ஐபிஎல் 2026: மதீஷா பத்திரனைவை ₹18 கோடிக்கு KKR வாங்கியது
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2026 ஏலத்தில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ₹18 கோடிக்கு விற்கப்பட்டுள்ளார்.
காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டை முன்மொழியும் மசோதா மக்களவையில் தாக்கல்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் காப்பீட்டுச் சட்டங்கள் (திருத்த) மசோதா, 2025 ஐ அறிமுகப்படுத்தினார்.
போண்டி துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் இந்தியா பாஸ்போர்ட் கொண்டிருந்தனரா? வெளியான அதிர்ச்சி தகவல்கள்
16 பேரை கொன்ற சிட்னி பாண்டி கடற்கரை துப்பாக்கி சூட்டில் சந்தேக நபர்கள் " இஸ்லாமிய அரசு சித்தாந்தத்தால்" இயக்கப்பட்டவர்கள் என்று ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்தியாவின் தனியார் துறை வளர்ச்சி டிசம்பர் மாதத்தில் 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது
இந்தியாவின் தனியார் துறை செயல்பாடு டிசம்பர் மாதத்தில் பெரும் மந்தநிலையை கண்டது, இது கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு பலவீனமான வளர்ச்சியை குறிக்கிறது.
ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு: அமெரிக்க டாலருக்கு எதிராக ரூ.91.14-ஐ தொட்டது
இந்திய ரூபாயின் மதிப்பு புதிய சாதனை அளவை எட்டியுள்ளது, முதல் முறையாக ஒரு டாலருக்கு 91 என்ற குறியீட்டைத் தாண்டியுள்ளது.
ஜோர்டான் பட்டத்து இளவரசரே கார் ஓட்டி சென்று மோடியை அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் சென்றார்!
மூன்று நாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக ஜோர்டானுக்கு வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜோர்டான் நாட்டின் பட்டத்து இளவரசர் அல் ஹுசைன் பின் அப்துல்லா II ஒரு சிறப்பான மரியாதையை செலுத்தியுள்ளார்.
எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 600 பில்லியன் டாலராக உயர்வு
உலகிலேயே மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு, அவரது விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் விரைவில் பொது பங்கு வெளியீட்டிற்கு (IPO) தயாராகி வருவதன் காரணமாக, வரலாறு காணாத அளவில் 600 பில்லியன் டாலராக (இந்தியா ரூபாய் மதிப்பில் சுமார் ₹48 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது என்று ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி குடும்பத்தினர் மீதான அமலாக்கத்துறையின் புகாரை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிரான அமலாக்க இயக்குநரகத்தின் (ED) பணமோசடி புகாரை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்தியாவின் முதல் உள்நாட்டு 64-பிட் ப்ராசெசர் DHRUV64 அறிமுகம்; அதன் முக்கியத்துவத்தை தெரிந்துகொள்வோம்
இந்தியா தனது முதல் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 1GHz, 64-பிட் dual-core microprocessor-ஆன DHRUV64 ஐ வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் ஏலம் 2026: வெளிநாட்டு வீரர்களின் அதிகபட்ச சம்பளம் ரூ.18 கோடியாக நிர்ணயம்
இன்று அபுதாபியில் நடைபெறவுள்ள 2026 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக, வெளிநாட்டு வீரர்களுக்கான அதிகபட்ச ஊதியத்தை BCCI ரூ. 18 கோடியாக நிர்ணயித்துள்ளது.
தொடர்ந்து ₹1 லட்சத்தில் நீடிக்கும் தங்கத்தின் விலை: இன்றைய விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை செவ்வாய்கிழமை (டிசம்பர் 16) சற்றே குறைந்தது, எனினும் அது ஒரு லட்சத்தை நெருங்கியே உள்ளது.
