காசா: செய்தி
இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸின் காசா தலைவர் பலி; பெஞ்சமின் நெதன்யாகு தகவல்
ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரின் இளைய சகோதரரும், ஹமாஸ் மூத்த தளபதியுமான முகமது சின்வார் இறந்ததை இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிப்படுத்தியுள்ளார்.
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா
காசாவின் முக்கிய நட்பு நாடுகளான ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் கனடா ஆகியவை "உறுதியான நடவடிக்கைகள்" எடுப்பதாக அச்சுறுத்திய பின்னரும், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, புதுப்பிக்கப்பட்ட இராணுவத் தாக்குதல் மூலம் காசா முழுவதையும் "கட்டுப்பாட்டில் எடுக்க போவதாக" சபதம் செய்துள்ளார்.
ஆபரேஷன் கிதியோன் சாரியட்ஸ்: காசாவில் புதிய ராணுவ தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்
இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) ஆபரேஷன் கிதியோன் சாரியட்ஸ் என்ற புதிய ராணுவத் தாக்குதலைத் தொடங்கியுள்ளன.
காசாவில் உள்ள கடைசி அமெரிக்க பயணக்கைதியை விடுவிக்க ஹமாஸ் ஒப்புதல்
காசாவில் சிறைபிடிக்கப்பட்ட 21 வயது இஸ்ரேலிய-அமெரிக்க சிப்பாயான எடான் அலெக்சாண்டரை விடுவிக்க முடிவு செய்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
காசாவை முழுவதுமாகக் கைப்பற்ற இஸ்ரேல் திட்டம்: அதிகாரிகள் தகவல்
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை, காசா பகுதியை முழுமையாகக் கைப்பற்றி, குறிப்பிடப்படாத காலத்திற்கு அங்கு தங்கும் திட்டத்தை அங்கீகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பாகிஸ்தானில் கேஃஎப்சி கடைகள் மீது தாக்குதல்; ஒரு ஊழியர் பலியான பரிதாபம்
நாடு முழுவதும் கேஃஎப்சி கடைகள் மீது தொடர்ச்சியான வன்முறைத் தாக்குதல்களைத் தொடர்ந்து பாகிஸ்தான் அதிகாரிகள் சுமார் 160 பேரைக் கைது செய்துள்ளனர்.
பாலஸ்தீன குழுக்கள் 'சரணடைய' வேண்டும் என்ற இஸ்ரேலின் திட்டத்தை ஹமாஸ் நிராகரித்தது
காசாவில் உள்ள அனைத்து ஆயுதமேந்திய அமைப்புகளும் இஸ்ரேலிடம் "சரணடைய" வேண்டும் என்ற போர்நிறுத்த திட்டத்தை ஹமாஸ் நிராகரித்துள்ளது.
கே.எஃப்.சி, பாட்டா உள்ளிட்ட கடைகளை குறி வைக்கும் கும்பல்; மீண்டும் பதட்டத்தில் வங்கதேசம்
இந்த வார தொடக்கத்தில் காசாவில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக வெடித்த புதிய போராட்டங்களை கண்டிக்கும் நோக்கத்தில் மீண்டும் வங்கதேசத்தில் போராட்டம் துவங்கியுள்ளது.
இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி பலி
டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தித்தாளின் அறிக்கையின்படி, தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவின் உயர்மட்ட ரத்வான் படையின் மூத்த தளபதி அகமது அட்னான் பாஜிஜாவுடன் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டார்.
இஸ்ரேலிய தாக்குதல்களில் காசாவில் ஹமாஸின் அரசாங்கத் தலைவர் கொல்லப்பட்டார்
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் தனது காசா அரசாங்கத்தின் தலைவர் எசாம் அல்-டலிஸ் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா ஒப்புதலுடன், காசா மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்; 100க்கும் மேற்பட்டோர் பலி
ஜனவரி முதல் நீடித்து வந்த பலவீனமான போர்நிறுத்தத்தை முறியடித்து, செவ்வாய்க்கிழமை அதிகாலை காசா முழுவதும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டனர்.
குழந்தை கிஃபிர் பிபாஸ் மற்றும் குடும்பத்தினரின் சடலத்தை ஒப்படைக்கும் ஹமாஸ்; துக்க நாளாக அனுசரிக்கும் இஸ்ரேல்
ஹமாஸ் தன்வசம் வைத்திருந்த இஸ்ரேலின் இளம் வயது பணயக்கைதியான ஒன்பது மாத குழந்தை கிஃபிர் பிபாஸ், அவரது நான்கு வயது சகோதரர் ஏரியல், அவர்களின் தாய் ஷிரி பிபாஸ் மற்றும் மற்றொரு பணயக்கைதி ஓடெட் லிஃப்ஷிட்ஸ் ஆகியோரின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
போர் நிறுத்தம் முறிந்து விடுமோ என்ற அச்சத்தில் திட்டமிட்டபடி பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்ட ஹமாஸ்
காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக இஸ்ரேலுடன் ஏற்பட்ட ஒரு சிறிய கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து, மத்தியஸ்தர்களுடன் "நேர்மறையான" பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, திட்டமிட்டபடி இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
ஹமாஸ் சனிக்கிழமைக்குள் பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் காசா போர்நிறுத்தம் முடிவுக்கு வரும்: நெதன்யாகு
சனிக்கிழமை நண்பகலுக்குள் பணயக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால், காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வரும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
அருகில் நெதன்யாகு இருக்கையிலே அமெரிக்கா காசாவைக் கைப்பற்றும் என சூளுரைத்த டொனால்ட் டிரம்ப்
பாலஸ்தீனியர்கள் வேறு இடங்களில் மீள்குடியேற்றப்பட்ட பிறகு, போரினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசமான காசா பகுதியை தனது நாடு கையகப்படுத்தும் என்றும், அதை "அபிவிருத்தி செய்யும்" என்றும், "அதை சொந்தமாக்கிக் கொள்ளும்" என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை தெரிவித்தார்.
