LOADING...

அமெரிக்கா: செய்தி

ரஷ்யாவிடம் தொடர்ந்து எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிப்பாராம்; அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கட்கிழமை (அக்டோபர் 20) அன்று, ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவதைத் தொடர்ந்தால், இந்தியா தொடர்ந்து அதிகபட்ச வரியைச் செலுத்த வேண்டியிருக்கும் என்று கடுமையாக எச்சரித்தார்.

அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக ஒரே நாளில் 2500 இடங்களில் போராட்டங்கள்

அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் நியூயார்க் உட்படப் பல நகரங்களில் சனிக்கிழமை (அக்டோபர் 18) அன்று, டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றம், பாதுகாப்பு மற்றும் கல்வி ஆகிய கொள்கைகளுக்கு எதிராக மிகப்பெரிய 'ராஜாவே வேண்டாம்' (No Kings) பேரணிகள் நடைபெற்றன.

இந்திய ரஷ்ய எண்ணெய் வாங்குவதை குறைந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் பேச்சு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய எண்ணெயை வாங்குவதை முழுமையாக நிறுத்துவதாகத் தனக்கு உறுதியளித்ததாக மீண்டும் கூறியுள்ளார்.

இரண்டு வாரங்களில் ஜி ஜின்பிங்கைச் சந்திக்க டிரம்ப் உறுதி: வர்த்தகப் பதற்றம் தணியுமா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இன்னும் இரண்டு வாரங்களில் சந்திப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

17 Oct 2025
விசா

நவம்பர் 1 முதல் புதிய விதி அமல்: US விசா நேர்காணலை வெளிநாடுகளில் திட்டமிடுவது கடினம்

அமெரிக்க குடியேற்ற (Immigrant) மற்றும் குடியேற்றமற்ற (Non-Immigrant) விசா நேர்காணல்களை விண்ணப்பதாரர்கள் இனி தங்கள் சொந்த நாட்டில் அல்லது நிரந்தர வசிப்பிடத்தில் மட்டுமே எதிர்கொள்ள முடியும் என அமெரிக்க வெளியுறவுத்துறை புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

17 Oct 2025
ஹமாஸ்

ஹமாஸ் ஆதரவு செய்திகளால் அமெரிக்கா, கனடா விமான நிலையங்கள் ஹேக் செய்யப்பட்டன 

செவ்வாயன்று கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள பல விமான நிலையங்கள் ஹேக் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

17 Oct 2025
விசா

2028 வரை அமெரிக்காவின் கிரீன் கார்டு விசாவிற்கான லாட்டரியில் இந்தியர்கள் பங்கேற்க முடியாது; காரணம் என்ன?

அமெரிக்காவின் பன்முகத்தன்மை விசா (DV) லாட்டரி திட்டத்தில் இந்திய நாட்டினருக்குக் குறைந்தபட்சம் 2028 ஆம் ஆண்டு வரை பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

17 Oct 2025
விசா

H-1B விசா கட்டண உயர்வு: டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக அமெரிக்க வர்த்தக சம்மேளனம் வழக்கு

அமெரிக்காவில் புதிய H-1B விசாக்களுக்கான கட்டணத்தை $100,000 ஆக (இந்திய மதிப்பில் சுமார் 83 லட்சம் ரூபாய்) அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் உயர்த்தியதற்கு எதிராக, அமெரிக்க வர்த்தக சம்மேளனம் (U.S. Chamber of Commerce) நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

காசா போர் ஓவர், அடுத்தது ரஷ்யா-உக்ரைன் போர்; புடினை நேரில் சந்திக்கவுள்ளார் டிரம்ப்

உக்ரைனில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக, புடாபெஸ்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார்.

16 Oct 2025
ரஷ்யா

ரஷ்ய எண்ணெய் குறித்து மோடி-டிரம்ப் இடையே தொலைபேசி உரையாடல்கள் ஏதும் நடக்கவில்லை: MEA

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தனக்கு தொலைபேசியில் உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதை இந்தியா முற்றிலுமாக நிராகரித்துள்ளது.

