LOADING...
'ஈரான் அச்சுறுத்தலுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி!': போரை நீட்டிக்கத் துடிக்கும் டொனால்ட் ட்ரம்ப்
போரை நீட்டிக்கத் துடிக்கும் டொனால்ட் ட்ரம்ப்

'ஈரான் அச்சுறுத்தலுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி!': போரை நீட்டிக்கத் துடிக்கும் டொனால்ட் ட்ரம்ப்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 18, 2026
08:02 am

செய்தி முன்னோட்டம்

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும், அந்த நாடு மீண்டும் ஒருபோதும் அணு ஆயுத அச்சுறுத்தலாக உருவெடுக்காத வகையில் சேதங்கள் "நிரந்தரமாக்கப்பட" வேண்டும் என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். "நாங்கள் இன்றே வெளியேறினால், ஏற்பட்ட சேதங்களைச் சரிசெய்ய அவர்களுக்கு 10 ஆண்டுகள் ஆகும். ஆனால், இனி வரும் எந்தவொரு அமெரிக்க அதிபரும் இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ளக் கூடாது என்பதற்காக, இந்தச் சேதத்தை இன்னும் நிரந்தரமாக்க விரும்புகிறோம்," என்று ட்ரம்ப் கூறினார். "பைத்தியக்காரர்களின் கையில் அணு ஆயுதங்கள் இருப்பதை நாம் அனுமதிக்க முடியாது. அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை இல்லையென்றால், ஈரான் ஏற்கனவே அணு ஆயுதத்தை உருவாக்கியிருக்கும். அவர்கள் அதனைப் பயன்படுத்தத் தயங்கியிருக்க மாட்டார்கள்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

போர்

வெளியேற்றம் எப்போது?

போர் மிகவும் சாதகமாக சென்று கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், அங்கிருந்து உடனடியாக வெளியேறும் திட்டம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். "நாங்கள் இன்னும் வெளியேறத் தயாராக இல்லை, ஆனால் மிக விரைவில் வெளியேறுவோம்," என்று கூறினார். அதே சமயம், இது ஒரு "சிறிய பயணம்" என்றும், இன்னும் சில வாரங்களில் இது முடிவுக்கு வரும் என்றும் அவர் முன்னுக்குப் பின் முரணாகக் குறிப்பிட்டார். ஈரானின் முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது ஈரானில் யாருடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்பதில் குழப்பம் நீடிப்பதாக ட்ரம்ப் ஒப்புக்கொண்டார். இந்த போர் சூழலால், சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் நடைபெறவிருந்த சந்திப்பும் தள்ளிப்போயுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement