சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்; முதல்வர் இரங்கல்
புகழ்பெற்ற தமிழ் இலக்கிய ஆளுமையும், கவிஞருமான ஈரோடு தமிழன்பன் இன்று சனிக்கிழமை (நவம்பர் 22) தனது 92வது வயதில் உடல்நலக் குறைவால் காலமானார்.
சீரான கல்லீரல் செயல்பாட்டுக்கு லிவர் டிடாக்ஸ் சப்ளிமெண்ட்ஸ் அவசியமா? நிபுணர்கள் சொல்வதைக் கேளுங்க
கல்லீரலைச் சுத்தம் செய்வதாகக் கூறி விற்கப்படும் லிவர் டிடாக்ஸ் சப்ளிமெண்ட்ஸ் எனப்படும் மாத்திரைகள் மற்றும் மூலிகைச் சேர்க்கைகள், இந்தியாவில் பரவலாகக் கிடைக்கின்றன.
சினிமாவின் என்சைக்ளோபீடியா; சுந்தர் சி விலகலுக்கு பிறகு கமல்ஹாசன் குறித்து குஷ்பு கருத்து
சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் (IFFI) பங்கேற்ற நடிகை குஷ்பு சுந்தர், நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை சுஹாசினி மணிரத்னம் ஆகியோரை விமான நிலையத்தில் சந்தித்துள்ளார்.
புதுமைப் பெண் திட்டத்தில் அதிக பயனாளிகள் உள்ள டாப் 5 மாவட்டங்கள் இவைதான்; திட்டக்குழு தகவல்
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி தொடர ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் 'புதுமைப் பெண்' திட்டத்தில் அதிகப் பயனாளிகளைக் கொண்ட முதல் ஐந்து மாவட்டங்களின் பட்டியலை மாநிலத் திட்டக்குழு வெளியிட்டுள்ளது.
ஜி20 உச்சி மாநாடு: ஆப்பிரிக்காவில் 3 முக்கியத் திட்டங்களை வெளியிட்ட பிரதமர் மோடி
ஆப்பிரிக்காவில் முதன்முறையாக நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின் தொடக்க அமர்வில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, உலகளாவிய வளர்ச்சிக் கட்டமைப்புகளை மறுபரிசீலனை செய்ய அழைப்பு விடுத்ததுடன், அறிவுப் பகிர்வு, திறன் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவது ஆகிய மூன்று முக்கியத் திட்டங்களை வெளியிட்டார்.
சக்கரவியூகம் போன்ற விவாத வலைகள்: முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் கருத்து
இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து கடந்த ஜூலை 2025 இல் ராஜினாமா செய்த பிறகு, ஜக்தீப் தன்கர் முதல் முறையாகப் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9: இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் இவரா?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி 47 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த வாரத்திற்கான வெளியேற்றம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இனி கிராஜுவிட்டி பெற 5 ஆண்டுகள் தேவையில்லை; புதிய தொழிலாளர் சட்டத்தில் ஒரு ஆண்டாகக் குறைப்பு
மத்திய அரசு தொழிலாளர் சட்டங்களில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, நிரந்தரமல்லாத நிலையான கால ஊழியர்கள் (Fixed-Term Employees) கிராஜூவிட்டி (Gratuity) பெறுவதற்கான குறைந்தபட்ச சேவைக்காலம் ஐந்து ஆண்டுகளில் இருந்து ஓராண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது.
உங்கள் காரின் ஏசி வென்ட்களைச் சுத்தம் செய்வது எப்படி? ஆரோக்கியமான பயணத்திற்கான எளிய வழிமுறைகள்
காரில் உள்ள ஏசி (Air Conditioning) அமைப்பின் வென்ட்கள் (Vents) எளிதில் தூசி மற்றும் அழுக்குகளைச் சேகரித்து, அசுத்தமான காற்றை கார் உள்ளே அனுப்பும்.
நிதியமைச்சரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி சைபர் கிரைம் மோசடி: ஓய்வுபெற்ற நபரிடம் ₹1.47 கோடி அபேஸ்
மும்பையில், ஓய்வுபெற்ற ஒருவரிடம் போலி பங்குச் சந்தை வர்த்தகத் திட்டங்கள் மூலம் ₹1.47 கோடி ரூபாய் மோசடி செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஜிமெயில் தகவல்களைப் பயன்படுத்தி ஏஐ பயிற்சி: வைரலாகும் வதந்திகளுக்கு கூகுள் மறுப்பு
ஜிமெயில் பயனர்களின் தனிப்பட்ட மின்னஞ்சல் தரவுகளைப் பயன்படுத்தி, தனது ஜெமினி ஏஐ (செயற்கை நுண்ணறிவு) மாதிரியை ரகசியமாகப் பயிற்றுவிப்பதாகப் பரவி வரும் வதந்திகளை கூகுள் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
100 நாள் வேலைத் திட்டம்: 99.67% தொழிலாளர்களின் ஆதார் விவரங்கள் உறுதி' வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MGNREGA) கீழ் பணியாற்றும் 99.67% தொழிலாளர்களின் ஆதார் விவரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜி20 உச்சி மாநாடு: தென்னாப்பிரிக்காவில் இருந்து தமிழில் ட்வீட் செய்த மோடி; பின்னணி என்ன?
ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்கச் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள இந்திய வம்சாவளியினரின் கலாசார நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்ததுடன், அவர்களின் உணர்வுகளைப் பாராட்டித் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
காற்று மாசுபாட்டால் மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்; நிபுணர்கள் எச்சரிக்கை
இந்தியாவில் முன்பு குளிர்காலம் என்பது பனிமூட்டத்துடன் கூடிய இதமான காலமாக இருந்தது.
வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகம், புதுச்சேரிக்கு கனமழை எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சனிக்கிழமை (நவம்பர் 22) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என்றும், அது வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஷாக்; இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் வெள்ளி விலைகள்; இன்றைய நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை சனிக்கிழமை (நவம்பர் 22) உயர்ந்துள்ளது.
18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்... சென்னையில் டபுள் டக்கர் பேருந்துகள் விரைவில் அறிமுகம்
சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னை மாநகரில் மீண்டும் இரட்டை அடுக்கு கொண்ட டபுள் டக்கர் (Double Decker) பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாநகரப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
38வது கேப்டனாகிறார் ரிஷப் பண்ட்; அதிக டெஸ்ட் கேப்டன்களைக் கொண்ட அணிகளில் இந்தியாவுக்கு எந்த இடம்?
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், வழக்கமான கேப்டன் ஷுப்மன் கில் கழுத்துச் சுளுக்கு (neck spasm) காரணமாக விலகியதைத் தொடர்ந்து, விக்கெட் கீப்பர்-பேட்டரான ரிஷப் பண்ட் இந்திய அணியை வழிநடத்தவுள்ளார்.
பிரீமியர் லீக் அணிகளுக்கான விதிகள் மாற்றியமைப்பு; 2026-27 சீசனில் அமலுக்கு வருகிறது
பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகளில் அடுத்த 2026-27 சீசன் முதல் புதிய செலவு வரம்புகளை (Spending Caps) அறிமுகப்படுத்த நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
நைஜீரியாவில் பயங்கரம்: கத்தோலிக்கப் பள்ளியில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் கடத்தல்
ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவின் வடக்குப் பகுதிகளில் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், நைஜர் மாகாணத்தில் உள்ள அகவாரா சமூகத்தில் அமைந்துள்ள செயின்ட் மேரி கத்தோலிக்கப் பள்ளியில் நேற்று அதிகாலையில் ஆயுதம் தாங்கிய கும்பல் புகுந்து, 215 மாணவ மாணவிகளையும் 12 ஆசிரியர்களையும் கடத்திச் சென்றுள்ளனர்.
ஆஃப்-ரோடு அம்சங்களுடன் புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மனா பிளாக் எடிஷன் அறிமுகம்
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது பிரபலமான ஹிமாலயன் 450 மோட்டார்சைக்கிளின் சிறப்புப் பதிப்பான மனா பிளாக் எடிஷன் மாடலை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
கர்ப்ப காலத்தில் சளி, காய்ச்சலுக்கு இஞ்சி, தேன், மூலிகை தேநீர் பாதுகாப்பானதா? நிபுணர்களின் ஆலோசனை
கர்ப்ப காலத்தில் ஏற்படும் லேசான சளி மற்றும் காய்ச்சல் தாய்மார்களுக்குக் கவலையை ஏற்படுத்தும்.
உள்நாட்டு மருத்துவ சாதனங்களில் பாகுபாடு கூடாது: மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு உத்தரவு
இந்திய மருத்துவச் சாதனங்களுக்கான உச்ச கண்காணிப்பு அமைப்பான மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO), மருத்துவமனைகள் இறக்குமதி செய்யப்பட்ட சாதனங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதைக் கண்டித்து ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மூன்று பேரும் குற்றவாளிகள்தான்; பவாரியா கும்பல் வழக்கில் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கில் தொடர்புடைய பவாரியா கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் குற்றவாளிகள் எனச் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) தீர்ப்பளித்துள்ளது.
துபாய் விமானக் கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜாஸ் போர் விமானம் விபத்து; விமானி உயிரிழப்பு
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற துபாய் விமானக் கண்காட்சி 2025 இல் சாகசப் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய விமானப்படையின் தேஜாஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானது.
சமூக ஊடகங்களில் இளையராஜா பெயர், புகைப்படத்தைப் பயன்படுத்த இடைக்காலத் தடை; உயர் நீதிமன்றம் உத்தரவு
பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படம் மற்றும் தனிப்பட்ட அடையாளங்களைப் பயன்படுத்த, யூடியூப், ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.