16 Oct 2025
ரஷ்யா

ரஷ்யாவிடமிருந்து எண்ணெயை வாங்குவதை இந்தியா குறைப்பதாக டிரம்ப் கூறியதற்கு மத்திய அரசு பதில் இதுதான்

பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதற்கு இந்தியா பதிலளித்துள்ளது.

16 Oct 2025
ரஷ்யா

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என மோடி உறுதி அளித்ததாக டிரம்ப் தகவல்; சீனாவிற்கும் நெருக்கடி தரப்போகிறாராம்!

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி தனக்கு உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் அமெரிக்கா இல்லை; இந்தியாவின் இடம் எது தெரியுமா?

ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2025 இன் படி, இரண்டு தசாப்தங்களில் முதல் முறையாக அமெரிக்காவின் பாஸ்போர்ட் உலகின் முதல் 10 சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளில் இருந்து வெளியேறியுள்ளது.

15 Oct 2025
கைது

இந்திய வம்சாவளி பிரபல அமெரிக்க ஆய்வாளர் ஆஷ்லே டெல்லிஸ் கைது: என்ன காரணம்?

இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல அமெரிக்க ஆய்வாளரும், தெற்காசிய கொள்கைக்கான நீண்டகால ஆலோசகருமான ஆஷ்லே டெல்லிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

14 Oct 2025
காசா

காசா அமைதி உச்சி மாநாட்டில் "நல்ல நண்பர்" மோடிக்கு புகழாரம் தந்த டிரம்ப்

எகிப்தில் நடந்த காசா அமைதி உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோரை பாராட்டியதுடன், மத்தியஸ்த பேச்சுவார்த்தைகள் மூலம் பிராந்தியத்தில் அமைதியை கொண்டு வந்ததற்காக 'பெருமை' தெரிவித்தார்.

13 Oct 2025
உலகம்

தவறான தீர்ப்பால் அமெரிக்காவில் 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய அமெரிக்கர் விடுதலை; உடனே கைதுசெய்த குடியேற்றத்துறை

செய்யாத கொலைக் குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் கழித்த சுபு எனும் சுப்ரமணியம் வேதம் (64), விடுதலையான உடனேயே அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவால் (ICE) கைது செய்யப்பட்டார்.

நோபல் பரிசு உங்களுக்கு தான்: போர் நிறுத்த எதிரொலியாக டிரம்ப்பை புகழ்ந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு திங்களன்று இஸ்ரேலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

13 Oct 2025
இஸ்ரேல்

காசா போர் முடிந்தது: இஸ்ரேலுக்கு புறப்பட்டார் அதிபர் டொனால்ட் டிரம்ப்

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்திய பின்னர் முதல்முறையாக இஸ்ரேல் புறப்பட்டார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்.

11 Oct 2025
இந்தியா

இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக பொறுப்பேற்கும் செர்ஜியோ கோர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் சந்திப்பு

இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராகப் பதவியேற்கவுள்ள செர்ஜியோ கோர், வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கரை சனிக்கிழமை (அக்டோபர் 11) புது டெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தில் (MEA) சந்தித்தார்.

சீனாவுக்கு கூடுதலாக 100% வரி விதித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போரில் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) சீன இறக்குமதிகள் மீது கூடுதலாக 100 சதவீத வரியை அறிவித்துள்ளார்.

அமைதியை விட அரசியலுக்கு முக்கியத்துவம்; நோபல் குழு மீது அமெரிக்கா கடும் விமர்சனம்

2025 ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சிச் செயற்பாட்டாளரான மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டதை அடுத்து, அமெரிக்காவின் வெள்ளை மாளிகை நோபல் குழுவின் முடிவை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) கடுமையாக விமர்சித்துள்ளது.

10 Oct 2025
நார்வே

டிரம்ப் மிகவும் எதிர்பார்த்த நோபல் பரிசு மிஸ் ஆனது! அவரது ரியாக்ஷனை எதிர்கொள்ள தயார் நிலையில் நார்வே

2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு டொனால்ட் டிரம்பிற்கு கிடைக்கவில்லை.

