LOADING...
ரோபோக்களால் உங்களை ஜெயிக்க முடியாது! AI யுகத்திலும் பாதுகாப்பான 22 துறைகள்; ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ரிப்போர்ட்
ஏஐயால் மாற்ற முடியாத 22 வேலைவாய்ப்புகள்

ரோபோக்களால் உங்களை ஜெயிக்க முடியாது! AI யுகத்திலும் பாதுகாப்பான 22 துறைகள்; ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ரிப்போர்ட்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 07, 2026
10:02 am

செய்தி முன்னோட்டம்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மிகவேகமாக வளர்ந்து வரும் நிலையிலும், பல வேலைகள் அதன் பிடியில் இருந்து தப்பித்துள்ளதாக ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஆய்வு தெரிவிக்கிறது. தங்களது கிளாட் ஏஐ கருவியின் பயன்பாட்டுத் தரவுகளைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில், சுமார் 22 தொழில் துறைகள் ஏஐயால் தானியங்கிமயமாக்கப்பட முடியாத நிலை உள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தால் கோட்பாட்டு ரீதியாக பல வேலைகளைச் செய்யமுடியும் என்றாலும், நடைமுறையில் அதன் பயன்பாடு குறைவாகவே உள்ளது. கணினி மற்றும் கணிதத் துறையில் தற்போது வெறும் 33 சதவீத வேலைகளுக்கு மட்டுமே கிளாட் பயன்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இயந்திரக் கற்றலை விட மனிதர்களின் நேரடி ஈடுபாடு, உடல் உழைப்பு மற்றும் தனிப்பட்ட முடிவெடுக்கும் திறன் தேவைப்படும் இடங்களில் ஏஐ பின்தங்கியுள்ளது.

22 துறைகள்

ஏஐயிடம் இருந்து தப்பிக்கும் 22 துறைகள்

நேரடியாக களத்தில் இறங்கி வேலை செய்யும் துறைகள் மற்றும் மனித உணர்வுகளுடன் தொடர்புடைய துறைகள் ஏஐயால் பாதிக்கப்பட வாய்ப்பு குறைவு: விவசாயம்: மரங்களை கத்தரித்தல், இயந்திரங்களை இயக்குதல் போன்ற பணிகளை ஏஐயால் செய்ய முடியாது. கட்டுமானம் மற்றும் பழுதுபார்ப்பு: கட்டிட வேலைகள், எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் பணிகள். சட்டம்: நீதிமன்றத்தில் வாடிக்கையாளர்களுக்காக வாதாடுவது. தனிநபர் பராமரிப்பு மற்றும் உணவுத் துறை: செவிலியர் பணி, சமையல் மற்றும் நேரடி வாடிக்கையாளர் சேவை. இந்த வேலைகளுக்கு மனிதர்களின் உடல் ரீதியான இருப்பு மற்றும் நுணுக்கமான தீர்ப்புகள் தேவைப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

பாதிப்பு

அதிகம் பாதிக்கப்படும் வேலைகள்

அதே சமயம், டிஜிட்டல் மற்றும் வழக்கமான பணிகளில் ஏஐயின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது: கம்ப்யூட்டர் புரோகிராமர்கள்: 75 சதவீதப் பணிகளில் ஏஐயின் பங்களிப்பு உள்ளது. வாடிக்கையாளர் சேவை: ஆட்டோமேஷன் மற்றும் ஏபிஐ மூலம் புகார்கள் கையாளப்படுகின்றன. தரவு உள்ளீடு: ஆவணங்களைப் படித்து தகவல்களைப் பதிவு செய்வதில் 67 சதவீத வேலைகள் தானியக்கமாக்கப்பட்டுள்ளன என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

தாக்கம்

வேலைவாய்ப்பு சந்தையில் தாக்கம்

ஏஐ காரணமாக இப்போதைக்கு மிகப்பெரிய அளவில் வேலை இழப்புகள் ஏற்படவில்லை என்றாலும், நிறுவனங்கள் புதிய ஆட்களை வேலைக்கு எடுப்பதைக் குறைத்துள்ளன. குறிப்பாக ஆரம்ப நிலை வேலைகளுக்குப் பதிலாக ஆட்டோமேஷனை நிறுவனங்கள் நாடுகின்றன. எதிர்காலத்தில் ஏஐ தொழில்நுட்பம் இன்னும் முன்னேறும்போது, கற்பனைக்கும் நிஜத்திற்கும் உள்ள இடைவெளி குறையக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Advertisement