LOADING...
ஈரான் - அமெரிக்கா போர்: அணுசக்தி மையங்கள் தாக்கப்பட்டதாக புகார்
ஈரானின் அணுசக்தி மையங்கள் தாக்கப்பட்டதாக புகார்

ஈரான் - அமெரிக்கா போர்: அணுசக்தி மையங்கள் தாக்கப்பட்டதாக புகார்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 02, 2026
05:00 pm

செய்தி முன்னோட்டம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி மையத்தின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இது "சட்டவிரோதமான மற்றும் கொடூரமான தாக்குதல்" என சர்வதேச அணுசக்தி முகமைக்கான (IAEA) ஈரானிய தூதர் ரெசா நஜாபி தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பேசிய சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர் ரஃபேல் குரோஸி, "ஈரானின் அணுசக்தி மையங்கள் சேதமடைந்ததற்கான எந்த ஆதாரமும் தற்போது வரை இல்லை. அண்டை நாடுகளில் கதிரியக்க அளவு (Radiation levels) அதிகரிக்கவில்லை" என்று கூறினார். எனினும், ஈரானிய அணுசக்தி அதிகாரிகளை தொடர்பு கொள்ள எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்ததால், தற்போதைய சூழல் கவலையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தகவல்கள்

போர் விவரங்கள்

ஈரானிய Red Crescent தகவல்படி, ஈரானில் இதுவரை 555 பேர் கொல்லப்பட்டுள்ளனர். லெபனானில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். "ஈரான் மீதான இந்த ராணுவ நடவடிக்கை உலக வரலாற்றிலேயே மிகவும் சிக்கலானது. எங்களது இலக்குகள் எட்டப்படும் வரை தாக்குதல் தொடரும்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மறுபுறம், "அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது" என்று ஈரானின் உயர் பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பாதிப்பு

உலகளாவிய பாதிப்புகள்

இந்தப் போரால் சுயஸ் கால்வாய் வழியாக செல்லும் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தால் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அணுசக்தி மையங்கள் மீதான தாக்குதல் உறுதி செய்யப்பட்டால், ஒரு பெரிய நகரத்தையே காலி செய்யும் அளவிற்கு கதிரியக்க பாதிப்பு ஏற்படக்கூடும் என ஐநா எச்சரித்துள்ளது.

Advertisement