'ஒபாமா அமைதிக்கான நோபல் பரிசை எதுமே செய்யாமல் வென்றார்': புலம்பும் டிரம்ப்

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது முன்னோடி பராக் ஒபாமாவின் வெற்றியை தகுதியற்றது என்று கூறினார்.

பாகிஸ்தானுக்கு புதிய ஏவுகணைகள் எதுவும் வழங்கப்படவில்லை, ஆதரவு மட்டுமே: அமெரிக்கா கொடுத்த ட்விஸ்ட்

பாகிஸ்தானுக்கு மிகவும் மேம்பட்ட AIM-120 வான்வழி ஏவுகணைகளை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகளை அமெரிக்கா மறுத்துள்ளது.

காசா அமைதி ஒப்பந்தத்திற்கு டிரம்ப் மற்றும் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் உரையாடிய மோடி 

பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இரு தலைவர்களுடனும் தொலைபேசியில் உரையாடி, இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான காசா போரை முடிவுக்கு கொண்டு வரும் அமைதித் திட்டத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பாகிஸ்தானுக்கு அதிநவீன AIM-120 ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்

அமெரிக்காவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையேயான உறவுகள் மேம்பட்டு வருவதைக் குறிக்கும் ஒரு நடவடிக்கையாக, AIM-120 மேம்பட்ட நடுத்தர-வரம்பு வான் முதல் வான் ஏவுகணை (AMRAAM) விற்பனைக்கான ஆயுத ஒப்பந்தத்தில், பாகிஸ்தானையும் பெறுநராக அமெரிக்காவின் போர் துறை (DoW) சேர்த்துள்ளது.

அரசாங்க முடக்கத்தால் அமெரிக்கப் பொருளாதாரம் மந்தநிலையைச் சந்திக்கிறதா?

அமெரிக்க பொருளாதாரம் பலவீனமான அறிகுறிகளை காட்டுவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) எச்சரித்துள்ளது, ஆனால் ஆறு மாதங்களுக்கு முன்பு பல நிபுணர்களால் கணிக்கப்பட்ட மந்தநிலையைத் தவிர்க்க முடிந்தது.

2025 அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு? காசா போரை நிறுத்திய டிரம்ப்புக்கா?

உலகின் மிக முக்கியமான விருதுகளில் ஒன்றான அமைதிக்கான நோபல் பரிசு பெற விரும்பும் வேட்பாளர்கள் பட்டியலில் இருந்தாலும், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டில் பரிசு பெற வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

09 Oct 2025
காசா

காசா அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேல், ஹமாஸ் உடன்பாடு: டிரம்ப்

காசாவில் சண்டையை நிறுத்தி, பணயக்கைதிகள் மற்றும் கைதிகளை விடுவிப்பதற்கான அமெரிக்காவின் மத்தியஸ்த அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேலும், ஹமாஸும் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

08 Oct 2025
விசா

"டிரம்ப் சொன்னா என்ன? நாங்க தருவோம்": H-1B விசாக்களை ஆதரிக்கும் என NVIDIA உத்திரவாதம்

NVIDIA தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங், அவரது நிறுவனம் H-1B விசாக்களை தொடர்ந்து நிதியுதவி செய்வதாகவும், அது தொடர்பான அனைத்து செலவுகளையும் ஏற்கும் என்றும் அறிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு வான் ஏவுகணைகளை அளிக்க போவதாக அமெரிக்கா அறிவிப்பு

பாகிஸ்தானுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு புதிய கட்டத்தை அமெரிக்க பாதுகாப்புத் துறை (DoD) அறிவித்துள்ளது.

07 Oct 2025
விசா

போதை வஸ்து பெயரில் சென்ட் பாட்டில் வைத்திருந்ததற்காக அமெரிக்கா விசாவை இழந்த இந்தியர்

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கபில் ரகு, "ஓபியம்" என்று பெயரிடப்பட்ட வாசனை திரவிய பாட்டிலைப் பற்றி அதிகாரிகளின் தவறான புரிதலினால் ரத்து செய்யப்பட்ட தனது விசாவை மீண்டும் பெற போராடி வருகிறார்.

