தமிழக அரசு: செய்தி
ஒரே நேரத்தில் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக அரசு அதிரடி உத்தரவு
நிர்வாக காரணங்களுக்காக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் உட்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் எடுக்கப்பட்ட 6 தீர்மானங்கள் என்ன?
மதுரையில் நேற்று (ஜூன் 22) நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில், 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் பத்திரப்பதிவில் புதிய மாற்றம்: ரெஜிஸ்ட்ரேஷன் முடித்த ஒரே நாளிலேயே EC-ஐ மொபைலிலேயே பெறலாம்
தமிழ்நாடு பதிவுத்துறையில் முக்கிய முன்னேற்றமாக, சொத்து பத்திரம் பதிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குள், கிட்டத்தட்ட ஒரே நாளில் வில்லங்க சான்றிதழ் (Encumbrance Certificate) தொடர்புடைய நபரின் மொபைல் போனுக்கு SMS மூலமாக அனுப்பப்படும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் குடிநீர் ATM: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
பொதுமக்களுக்கு தூய்மையான குடிநீர் எளிதாக கிடைக்க வேண்டும் என்பதற்காக, தானியங்கி குடிநீர் (வாட்டர் ATM) விநியோக திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
கடத்தல் டு சஸ்பெண்ட்: காதல் திருமண விவகாரத்தில் ADGP சஸ்பெண்ட் செய்யப்பட்டது எதற்காக?
காதல் திருமண விவகாரத்தில் சிறுவனை கடத்த உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆயுதப்படை கூடுதல் டிஜிபி எச்.எம்.ஜெயராம் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற உணவு விநியோக முகவர்களுக்கு ஏசி ஓய்வறை அறிமுகம்!
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்ததை ஒட்டி, சென்னை மாநகராட்சி, உணவு விநியோக முகவர்களுக்கு ஓய்வெடுக்க வசதியாக, குளிர்சாதன வசதி, கழிப்பறை வசதிகள் அடங்கிய ஓய்வறைகளை முதன்முறையாக நகரத்தில் நிறுவியுள்ளது.
ஜாதி, மதம் அற்றவர் சான்றிதழ் வழங்க அரசு பரிசீலனை செய்ய வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்
திருப்பத்தூரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர், தன்னை எந்த ஜாதியிலும் மதத்திலும் சேர்க்க வேண்டாம் எனத் தெரிவித்து கடந்த 2023 ஆம் ஆண்டு மாவட்ட கலெக்டர் மற்றும் தாசில்தாருக்கு, "ஜாதி, மதம் இல்லை" எனச் சான்றிதழ் வழங்க கோரியிருந்தார்.
திரையரங்குகளில் டிக்கெட் அதிக விலைக்கு விற்பவர்களில் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு திரைப்பட வெளியீடுகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக டிக்கெட் விலையை வசூலிக்கும் திரையரங்குகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது.
FACT CHECK: வெள்ளிக்கிழமை விடுமுறை இல்லை, அது வதந்தி என தமிழ்நாடு அரசு அறிவிப்பு
"பிரதமர் மோடி அறிவித்ததால் ஜூன் 6 அன்று பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்டவை செயல்படாது" எனும் செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியது.
தமிழ் திரைப்படங்கள் மீதான உள்ளூர் பொழுதுபோக்கு வரி 4% ஆகக் குறைப்பு; தமிழக அரசு உத்தரவு
திரையரங்குகளில் திரையிடப்படும் தமிழ் திரைப்படங்கள் மீதான உள்ளூர் அமைப்புகளின் பொழுதுபோக்கு வரியை (LBET) தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக 8% இலிருந்து 4% ஆகக் குறைத்துள்ளது.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன் 9க்கு ஒத்திவைக்கப்பட்டதா? அரசின் உண்மை சரிபார்ப்புப் பிரிவு விளக்கம்
தமிழக அரசின் அதிகாரப்பூர்வ உண்மை சரிபார்ப்பு பிரிவு, மாநிலம் முழுவதும் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று மீண்டும் திறக்கப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
கல்லூரி மாணவர்களில் யார் யாருக்கு தமிழக அரசின் லேப்டாப் கிடைக்கும்? வெளியான புது தகவல்
தமிழக அரசு தனது 2025-2026 பட்ஜெட் அறிவிப்பின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்களை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறந்து வைத்த முதல்வர்: எங்கே தெரியுமா?
தமிழகத்தில் உயர்கல்வியை வலுப்படுத்தும் வகையில், 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 26) தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
தேசிய கல்விக் கொள்கையை (NEP) செயல்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட தமிழக அரசு மறுத்ததால், தமிழகத்திற்கான கல்வி தொடர்பான நிதியை நிறுத்தி வைத்துள்ளதாக மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: பொது இடங்களில் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணிய பொதுச் சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.
கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.2,291 கோடி கல்வி நிதியை பெற்றுத் தர மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
தமிழக சிறை விதிகளில் திருத்தம்: கைதிகளின் சாதியை கேட்க தடை
சிறைகளில் கைதிகளிடம் ஜாதி விவரங்களை கேட்பது மற்றும் ஜாதி அடிப்படையில் வேலை ஒதுக்குதல் ஆகியவை இனி அனுமதிக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பொதுத் தேர்வுகளின் முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.
