ஆட்டோ செய்தி
ஆட்டோமொபைல் துறையைப் பற்றிய அனைத்தையும் வெளிப்படுத்துகிறது - வாகன வெளியீடுகள், அவற்றின் விலைகள் புதிய விதிகள் வரை.
ரூ.20 லட்சத்திற்குள் இவ்வளவு பவரா? 200 எச்பி திறன் கொண்ட மாஸான 5 மேட்-இன்-இந்தியா கார்கள்
இந்திய வாகன சந்தையில் ரூ.20 லட்சம் வரவுசெலவுத் திட்டத்திற்குள் சக்திவாய்ந்த என்ஜின், சிறந்த செயல்திறன் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற 5 மேட்-இன்-இந்தியா கார்கள் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.
புதிய அம்சங்களுடன் ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650 அறிமுகம்: ஆரம்ப விலை ரூ.3.58 லட்சம்
பிரபல இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்டு, தன் மேம்படுத்தப்பட்ட கான்டினென்டல் ஜிடி 650 பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
மழைக் காலத்தில் டயர் காற்றைக் குறைக்கணுமா? பலரும் செய்யும் ஆபத்தான தவறு: டிரைவிங் ரகசியம்
மழைக் காலத்தில் சாலைகள் ஈரமாக இருக்கும் என்பதால், டயரின் பரப்பளவு சாலையில் அதிகமாகப் பதியும் பொருட்டு டயரில் உள்ள காற்றைக் குறைக்க வேண்டும் என்ற தவறான நம்பிக்கை பல ஓட்டுநர்களிடம் உள்ளது.
என்ஜின் பாழாகிறது! E20 பெட்ரோல் குறித்து நாட்டின் முன்னணி கார் நிறுவனங்கள் அதிர்ச்சித் தகவல்
இந்தியாவில் 20% எத்தனால் கலக்கப்பட்ட E20 பெட்ரோல் பயன்பாடு அதிகரிக்கப்பட்டுள்ள சூழலில், அதில் கலந்துள்ள மாசுகள் குறித்து நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களான மாருதி சுஸூகி, டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு (SIAM) ரகசிய மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளன.
பயணத்திற்கு முன் டிப்ஸ் கேட்கக் கூடாது: ஓலா, ஊபர், ராபிடோ நிறுவனங்களுக்கு மத்திய அரசு போட்ட தடை
ஓலா, ஊபர் மற்றும் ராபிடோ போன்ற வாகன முன்பதிவு செயலிகளில், பயணம் தொடங்குவதற்கு முன்பாகவே 'Advance Tip' கேட்கும் அம்சத்தை உடனடியாக நீக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான உலகின் முதல் யுனிவர்சல் ஃபாஸ்ட் சார்ஜர்!
மின்சார வாகன (EV) சார்ஜிங் துறையில் ஒரு முன்னணி நிறுவனமான போல்ட்.எர்த், தனது பிளேஸ் டிசி 3kW டூயல் கன் சார்ஜர், இந்திய ஆட்டோமோட்டிவ் ஆராய்ச்சி சங்கத்தால் (ARAI) சான்றளிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
லாரிகளுக்கு மூடி கட்டாயம்: லாரி டிரைவர்களுக்கு மத்திய அரசு போட்ட புதிய உத்தரவு
சாலையில் பயணிக்கும்போது திறந்தவெளி லாரிகளிலிருந்து மணல், கற்கள் மற்றும் கழிவுப்பொருட்கள் சிதறி விபத்து ஏற்படும் அச்சத்திற்கும் துர்நாற்றத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் ஐந்நூறு லட்சம் சாலை விபத்துக்கள் பதிவாகிறது: மத்திய அமைச்சர் கட்கரி எச்சரிக்கை
இந்தியாவின் மோசமடைந்து வரும் சாலை பாதுகாப்பு நிலைமை குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எத்தனால் கலந்த டீசல் பாதுகாப்பு சோதனையில் தோல்வியடைந்தது என மத்திய அரசு தெரிவித்துள்ளது
டீசலில் 20% எத்தனால் கலப்பதற்கான இந்திய அரசின் திட்டம் ஒரு பெரும் தடையை சந்தித்துள்ளது. இந்த முயற்சி பல பாதுகாப்புச் சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளது.