'நாங்கள் அமைதி காக்கும் படையினராக இருப்பதற்குக் காரணம்...': இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்து டிரம்ப் மீண்டும் பிதற்றல் 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது வர்த்தகக் கொள்கைகள் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரைத் தவிர்க்க உதவியதாக மீண்டும் ஒருமுறை கூறியுள்ளார்.

அரிய கனிமங்களின் முதல் தொகுதியை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தது பாகிஸ்தான்: ரகசிய ஒப்பந்தங்கள் குறித்து சர்ச்சை

அமெரிக்க நிறுவனமான யுஎஸ் ஸ்ட்ராடஜிக் மெட்டல்ஸுடன் (யுஎஸ்எஸ்எம்) கையெழுத்திட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தனது முதல் அரிய வகை கனிமங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

அரசாங்க முடக்கம் தொடர்ந்தால் பெருமளவிலான பணிநீக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று வெள்ளை மாளிகை எச்சரிக்கை

பகுதி அரசாங்க முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக காங்கிரஸ் ஜனநாயக கட்சியினருடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வெற்றிபெறவில்லை என்றால், கூட்டாட்சி ஊழியர்கள் பெருமளவில் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று டிரம்ப் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

அமெரிக்காவில் நண்பனை கொல்வது எப்படி என சாட்ஜிபிடியில் தேடிய பள்ளி மாணவன் கைது

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் 13 வயது இளைஞன் ஒருவன், பள்ளி வழங்கிய சாதனத்தைப் பயன்படுத்தி ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடியிடம் வகுப்பறையின் நடுவில் நண்பரைக் கொல்வது எப்படி என்று கேட்டதால் கைது செய்யப்பட்டுள்ளான்.

06 Oct 2025
காசா

காசா பேச்சுவார்த்தையை விரைவாக முடிங்க, இல்லைனா 'இரத்தக்களரி ஆகும்': எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

திங்கட்கிழமை காசாவிற்கான அமைதி பேச்சுவார்த்தைக்கு முன்னதாக பேச்சுவார்த்தையாளர்கள் "விரைவாக முன்னேற வேண்டும்" என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

நியூயார்க்கில் அமெரிக்காவின் முதல் வர்த்தக LiFi இணையத்தை நிறுவி இந்திய நிறுவனம் சாதனை

குஜராத்தைச் சேர்ந்த நவ் வயர்லெஸ் டெக்னாலஜிஸ் (Nav Wireless Technologies), நியூயார்க் நகரத்தில் அமெரிக்காவின் முதல் வர்த்தக LiFi இணைய அமைப்பை நிறுவியுள்ளதாக அறிவித்துள்ளது.

ஈரான் எல்லை அருகே அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் அழைப்பு

அமெரிக்காவிற்கும் பாகிஸ்தானிற்குமான உறவுகள் வலுவடைந்து வரும் நிலையில், அரபிக் கடலில் ஒரு துறைமுகத்தை அமைத்து இயக்குவதற்கு அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் வாய்ப்பளித்துள்ளதாகத் தெரிகிறது.

04 Oct 2025
இந்தியா

அமெரிக்காவை விட இந்தியா தான் பெஸ்ட்; வைரலாகும் அமெரிக்கப் பெண்மணியின் இன்ஸ்டாகிராம் பதிவு

நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசித்து வரும் அமெரிக்கப் பெண்மணியான கிரிஸ்டன் ஃபிஷர், இந்தியாவில் தான் அனுபவிக்கும் 10 குறிப்பிடத்தக்க நன்மைகளை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளார்.

03 Oct 2025
ரஷ்யா

ரஷ்யாவிலிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதில் என்ன தவறு என கேட்கும் புடின்

ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்துமாறு இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விமர்சித்துள்ளார்.

