LOADING...
'1967-ல் அணு ஆயுத போரை தடுத்த UFO!': அமெரிக்க அதிகாரியின் அதிரடி வாக்குமூலம்
அணு ஆயுத போரை தடுத்த UFO!

'1967-ல் அணு ஆயுத போரை தடுத்த UFO!': அமெரிக்க அதிகாரியின் அதிரடி வாக்குமூலம்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 17, 2026
06:40 pm

செய்தி முன்னோட்டம்

இரண்டாம் உலகப்போரின் உச்சகட்டத்தில், அமெரிக்காவின் 20 அணு ஆயுத ஏவுகணைகளை மர்மமான வெளிச்சங்கள் (UFO) ஊடுருவி முடக்கியதாகவும், இதன் மூலம் ஒரு பெரும் அணு ஆயுத பேரழிவு தவிர்க்கப்பட்டதாகவும் முன்னாள் ஏவுகணை ஏவுதள அதிகாரி ராபர்ட் சாலாஸ் தெரிவித்துள்ளார். 1967-ஆம் ஆண்டு மார்ச் மாதம், அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள மால்ம்ஸ்ட்ரோம் விமானப்படை தளத்தில் ராபர்ட் சாலாஸ் பணியில் இருந்தார். அப்போது நடந்த வினோத நிகழ்வுகளை அவர் 'டேனி ஜோன்ஸ் பாட்காஸ்ட்' நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.

விவரங்கள்

மால்ம்ஸ்ட்ரோம் விமானப்படை தளத்தில் நடந்தது என்ன?

1967 மார்ச் 16 மற்றும் 24 ஆகிய தேதிகளில், ஏவுகணை ஏவுதளத்தின் நுழைவாயிலுக்கு மேலே அதிவேகமாக செல்லும் சிவப்பு நிற மர்ம விளக்குகளை பாதுகாப்பு படையினர் பார்த்துள்ளனர். அந்த பறக்கும் தட்டுகள் 90 டிகிரி கோணத்தில் திடீர் திருப்பங்களை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. மர்ம விளக்குகள் ஏவுதளத்திற்கு மேலே நின்றிருந்தபோது, பூமிக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த 20 'Minuteman I' கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணைகள் திடீரென செயலிழந்தன. ஏவுதள கட்டுப்பாட்டு அறையில் உள்ள விளக்குகள் பச்சையிலிருந்து சிவப்பிற்கு மாறின. இந்த ஏவுகணைகள் நவீன ஜாமர் வசதி கொண்ட நிலத்தடி அறைகளில் வைக்கப்பட்டிருந்தன. இருப்பினும், இந்த மர்ம பொருட்களிலிருந்து வெளிப்பட்ட மின்காந்த அலைகள் அனைத்து பாதுகாப்பு அடுக்குகளையும் தாண்டி ஏவுகணைகளை முடக்கின.

ஏலியன்

ஏலியன்களின் தலையீடு?

இந்த சம்பவத்தை ஆய்வு செய்த போயிங் நிறுவனம், ஏவுகணைகள் முடங்கியதற்கான சரியான காரணத்தைக் கண்டறிய முடியவில்லை. இது சோவியத் யூனியனின் தொழில்நுட்பம் அல்ல என்பதில் அமெரிக்க அதிகாரிகள் உறுதியாக இருந்தனர். "வேற்று கிரக நாகரிகங்கள் நம் பூமியை அணு ஆயுத போரிலிருந்து காப்பாற்றவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டன" என்று ராபர்ட் சாலாஸ் உறுதியாக தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அங்கிருந்த அனைத்து அதிகாரிகளும் இது குறித்து யாரிடமும் பேசக்கூடாது என விமானப்படையால் கட்டாயப்படுத்தப்பட்டு ரகசிய காப்பு ஒப்பந்தத்தில் (NDA) கையெழுத்திட்டனர். பல ஆண்டுகளுக்கு பிறகு, பொதுவெளியில் உள்ள ஒரு புத்தகத்தில் இதே போன்ற சம்பவம் குறிப்பிடப்பட்டிருப்பதை கண்ட சாலாஸ், இப்போது உண்மையை வெளிப்படுத்த முன்வந்துள்ளார்.

Advertisement