LOADING...
உலகக்கோப்பையில் இருந்து விலகும் ஈரான்? போர் பதற்றத்தால் ஈராக் வீரர்களுக்கு விசா சிக்கல்; கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சித் தகவல்
ஃபிஃபா உலகக்கோப்பை 2026 கால்பந்து தொடரில் இருந்து ஈரான் விலகுவதாக தகவல்

உலகக்கோப்பையில் இருந்து விலகும் ஈரான்? போர் பதற்றத்தால் ஈராக் வீரர்களுக்கு விசா சிக்கல்; கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சித் தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 12, 2026
08:32 am

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெறவுள்ள 2026 ஃபிஃபா உலகக்கோப்பையில் ஈரான் மற்றும் ஈராக் அணிகள் பங்கேற்பதில் பெரும் நிச்சயமற்ற தன்மை உருவாகியுள்ளது. மார்ச் 28-ல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் இந்தத் தொடருக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் மற்றும் பாதுகாப்பு காரணங்கள் கால்பந்து விளையாட்டைப் பாதித்துள்ளன.

ஈரான்

ஈரானின் நிலை: பங்கேற்பதா? வேண்டாமா?

ஈரான் அணி குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் மோதத் தயாராக இருந்தது. இருப்பினும், ஈரானின் விளையாட்டுத்துறை அமைச்சர் அஹ்மத் துன்யாமாலி, தற்போதைய போர்ச் சூழலில் ஈரான் உலகக்கோப்பையில் பங்கேற்காது என்று தெரிவித்துள்ளார். ஆனால், ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ, அதிபர் டிரம்ப் உடனான சந்திப்பிற்குப் பிறகு, ஈரான் அணி அமெரிக்காவிற்கு வந்து விளையாடுவதை வரவேற்பதாகக் கூறியுள்ளார். இறுதி முடிவு ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெறும் ஃபிஃபா மாநாட்டில் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

சிக்கல்

ஈராக் அணியின் பிளே-ஆஃப் சிக்கல்

ஈராக் அணி மெக்சிகோவில் நடைபெறவுள்ள சர்வதேச பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. ஆனால், ஈராக் வான்பரப்பு மூடப்பட்டுள்ளதாலும், ஈராக்கில் மெக்சிகோ தூதரகம் இல்லாததாலும் வீரர்களுக்கு விசா பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. ஈராக் அணியின் பயிற்சியாளர் கிரஹாம் அர்னால்ட், ஹூஸ்டனில் திட்டமிடப்பட்டிருந்த பயிற்சி முகாம்களை ரத்து செய்துள்ளார். பிளே-ஆஃப் போட்டிகளை உலகக்கோப்பைக்குச் சற்று முன்னதாக ஒத்திவைக்குமாறு ஈராக் கால்பந்து சம்மேளனம் ஃபிஃபாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

வாய்ப்பு

ஈரான் விலகினால் யாருக்கு வாய்ப்பு?

ஒருவேளை ஈரான் அதிகாரப்பூர்வமாக உலகக்கோப்பையிலிருந்து விலகினால், ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் விதிமுறைப்படி, தகுதிச் சுற்றில் மிக நெருக்கமாக வந்த அணிக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும். பிளே-ஆஃப் சுற்றில் ஈராக் தோற்றால், ஈரானுக்குப் பதிலாக அவர்கள் நேரடியாக உலகக்கோப்பைக்குள் நுழைய வாய்ப்புள்ளது. ஈராக் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டாலோ அல்லது பிளே-ஆஃப் வென்று தகுதி பெற்றாலோ, ஈரானுக்குப் பதிலாக அடுத்த வாய்ப்பு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வழங்கப்படலாம்.

Advertisement