அமெரிக்க அரசாங்க முடக்கம் இந்திய தொழில்நுட்ப நிபுணர்களை கடுமையாக பாதிக்கும் என கணிப்பு

அமெரிக்க அரசாங்கம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் பணி முடக்கத்தத்தில் நுழைந்துள்ள நிலையில், அதன் தாக்கம் தொழிலாளர் துறையின் பணியாற்றும் திறனை தடுக்க, குறிப்பாக H-1B விசாக்கள் மற்றும் வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டு விண்ணப்ப செயலாக்கங்களை முற்றாக முடக்கும் என கூறப்படுகிறது.

02 Oct 2025
சீனா

4 வாரங்களில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க உள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நான்கு வாரங்களில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்க அரசாங்கம் முடக்கம்: என்ன சேவைகள் இயங்கும், எவை மூடப்படும்?

குடியரசு கட்சி நிதியுதவி தொகுப்பை ஆதரிக்க செனட் ஜனநாயக கட்சியினர் மறுத்ததை அடுத்து, கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்க அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக முடக்கப்பட்டுள்ளது.

செனட் வாக்கெடுப்பு தோல்வி; அரசாங்க முடக்கத்தை எதிர்கொள்ளும் அமெரிக்கா

நவம்பர் 21 வரை அரசாங்கத்திற்கு நிதியளிப்பதற்கான குறுகிய கால நடவடிக்கையாக, குடியரசுக் கட்சியினரால் உருவாக்கப்பட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்கான கடைசி முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், அமெரிக்க அரசாங்கம் முறையான முடக்கத்தை நோக்கிச் செல்கிறது.

30 Sep 2025
காசா

புதிய காசாவுக்கான டிரம்பின் 20 அம்சத் திட்டம்: இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இல்லை, ஹமாஸ் வெளியேறும் மற்றும் பல

காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் திங்கட்கிழமை ஒப்புக்கொண்டதாக கூறப்படும் 20 அம்சத் திட்டம் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

30 Sep 2025
இந்தியா

26/11 தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையை இந்தியா மேற்கொள்ள வேண்டாம் என அமெரிக்க அழுத்தம் தந்தது: ப.சிதம்பரம் 

முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், 2008-ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு, அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசு பாகிஸ்தானுக்கு எதிராகப் பழிவாங்கும் இராணுவ நடவடிக்கையைத் தவிர்க்க முடிவு செய்தது ஏன் என்பதை தற்போது வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

30 Sep 2025
காசா

காசா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டிரம்பின் திட்டத்தை ஒப்புக்கொண்ட இஸ்ரேல்; எனினும்...

காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு கட்டமைப்பில் உடன்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் திங்கட்கிழமை அறிவித்தனர்.

Factcheck: டொனால்ட் டிரம்ப் நோபல் பரிசுக்கான போட்டியில் இருந்து தடை செய்யப்பட்டது உண்மையா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நோபல் அமைதிப் பரிசுக்குத் தடை செய்யப்பட்டதாகச் சமூக ஊடகங்களில் பரவிய செய்தி, போலியானது என நிராகரிக்கப்பட்டுள்ளது.

28 Sep 2025
காசா

காசாவில் நிரந்தர அமைதிக்காக 21 அம்சத் திட்டத்தை வெளியிட்டது அமெரிக்கா; முழு விபரம்

காசா பகுதியில் நீடித்த ஸ்திரத்தன்மையையும், நிரந்தர அமைதியையும் நிலைநாட்டுவதற்காக அமெரிக்கா ஒரு விரிவான 21 அம்ச சமாதானத் திட்டத்தை வெளியிட்டுள்ளது.

எப்ஸ்டீன் சர்ச்சை ஆவணத்தில் டெஸ்லா சிஇஓ பெயர்; எலான் மஸ்க் உடனடி மறுப்பு

தொழில்நுட்பப் பில்லியனர் எலான் மஸ்க், அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணங்களில் பெயரிடப்பட்டதைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

26 Sep 2025
இந்தியா

மருந்துக்குத் தண்ணீர் கேட்டபோது அமெரிக்க அதிகாரிகள் பனிக்கட்டி வழங்கியதாக நாடு கடத்தப்பட்ட சீக்கிய மூதாட்டி புகார்

அமெரிக்காவில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த 73 வயது சீக்கிய மூதாட்டி ஹர்ஜித் கவுர், தான் நாடு கடத்தப்பட்டபோது அமெரிக்கக் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் மோசமாக நடத்தப்பட்டதாகப் புகாரளித்துள்ளார்.

