கிரிக்கெட்: செய்தி
பிக் பாஸ் சம்யுக்தா, கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த்தை திருமணம் செய்து கொண்டார்
பிக் பாஸ் தமிழ் சீசன் 4 மூலம் பிரபலமான நடிகை மற்றும் மாடல் அழகியான சம்யுக்தா, முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்தை விரைவில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக முன்னர் நாங்கள் செய்தி வெளியிட்டிருந்தோம்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இன்னும் வாய்ப்பிருக்கிறதா? இந்தியாவின் நிலை இதுதான்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 0-2 என்ற கணக்கில் தொடர்ச்சியாகத் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, 2025-27 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளிப் பட்டியலில் இந்தியாவுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
2026 டி20 உலகக் கோப்பைகான இடங்கள், குழுக்கள் அறிவிப்பு: விவரங்கள்
பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கும் 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பைக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
திடீரென நிறுத்தப்பட்ட ஸ்மிருதி மந்தனா திருமணம்? சமூக வலைத்தளத்திலிருந்து பதிவுகள் நீக்கம்
இசையமைப்பாளர் பலாஷ் முச்சால், கிரிக்கெட் வீரர் ஸ்மிருதி மந்தனாவை திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு ஏமாற்றியதாக இணையத்தில் வதந்திகள் பரவி வருகின்றன.
2026 டி20 உலகக்கோப்பை அட்டவணை வெளியீடு: எப்போது, எங்கே பார்க்கலாம்?
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் 2026 டி20 உலகக்கோப்பைக்கான அட்டவணை விவரங்கள் செவ்வாய் கிழமை (நவம்பர் 25) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று ஒளிபரப்பு உரிமையாளர்களான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
INDvsSA ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல்.ராகுல் நியமனம்; இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 23) அறிவித்துள்ளது.
மகளிர் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த இந்தியா: பார்வையற்றோருக்கான முதல் டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை
இலங்கையின் கொழும்பில் நடைபெற்ற முதலாவது பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், நேபாள அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
INDvsSA இரண்டாவது டெஸ்ட்: இந்தியாவுக்கு எதிராக இந்திய வம்சாவளி வீரர் செனுரன் முத்துசாமி சதம்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில், தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி செனுரன் முத்துசாமி அடித்த முதல் டெஸ்ட் சதத்தின் (109) உதவியுடன் முதல் இன்னிங்ஸில் 489 ரன்கள் குவித்து வலுவான நிலையை அடைந்தது.
தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் தள்ளிவைப்பு
இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் இசையமைப்பாளர் பலாஷ் முச்சால் ஆகியோரின் திருமணம், ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாகத் தற்காலிகமாகத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
123 வருட சாதனை முறியடிப்பு; நான்காவது இன்னிங்ஸில் அதிவேக சதம் அடித்து டிராவிஸ் ஹெட் உலக சாதனை
ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டிராவிஸ் ஹெட் மின்னல் வேகத்தில் சதம் விளாசிச் சாதனை படைத்துள்ளார்.
38வது கேப்டனாகிறார் ரிஷப் பண்ட்; அதிக டெஸ்ட் கேப்டன்களைக் கொண்ட அணிகளில் இந்தியாவுக்கு எந்த இடம்?
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், வழக்கமான கேப்டன் ஷுப்மன் கில் கழுத்துச் சுளுக்கு (neck spasm) காரணமாக விலகியதைத் தொடர்ந்து, விக்கெட் கீப்பர்-பேட்டரான ரிஷப் பண்ட் இந்திய அணியை வழிநடத்தவுள்ளார்.
INDvsSA இரண்டாவது டெஸ்டில் இருந்து ககிசோ ரபாடா விலகல்; தென்னாப்பிரிக்காவுக்கு பின்னடைவு
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ககிசோ ரபாடா, இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார்.
INDvsSA டெஸ்ட் தொடரிலிருந்து ஷுப்மன் கில் விடுவிப்பு; பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கௌஹாத்தியில் தொடங்கவிருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் காயம் காரணமாக அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எம்எஸ் தோனியால் கூட செய்ய முடியாத சாதனை; வரலாறு படைத்தார் வெஸ்ட் இண்டீஸின் சாய் ஹோப்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் சாய் ஹோப், கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன் யாரும் நிகழ்த்தாத சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
INDvsSA ஒருநாள் தொடர்: ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர் விலகினால் இந்தியாவை வழிநடத்தப் போவது யார்?
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் விலகியுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் அவர் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
INDvsSA டெஸ்ட் தொடரில் இருந்து ஷுப்மன் கில் விலகல்; உறுதி செய்தது பிசிசிஐ
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கழுத்து காயம் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் விலகியுள்ளார்.
