LOADING...
ஈரான் போரால் உக்ரைனுக்கு ஆபத்து? ஏவுகணை தட்டுப்பாட்டை சாதகமாக்கும் ரஷ்யா
ஏவுகணைகள் திருப்பி விடப்படுவதால், ரஷ்யா இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது

ஈரான் போரால் உக்ரைனுக்கு ஆபத்து? ஏவுகணை தட்டுப்பாட்டை சாதகமாக்கும் ரஷ்யா

எழுதியவர் Venkatalakshmi V
Mar 05, 2026
03:30 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள நேரடிப் போர், உக்ரைனின் வான் பாதுகாப்பு அரணை நிலைகுலைய செய்துள்ளதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். உக்ரைன் நம்பியிருக்கும் 'பாட்ரியாட்' ரக ஏவுகணைகள் தற்போது மத்திய கிழக்கு போருக்குத் திருப்பி விடப்படுவதால், ரஷ்யா இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது.

தட்டுப்பாடு

ஏவுகணைத் தட்டுப்பாடு

ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்க உக்ரைனுக்கு மாதம் 60 'PAC-3' ரக இடைமறிப்பு ஏவுகணைகள் தேவைப்படுகின்றன. ஆனால், ஈரானின் 2,000-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 500 பாலிஸ்டிக் ஏவுகணைகளை சமாளிக்க, அமெரிக்கா தனது கையிருப்பில் உள்ள ஏவுகணைகளை வளைகுடா நாடுகளுக்கு அனுப்பி வருகிறது. ஒரு ரஷ்ய ஏவுகணையை வீழ்த்த இரண்டு அமெரிக்க ஏவுகணைகள் தேவைப்படும் நிலையில், உற்பத்தி வேகத்தை விடப் பயன்பாடு பலமடங்கு அதிகரித்துள்ளது.

வியூகம்

ரஷ்யாவின் வியூகம்

உக்ரைனின் வான் பாதுகாப்பு பலவீனமடைந்துள்ளதை அறிந்த ரஷ்யா, அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் முக்கியக் கட்டமைப்புகள் மீது சரமாரித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனின் பல நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன. மேலும், ஈரான் தொழில்நுட்ப உதவியுடன் ரஷ்யாவிலேயே தயாரிக்கப்படும் 'ஷாஹித்' ரக ட்ரோன்கள் உக்ரைனின் பாதுகாப்பு வளையத்தை தகர்த்து வருகின்றன.

Advertisement

கவலை

ஜெலன்ஸ்கி கவலை

இது குறித்துப் பேசிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, புதிய புவிசார் அரசியல் மோதல்கள் (ஈரான் - அமெரிக்கா போர்) உக்ரைனுக்கான ஆயுத விநியோகத்தைத் தடுத்துவிடக் கூடாது என ஐரோப்பிய நாடுகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் ஏவுகணை உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டிருந்தாலும், அது நடைமுறைக்கு வர இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்பதால் உக்ரைனின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

Advertisement