டிரம்பின் மருந்து வரிகள் ஜெனரிக் மருந்துகளுக்கு இல்லை, ஆனாலும் இந்திய நிறுவனங்கள் பாதிப்பை எதிர்கொள்கின்றன

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அக்டோபர் 1 முதல் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் "எந்தவொரு பிராண்டட் அல்லது காப்புரிமை பெற்ற" மருந்துகளுக்கும் 100% வரி விதிப்பதாக அறிவித்துள்ளார்.

ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான கடைகள் மூடல்; ஊழியர்கள் பணி நீக்கம்; காரணம் என்ன?

ஸ்டார்பக்ஸ் நிறுவனம், நிதி ஸ்திரத்தன்மையை அடைவதையும், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட பெரிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

26 Sep 2025
நேட்டோ

உக்ரைன் போரின் உத்தி குறித்து ரஷ்யாவிடம் இந்தியா விளக்கம் கேட்டதாக நேட்டோ தலைவர் தகவல்

அமெரிக்கா விதித்துள்ள வரிக் கட்டணங்களால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியே, உக்ரைன் போரின் வியூகம் குறித்து ரஷ்யாவிடம் விளக்கம் கேட்கும் நிலைக்கு இந்தியாவைத் தள்ளியுள்ளது என்று நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே வியாழக்கிழமை (செப்டம்பர் 25) பரபரப்புக் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.

26 Sep 2025
டிக்டாக்

அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வந்தது டிக்டாக்: ஒப்பந்தத்தில் சீன அதிபர் கையெழுத்து என டிரம்ப் தகவல்

சீனாவை சேர்ந்த பிரபலமான வீடியோ செயலியான டிக்டாக் (TikTok) நிறுவனம் இனி அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் சீன அதிபர் கையெழுத்திட்டுள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

மருந்துகளுக்கு 100%, சமையலறை அலமாரிகளுக்கு 50%: டிரம்ப் அதிரடி உத்தரவு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை மற்றொரு சுற்று இறக்குமதி வரிகளை அறிவித்தார். மருந்துகள் முதல் சமையலறை அலமாரிகள் வரையிலான பொருட்களுக்கு 100% வரை வரிகளை விதிப்பதாக அறிவித்தார்.

அரசு ஊழியர்களை கொத்துக் கொத்தாக பணி நீக்கம் செய்ய தயாராகும் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம்?

அமெரிக்காவில் அடுத்த வாரம் அரசாங்கம் மூடப்படக்கூடிய சூழ்நிலையில், வெள்ளை மாளிகை கூட்டாட்சி நிறுவனங்களை ஒட்டுமொத்தப் பணிநீக்கங்களுக்குத் (Mass Firings) திட்டமிடுமாறு அறிவுறுத்தியுள்ளது.

ஐ.நா. சபையில் நடந்த சந்திப்பிற்கு பிறகு டிரம்ப் மீண்டும் பாக்., பிரதமரை சந்திக்கிறார்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்திக்கவுள்ளார்.

அமெரிக்காவில் குழந்தைகள் பாலியல் குற்றவாளியை தேடிக்கொன்ற இந்தியர் கைது

நீதிமன்ற ஆவணங்களின்படி, கலிபோர்னியாவை சேர்ந்த இந்தியர் ஒருவர், பொது பாலியல் குற்றவாளி பதிவேட்டில் உள்ளவரின் பெயரை வைத்து தேடிக்கண்டுபிடித்து, கத்தியால் குத்திக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

25 Sep 2025
ஐநா சபை

பிளான் பண்ணி பண்ணிருக்காங்க: ஐ.நா.வில் தொடர்ந்து நடந்த விபத்துகளை விசாரிக்க டிரம்ப் உத்தரவு

ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த தொடர் தொழில்நுட்ப கோளாறுகள் வேண்டுமென்றே செய்யப்பட்ட நாசவேலை செயல்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