WTC இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இந்திய கிரிக்கெட் அணி எத்தனை போட்டிகளில் வெல்ல வேண்டும்?
கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் தென்னாப்பிரிக்காவிடம் 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்கான இந்தியாவின் பாதை பெரும் சவாலுக்கு உள்ளாகியுள்ளது.
ஐபிஎல்: ஆர்சிபி அணியில் பங்குகளை வாங்க காந்தாரா பட தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை
கேஜிஎஃப், காந்தாரா மற்றும் சலார் போன்றப் பிளாக்பஸ்டர் திரைப்படங்களைத் தயாரித்த முன்னணித் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி பங்கு வாங்க ஆர்வம் காட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரலாற்றில் இரண்டாவது மோசமான தோல்வி; இந்திய கிரிக்கெட் அணியின் சோகம்
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணிக்குக் கிடைத்த 124 ரன்கள் என்ற எளிய இலக்கைத் துரத்த முடியாமல் வெறும் 93 ரன்களுக்குச் சுருண்டு, 30 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியைச் சந்தித்துள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு அதிர்ச்சி தோல்வி: தென்னாப்பிரிக்கா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) சாம்பியனான தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் ஷுப்மன் கில் விலகல்; பிசிசிஐ அறிக்கை
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் எஞ்சிய ஆட்டங்களில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் விலகியுள்ளார்.
டிசம்பர் 16 அன்று அபுதாபியில்... ஐபிஎல் 2026 மினி ஏலத்திற்கான தேதி மற்றும் இடம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
இந்தியன் பிரீமியர் லீக் 2026 (ஐபிஎல் 2026) சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் 16 ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில் உள்ள எதிஹாட் அரினாவில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2026 சீசனுக்கு இவர்தான் கேப்டன்; உறுதி செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் 2026 சீசனுக்கான வீரர்கள் தக்கவைப்பு காலக்கெடுவுக்கு முன்னதாக, ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி நிர்வாகம், தங்கள் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஐபிஎல் 2026: 10 அணிகளும் தக்கவைத்த, விடுவித்த வீரர்களின் முழு பட்டியல்
ஐபிஎல் 2026 மெகா ஏலத்திற்கு முன்னதாக பத்து இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) உரிமையாளர்கள் தங்கள் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களை இறுதி செய்துள்ளனர்.
'தோனி அருகில் இருப்பது கனவு': சிஎஸ்கேவுக்கு வர்த்தகம் செய்யப்பட்ட சஞ்சு சாம்சன் நெகிழ்ச்சி
ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணியில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு வர்த்தகம் செய்யப்பட்ட கேப்டன் சஞ்சு சாம்சன், ஜெய்ப்பூரை தளமாகக் கொண்ட அந்த அணிக்காக தான் செலவிட்ட 10 ஆண்டுகால உறவை முடித்துக் கொண்ட பின், ஒரு நெகிழ்ச்சியான குறிப்பைப் பகிர்ந்துள்ளார்.
ஐபிஎல் 2026: எம்எஸ் தோனி கிரீன் சிக்னல்; ரவீந்திர ஜடேஜா - சஞ்சு சாம்சன் வர்த்தகம் உறுதியானது என தகவல்
ஐபிஎல் 2026 சீசனுக்கான வீரர்கள் தக்கவைப்புக் காலக்கெடு முடிவடைய சில மணிநேரங்களே உள்ள நிலையில், மிகப்பெரிய வர்த்தகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2026: சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுவதை உறுதி செய்தார் டெவான் கான்வே
ஐபிஎல் 2026 சீசனுக்கான வீரர்கள் தக்கவைப்புப் பட்டியலைச் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) சனிக்கிழமை (நவம்பர் 15) வெளியிடும் எனக் கூறப்படும் நிலையில், நியூசிலாந்து வீரர் டெவான் கான்வே தாம் அணியிலிருந்து விடுவிக்கப்படுவதை உறுதி செய்துள்ளார்.
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்டில் மின்னல் வேக சதம் அடித்து வைபவ் சூர்யவன்ஷி சாதனை
தோஹாவில் நடந்த ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக ஏ பிரிவு இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, வெறும் 32 பந்துகளில் சதம் அடித்துச் சாதனை படைத்துள்ளார்.
INDvsSA முதல் டெஸ்ட்: 17 ஆண்டுகளில் முதல் வீரராக ஜஸ்ப்ரீத் பும்ரா சாதனை
கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் 2026: ஷேன் வாட்சனை அடுத்து டிம் சௌத்தியும் கேகேஆர் அணியில் இணைந்தார்
ஐபிஎல் 2026க்கான ஏலம் மற்றும் தக்கவைப்பு நடவடிக்கைகளுக்கு முன்னதாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி நிர்வாகப் பிரிவில் தீவிரமான நியமனங்களைச் செய்து வருகிறது.