கோவா விடுதி தீ விபத்து வழக்கில் உரிமையாளர்களான லுத்ரா சகோதரர்கள் தாய்லாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்
கோவாவில் 25 பேர் உயிரிழக்க காரணமான பயங்கர தீ விபத்து சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த, இரவு விடுதியின் உரிமையாளர்களான சௌரப் லுத்ரா மற்றும் கௌரவ் லுத்ரா ஆகிய இரு சகோதரர்களும் தாய்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
IS கொள்கையால் தூண்டப்பட்டது பாண்டி கடற்கரை தாக்குதல் என ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பாண்டி கடற்கரை பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவம், ஐ.எஸ். (Islamic State) பயங்கரவாத கொள்கையால் தூண்டப்பட்ட செயல் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இன்று அறிவித்துள்ளார்.
ஐபிஎல் 2026 மார்ச் 26 தொடங்கி மே 31 வரை நடைபெறும்: விவரங்கள்
Cricbuzz கூற்றுப்படி, 2026 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர் மார்ச் 26 முதல் மே 31 வரை இந்தியாவில் நடைபெறும்.
BBC-க்கு எதிராக டிரம்ப் ரூ.80,000 கோடி வழக்கு: உரையை திரித்து கூறியதாக குற்றச்சாட்டு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரிட்டனை சேர்ந்த புகழ்பெற்ற ஒலிபரப்பு நிறுவனமான பிபிசி (BBC)-க்கு எதிராக மிக பெரிய அளவில் சட்ட போராட்டத்தில் இறங்கியுள்ளார்.
கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லி-ஆக்ரா விரைவுச் சாலையில் வாகனங்கள் மோதி தீ விபத்து: 4 பேர் பலி, 25 பேர் காயம்
உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள டெல்லி-ஆக்ரா விரைவு சாலையில் (யமுனா விரைவுச் சாலை), இன்று அதிகாலை கடும் பனிமூட்டம் காரணமாக கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
ராஜமௌலியின் 'வாரணாசி' படத்தில் மகேஷ் பாபுவின் தந்தையாக பிரகாஷ் ராஜ் நடிக்கிறார்
தனது வாழ்க்கையில் பல மறக்கமுடியாத வேடங்களில் நடித்துள்ள மூத்த நடிகர் பிரகாஷ் ராஜ், எஸ்.எஸ். ராஜமௌலியின் வரவிருக்கும் வாரணாசி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
Menopause பற்றி வெளிப்படையாக பேசும் பெண்களுக்கு ₹1 லட்சம் தரும் நிறுவனம்
தாவர அடிப்படையிலான ஊட்டச்சத்து பிராண்டான Earthful, "மெனோபாஸ் சியர்லீடர்ஸ் இன்டர்ன்ஷிப்" என்ற தனித்துவமான முயற்சியை தொடங்கியுள்ளது.
அடுத்த மாதம் முதல் மாருதியின் முதல் EV சோதனை ஓட்டத்திற்கு தயாராகும்
மாருதி சுசுகியின் முதல் மின்சார வாகனமான (EV) இ-விட்டாரா, ஜனவரி 2026 முதல் சோதனை ஓட்டங்களுக்கு கிடைக்கும்.
45 வயதுக்குட்பட்டோர் திடீர் மரணங்களுக்கு இதய நோய் முக்கிய காரணம், கொரோனா தடுப்பூசி காரணமல்ல: AIIMS
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) சமீபத்தில் நடத்திய ஆய்வில், 45 வயதுக்குட்பட்டவர்களிடையே திடீர் மரணங்களுக்கு இதய நோய் முக்கிய காரணம் என்று தெரியவந்துள்ளது.
இந்திய ராணுவம் விரைவில் கடைசி 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை பெறவுள்ளது
மீதமுள்ள மூன்று அப்பாச்சி AH-64 தாக்குதல் ஹெலிகாப்டர்களை அமெரிக்காவிலிருந்து இந்திய ராணுவம் பெற உள்ளது.