ஜாக்டோ-ஜியோ போராட்டம்: ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து -பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
2016, 2017 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தப் போராட்டங்களில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட அனைத்து குற்றவியல் வழக்குகளும், ஒழுங்கு நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டம் ஜூலை முதல் அமல்: தமிழக அரசு
தமிழ்நாட்டில் விரைவில் ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டத்தை தொடங்க போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் இயங்குவதற்கான அனுமதி மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும், வாரத்தில் ஏழு நாட்களும் இயங்க, ஜூன் 5, 2025 முதல் கூடுதலாக மூன்று ஆண்டுகளுக்கு தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக நீட்டித்துள்ளது.
தமிழக அமைச்சரவை மீண்டும் மாற்றம்; சட்டத்துறை துரைமுருகனிடம் ஒப்படைப்பு; கனிமவளத்துறை ரகுபதிக்கு மாற்றம்
தமிழக அமைச்சரவையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு மூத்த அமைச்சர்களின் இலாகாகக்களை மாற்றி உள்ளார். ராஜ்பவன் இதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளது.
வெயில் தாக்கம் அதிகமாக இருந்தால் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்
வெயில் தாக்கம் எப்படியிருக்கும் என்பதை பொருத்து, பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் செய்யப்படும் என தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க அரசு பரிசீலனை - அமைச்சர் சி.வி. கணேசன் அறிவிப்பு
வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டம் குறித்து தமிழக அரசு பரிசீலனை மேற்கொண்டு வருவதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
அகவிலைப்படி 2 சதவீதம் உயர்வு உள்ளிட்ட 9 முக்கிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்காக ஒரு சில பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளன. சட்டசபையில் இன்று விதி எண் 110ன் கீழ் பல முக்கிய அறிவிப்புகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
தமிழக அமைச்சரவையில் மாற்றம்; செந்தில் பாலாஜி, பொன்முடி அமைச்சர் பதவியிலிருந்து விலகல்; முழு விபரம் உள்ளே
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் பெரிய மாற்றங்களை அறிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்ய முதல்வர் ஸ்டாலின் முடிவு எனத் தகவல்; புதிதாக யார் யாருக்கு வாய்ப்பு?
தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் விரைவில் நடைபெறும் என தலைமைச் செயலக வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் தமிழக அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்த பரிசீலனை
தங்கம் விலை வரலாறு காணாத உயர்வை எட்டியிருப்பதால், திருமண வயதில் உள்ள பெண்களை வைத்திருக்கும் ஏழை மக்கள் கடுமையான பொருளாதார சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
மாதம் ₹200க்கு அதிவேக பிராட்பேண்ட் இன்டர்நெட்; தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
ஒரு குறிப்பிடத்தக்க அறிவிப்பில், தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்பத் துறை மூலம் வீடுகளுக்கு மலிவு விலையில் அதிவேக இணையத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று சட்டமன்றத்தில் அறிவித்தார்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்டவர்கள் விண்ணப்பிக்க, ஜூன் மாதம் சிறப்பு முகாம்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு அரசின் முக்கிய சமூக நலத்திட்டமான மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பெயர் விடுபட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 2025க்கான அறிவிப்பு வெளியானது; 3,678 காலியிடங்கள் அறிவிப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) 2025 ஆம் ஆண்டுக்கான குரூப் 4 ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - IVக்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம்: சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம்
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், முன்னாள் தமிழக முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படுவதாக முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6-9ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை: ஜூன் 2ல் பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நாளை, ஏப்ரல் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மையோனைஸுக்கு ஓராண்டு தடை விதித்தது தமிழ்நாடு அரசு
தமிழகத்தில் ஷவர்மா உள்ளிட்ட சில உணவுகளில் பயன்படுத்தப்படும், பச்சை முட்டையுடன் தயாரிக்கப்படும் மையோனைஸுக்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
UPSC தேர்வில் தேசிய அளவில் 23வது இடம், மாநில அளவில் முதலிடம் பெற்று தமிழக மாணவர் சிவச்சந்திரன் சாதனை
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட மத்திய அரசு பணியிடங்களுக்கு நடக்கும் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
போப் ஆண்டவர் மறைவை ஒட்டி, இன்றும் நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும்: தமிழக அரசு
போப் பிரான்சிஸ் மரணத்தைத் தொடர்ந்து, இன்று மற்றும் நாளை தமிழ்நாட்டில் துக்கம் அனுசரிக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கல்வி நிறுவனங்களில் ஜாதி பெயர்களை நீக்க 4 வாரம் காலக்கெடு விதித்த சென்னை உயர் நீதிமன்றம்
தமிழகத்தில் செயல்பட்டு வரும் சில கல்வி நிறுவனங்களில் ஜாதி அடையாளம் கொண்ட பெயர்கள் இடம் பெற்றிருப்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
குழந்தைகளை வெயிலில் இருந்து பாதுகாக்க இவற்றை கட்டாயம் செய்ய வேண்டும்: சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
தமிழகத்தில் பல இடங்களில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி வருகிறது.
அரசாணைகள், சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்: தமிழக அரசு
தமிழ் ஆட்சிமொழி சட்டத்தை முழுமையாக அமல்படுத்தும் வகையில், தமிழக அரசு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசிற்கு சாதகமான தீர்ப்பு: ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் பெரிய உத்தரவு
தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.
வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை; தமிழகத்தில் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை மழை
முன்னரே தெரிவித்திருந்தது போல, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.