Loading...

Sekar Chinnappan

Sekar Chinnappan
சமீபத்திய செய்திகள்

சூர்யா படக் கதையைக் கேட்டு ஜோதிகா சொன்ன 'அந்த' ஒரு விஷயம்! விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட ரகசியத்தை உடைத்த இயக்குனர்

நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகவும் அதிகரித்து வருகிறது.

26 Jul 2026
ரஷ்யா

ரஷ்யா - உக்ரைன் இடையே தீவிரமடையும் ட்ரோன் தாக்குதல்: சிறுவர்கள் உட்பட 15 பேர் பலி!

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் போரில், இரு நாடுகளும் பரஸ்பரம் நடத்திய தீவிர ட்ரோன் தாக்குதல்களில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஐசிசி தரவரிசையில் மீண்டும் நம்பர் 1! ஜிம்பாப்வே தொடரை வென்று கெத்து காட்டிய இந்திய கிரிக்கெட் அணி

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணி, 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர்! 18 வயது அனஹத் சிங் சாதனை

கனடாவில் உள்ள நயாகரா-ஆன்-தி-லேக் நகரில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான ஜூனியர் ஸ்குவாஷ் உலக சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான 18 வயதான அனஹத் சிங் தங்கப் பதக்கம் வென்று புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.

ஆன்லைன் ரம்மியால் ரூ.19,984 கோடி பணமோசடி! கேம்ஸ்கிராஃப்ட் நிறுவனர்கள் 3 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

பிரபல ஆன்லைன் கேமிங் நிறுவனமான கேம்ஸ்கிராஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர்களான விகாஸ் தனேஜா, பிரித்வி ராஜ் சிங் மற்றும் தீபக் சிங் அஹ்லாவத் ஆகிய 3 பேர் மீதும், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் (PMLA) கீழ் அமலாக்கத்துறை சனிக்கிழமை (ஜூலை 25) பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

சவுதி அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஹவுத்திகள் ஏவுகணைத் தாக்குதல்! அமெரிக்கா தாக்குதலை நிறுத்தக் காரணம் என்ன?

ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், செங்கடல் பகுதியில் அமைந்துள்ள சவுதி அரேபியாவின் அரசுக்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் ஜீசான் மற்றும் யான்பு நகரில் உள்ள தளங்களை இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டுகள் சிறை! ஜூலை 27ல் நாடாளுமன்றத்தில் 'பொதுத் தேர்வுகள் சட்டத் திருத்த மசோதா 2026' தாக்கல்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்புகள் மற்றும் மாணவர்களின் போராட்டங்களைத் தொடர்ந்து, மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.

உலகக் கோப்பை ரோயிங்கில் இந்தியா பெற்ற வரலாற்று தங்கப் பதக்கம் பறிமுதல்: ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய வீரர் லக்‌ஷய்

கடந்த ஜூன் மாதம் சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை ரோயிங் போட்டியில், லைட்வெயிட் ஆடவர் டபுள் ஸ்கல்ஸ் பிரிவில் இந்தியா தனது முதல் வரலாற்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி சாதனை படைத்தது.

புதிய மத்திய கல்வி அமைச்சராக பிரஹலாத் ஜோஷி நியமனம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு சர்ச்சையைத் தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார்.

25 Jul 2026
யுபிஐ

இனி நெட்வொர்க் இல்லனாலும் கவலையே இல்ல! இன்டர்நெட் இல்லாமலேயே யுபிஐ மூலம் பணம் அனுப்பலாம்! என்பிசிஐயின் புதிய அம்சம்

இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்டர்நெட் இணைப்பு இல்லாமலேயே யுபிஐ மூலம் பணம் செலுத்தும் புதிய தொழில்நுட்ப வசதியை இந்திய தேசிய கட்டண நிறுவனம் (என்பிசிஐ) அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது.

25 Jul 2026
போராட்டம்

மத்திய அரசு அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றதால் போராட்டத்தை திரும்பப் பெற்றது CJP

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையில் நடைபெற்று வந்த நாடு தழுவிய போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

25 Jul 2026
எஸ்யூவி

வெறும் 85 கார்கள் மட்டுமே! இந்தியாவில் அறிமுகமானது ஜீப் மெரிடியன் 85வது அனிவர்சரி எடிஷன்! என்னென்ன சிறப்பு அம்சங்கள்?

