆபரேஷன் சிந்தூர்' திட்டத்தின் கீழ் ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய வான்வழித் தாக்குதல்களைக் கண்டித்து, அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பானது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
08 May 2025
ஆபரேஷன் சிந்தூர்தொடரும் ஆபரேஷன் சிந்தூர்: இந்திய தாக்குதலில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் எனத்தகவல்
புதன்கிழமை பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதலில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவித்த அதே வேளையில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, 'ஆபரேஷன் சிந்தூர்' இன்னும் தொடர்வதாக வலியுறுத்தினார்.
07 May 2025
பாகிஸ்தான் ராணுவம்'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பிறகு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் ராணுவத்திற்கு அங்கீகாரம் அளித்துள்ளது
பாகிஸ்தான் மண்ணிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் (PoK) பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய சர்ஜிக்கல் தாக்குதல்களுக்குப் பிறகு, "தொடர்புடைய நடவடிக்கைகளை" மேற்கொள்ள பாகிஸ்தான் தனது படைகளுக்கு முழு அதிகாரம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
07 May 2025
ஆபரேஷன் சிந்தூர்ஆபரேஷன் சிந்தூர்: ரபேல் விமானங்கள், ஸ்கால்ப் ஏவுகணைகள், ஹேமர் குண்டுகள் பயன்படுத்தி பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல்
பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை "ஆபரேஷன் சிந்தூர்" என்ற ராணுவ நடவடிக்கையின் கீழ் தாக்கியது.
07 May 2025
ஆபரேஷன் சிந்தூர்லெஃப்ட்-ல இண்டிகேட்டர், ரைட் திருப்பு! போர்கால ஒத்திகை என ஏமாற்றி பாகிஸ்தான் மீது இந்தியாவின் அதிரடி தாக்குதல் -Op Sindoor
பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததற்குப் பிறகு, பிரதமர் மோடியின் நேரடி கண்காணிப்பில் இந்திய ராணுவம் நடத்திய "ஆபரேஷன் சிந்தூர்" தாக்குதல், பாகிஸ்தானை திடுக்கிட செய்துள்ளது.
07 May 2025
இந்தியாபாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதல்களுக்கு உலகத் தலைவர்கள் ரியாக்ஷன் என்ன?
Operation Sindoor: கடந்த மாதம் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த ஒரு பயங்கர தாக்குதலைத் தொடர்ந்து, புதன்கிழமை அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கியது.
07 May 2025
இந்திய ராணுவம்Op Sindhoor: இந்திய ராணுவம் தாக்கிய 9 பயங்கரவாத இலக்குகள் எவை? எப்படி?
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது இலக்குகள் மீது இந்தியா இன்று அதிகாலை ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
07 May 2025
பிரதமர் மோடிபிரதமர் மோடியின் நேரடி கண்காணிப்பில், தீவிரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்', 9 தீவிரவாத முகாம்கள் அழிப்பு
பஹல்காமில் ஏப்ரல் 22-ஆம் தேதி நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர், பெரும்பாலும் சுற்றுலா பயணிகள், உயிரிழந்த சம்பவத்திற்கு பதிலடியாக, இந்திய ராணுவம் "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரிடப்பட்ட ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
05 May 2025
ஜம்மு காஷ்மீர்ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக சந்தேகிக்கப்பட்ட நபர் தப்பிச் செல்லும்போது நீரில் மூழ்கி மரணம்
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படும் இம்தியாஸ் அகமது மக்ரே என்ற நபர், பாதுகாப்புப் படையினரின் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க முயன்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
05 May 2025
ஜம்மு காஷ்மீர்ஜம்மு சிறைகளில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த வாய்ப்பு எனத்தகவல்
ஜம்மு காஷ்மீரில் உள்ள சிறைச்சாலைகள் மீது பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
05 May 2025
ஐநா சபைஇந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் பதற்றம்: இன்று கூடுகிறது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் மற்றும் இந்திய அரசின் கடுமையான பதிலடி நடவடிக்கைகளை அடுத்து, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் (UNSC) கூட்டம் இன்று நடைபெறுகிறது.
02 May 2025
இந்திய ராணுவம்எல்லை கோடு அருகே பாகிஸ்தான் தொடர்ந்து 8வது நாளாக போர்நிறுத்த மீறல்; இந்திய ராணுவம் பதிலடி
ஜம்மு காஷ்மீரின் குப்வாரா, பாரமுல்லா, பூஞ்ச், நௌஷேரா மற்றும் அக்னூர் பகுதிகளில் பாகிஸ்தான் துருப்புக்கள் தொடர்ந்து எட்டாவது இரவும் கட்டுப்பாட்டுக் கோட்டில் போர் நிறுத்த மீறல்களைத் தொடர்ந்தன.
