NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / "அரசாங்கத்தின் கண்கள் மூடப்பட்டுள்ளன": பொய்யாக விளம்பரம் செய்த பதஞ்சலி நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    "அரசாங்கத்தின் கண்கள் மூடப்பட்டுள்ளன": பொய்யாக விளம்பரம் செய்த பதஞ்சலி நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் 

    "அரசாங்கத்தின் கண்கள் மூடப்பட்டுள்ளன": பொய்யாக விளம்பரம் செய்த பதஞ்சலி நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் 

    எழுதியவர் Sindhuja SM
    Feb 27, 2024
    07:25 pm

    செய்தி முன்னோட்டம்

    நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகள் என்று கூறி "தவறான" விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததோடு, இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசை உச்ச நீதிமன்றம் இன்று கடுமையாக சாடியுள்ளது.

    "அரசு கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்திருக்கிறது" என்று உச்ச நீதிமன்றம் இன்று கூறியது.

    பதஞ்சலி ஆயுர்வேத் என்பது யோகா குரு ராம்தேவால் இணைந்து நிறுவப்பட்ட நிறுவனமாகும்.

    தடுப்பூசி மற்றும் நவீன மருந்துகளுக்கு எதிராக ராம்தேவ் அவதூறு பிரச்சாரம் செய்ததாக கடந்த வருடம் இந்திய மருத்துவ சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

    இதனையடுத்து, ஆகஸ்ட்-23, 2022 அன்று, மத்திய சுகாதார அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் மற்றும் பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட் ஆகியவற்றிற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

    இந்தியா 

    ஒவ்வொரு விளம்பரத்திற்கும் ரூ. 1 கோடி அபராதம்

    இந்நிலையில், இன்று இது குறித்து விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுபோன்ற விளம்பரங்களால் நாடு தவறாக வழிநடத்தப்படுகிறது என்று கூறியுள்ளது.

    மேலும், தவறான தகவல்களைக் பரப்பும் அனைத்து மருந்துவ விளம்பரங்களையும் உடனடியாக நிறுத்துமாறு பெஞ்ச் அந்த நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    கடந்த ஆண்டு நவம்பரில் உச்சநீதிமன்றம், நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகள் என்று கூறி "தவறான" விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தது.

    அந்த சுருக்கமான விசாரணையின் போது, ​​நவீன மருத்துவ முறைகளுக்கு எதிராக தவறான விளம்பரங்களை பரப்ப வேண்டாம் என்று பதஞ்சலியிடம் உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

    மேலும், அப்படிப்பட்ட பொய்யான மருத்துவ விளம்பரங்கள் வெளியானால், அப்படிப்பட்ட ஒவ்வொரு விளம்பரத்திற்கும் ரூ. 1 கோடி அபராதம் விதிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் முன்பு கூறியிருந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்

    இந்தியா

    "இந்தியா அமெரிக்காவை பலவீனமாக பார்க்கிறது": நிக்கி ஹேலி பகிரங்க குற்றச்சாட்டு அமெரிக்கா
    பாதுகாப்பை பலப்படுத்த இந்தியா மற்றும் மியான்மர் இடையே உள்ள எல்லை பகுதியை மூட மத்திய அரசு உத்தரவு அமித்ஷா
    இந்தியாவில் மேலும் 163 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் இருவர் பலி  கொரோனா
    EPF வட்டி விகிதத்தை உயர்த்தியது EPFO இந்தியா

    உச்ச நீதிமன்றம்

    ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 2024க்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம் ஜம்மு காஷ்மீர்
    ஜம்மு காஷ்மீர் சிறப்பு தகுதி ரத்து: உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து காஷ்மீர் தலைவர்கள் கூறியது என்ன? ஜம்மு காஷ்மீர்
    மக்களவையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதை எதிர்த்து, மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நாடாளுமன்றம்
    சட்டப்பிரிவு 370 தீர்ப்பு: உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஜம்மு காஷ்மீருக்கு என்ன எதிர்காலத்தை வழங்கியுள்ளது? ஜம்மு காஷ்மீர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025