சவுதி அரேபியாவில் குடியிருப்புப் பகுதிகள் மீது ஏவுகணைத் தாக்குதல்: இந்தியர் உட்பட இருவர் பலி
செய்தி முன்னோட்டம்
சவுதி அரேபியாவின் அல்-கர்ஜ் நகரில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தின் மீது இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பராமரிப்பு மற்றும் துப்புரவு நிறுவனம் ஒன்றிற்குச் சொந்தமான இந்தக் குடியிருப்பில் விழுந்த ஏவுகணையால், இந்தியர் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாகச் சவுதி சிவில் பாதுகாப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் மேலும் 12 வங்கதேசத்தினர் காயமடைந்துள்ளதோடு, கட்டிடங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
பலியானவர்கள்
பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள்
சவுதி அதிகாரிகளின் கூற்றுப்படி, பலியான இருவரில் ஒருவர் இந்தியர், மற்றொருவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர். காயமடைந்த 12 பேரும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எச்சரிக்கை
இந்தியத் தூதரகம் விடுத்துள்ள எச்சரிக்கை
ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம், சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்திய குடிமக்களுக்கு அவசர கால அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இந்தியர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடனும், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் தூதரகம் வழங்கும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ரியாத்தில் உள்ள தூதரகம் மற்றும் ஜித்தாவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் ஆகியவை வழக்கம் போல் செயல்படும். விசா மற்றும் இதர சேவைகளுக்கான VFS மையங்களும் திறந்திருக்கும். இந்தியா மற்றும் சவுதி இடையிலான விமானப் போக்குவரத்துகள் (ரியாத், ஜித்தார், தம்மாம்) சீராக நடைபெற்று வருகின்றன. தாயகம் திரும்ப விரும்புவோர் தாராளமாகத் தற்போதைய விமான சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தற்போதைய நிலை
தற்போதைய நிலவரம்
சவுதி அரேபியாவின் முக்கிய நகரங்களான ஜித்தார் மற்றும் மதீனாவிற்கு இந்திய மற்றும் சவுதி விமான நிறுவனங்கள் வழக்கமான அட்டவணைப்படி சேவைகளைத் தொடர்ந்து வருகின்றன. அங்குள்ள இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கத் தூதரகம் தயாராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.