LOADING...
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்! மகளிர் உரிமைத் தொகையுடன் இனி ஒவ்வொரு வருஷமும் கோடைகால சிறப்புத் தொகை ரூ.2000
மகளிருக்கு இனி ஆண்டுதோறும் ரூ.2,000 கோடைகால சிறப்புத் தொகை

மகளிருக்கு டபுள் ஜாக்பாட்! மகளிர் உரிமைத் தொகையுடன் இனி ஒவ்வொரு வருஷமும் கோடைகால சிறப்புத் தொகை ரூ.2000

எழுதியவர் Sekar Chinnappan
Feb 19, 2026
03:32 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இனி ஒவ்வொரு ஆண்டும் கோடைகால சிறப்புத் தொகையாக ரூ.2,000 வழங்கப்படும் என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போது அமைச்சர் இந்த முக்கியமான தகவலை வெளியிட்டார். ஏற்கனவே தமிழக அரசு தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகையை வழங்கி வருகிறது. சமீபத்தில், ஒரு சிறப்பு நிகழ்வாக மாதத் தவணையுடன் சேர்த்து கோடைகால சிறப்புத் தொகையும் வழங்கப்பட்டு, மொத்தமாக ரூ.5,000 பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

தாக்கம்

பொருளாதாரத் தாக்கம் மற்றும் வரவேற்பு

தற்போது இந்த ரூ.2,000 கோடைகால சிறப்புத் தொகையானது ஒருமுறை மட்டும் வழங்கப்படுவதல்ல, இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து வழங்கப்படும் என்று அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார். அரசின் இந்த முடிவை ஆளும் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வரவேற்றுள்ளனர். கோடைகாலத்தில் குடும்பச் செலவுகள் மற்றும் தண்ணீர் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கான செலவுகள் அதிகரிக்கும் என்பதால், இந்தச் சிறப்புத் தொகை ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பப் பெண்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும் என்பது அவர்களின் வாதமாக உள்ளது. இந்தத் திட்டம் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, அவர்களின் பொருளாதார சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை உயர்த்தி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement