NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / 'இந்திய ஆப்கள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்படுவதை அனுமதிக்க முடியாது': மத்திய அரசு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'இந்திய ஆப்கள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்படுவதை அனுமதிக்க முடியாது': மத்திய அரசு 

    'இந்திய ஆப்கள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்படுவதை அனுமதிக்க முடியாது': மத்திய அரசு 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 02, 2024
    03:28 pm

    செய்தி முன்னோட்டம்

    கூகுள் தனது ப்ளே ஸ்டோரில் இருந்து சில இந்திய ஆப்களை நீக்கியது குறித்து இன்று பேசிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்திய ஆப்கள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

    அதோடு, இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக சம்பந்தப்பட்ட இந்திய ஸ்டார்ட்அப்கள் மற்றும் கூகுள் நிறுவனத்தோடு வரும் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

    இந்தியப் பொருளாதாரத்தில் ஸ்டார்ட்அப்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், எனவே அவற்றின் தலைவிதியை எந்த பெரிய நிறுவனமும் முடிவு செய்ய விட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

    இந்தியா 

    சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை 

    சேவைக் கட்டணம் செலுத்துதல் தொடர்பான சர்ச்சையில், பாரத் மேட்ரிமோனி போன்ற சில பிரபலமான மேட்ரிமோனி ஆப்கள் உட்பட 10 நிறுவனங்களின் ஆப்களை ப்ளே ஸ்டோரில் இருந்து கூகுள் நேற்று அகற்றியது.

    இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய அமைச்சர் வைஷ்ணவ், "இந்தியா மிகவும் தெளிவாக உள்ளது. எங்கள் கொள்கை மிகவும் தெளிவாக உள்ளது. எங்கள் ஸ்டார்ட்அப்களுக்குத் தேவையான பாதுகாப்பு கிடைக்கும்." என்று கூறியுள்ளார்.

    கூகுள் மற்றும் சம்பந்தப்பட்ட ஆப் டெவலப்பர்களை அரசாங்கம் அடுத்த வாரம் சந்தித்து இந்த பிரச்சனையை தீர்க்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    "நான் ஏற்கனவே கூகுளிடம் பேசிவிட்டேன்... பட்டியலிடப்பட்ட ஆப் டெவலப்பர்களையும் ஏற்கனவே அழைத்துவிட்டேன். அடுத்த வாரம் அவர்களை சந்திப்போம். இதை அனுமதிக்க முடியாது." என்று வைஷ்ணவ் வலியுறுத்தியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கூகுள்
    இந்தியா
    மத்திய அரசு

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    கூகுள்

    AI உதவியுடன் வாகன புகை மாசுபாட்டைக் குறைக்க உதவும் கூகுள் కాలుష్యం
    கூகுளுக்கு போட்டியாக இந்தியாவில் 'இன்டஸ் ஆப் ஸ்டோரை' அறிமுகப்படுத்திய போன்பே போன்பே
    இந்தியாவிலேயே பிக்சல் 8 ஸ்மார்ட்போனை தயாரிக்கவிருக்கும் கூகுள் சுந்தர் பிச்சை
    இந்தியளவில் பாதுகாப்பான மாநகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடம்  உலகம்

    இந்தியா

    இலவச மின்சார திட்டத்தை அறிமுகப்படுத்தினார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    மாநிலங்களவை தேர்தலுக்கு இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார் சோனியா காந்தி  மாநிலங்களவை
    "உலகிற்கு தூய்மையான, வெளிப்படையான, தொழில்நுட்பம் சார்ந்த அரசுகள் தேவை": பிரதமர் மோடி பிரதமர் மோடி
    இந்தியாவில் மேலும் 120 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா

    மத்திய அரசு

    'வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை அறிவிப்பை சரியாக வழங்கியது' - நிர்மலா சீதாராமன் காட்டம்  நிர்மலா சீதாராமன்
    மத்திய அரசின் வரி பகிர்வு - தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது தமிழ்நாடு
    இந்தியா குறித்த சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தவறு; மத்திய அரசு பதிலடி இந்தியா
    சஞ்சய் சிங் தலைமையிலான இந்திய மல்யுத்த கூட்டமைப்பை இடைநீக்கம் செய்தது மத்திய அரசு மல்யுத்தம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025