2026ல் ஏபிஎஸ் வசதியுடன் கிடைக்கும் 5 மலிவு விலை ஸ்கூட்டர்கள்; முழு விபரம்
இந்திய இரு சக்கர வாகன சந்தையில் ஏபிஎஸ் (Anti-lock Braking System) எனப்படும் பாதுகாப்பு பிரேக்கிங் வசதி தற்போது பட்ஜெட் ரக ஸ்கூட்டர்களிலும் கிடைக்கத் தொடங்கியுள்ளது.
செகண்ட் ஹேண்ட் பிஎம்டபிள்யூ, மெர்சிடீஸ் காரா? பராமரிப்பு மற்றும் பழுது குறித்த பொய் வதந்திகள்; நிபுணர் விளக்கம்
இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட பழைய சொகுசு கார்களுக்கான சந்தை மிக வேகமாக வளர்ந்து வருகிறது.
பெட்ரோல் கார்களுக்குப் பதில் டீசல், இவி! E20 எத்தனால் பயத்தால் மாறும் இந்திய வாகன சந்தை
இந்திய பயணிகள் வாகன சந்தையில் வாடிக்கையாளர்களின் எரிபொருள் விருப்பத்தேர்வுகள் வேகமாக மாறத் தொடங்கியுள்ளன.
புதிய எலக்ட்ரிக் பைக் வாங்கியிருக்கீங்களா? முதல் 1000 கிமீ-ல் செய்ய வேண்டிய முக்கியமான பராமரிப்புகள் இதோ
கனவு கண்டு ஆசையோடு வாங்கிய புதிய எலக்ட்ரிக் பைக்கை ஷோரூமிலிருந்து வீட்டிற்கு ஓட்டி வரும் மகிழ்ச்சியே தனித்துவமானதுதான்.
எத்தனால், பெட்ரோல் தேவையில்லை! உத்தரகாண்ட் கிராமத்து இளைஞரின் பறக்கும் மின்சார கார்; வெற்றிகரமாக சோதனை
இந்தியாவில் தனிநபர் போக்குவரத்துத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் புதிய பறக்கும் காரை உருவாக்கி வெற்றிகரமாக சோதித்துள்ளார்.
"ஏத்தர் முதல் ஹோண்டா வரை!" இந்தியாவில் வரிசையாகக் களமிறங்கும் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்; முழு விவரம்
இந்திய எலக்ட்ரிக் இரு சக்கர வாகன சந்தையில் முன்னணி நிறுவனமான ஏத்தர் எனர்ஜி, தனது புதிய இஎல் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ள கோனார்க் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஆகஸ்ட் 29 அன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யவுள்ளது.
காரின் கண்கள் vs காரின் குரல்! V2V மற்றும் ADAS தொழில்நுட்பங்களின் வித்தியாசம் என்ன? 2028 மத்திய அரசின் அதிரடி திட்டம்
சாலையில் வாகன விபத்துகளைத் தடுத்து பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் வாகனங்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் 'வி2வி' (V2V - Vehicle to Vehicle) தொழில்நுட்பத்தை 2028 அக்டோபர் 1 முதல் உற்பத்தியாகும் அனைத்து புதிய வாகனங்களிலும் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
400 கிமீ+ ரேஞ்ச் தரும் புதிய ஆடி A2 e-tron எலக்ட்ரிக் கார்; முழு விவரங்கள் இதோ!
ஆடி நிறுவனம் தனது தயாரிப்புகளிலேயே மிகக் குறைந்த மின்சாரத்தை செலவழித்து அதிக தூரம் செல்லக்கூடிய 'A2 e-tron' மாடலை இந்த ஆண்டின் இறுதிக்குள் உலகளவில் அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.
வாகன காப்பீடு இல்லையென்றால் பெட்ரோல், டீசல் கிடையாது: உச்ச நீதிமன்றம் புதிய திட்டம்
இந்தியாவில் காப்பீடு செய்யப்படாமல் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், சாலை பாதுகாப்பை உறுதி செய்யவும், செல்லுபடியாகும் இன்சூரன்ஸ் சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் வழங்க மறுக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவின் அடுத்த சாலை பாதுகாப்பு மேம்பாடு: நெருங்கி வந்தால் எச்சரிக்கை விடுக்கும் கார்கள்
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH), இந்தியாவில் வாகனங்களுக்கு இடையேயான (V2V) தகவல் தொடர்பு அமைப்புகளை படிப்படியாக செயல்படுத்த முன்மொழிந்துள்ளது.
குறைந்த விலையில் புதிய ஏதர் ஸ்கூட்டர்! ஆகஸ்ட் 29ல் களம் இறங்கும் ஏதர் EL பிளாட்பார்ம் ஸ்கூட்டர்
இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஏதர் எனர்ஜி, தனது புதிய இ.எல் (EL) பிளாட்பார்ம் அடிப்படையிலான எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் முதல் டீஸர் புகைப்படத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் தடுப்பில்லா சுங்கச்சாவடி முறை: TMCC 2.0 டிஜிட்டல் மையத்தை அமைக்கிறது NHAI
தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் நிற்காமல் பயணிக்கும் வகையில் தடுப்பில்லா சுங்கக் கட்டண முறையை கொண்டுவர இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) நடவடிக்கை எடுத்து வருகிறது.
10 நாட்களுக்கு மேல் எலக்ட்ரிக் பைக் ஓட்டாமல் நிறுத்தினால் பேட்டரி டெட் ஆகுமா? உண்மை இதுதான்
சமீபகாலமாக இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்பாடு அதிகரித்து வரும் வேளையில், பெரும்பாலான வாகன உரிமையாளர்களுக்கு எழும் முக்கிய சந்தேகம் என்னவென்றால், ஊருக்குச் செல்லும்போது அல்லது நீண்ட பயணங்களின் போது 10 நாட்களுக்கு மேல் எலக்ட்ரிக் பைக்கை ஓட்டாமல் நிறுத்தி வைத்தால் பேட்டரி முற்றிலும் பழுதாகி விடுமா என்பதாகும்.
தமிழ் உட்பட பல மொழிகளில் கிராக் ஏஐ! இந்தியாவில் 2026 டெஸ்லா மாடல் ஒய் கார் சோதனை ஓட்டம் தொடக்கம்
அமெரிக்காவின் பிரபல மின்சார வாகன உற்பத்தியாளரான டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் தனது 2026 மாடல் ஒய் பிரீமியம் ரியர்-வீல் டிரைவ் காரை அறிமுகப்படுத்தி சோதனை ஓட்டங்களை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
சந்தையைக் கலக்கும் ராயல் என்ஃபீல்டு! ஜூலை மாத விற்பனை 34% உயர்ந்து 1.18 லட்சம் யூனிட்களைக் கடந்தது
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கடந்த ஜூலை 2026 மாதத்தில் தனது ஒட்டுமொத்த மோட்டார் சைக்கிள் விற்பனையில் ஆண்டிற்கு 34 சதவீதம் வரை சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
சுங்கச்சாவடிகளில் நிறுத்தமில்லா பயணம்! ஃபாஸ்டேக் பயனர்கள் 6.23 கோடியாக உயர்வு! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு
இந்தியாவில் டிஜிட்டல் சுங்கக் கட்டண முறை அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், நாட்டில் பயன்பாட்டில் உள்ள ஆக்டிவ் ஃபாஸ்டேக் பயனர்களின் எண்ணிக்கை 6.23 கோடியாக உயர்ந்துள்ளது.
டாடா மோட்டார்ஸ்தான் உலகின் மிகவும் ஆற்றல் திறன்மிக்க மின்சார வாகனத் தயாரிப்பாளராம்
சர்வதேச தூய்மையான போக்குவரத்து கவுன்சிலின் (ICCT) 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய வாகன உற்பத்தியாளர் தரவரிசையின்படி, டாடா மோட்டார்ஸ் உலகின் மிகவும் ஆற்றல் திறன்மிக்க மின்சார வாகன (EV) உற்பத்தியாளராக உருவெடுத்துள்ளது.
சியோமியின் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி 1,700 கி.மீ-க்கும் அதிகமான பயண வரம்பை வழங்குகிறது
சியோமி தனது சமீபத்திய எலக்ட்ரிக் எஸ்யூவியான ஸ்கைநோமட் N90 மேக்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது.
இப்படி செய்தால் E20 பெட்ரோல் போட்டால் கார் இன்ஜின் பழுதாகாது: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம்
2016-க்கு முன் தயாரிக்கப்பட்ட பழைய பிஎஸ்-III (BS-III) வாகனங்களில் E20 பெட்ரோல் பயன்படுத்தும் போது, அவற்றின் சில ரப்பர் பாகங்கள் மற்றும் கேஸ்கட்களை மாற்ற வேண்டியிருக்கலாம் என்றும், ஆனால் இது வாகனத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டைப் பாதிக்காது என்றும் மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.
வண்டி ஓட்டும் போது முன்னால் உள்ள பள்ளங்கள் குறித்து எச்சரிக்கும் ஏதர் இ-ஸ்கூட்டர்கள்
ஏதர் எனர்ஜி, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனது 'குழிப்பாதை+ எச்சரிக்கை' (Pothole+ Alerts) அம்சத்தை, தேர்ந்தெடுக்கப்பட்ட சில மின்சார ஸ்கூட்டர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜனாதிபதியின் வாகன அணிவகுப்பிற்காக 250 கேடிலாக் எஸ்கலேட் எஸ்யூவி கார்களை டிரம்ப் வாங்கியுள்ளார்
தனது ஜனாதிபதி வாகன அணிவகுப்பில் சேர்ப்பதற்காக, வெள்ளை மாளிகை 250 கேடிலாக் எஸ்கலேட் எஸ்யூவி கார்களுக்கு ஆர்டர் செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளிப்படுத்தியுள்ளார்.
உயரம் கம்மியா இருக்கீங்களா? உங்களுக்காகவே மிகக் குறைந்த சீட் உயரம் கொண்ட டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்
இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், வாகனத்தின் வடிவமைப்பு மற்றும் சீட் உயரம் ஆகியவை வாடிக்கையாளர்களின் முக்கியமான தேர்வுக்கான காரணியாக மாறியுள்ளன.
40% சுங்கக் கட்டணம் குறைகிறது: புதிய சுங்கக் கட்டணக் கணக்கீட்டு முறையை அறிமுகம் செய்தது NHAI
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள் மற்றும் உயர்த்தப்பட்டப் பாதைகள் நிறைந்த நெடுஞ்சாலைகளுக்கான சுங்கக் கட்டணத்தை கணக்கிடும் முறையில் புதிய திருத்தத்தை கொண்டுவந்துள்ளது.
மெக்கானிக்கல் இணைப்பு தேவையில்லை! கார்களில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் ஸ்டீயர் பை ஒயர் தொழில்நுட்பம் பாதுகாப்பானதா?
ஆட்டோமொபைல் துறையில் அதிநவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சி நாள்தோறும் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது.
வெறும் 85 கார்கள் மட்டுமே! இந்தியாவில் அறிமுகமானது ஜீப் மெரிடியன் 85வது அனிவர்சரி எடிஷன்! என்னென்ன சிறப்பு அம்சங்கள்?
