இந்தியா: செய்தி

மாலத்தீவுக்கு இலவச ராணுவ உதவியை வழங்க இருக்கிறது சீனா

மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நடந்துவரும் பிரச்சனைகளுக்கு மத்தியில், "வலுவான" இருதரப்பு உறவுகளை வளர்ப்பதற்காக இலவச இராணுவ உதவியை மாலத்தீவுகு வழங்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் சீனா நேற்று கையெழுத்திட்டது.

தேர்தல் பத்திரங்கள் பற்றிய தகவல்களை வழங்க கால அவகாசம் கோரியது எஸ்பிஐ 

தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்குவதற்கான காலக்கெடுவை ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ) உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.

பிரதமருக்கு சொந்தமாக குடும்பம் இல்லை என்று கூறிய லாலு பிரசாத்துக்கு பதிலடி: 'மோடியின் குடும்பம்' என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ள முக்கிய தலைவர்கள்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஜேபி நட்டா உள்ளிட்ட பாஜகவின் உயர்மட்ட தலைவர்கள் இன்று தங்கள் ட்விட்டர் கணக்குகளில் "மோடி கா பரிவார்"(மோடியின் குடும்பம்) என்ற முழக்கத்தைச் சேர்த்துள்ளனர்.

'ஓட்டுக்கு லஞ்சம் வாங்கும் எம்.பி.க்களுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பாராட்டத்தக்கது': பிரதமர் மோடி 

சபையில் ஓட்டளிக்க லஞ்சம் வாங்குவது , சட்டமன்றத்தில் பேசுவதற்கு பணம் வாங்குவது போன்ற வழக்குகளில் இருந்து எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் விடுபட முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

ஓட்டுக்கு லஞ்சம் வாங்கும் வழக்குகளில் எம்.எல்.ஏ, எம்.பி.க்களுக்கு விலக்கு கிடையாது: உச்ச நீதிமன்றம் 

சபையில் ஓட்டளிக்க லஞ்சம் வாங்குவது , சட்டமன்றத்தில் பேசுவதற்கு பணம் வாங்குவது போன்ற வழக்குகளில் இருந்து எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் விடுபட முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று கூறியுள்ளது.

இந்தியா பிறரை கொடுமை செய்யும் ஒரு நாடாக இருக்கிறதா என்ற கேள்விக்கு வெளியுறவு அமைச்சர் கூறிய பதில் 

இந்தியா பிறரை கொடுமை செய்யும் ஒரு நாடாக இருக்கிறதா என்று கேட்கப்பட்டதற்கு, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், "ஒரு கொடுமைப்படுத்தும் நாடு, அண்டை நாடுகள் துன்பத்தில் இருக்கும்போது 4.5 பில்லியன் டாலர் உதவி வழங்காது" என்று கூறியுள்ளார்.

03 Mar 2024

தேர்தல்

தேர்தலுக்கு முன்னதாக பாஜக கட்சிக்கு ரூ.2,000 நன்கொடை வழங்கினார் பிரதமர் மோடி:

மக்களவை தேர்தலை முன்னிட்டு பாஜக கட்சிக்கு ரூ.2,000 நன்கொடையாக வழங்கியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கட்சிக்கு அனைவரும் பங்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அதிகமான தேவை காரணமாக கடந்த மாதம்  ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்ட அதிரடி வளர்ச்சி

அதிகமான தேவை காரணமாக இந்தியாவின் வாகன சந்தை பிப்ரவரி 2024 இல் அதிகமான வளர்ச்சியைக் கண்டது.

03 Mar 2024

நொய்டா

கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு மாலின் இரும்பு கூரை சரிந்து விழுந்ததால் 2 பேர் பலி

நொய்டாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இருந்த இரும்பு கூரை கிரில் விழுந்ததால் இன்று குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

பாக் கப்பலில் இருந்து அணுசக்தி சரக்குகளை கைப்பற்றிய இந்தியா: பாகிஸ்தான் கண்டனம் 

மும்பையில் இந்திய ஏஜென்சிகளால் கைப்பற்றப்பட்ட பாகிஸ்தான் கப்பலில் "வணிக" பொருட்கள் தான் இருந்தது என்றும், அணுசக்தி திட்டத்திற்கான இயந்திரங்கள் அவை அல்ல என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

03 Mar 2024

தைவான்

'கைப்பாவைகள் அல்ல நாங்கள்': இந்திய ஊடகங்களுக்கு தைவான் பேட்டியளிக்க கூடாது என்று கூறிய சீனாவுக்கு தைவான் பதில் 

தைவான் வெளியுறவு அமைச்சர் ஜோசப் வூவின் இந்திய ஊடகச் சேனலுக்கு பேட்டியளித்தது குறித்து இந்தியாவில் உள்ள சீனத் தூதரகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

02 Mar 2024

கூகுள்

மத்திய அரசின் தலையீட்டை தொடர்ந்து பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட ஆப்களை மீண்டும் சேர்க்க கூகுள் முடிவு 

சேவைக் கட்டணங்கள் தொடர்பான சர்ச்சையில், பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட இந்திய மொபைல் ஆப்களை மீட்டெடுப்பதற்கான செயல்முறையை கூகுள் தொடங்கியுள்ளது.

02 Mar 2024

கூகுள்

'இந்திய ஆப்கள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்படுவதை அனுமதிக்க முடியாது': மத்திய அரசு 

கூகுள் தனது ப்ளே ஸ்டோரில் இருந்து சில இந்திய ஆப்களை நீக்கியது குறித்து இன்று பேசிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்திய ஆப்கள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

ஸ்பெயின் நாட்டு சுற்றுலாப் பயணியை கூட்டுப் பலாத்காரம் செய்த ஜார்கண்ட் ஆசாமிகள் கைது 

பைக் சுற்றுப்பயணமாக தனது கணவருடன் ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்திற்கு வந்திருந்த சுற்றுலாப் பயணி ஒருவர், கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

25 தனியார் துறை நிபுணர்களை முக்கிய பதவிகளில் சேர்க்க மோடி அரசு முடிவு 

மோடி அரசாங்கத்தின் லட்சியத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருபத்தைந்து தனியார் துறை வல்லுநர்கள் விரைவில் மத்திய அரசின் முக்கிய பதவிகளில் சேருவார்கள் என்று அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

பெங்களூரு குண்டலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் காயம்

பெங்களூரு குண்டலஹள்ளியில் உள்ள ஒரு ஹோட்டலில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் 18 இடங்களில் போட்டியிட இருக்கும் காங்கிரஸ்

மகாராஷ்டிராவின் எதிர்க்கட்சியான மஹா விகாஸ் அகாடி கூட்டணி 2024 மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு விவகாரத்தில் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்துள்ளன.

29 Feb 2024

எஸ்யூவி

ஃபெராரியின் முதல் எஸ்யூவி இந்தியாவில் அதிகாரபூர்வமாக வெளியானது

புரோசாங்யூ- ஃபெராரியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் SUV மாடலானது, ரூ.10.5 கோடி(எக்ஸ்ஷோரூம்) ஆரம்ப விலையுடன் அதிகாரப்பூர்வமாக இந்தியாவிற்கு வந்துள்ளது.

வீல் சேர் இல்லாமல் நடந்து சென்ற முதியவர் உயிரிழந்த விவகாரத்தில் ஏர் இந்தியாவிற்கு ரூ.30 லட்சம் அபராதம்

விமான நிலையத்தில் சக்கர நாற்காலி பற்றாக்குறையால் நடந்து சென்ற 80 வயது முதியவர் உயிரிழந்த சம்பவத்தில், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு, DGCA ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

27 Feb 2024

கொரோனா

இந்தியாவில் 934 பேருக்கு கொரோனா சிகிச்சை 

தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 121 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் மகாராஷ்ராவில் பதிவாகியுள்ளன.

"அரசாங்கத்தின் கண்கள் மூடப்பட்டுள்ளன": பொய்யாக விளம்பரம் செய்த பதஞ்சலி நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் 

நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகள் என்று கூறி "தவறான" விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததோடு, இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசை உச்ச நீதிமன்றம் இன்று கடுமையாக சாடியுள்ளது.

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வர வாய்ப்பு

இந்தியாவில் குடியேறிய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய மூன்று அண்டை நாடுகளைச் சேர்ந்த மத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம் அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

27 Feb 2024

கனடா

'இந்திய அதிகாரிகள் கனடாவில் மிரட்டப்பட்டனர்': வெளியுறவு அமைச்சர் 

கடந்த ஆண்டு லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள தூதரகம் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மற்றும் கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை அச்சுறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இந்தியா எதிர்பார்க்கிறது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய துருப்புக்களை திருப்பி அனுப்புவதாக கூறிய அதிபர் முய்சுவை கடுமையாக சாடும் மாலத்தீவு முன்னாள் அமைச்சர் 

ஆயிரக்கணக்கான இந்திய துருப்புக்களை திரும்பப் அனுப்புவதாக அதிபர் முகமது முய்சு கூறியதை, மாலத்தீவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் கடுமையாக சாடியுள்ளார்.

25 Feb 2024

கொரோனா

இந்தியாவில் 897 பேருக்கு கொரோனா சிகிச்சை 

தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 110 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் மகாராஷ்ராவில் பதிவாகியுள்ளன.

'மனதின் குரல்' நிகழ்ச்சிக்கு 3 மாத இடைவெளியை அறிவித்தார் பிரதமர் மோடி

மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், தனது பிரபலமான வானொலி நிகழ்ச்சியான 'மனதின் குரல்' அடுத்த மூன்று மாதங்களுக்கு நிறுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இந்தியாவின் மிக நீளமான தொங்கு பாலமான 'சுதர்சன் சேது'வை திறந்து வைத்தார் பிரதமர் மோடி 

குஜராத்தின் துவாரகாவில் இந்தியாவின் மிக நீளமான தொங்கு பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

24 Feb 2024

இந்தியா

ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது 3 புதிய குற்றவியல் சட்டங்கள் 

இந்திய தண்டனைச் சட்டம்(IPC), குற்றவியல் நடைமுறைச் சட்டம்( CrPC ), சாட்சியச் சட்டம், 1872 ஆகிய மூன்று சட்டங்களுக்கு மாற்றான புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஆந்திர மாணவியை கொன்ற அமெரிக்க போலீஸ்காரர் விடுதலையானதை அடுத்து இந்தியா தலையீடு

இந்திய மாணவி ஜாஹ்னவி கந்துலா மீது காரை விட்டு ஏற்றிய சியாட்டில் காவல்துறை அதிகாரிக்கு எதிராக கிரிமினல் குற்றச்சாட்டுகளை சுமத்தக்கூடாது என்ற கிங் கவுண்டி வழக்கறிஞர் அலுவலகத்தின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு இந்தியா கோரியுள்ளது.

கோயில்களுக்கு வரி விதிக்கும் கர்நாடக அரசின் மசோதா தோற்கடிக்கப்பட்டது

ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் வரும் கோயில்களின் வருமானத்திற்கு 10 சதவீதம் வரி விதிக்கும் மசோதா நேற்று மாலை கர்நாடக மாநில சட்டப் பேரவையில் தோற்கடிக்கப்பட்டது.

23 Feb 2024

ரஷ்யா

ரஷ்யா போரில் கலந்துகொள்ள இந்தியர்கள் அழைக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு எச்சரிக்கை

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் கலந்துக்கொள்ள ஒரு சில இந்தியர்கள் "கட்டாயப்படுத்தப்பட்டதாக" கூறப்பட்ட செய்திகளைத் தொடர்ந்து, எச்சரிக்கையுடன் செயல்படவும் என்றும் இந்த உள்நாட்டு போர் விவகாரத்திலிருந்து விலகி இருக்கவும் மத்திய அரசு, நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் சுமார் 270 லேண்ட் குரூஸர்-300 மாடல் கார்களை திரும்பப் பெறுகிறது டொயோட்டா 

ஜப்பானிய ஆட்டோமோட்டிவ் நிறுவனமான டொயோட்டா, இந்தியாவில் அதன் முதன்மை எஸ்யூவி மாடலான லேண்ட் குரூஸர் 300-ன் 269 யூனிட்களை தானாக முன்வந்து திரும்ப பெற்றுள்ளது.

விண்வெளித் துறையில் 100%  நேரடி அன்னிய முதலீட்டிற்கு இந்தியா அனுமதி

நேற்று புதன்கிழமை மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, முதலீட்டை ஊக்குவிக்கும் நோக்கில், விண்வெளித் துறையில் 100% நேரடி அந்நிய முதலீட்டை (FDI) அனுமதிக்கும் விதிகளை இந்தியா தளர்த்தியுள்ளது.

22 Feb 2024

சீனா

இந்தியா-மாலத்தீவுகள் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், மலேவிற்கு வரும் சீனா ஆராய்ச்சிக் கப்பல்

இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையிலான பதற்றம் நிலவி வரும் இந்த நேரத்தில், ஒரு சீனக் ஆராய்ச்சி கப்பல், மாலத்தீவின் கடற்பகுதியில் நுழைந்து, அதன் தலைநகரான மாலேயில் நிறுத்தப்பட உள்ளது.

22 Feb 2024

எக்ஸ்

குறிப்பிட்ட சில கணக்குகள் மீது நடவடிக்கை வேண்டும் என்ற இந்திய அரசின் கோரிக்கையில் உடன்பாடில்லை: எக்ஸ

பிரபல சமூக வலைத்தளமான எக்ஸ் தளம், குறிப்பிட்ட சில கணக்குகள் மற்றும் இடுகைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய அரசு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

21 Feb 2024

கொரோனா

இந்தியாவில் மேலும் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 161 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் மகாராஷ்ராவில் பதிவாகியுள்ளன.

21 Feb 2024

கவாஸாகி

இந்தியாவில் அறிமுகமானது 2024 கவாஸாகி Z900 மோட்டார் பைக் 

கவாஸாகி நிறுவனம் 2024 Z900 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ரூ. 9.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்), இது ரூ. முந்தைய மாடலை விட 9,000 அதிகம்..

அமெரிக்க செனட் பதவிக்கு போட்டியிடும் முதல் Gen Z அமெரிக்க-தமிழர்: யாரிந்த அஸ்வின் ராமசாமி?

24 வயதான மென்பொருள் பொறியியலாளர் அஸ்வின் ராமசாமி, மாநில செனட் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் அமெரிக்க அரசியலில் நுழையும் முதல் Gen Z இந்திய-அமெரிக்கர் என்ற பெயரை எடுத்துள்ளார்.

வெங்காய ஏற்றுமதி தடையை மார்ச் 31 வரை நீட்டித்தது மத்திய அரசு

நாட்டிற்குள் வெங்காய தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகவும், விலை ஏற்றத்தை கட்டுக்குள் வைத்திருப்பதற்காகவும் இந்திய அரசாங்கம் வெங்காய ஏற்றுமதி தடையை மார்ச் 31, 2024 வரை நீட்டித்துள்ளது.