127 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வரும் புத்தரின் புனித நினைவுச்சின்னங்கள்: பிரதமர் நாளை கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்
இந்திய வரலாற்றிலும், ஆன்மீக கலாச்சாரத்திலும் ஒரு முக்கிய மைல்கல்லாக, சுமார் 127 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாட்டிலிருந்து மீட்கப்பட்ட புத்தரின் புனித நினைவுச்சின்னங்களின் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
ஆர்ட்டெமிஸ் II ஏன் நாசாவின் மிக முக்கியமான பணியாக கருதப்படுகிறது தெரியுமா?
பல வருட திட்டமிடல் மற்றும் மேம்பாட்டிற்கு பிறகு, விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லை நோக்கி நாசா தயாராகி வருகிறது.
பளபளப்பான சருமத்திற்கு வெள்ளரிக்காயை எப்படி பயன்படுத்துவது
வெள்ளரிக்காய், ஆரோக்கிய நன்மைகளை தரும் ஒரு காய் என்பது எல்லோருக்கும் தெரியும்.
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படத்தை பொங்கல் வெளியீடாக வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
"அமைதி போராட்டத்திற்கு எதிராக வன்முறையில் ஈடுபாட்டால்...": ஈரானுக்கு டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
ஈரானிய அரசாங்கம் அமைதியான போராட்டங்களை "வன்முறை" மூலமாக அடக்கினால், ஈரானின் தற்போதைய அமைதியின்மையில் தலையிட வேண்டியிருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
பலுசிஸ்தானில் சீன ராணுவம்? - இந்தியாவிற்கு பெரும் ஆபத்து என பலுச் தலைவர் எச்சரிக்கை
பலுசிஸ்தான் பகுதியில் இன்னும் சில மாதங்களில் சீனா தனது ராணுவ படைகளை களம் இறக்க வாய்ப்புள்ளதாகவும், இது இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் பலுச் தலைவர் மிர் யார் பலுச் எச்சரித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன்கள், பிசிக்கள் விலை உயரும்: காரணம் இதோ!
ஸ்மார்ட்போன்கள் முதல் PC-க்கள் வரை பல மின்னணு சாதனங்களின் விலை 2026 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை காணக்கூடும்.
மத்திய பிரதேசத்தில் நர்மதா நதிக்கரையில் இறந்து கிடந்த 200க்கும் மேற்பட்ட கிளிகள்
மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் உள்ள நர்மதா நதிக்கரையில் குறைந்தது 200 கிளிகள் இறந்துள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
இந்தியா எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதை யாரும் ஆணையிட முடியாது: பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் எச்சரிக்கை
பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரிப்பதற்காக பாகிஸ்தானை கடுமையாக சாடிய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்தியா தன்னைத்தானே பாதுகாத்து கொள்ள உரிமை உண்டு என்று கூறியுள்ளார்.
பங்களாதேஷ் வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான்- KKR விவகாரம்: ரஹ்மானை நீக்கினால் KKR ஊதியம் வழங்க வேண்டுமா?
ஐபிஎல் 2026 மெகா ஏலத்தில் பங்களாதேஷ் வீரர் முஸ்தபிசுர் ரஹ்மானை, KKR அணி ஏலம் எடுத்ததைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
இந்தியாவில் $934 மில்லியன் ஒப்பந்தத்தில் கைகோர்க்கிறது KFC மற்றும் Pizza Hut
இந்தியாவில் KFC மற்றும் Pizza Hut நிறுவனங்களுக்குப் பின்னால் உள்ள நிறுவனங்களான Sapphire Foods India மற்றும் Devyani International ஆகியவை $934 மில்லியன் (தோராயமாக ₹8,400 கோடி) மதிப்பிலான இணைப்பை அறிவித்துள்ளன.
கூட்டுறவு நிறுவனங்களால் ஆதரவு பெற்ற பாரத் டாக்ஸி ஜனவரி மாத இறுதிக்குள் தொடங்கப்படும்
கூட்டுறவு நிறுவனங்களால் ஆதரிக்கப்படும் டாக்ஸி சேவையான பாரத் டாக்ஸி, ஜனவரி மாத இறுதிக்குள் டெல்லி மற்றும் பிற முக்கிய நகரங்களில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் பரவலாக மழை: தென்காசி, நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், குறிப்பாக தென்காசி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மிகக் கனமழை பதிவாகியுள்ளது.
ஐபோன் 18 வெளியீட்டில் திடீர் மாற்றம்? 2026-ல் ஆப்பிள் எடுக்கப்போகும் 'ரிஸ்க்'
ஆப்பிள் நிறுவனம் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் புதிய ஐபோன் மாடல்களை அறிமுகப்படுத்துவது வழக்கம்.
இந்தூரில் பலர் உயிரிழந்ததன் பின்னணியில் 6 மாதங்களாக மாசுபட்ட குடிநீரை பருகியது தான் காரணம்
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு பரவுவதற்கு மாசுபட்ட குடிநீர் தான் காரணம் என்று ஆய்வக சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிக் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பிற்காக 90-நாள் வேலை விதியை முன்மொழிகிறது மத்திய அரசு
புதிய சமூக பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மத்திய அரசாங்கம் ஒரு புதிய விதிகளை முன்மொழிந்துள்ளது, இது கிக் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு சலுகைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஈரானில் வெடித்தது மக்கள் புரட்சி: பலர் பலி, ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கோஷம்
ஈரானில் நிலவி வரும் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளன.