ஜீப் நிறுவனம் உலகளவில் தனது 85 ஆண்டு கால பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில், இந்தியாவில் தனது பிரபல 7-சீட்டர் எஸ்யூவியான ஜீப் மெரிடியன் 85வது அனிவர்சரி எடிஷன் சிறப்புப் பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
EV ஸ்கூட்டர் வாங்குனா பணம் மிச்சமா? பெட்ரோல் பைக்கை விட பராமரிப்பு செலவு கம்மியா? மறைமுகமாக இருக்கும் ஷாக்கிங் கணக்கு
சாதாரண பெட்ரோல் பைக்கோடு ஒப்பிடும் போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் என்ஜின், ஸ்பார்க் பிளக், கியர்பாக்ஸ் மற்றும் கிளட்ச் பிளேட் போன்ற நூற்றுக்கணக்கான இயங்கும் பாகங்கள் கிடையாது.
இந்தியாவில் 14 புதிய கார்களைக் களம் இறக்கும் பிஎம்டபிள்யூ! 50 நகரங்களுக்கு ஷோரூம்களை விரிவுபடுத்த அதிரடி திட்டம்
இந்திய சொகுசு கார் சந்தையில் முன்னணியில் இருக்கும் பிஎம்டபிள்யூ குழுமம், தனது சாதனை விற்பனை வேகத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் மிகப்பெரிய வணிக விரிவாக்கத் திட்டத்தை அறிவித்துள்ளது.
மெர்சிடீஸ் நிறுவனத்தின் புதிய ஏஎம்ஜி E53 பிளக்-இன் ஹைப்ரிட்! சொகுசு காரின் விலை மற்றும் சிறப்பம்சங்கள்
மெர்சிடீஸ்-பென்ஸ் நிறுவனம் தனது சக்திவாய்ந்த ஏஎம்ஜி E53 ஹைப்ரிட் 4மேட்டிக்+ (AMG E53 Hybrid 4MATIC+) சொகுசு காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
கார் வாங்கப் போறீங்களா? ஆகஸ்ட் 1 முதல் மாருதி கார்களின் விலை உயர்கிறது
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, தனது அனைத்து முன்னணி கார் மாடல்களின் விலையையும் ஆகஸ்ட் 2026 முதல் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
E20 உங்கள் பழைய வாகனத்தின் மைலேஜை 3-5% வரை குறைக்கக்கூடும்
புதிய 20% எத்தனால் கலந்த பெட்ரோல் (E20), சில பழைய வாகனங்களின் எரிபொருள் செயல்திறனில் சிறிதளவு குறைவை ஏற்படுத்தக்கூடும் என்று இந்திய அரசு வெளிப்படுத்தியுள்ளது.
ஸ்கூட்டர் மார்க்கெட்டிலும் களம் இறங்கும் கார் நிறுவனம்! இந்தியாவில் பேடன்ட் பெற்றது வின்ஃபாஸ்ட் வைப்பர்
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மின்சார வாகன சந்தையைக் குறிவைத்து, வியட்நாமின் பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான வின்ஃபாஸ்ட் தனது புதிய வைப்பர் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான வடிவமைப்பு காப்புரிமையை (Design Patent) பதிவு செய்துள்ளது.
இனி கார் டேஷ்போர்டை பார்க்கத் தேவையில்லை! ஆண்ட்ராய்டு ஆட்டோ கூகுள் மேப்ஸில் ஸ்பீடோமீட்டர் வசதி அறிமுகம்
ஆண்ட்ராய்டு ஆட்டோ அமைப்பைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் நீண்ட காலமாகக் கோரி வந்த ஸ்பீடோமீட்டர் அம்சத்தை கூகுள் மேப்ஸ் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக வெளியிடத் தொடங்கியுள்ளது.
ஹெல்மெட்டை பைக் மிரரில் மாட்டிச் செல்கிறீர்களா? உயிருக்கே ஆபத்தாகும் பெரிய தவறு! பலரும் அறியாத உண்மை
இன்றைய காலகட்டத்தில் இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது சட்டப்பூர்வமான விதிமுறை மட்டுமல்ல, அது உயிரைக் காக்கும் கவசமும் ஆகும்.