24 Sep 2025
விசா

H-1B விசா லாட்டரி முறையில் மாற்றங்கள் அமலானால் இந்திய தொழில்நுட்ப ஊழியர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு

அமெரிக்காவில் வேலை செய்ய விரும்பும் இந்திய தொழில்நுட்ப ஊழியர்கள் பெரிதும் பயன்படுத்தும் H-1B விசா லாட்டரி முறையில் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் புதிய மாற்றங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

24 Sep 2025
ஜெர்மனி

அமெரிக்காவின் H-1B விசா மாற்றம் எதிரொலி; கதவுகளை திறக்கும் ஜெர்மனி 

அமெரிக்கா தனது H-1B விசா திட்டத்தை கடுமையாக்கிய நிலையில், இந்திய திறமையாளர்களை ஈர்க்க ஜெர்மனி இந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொள்கிறது.

24 Sep 2025
விசா

புதிய H-1B விசா முறையை முன்மொழிந்த அமெரிக்கா; லாட்டரி முறையை நிறுத்த திட்டம்

அதிக திறமையான மற்றும் சிறந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளித்து, H-1B விசா தேர்வு செயல்முறையை மாற்றியமைக்க டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

H-1B மாற்றங்களை விட இந்த அச்சுறுத்தல் தான் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு அதிக தீங்கு விளைவிக்கும்

H-1B விசா கட்டணங்களில் சமீபத்திய உயர்வு இந்திய ஐடி நிறுவனங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

'இந்தியாவுடனான உறவுகள் முக்கியமானவை': ஜெய்சங்கரை சந்தித்த பிறகு அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர்

வர்த்தக பதட்டங்களைத் தீர்க்கும் முயற்சியில், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திங்களன்று நியூயார்க் நகரில் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவைச் சந்தித்தார்.

அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 58% சரிவு

இந்தியாவிலிருந்து அதன் மிகப்பெரிய சந்தையான அமெரிக்காவிற்கு ஸ்மார்ட்போன் ஏற்றுமதி, கடந்த நான்கு மாதங்களில் 58% சரிவை சந்தித்துள்ளது.

நிபந்தனையுடன் ஒரு வருடத்திற்கு புதிய START ஒப்பந்தத்தை நீட்டிக்க அமெரிக்காவிடம் ரஷ்ய அதிபர் புடின் முன்மொழிவு

அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே எஞ்சியிருக்கும் கடைசி அணு ஆயுதக் கட்டுப்பாடு ஒப்பந்தமான புதிய START (New Strategic Arms Reduction Treaty) ஒப்பந்தத்தை ஒரு வருடத்திற்கு நீட்டிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முன்மொழிந்துள்ளார்.

22 Sep 2025
விசா

அமெரிக்காவின் எச்1பி விசா கட்டண உயர்வால் சிக்கல்; இந்த 5 நாடுகள் மீது பார்வையைத் திருப்பும் இளைஞர்கள்

அமெரிக்காவின் எச்1பி விசாவிற்கு விதிக்கப்பட்டுள்ள $100,000 புதிய கட்டணம், உலகின் திறமையான பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் தொழில் இலக்குகளை மாற்றி அமைத்துள்ளது.

22 Sep 2025
விசா

அமெரிக்க H-1B குழப்பத்திற்கு மத்தியில், 'K விசா' மூலம் STEM நிபுணர்களை ஈர்க்க தயாராகிறது சீனா

அமெரிக்காவின் H-1B விசா கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு, உலகெங்கிலும் உள்ள குறிப்பாக இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

21 Sep 2025
விசா

எச்1பி விசா கட்டண உயர்வு இவர்களுக்கு மட்டும்தான்; டிரம்ப் நிர்வாகம் புதிய விளக்கம்

இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், அமெரிக்க அதிகாரிகள் புதிய $100,000 கட்டண உயர்வு புதிய எச்1பி விசா விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், ஏற்கனவே விசா வைத்திருப்பவர்களுக்கு அல்ல என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர்.