அமெரிக்காவின் மிகப்பெரிய செயற்கைக்கோளான BlueBird-6 ஐ டிசம்பர் 21ஆம் தேதி இஸ்ரோ விண்ணில் ஏவவுள்ளது
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), அமெரிக்காவின் மிகப்பெரிய வணிக செயற்கைக்கோளான BlueBird-6 இன் ஏவுதலை மறுபரிசீலனை செய்துள்ளது.
தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் எதிரொலியால், உலகின் பிரபலமான அருங்காட்சியகம் மூடப்படும் அபாயம்
உலகிலேயே அதிகம் பார்வையிடப்படும் அருங்காட்சியகமான பாரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகம், தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் காரணமாக இந்த வாரம் மூடப்படும் அபாயத்தை எதிர்கொள்கிறது.
கோவா விடுதி உரிமையாளர்களான லூத்ரா சகோதரர்கள் நாளை தாய்லாந்திலிருந்து நாடு கடத்தப்படுவார்கள்
வடக்கு கோவாவின் பிர்ச் பை ரோமியோ லேன் இரவு விடுதியின் உரிமையாளர்களான சவுரப் மற்றும் கௌரவ் லுத்ரா ஆகியோர் செவ்வாய்க்கிழமை தாய்லாந்தில் இருந்து டெல்லிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் மிகவும் நம்பிக்கையான நுகர்வோர் சந்தைகளில் ஒன்றாக மாறியது இந்தியா
பாஸ்டன் கன்சல்டிங் குரூப் (BCG) இன் புதிய அறிக்கையின்படி, உலகளவில் மிகவும் நம்பிக்கையான நுகர்வோர் சந்தைகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது.
ஈரோடு பொதுக்கூட்டத்திற்கு TVK விஜய்க்கு காவல்துறை அனுமதி: 84 கடுமையான நிபந்தனைகள் விதிப்பு
நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைவருமான விஜய்யின் கட்சி சார்பில், ஈரோட்டில் வருகிற டிசம்பர் 18-ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ள பொதுக்கூட்டத்திற்கு, ஈரோடு காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
'வாழ்க்கை முறையை மாற்றுங்கள்': டெல்லி காற்று மாசுபாடு தொடர்பான விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடல்
டெல்லி-தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) உள்ள பல பள்ளிகள் கடுமையான காற்று மாசுபாடு இருந்தபோதிலும் வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளை நடத்துவதன் மூலம் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறுகின்றன என்று இந்த விஷயத்தில் அமிகஸ் கியூரியான மூத்த வழக்கறிஞர் அபராஜிதா சிங் ஒரு அமர்வுக்கு தெரிவித்தார்.
டெல்லியில் மெஸ்ஸியுடன் மூடிய அறையில் 'சந்தித்து வாழ்த்து' சொல்ல வேண்டுமா? ₹1 கோடி எடுத்து வையுங்கள்
அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தனது நான்கு நகர இந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று திங்கள்கிழமை டெல்லிக்கு வருகிறார்.
'சூர்யா 46': சூர்யா-வெங்கி அட்லூரியின் திரைப்பட படப்பிடிப்பு முடிவடைந்தது
நடிகர் சூர்யா நடிக்கும், தற்காலிகமாக 'சூர்யா 46' என்று பெயரிடப்பட்டுள்ள படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரபல ஹாலிவுட் இயக்குனர் ராப் ரெய்னர், மனைவி மைக்கேல் கத்தியால் குத்தி கொலை; சந்தேக வலையில் மகன்
ஹாலிவுட் இயக்குனர் ராப் ரெய்னர் மற்றும் அவரது மனைவி மைக்கேல் சிங்கர் ரெய்னர் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் (அமெரிக்க நேரப்படி) லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவர்களது வீட்டில் இறந்து கிடந்தனர்.
விதிமுறைகளை கடுமையாக்கும் மத்திய அரசு; இந்தியாவில் சவாலை எதிர்கொள்கிறது வாட்ஸ்அப்
மெட்டாவின் பிரபலமான மெஸேஜிங் தளமான வாட்ஸ்அப், இந்தியாவில் ஒரு பெரிய சவாலை எதிர்கொள்கிறது.