ஜீப் நிறுவனம் உலகளவில் தனது 85 ஆண்டு கால பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில், இந்தியாவில் தனது பிரபல 7-சீட்டர் எஸ்யூவியான ஜீப் மெரிடியன் 85வது அனிவர்சரி எடிஷன் சிறப்புப் பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

Hugging Face நிறுவனத்தில் புகுந்து பல நாட்கள் ரகசியமாக ஹேக்கிங் செய்த ஓபன்ஏஐ ஏஜென்ட்! பகீர் பின்னணி

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையின் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ உருவாக்கிய சுயமாக இயங்கும் ஏஐ ஏஜென்ட், Hugging Face நிறுவனத்தின் சிஸ்டத்திற்குள் புகுந்து பல நாட்கள் ஹேக்கிங் தாக்குதலில் ஈடுபட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

ShakthiSAT செயற்கைக்கோள் திட்டத்திற்குத் தேர்வு; 14 வயது அரசு பள்ளி மாணவி சாதனை

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதான கந்துலா ஜெஸ்ஸி என்ற அரசுப் பள்ளி மாணவி, சர்வதேச விண்வெளித் திட்டமான மிஷன் சக்திசாட் (Mission ShakthiSAT) செயற்கைக்கோள் உருவாக்கக் குழுவில் பங்கேற்கத் தேர்வாகி சாதனை படைத்துள்ளார்.

பாபி பின் பயன்பாடுகள்: உங்களை அசரவைக்கும் சில டிப்ஸ்!

பாபி பின்கள் என்பது பெரும்பாலும் பெண்களின் ஹேர் கேர் விஷயங்களில் முக்கிய இடம் பிடிக்கும் ஒரு பொருள்.

25 Jul 2026
ஐஐடி

ஐஐடி மெட்ராஸ் வழங்கும் 1 வார ஏஐ பயிற்சிப் பாடத்திட்டம்! சிறந்த ஸ்டார்ட்அப் ஐடியாவுக்கு ₹4 லட்சம் பரிசு

சென்னை ஐஐடியில் இயங்கி வரும் வத்வானி தரவு அறிவியல் மற்றும் ஏஐ பள்ளி, வெற்றிகரமான ஏஐ ஸ்டார்ட்அப் உருவாக்குவது எப்படி? என்ற தலைப்பிலான 1 வார நேரடிப் பயிற்சிப் பாடத்திட்டத்தை அறிவித்துள்ளது.

வீட்டிலேயே எக்கினேசியா வளர்ப்பது எப்படி? எளிய பராமரிப்பு குறிப்புகள்

எக்கினேசியா அல்லது கூம்பு மலர் என்று அழைக்கப்படும் இந்தச் செடி, எந்தத் தோட்டத்திற்கும் அழகிய நிறங்களைச் சேர்க்கக்கூடிய ஒரு வலிமையான பல்லாண்டு தாவரமாகும்.

25 Jul 2026
ஐநா சபை

டெல்லி மாணவர்கள் போராட்டம் குறித்து ஐநா செய்தித் தொடர்பாளர் கருத்து

புதுடெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) உட்பட பல அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.

மாணவர் போராட்டங்களுக்குப் பணிந்தது அரசு! மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் தொடர்பாக நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் நடத்தி வந்த தீவிர போராட்டங்களின் எதிரொலியாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சுவையான ஏலக்காய் ரெசிபிகள்: நறுமணமும் சுவையும் நிறைந்த 5 எளிய உணவுகள்

மணம் நிறைந்த ஏலக்காய், அதன் தனித்துவமான சுவை மற்றும் நறுமணத்திற்காக பல வீடுகளில் சமையலுக்கு முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது.

25 Jul 2026
பாமக

அரசியலில் இருந்து விலகினார் மருத்துவர் ராமதாஸ்! பாமகவை இனி அன்புமணி ராமதாஸ் பார்த்துக் கொள்வார் என அறிவிப்பு

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனருமான மருத்துவர் எஸ்.ராமதாஸ், தனது வயது மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.