கார் நிறுவனங்களுக்கு மைலேஜ் செக் வைக்கும் மத்திய அரசு! அறிமுகமாகிறது புதிய CAFE 3 விதிகள்
இந்தியாவில் கார்களின் எரிபொருள் செயல்திறனை (மைலேஜ்) கணிசமாக உயர்த்தவும், கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு புதிய கேஃபே 3 (CAFE-III) வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் காப்புரிமை பெற்ற மஹிந்திரா விஷன் T! தயாரிப்புக்கு ரெடியாகும் புதிய ஆஃப்-ரோடு எஸ்யூவி
இந்தியாவின் முன்னணி எஸ்யூவி தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா, தனது புதிய தலைமுறை கான்செப்ட் மாடலான விஷன் T காரின் டிசைன் காப்புரிமையை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளது.
ஜெர்மனி சந்தையில் காலடி எடுத்து வைத்த ஹீரோ மோட்டோகார்ப்! எக்ஸ்பல்ஸ் 200 4வி அறிமுகம்! விலை இவ்வளவு லட்சமா?
இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், தனது சர்வதேச வர்த்தகத்தை விரிவுபடுத்தும் நோக்கில் ஜெர்மனி நாட்டு சந்தையில் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளது.
இவி ஸ்கூட்டர் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் உண்மை என்ன? பேட்டரி சார்ஜ் ஆகுமா? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
தற்பொழுது ஆட்டோமொபைல் உலகில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கச் செல்லும் எவரொருவரையும் கவரும் ஒரு முக்கிய வார்த்தை இந்த ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் ஆகும்.
"இனிமே கை வலிக்காது..." புதிய அசிஸ்ட் & ஸ்லிப்பர் கிளட்ச் வசதியுடன் வெளியான ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350
இந்திய இரு சக்கர வாகன சந்தையில் அசைக்க முடியாத நன்மதிப்பைப் பெற்றுள்ள ராயல் என்ஃபீல்டு நிறுவனம், தனது அதிகம் விற்பனையாகும் மாடலான கிளாசிக் 350 பைக்கை இரண்டு மிக முக்கியமான புதிய அப்டேட்களுடன் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
பருவமழைக் காலத்தில் E20 எரிபொருளால் வாகனங்கள் பழுதடையுமா? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
பருவமழைக் காலத்தில் E20 எரிபொருளில் ஏற்படும் கலப்படம் குறித்து பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
E20 அறிமுகத்திற்கு பிறகு 60% கார் உரிமையாளர்கள் மைலேஜ் குறைந்ததாக தெரிவிக்கின்றனர்: கணக்கெடுப்பு
லோக்கல்சர்க்கிள்ஸ் நடத்திய சமீபத்திய கணக்கெடுப்பில், 2023-24 காலகட்டத்தில் தங்கள் கார்களை வாங்கிய பெட்ரோல் வாகன உரிமையாளர்களில் கிட்டத்தட்ட 60% பேர், மைலேஜில் குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் 2032-ஆம் ஆண்டுக்குள் EVகளின் எண்ணிக்கை 30.4 மில்லியனாக உயரக்கூடும்
இந்திய எரிசக்தி சேமிப்புக் கூட்டமைப்பின் (IESA) அறிக்கை ஒன்றின்படி, இந்தியாவின் மின்சார வாகன (EV) சந்தை 2032-ஆம் ஆண்டுக்குள் 12 மடங்கு வளர்ச்சி அடையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
ரெனால்ட் டஸ்டர் அட்வென்ச்சர் எடிஷன் ₹13 லட்சத்திற்கு அறிமுகம்
ரெனால்ட் இந்தியா, தனது பிரபலமான எஸ்யூவியின் சிறப்புப் பதிப்பான டஸ்டர் அட்வென்ச்சர் எடிஷனை, ₹12.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
தனது கார்கள் E20 எரிபொருளுடன் இணக்கமானவை என்று கூறும் மெர்சிடிஸ்-பென்ஸ்
மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா, தனது பிஎஸ் VI பெட்ரோல் வாகனங்கள் E20 எரிபொருளுடன் இணக்கமாக இருப்பது குறித்து ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது.