LOADING...
தீவிர போருக்கு இடையே ஈரான் அதிபருடன் மோடி பேச்சு; பாதுகாப்பு மற்றும் எண்ணெய் விநியோகத்தை உறுதி செய்ய நடவடிக்கை
தீவிர போருக்கு இடையே ஈரான் அதிபருடன் மோடி பேச்சு

தீவிர போருக்கு இடையே ஈரான் அதிபருடன் மோடி பேச்சு; பாதுகாப்பு மற்றும் எண்ணெய் விநியோகத்தை உறுதி செய்ய நடவடிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Mar 13, 2026
07:10 am

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, நேற்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார். போர் தொடங்கிய பிறகு இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே நடைபெறும் முதல் நேரடி உரையாடல் இதுவாகும். இந்த உரையாடலின் போது, போரினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு சேதங்கள் குறித்து தனது கவலையை பிரதமர் மோடி பதிவு செய்தார். இப்பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் மீட்டெடுக்க பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர உறவுகள் மட்டுமே தீர்வாகும் என்பதை அவர் வலியுறுத்தினார். குறிப்பாக, போர்க்களத்தில் சிக்கியுள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி விநியோகம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதே இந்தியாவின் தற்போதைய முதன்மை முன்னுரிமை என்று அவர் குறிப்பிட்டார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

கச்சா எண்ணெய்

ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்

உலக கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ள நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறுகிறது. ஏவுகணை தாக்குதல்களால் உலகளவில் எரிபொருள் விலை உயர்ந்துள்ள சூழலில், இந்திய எண்ணெய் கப்பல்களுக்குப் பாதுகாப்பான பாதையை வழங்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 20 இந்தியக் கப்பல்களை தடையின்றி அனுமதிக்க புதுடெல்லி தற்போது ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மத்திய கிழக்கு கடற்பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் மாயமாகியுள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

Advertisement