இந்தியாவின் முதல் புல்லட் ரயில்: 2027 சுதந்திர தினத்தன்று தொடக்கம்!
இந்திய ரயில்வே வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக, நாட்டின் முதல் புல்லட் ரயில் சேவை வரும் 2027 ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடங்கி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் ஜன நாயகன் ட்ரைலர் ஜனவரி 3ஆம் தேதி மாலை வெளியாகிறது!
தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜன நாயகன்' படத்தின் ட்ரைலர் வெளியாகும் தேதி மற்றும் நேரத்தைப் புதிய போஸ்டருடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பரவும் மர்ம காய்ச்சல்: உருமாறிய கொரோனா வைரஸே காரணம்?
தமிழகம் முழுவதும் சமீபகாலமாக அதிகரித்து வரும் நீண்ட கால இருமல் மற்றும் காய்ச்சலுக்கு, உருமாறிய கொரோனா வைரஸ் மற்றும் 'H3N2' இன்ப்ளூயன்சா வைரஸ்களே முக்கிய காரணம் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பெற்றோர் ஒப்புதலுடன் படமாகிறது RG Kar பாலியல் வன்கொடுமை-கொலை வழக்கு
கொல்கத்தாவின் RG Kar மருத்துவ கல்லூரியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் இளம் மருத்துவரின் பெற்றோர், இந்த சம்பவம் குறித்த திரைப்படத்திற்கு இப்போது ஒப்புதல் அளித்துள்ளனர்.
நான்ஸ்டிக் பாத்திரங்கள் சமையலுக்கு பாதுகாப்பானதா? உண்மையை அறிந்து கொள்வோம்!
பெரும்பாலான சமையலறைகளில், அவற்றின் வசதி மற்றும் பயன்பாட்டின் எளிமை காரணமாக, நான்ஸ்டிக் பாத்திரங்கள் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டன.
சபரிமலை ஊழல்: கோயில் கலைப்பொருட்களில் இருந்து மேலும் தங்கம் காணாமல் போனதை SIT கண்டுபிடித்துள்ளது
சபரிமலை தங்க திருட்டு ஊழலை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழு (SIT) மேலும் பல கோயில் கலைப்பொருட்கள் தங்கத்தைக் காணவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
பங்களாதேஷில் குறிவைக்கப்படும் இந்துக்கள்; மேலும் ஒரு நபர் தாக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டார்
பங்களாதேஷில் நடந்த மற்றொரு அதிர்ச்சியூட்டும் கும்பல் வன்முறை சம்பவத்தில், 50 வயது இந்து ஒருவர் தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டார்.
புகைப்பிடிப்பவர்களுக்கு அதிர்ச்சி: பிப்ரவரி 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு
மத்திய அரசு, சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களுக்கான உற்பத்தி வரியை (Excise Duty) மாற்றி அமைத்துள்ளதால், வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் சிகரெட் விலை கணிசமாக உயரவுள்ளது.
'துரந்தர்' படத்தில் அதிரடி மாற்றங்கள்: சில வார்த்தைகளை நீக்க மத்திய அரசு உத்தரவு
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் 2025-ம் ஆண்டின் மிகப்பெரிய வசூல் சாதனைகளை படைத்த 'துரந்தர்' திரைப்படம் இன்னும் வெற்றிவாகை சூடி வருகிறது.
பிரதமர் மோடி துவங்கி வைக்கவுள்ள முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் ரூட் எது தெரியுமா?
கொல்கத்தா-குவஹாத்தி வழித்தடத்தில் இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் வகுப்பு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் கொடியசைத்து தொடங்கி வைப்பார்.
பான்-ஆதார் இணைப்பு காலக்கெடுவை தவறவிட்டீர்களா? அடுத்து என்ன செய்யவேண்டும்?
PAN மற்றும் ஆதார் அட்டைகளை இணைப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 31, 2025 ஆகும்.
சுத்தமான நகரில் சோகம்: அசுத்தமான குடிநீரால் 7 பேர் உயிரிழப்பு, 149 பேர் கவலைக்கிடம்
இந்தியாவின் 'தூய்மையான நகரம்' எனப் புகழப்படும் மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில், அசுத்தமான குடிநீரால் ஏற்பட்ட பாதிப்புகள் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
ஆஸ்திரேலியாவை தொடர்ந்து பிரான்சும் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகத் தடையை விதிக்க உள்ளது
ஆஸ்திரேலியாவின் அடிச்சுவடுகளை பின்பற்றி, 2026 கல்வியாண்டின் தொடக்கத்தில் இருந்து குழந்தைகளுக்கான சமூக ஊடக தளங்களை தடை செய்ய பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது.
ரஷ்யா அதிபர் புடின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியது உக்ரைன் அல்ல: அமெரிக்காவின் CIA
உக்ரைன் நடத்திய சமீபத்திய ட்ரோன் தாக்குதலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் வீட்டை குறிவைக்கவில்லை என்று மத்திய புலனாய்வு அமைப்பு (CIA) முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.