LOADING...
மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் $100 தாண்டியது கச்சா எண்ணெய் விலை; பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் வருமா?
100 டாலரைத் தாண்டியது கச்சா எண்ணெய் விலை

மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் $100 தாண்டியது கச்சா எண்ணெய் விலை; பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் வருமா?

எழுதியவர் Sekar Chinnappan
Mar 09, 2026
08:11 am

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) வர்த்தகத்தின் போது, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு $107.97 ஆக அதிகரித்தது. இது வெள்ளிக்கிழமை நிலவரத்தை விட 16.5% அதிகமாகும். கடைசியாக 2022 ஜூலை மாதத்தில் தான் கச்சா எண்ணெய் விலை இந்த $100 அளவைத் தாண்டி வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.

பாதிப்பு

உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பாதிப்பு

ஈரான் மீதான போர் நடவடிக்கைகளால் எண்ணெய் உற்பத்தி மற்றும் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உலகின் 20% எண்ணெய் விநியோகம் நடைபெறும் இந்தப் பாதையில், ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் அச்சத்தால் கப்பல் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. ஏற்றுமதி செய்ய முடியாத சூழல் நிலவுவதால் ஈராக், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் தங்கள் எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துள்ளது. ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பரஸ்பரம் எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவது விநியோகச் சங்கிலியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா

அமெரிக்க கச்சா எண்ணெய் விலை உயர்வு

அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் கச்சா எண்ணெய் விலையும் 16.9% உயர்ந்து பேரல் ஒன்றுக்கு $106.22 ஆக விற்பனையாகிறது. கடந்த வாரம் மட்டும் அமெரிக்க கச்சா எண்ணெய் விலை 36% வரை உயர்ந்திருப்பது உலகப் பொருளாதாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெர்சிய வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் கொண்டு வருவதில் ஏற்பட்டுள்ள சிக்கலே இந்தத் திடீர் விலையேற்றத்திற்குக் காரணமாகும்.

Advertisement

தாக்கம்

உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம்

கச்சா எண்ணெய் விலை உயர்வு சர்வதேச நிதிச் சந்தைகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எரிசக்தி செலவுகள் அதிகரிப்பது உலகளவில் பணவீக்கத்தை அதிகரிக்கக்கூடும். பெட்ரோல், டீசல் விலை உயர்வதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து, நுகர்வோரின் வாங்கும் திறன் குறைய வாய்ப்புள்ளது. இது அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை முடக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

Advertisement