LOADING...
பாதுகாப்பு காரணங்களால், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு
அமெரிக்கத் தூதரகங்கள் மீது ஈரானிய ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன

பாதுகாப்பு காரணங்களால், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு

எழுதியவர் Venkatalakshmi V
Mar 03, 2026
07:48 am

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் சூழல் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ளதால், அங்குள்ள அமெரிக்கக் குடிமக்கள் அனைவரும் வணிக ரீதியான போக்குவரத்து மூலம் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. குவைத் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் மீது ஈரானிய ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. குவைத்தில் உள்ள அமெரிக்கத் தூதரக பகுதியில் புகை மண்டலம் சூழ்ந்ததை அடுத்து, அங்கிருக்கும் அமெரிக்கர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அதேபோல், சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள தூதரகம் மீதான தாக்குதலில் கட்டிடத்தில் சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

பின்னணி

தொடர்ந்து வளைகுடா நாடுகளின் மீது குண்டுவீச்சு நடத்தும் ஈரான்

வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோவின் அறிவுறுத்தலின்படி, பின்வரும் நாடுகளிலிருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்: ஈரான், ஈராக், இஸ்ரேல், ஜோர்டான், குவைத், லெபனான், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, சிரியா, ஐக்கிய அரபு அமீரகம், ஏமன், எகிப்து, பஹ்ரைன் மற்றும் பாலஸ்தீனம் (காசா மற்றும் மேற்குக் கரை). கடந்த சனிக்கிழமை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதற்கு பழிவாங்கும் வகையில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் தூதரகங்கள் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

Advertisement