01 May 2025
பஹல்காம்பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: NIA 3D மேப்பிங் நுட்பத்தைப் பயன்படுத்துகிறது; அது என்ன?
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் வழக்கு தொடர்பான விசாரணையை மேற்கொள்ளும் தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) சாட்சிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில் சம்பவ இடத்தில் முப்பரிமாண அல்லது 3D மேப்பிங் செய்தது.
01 May 2025
பஹல்காம்பஹல்காம் தாக்குதலுக்கு ஏப்ரல் 22 நண்பகலை தேர்வு செய்தது எதற்காக? மேலும் 3 டூரிஸ்ட் இடங்களும் இலக்காக இருந்ததாம்!
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காம் பைசாரன் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
30 Apr 2025
இந்திய ராணுவம்எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அடியில் பாகிஸ்தான் சுரங்கப்பாதைகள் தோண்டியதா? ராணுவம் விசாரணை
பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவவும், துருப்புக்களை நிலைநிறுத்தவும், இந்தியாவுடனான கட்டுப்பாட்டுக் கோட்டில் (LoC) ஆழமான நிலத்தடி சுரங்கப்பாதைகளை பாகிஸ்தான் அமைத்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
30 Apr 2025
பாகிஸ்தான்"இந்தியாவில் தான் வாக்களித்தேன், ஆதார் கூட இருக்கு": 17 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பி அனுப்பப்படும் பாகிஸ்தானியர்
பாகிஸ்தானியரான ஒசாமா, இந்தியத் தேர்தல்களில் வாக்களித்ததாகவும், இந்திய வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டு வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
30 Apr 2025
பஹல்காம்பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியம் மாற்றி அமைப்பு
மத்திய அரசாங்கம் தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தை (NSAB) மறுசீரமைத்துள்ளது, அதன் புதிய தலைவராக முன்னாள் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (RAW) தலைவர் அலோக் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
30 Apr 2025
பஹல்காம்பஹல்காம் தாக்குதலுக்குக் காரணமானவர்களைத் தண்டிக்க இந்தியாவுக்கு 'முழு ஆதரவு' வழங்கிய இங்கிலாந்து
பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தப் பிரச்சினை நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டதால், பிராந்தியத்தில் பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் அமைதி மற்றும் பேச்சுவார்த்தைக்கு இங்கிலாந்து அரசாங்கம் அழைப்பு விடுத்தது.
29 Apr 2025
பிரதமர் மோடி'எப்போது, எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் என்பதை படைகள் சுதந்திரமாக முடிவு செய்யலாம்': அதிரடி முடிவெடுத்த பிரதமர்
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த வாரம் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ஆயுதப்படைகளுக்கு பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை "முழு செயல்பாட்டு சுதந்திரத்தை" வழங்கியதாக அரசாங்க வட்டாரங்கள் ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளன.
29 Apr 2025
ஜம்மு காஷ்மீர்பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, 48 சுற்றுலா தலங்களை மூடியது ஜம்மு-காஷ்மீர் அரசு
ஜம்மு -காஷ்மீர் அரசு அந்தப் பகுதியில் உள்ள 87 சுற்றுலாத் தலங்களில் உள்ள கிட்டத்தட்ட 48 சுற்றுலா தலங்களை தற்காலிகமாக மூடியுள்ளது.
29 Apr 2025
ஐநா சபை'பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதில் ஆச்சரியமில்லை': ஐ.நா.வில் இந்தியா
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதை அடுத்து, ஐக்கிய நாடுகள் சபையில் (ஐ.நா.) பாகிஸ்தானை இந்தியா விமர்சித்துள்ளது.
28 Apr 2025
பாகிஸ்தான்காலக்கெடுவுக்குப் பிறகும் இந்தியாவை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்களுக்கு என்ன நடக்கும்?
பாகிஸ்தானுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளால் பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக இந்தியா பல கடுமையான ராஜதந்திர நடவடிக்கைகளை எடுத்தது.
28 Apr 2025
விஜய் ஆண்டனிபஹல்காம் தொடர்பான அறிக்கையை தவறாக புரிந்து கொண்டவர்களுக்கு விளக்கம்; புதிய அறிக்கை வெளியிட்ட விஜய் ஆண்டனி
ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் பரவலான சீற்றத்தைத் தூண்டியுள்ளது.
28 Apr 2025
சீனாபஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானின் 'நேர்மையான விசாரணை' கோரிக்கைக்கு ஆதரவளிப்பதாக சீனா உறுதி
பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, புது டெல்லி மற்றும் இஸ்லாமாபாத் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சீனா வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.