ஐபிஎல் 2026: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணைப் பயிற்சியாளராக ஷேன் வாட்சன் நியமனம்
மூன்று முறை ஐபிஎல் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி, 2026 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2026) சீசனுக்கு முன்னதாக, முன்னாள் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சனை தனது புதிய உதவிப் பயிற்சியாளராக நியமித்துள்ளது.
முகமது ஷமி தென்னாப்பிரிக்க தொடரில் இடம்பெறாதது ஏன்? கேப்டன் ஷுப்மன் கில் விளக்கம்
ஈடன் கார்டன்ஸில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள இந்திய கிரிக்கெட் அணி தயாராகி வரும் நிலையில், கிரிக்கெட் உலகில் விவாதப் பொருளாகியிருப்பது வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிதான்.
ஐபிஎல் 2026: ஜடேஜா மட்டுமில்லையாம்; சிஎஸ்கே அணியில் 5 முக்கிய வீரர்களை விடுவிக்க திட்டம்
வரவிருக்கும் 19வது இந்தியன் பிரீமியர் லீக் 2026 (ஐபிஎல் 2026) சீசனுக்காக அனைத்துப் பத்து உரிமையாளர்களும் தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்கள் குறித்து விவாதித்து வருகின்றனர்.
முதல் தர கிரிக்கெட்டில் தொடர்ந்து 8 சிக்ஸர்கள் அடித்து இந்திய வீரர் வரலாற்றுச் சாதனை
ரஞ்சி கோப்பை பிளேட் குழு போட்டியில் மேகாலயா அணியின் ஆகாஷ் குமார் சவுத்ரி, ஒரு இன்னிங்ஸில் தொடர்ச்சியாக 8 சிக்ஸர்கள் அடித்து முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
ஐபிஎல் 2026: ராஜஸ்தான் ராயல்ஸிடம் ரவீந்திர ஜடேஜாவைக் கொடுத்து சஞ்சு சாம்சனை வாங்க சிஎஸ்கே முயற்சி?
இந்தியன் பிரீமியர் லீக் 2026 (ஐபிஎல் 2026) ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே ஒரு பெரிய வீரர் பரிமாற்றம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐந்தாவது போட்டி ரத்து; ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி டி20 தொடரை வென்றது இந்தியா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரை, இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
ஐசிசியின் இந்த புதிய விதியால் 2028 ஒலிம்பிக் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு இடமில்லை
சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டிகள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் நிலையில், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்த அணிகள் மோதுவதற்கான வாய்ப்பு குறைவு என்று தெரியவந்துள்ளது.
ஹாங்காங் சிக்ஸர்ஸ் கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தானுக்கு எதிராக DLS முறையில் இந்தியா பரபரப்பு வெற்றி
ஹாங்காங் சிக்ஸர்ஸ் 2025 கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில், மழை குறுக்கிட்ட நிலையில் டக்வொர்த் லூயிஸ் ஸ்டெர்ன் (DLS) முறைப்படி பாகிஸ்தானை இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி பரபரப்பு வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
மகளிர் ஐபிஎல் 2026: மெகா ஏலத்திற்கு முன்னதாக அணிகளின் தக்கவைக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட வீராங்கனைகளின் முழு விவரங்கள்
மகளிர் ஐபிஎல் 2026 மெகா ஏலத்திற்கு முன்னதாக மகளிர் பிரீமியர் லீக் அணிகள் தங்கள் அணி வீராங்கனைகளின் தக்கவைப்பு பட்டியலை வெளியிட்டுள்ளன.
INDvsAUS 4வது டி20: வாஷிங்டன் சுந்தரின் சிறப்பான பந்துவீச்சால் இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியில் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவானின் சொத்துக்கள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை
கியூராகோவை (Curacao) தளமாகக் கொண்ட ஆன்லைன் சூதாட்ட தளமான 1xBet தொடர்பான சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில், முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவான் ஆகியோருக்குச் சொந்தமான ₹11.14 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
ஐசிசி ஆடவர் டி20 தரவரிசையில் இந்தியாவின் ஆதிக்கம்; மகளிர் கிரிக்கெட் அணியின் நிலை என்ன?
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) சமீபத்திய சர்வதேச டி20 தரவரிசையில், இந்திய இளம் வீரர்களான அபிஷேக் ஷர்மா மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் முறையே பேட்டிங் மற்றும் பந்துவீச்சுப் பிரிவுகளில் தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துள்ளனர்.
முழங்கால் காயம் காரணமாக அஸ்வின் BBL 2025-26 தொடரில் இருந்து விலகினார்: விவரங்கள்
இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் அஸ்வின் ரவிச்சந்திரன் முழங்கால் காயம் காரணமாக வரவிருக்கும் பிக் பாஷ் லீக் (BBL) சீசனில் இருந்து விலகியுள்ளார்.
ஆஷஸ் தொடருக்குத் தயாராக இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து டிராவிஸ் ஹெட் விலகல்
இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் சர்வதேசத் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திரத் தொடக்க ஆட்டக்காரரான டிராவிஸ் ஹெட் விடுவிக்கப்பட்டுள்ளார்.
"சம ஊதியத்திற்கு கிடைத்த பலன்": மகளிர் உலக கோப்பை வென்றதும் BCCI கூறியது இதுதான்!
தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்த இந்திய அணிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) சார்பில் ஐசிசி-யை விட அதிக ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்க பெண்கள்: முதல் முறையாக மகளிர் உலகக் கோப்பையை வென்றது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை 2025 இறுதி போட்டியில் ஷஃபாலி வர்மா மற்றும் தீப்தி சர்மாவின் அரை சதங்கள் இந்தியாவை மொத்தம் 298/7 ரன்கள் என்ற இலக்கை எட்ட வைத்தன.
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையில் ஒரு தொடரில் அதிக ரன்கள் குவித்து ஸ்மிருதி மந்தனா சாதனை
நவி மும்பையில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) நடைபெற்ற மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை 2025 இறுதிப் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, முன்னாள் கேப்டன் மிதாலி ராஜின் முக்கிய சாதனையை முறியடித்தார்.
வரலாற்றுச் சாதனை: மகளிர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஷஃபாலி வர்மா புதிய உச்சம்
நவி மும்பையின் டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) நடைபெற்ற மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திச் சாதனை படைத்தார்.
நவம்பர் 16இல் மீண்டும் இந்தியா vs பாகிஸ்தான்; ஆசிய கிரிக்கெட் ரைசிங் ஸ்டார்ஸ் கோப்பைக்கான அட்டவணை வெளியீடு
ஆசிய கோப்பை 2025 முடிவடைந்த ஒரு மாதத்திற்குப் பிறகு, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) ஏற்பாடு செய்யும் மற்றொரு போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் மோதவுள்ளன.
சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் ஓய்வு அறிவிப்பு
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரும், முன்னாள் கேப்டனுமான கேன் வில்லியம்சன், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டி டிக்கெட் விற்பனை குளறுபடியால் ரசிகர்கள் கடும் அதிருப்தி
மகளிர் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடத் தயாராகி வரும் நிலையில், போட்டி தொடங்க இன்னும் 24 மணி நேரத்திற்கும் குறைவாகவே உள்ள நிலையில், டிக்கெட்டுகள் விற்பனைக்கு வராதது ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகளிர் கிரிக்கெட்டில் இதுதான் மிகப்பெரிய வெற்றி; ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதியில் வென்று சாதனை படைத்தது இந்திய அணி
நவி மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய்.பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் வியாழக்கிழமை (அக்டோபர் 31) அன்று நடைபெற்ற மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை 2025 இன் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபாரமான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1000 ODI ரன்கள்; மகளிர் கிரிக்கெட்டில் ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை
டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்து வரும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1000 ஒருநாள் ரன்களைக் கடந்து குறிப்பிடத்தக்கச் சாதனையைப் படைத்தார்.
INDvsAUS 2வது T20I: மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் MCG மைதானத்தில் களமிறங்குகிறது இந்தியா
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்டம், புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) நடைபெற உள்ளது.
ஐபிஎல் 2026 சீசனுக்கு கேகேஆர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அபிஷேக் நாயர் நியமனம்
ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனிற்கு முன்னதாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்கு அபிஷேக் நாயர் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு மாதங்கள் ஓய்வு கட்டாயம்; தென்னாப்பிரிக்கா தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெற மாட்டார் என தகவல்
இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், கடந்த வாரம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த இரண்டு மாதங்களுக்கு விளையாடாமல் ஓய்வில் இருப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெண்கள் உலகக் கோப்பை, இந்தியா vs ஆஸ்திரேலியா: அரையிறுதி முன்னோட்டம் மற்றும் புள்ளிவிவரங்கள்
2025 ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் உலகக் கோப்பையின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது அரையிறுதி போட்டி வியாழக்கிழமை நவி மும்பையின் டிஒய் பாட்டீல் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும்.