மார்ச் மாதம் மீண்டும் ஹமாஸுக்கு எதிராக போரை தொடங்க வேண்டும்; இஸ்ரேல் பிரதமருக்கு நெருக்கடி
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது தீவிர வலதுசாரி கூட்டாளிகளின் தீவிர அழுத்தத்தை எதிர்கொண்டு வருவதால், காசா போர்நிறுத்தத்தின் முதல் கட்ட முடிவைத் தொடர்ந்து ஹமாஸுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
தாமதங்கள் மற்றும் தொடர் தாக்குதல்களுக்கு பிறகு ஒருவழியாக அமலுக்கு வந்தது இஸ்ரேல் - ஹமாஸ் போர்நிறுத்த ஒப்பந்தம்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) உள்ளூர் நேரப்படி காலை 11.15 மணிக்கு போர் நிறுத்தம் தொடங்கியது.
ஹமாஸுடனான போர் நிறுத்த உடன்படிக்கைக்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்; ஒப்பந்தம் எப்போது அமலுக்கு வரும்?
இஸ்ரேலின் அமைச்சரவை ஹமாஸுடனான போர்நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது, இது பெரும் அழிவை ஏற்படுத்திய 15 மாத மோதலுக்கு சாத்தியமான முடிவைக் குறிக்கிறது.
கடைசி நிமிட சிக்கலுக்குப் பிறகு பிணைக் கைதிகள் விடுதலை ஒப்பந்தம் எட்டப்பட்டது: இஸ்ரேல் பிரதமர் உறுதி
காசா பகுதியில் பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக ஹமாஸுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
15 மாத காசா போர் முடிவுக்கு வந்தது; ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட இஸ்ரேல்- ஹமாஸ் தரப்பு
காசாவில் 15 மாதங்களாக நீடித்த போரில் சிக்கியுள்ள இஸ்ரேலும் ஹமாஸும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம்; இன்று இரவு வெளியாகலாம் என தகவல்
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான சாத்தியமான போர்நிறுத்த ஒப்பந்தம் இன்று (ஜனவரி 14) அறிவிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
காசா மருத்துவமனையில் சோதனை; 240க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை கைது செய்தது இஸ்ரேல்
வடக்கு காசாவில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனையில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய சோதனையின் போது பல மருத்துவ ஊழியர்கள் உட்பட 240க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை கைது செய்துள்ளனர்.
"மத்திய கிழக்கில் நிலைமை மோசமாகிவிடும்": ஹமாஸ் அமைப்பிற்கு கெடு விதித்த டிரம்ப்
அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்பதற்கு முன்னதாக காசா பகுதியில் பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால், மத்திய கிழக்கில் "நரகம்" போல நிலைமை மோசமாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது ICC
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, முன்னாள் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant மற்றும் ஹமாஸ் தலைவர் முகமது டெய்ஃப் ஆகியோருக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
காசா போலியோ தடுப்பூசிக்காக 3 நாள் போர் இடைநிறுத்தத்திற்கு இஸ்ரேல், ஹமாஸ் சம்மதம்
போரினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் உள்ள 6,40,000 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போடுவதற்காக காசாவில் மூன்று நாள் சண்டையை நிறுத்த இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டுள்ளன.
இஸ்ரேலின் புதிய நிபந்தனைகளை நிராகரித்த ஹமாஸ்; கெய்ரோ போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறியது
எகிப்தின் கெய்ரோவில் காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தையின் போது முன்வைக்கப்பட்ட புதிய இஸ்ரேலிய நிபந்தனைகளை ஏற்க ஹமாஸ் மறுத்துவிட்டது.
காஸா போரினால் தடைப்பட்ட IVF சிகிச்சை; 'அதிசய' குழந்தைகளை எண்ணி புலம்பும் பெற்றோர்
காஸாவில் நடந்து வரும் போரின் விளைவாக இன் விட்ரோ ஃபெர்டிலைசேஷன் (ஐவிஎஃப்) சிகிச்சை மூலம் பிறந்த குழந்தைகள் உட்பட பல உயிர்கள் பலியாகியுள்ளன.
ஹனியே கொல்லப்பட்டதை அடுத்து ஹமாஸ் தலைவராக யாஹ்யா சின்வாரை தேர்வு
ஜூலை 31 அன்று இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, ஹமாஸ் அதன் தலைவராக, காஸாவின் தலைவர் யாஹ்யா சின்வாரை நியமித்தது.
அக்டோபர் 7 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் ராணுவத் தலைவர் கொல்லப்பட்டார்
கடந்தாண்டு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் ஹமாஸ் ராணுவத் தலைவர் முகமது டெய்ஃப் கடந்த மாதம் காசாவில் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்கில் போருக்குப் பதில் இஸ்ரேலுக்கு இந்தியா ஆயுதங்களை வழங்கக்கூடும் என முன்னாள் தூதுவர் பகீர் வாக்குமூலம்
இந்தியாவுக்கான முன்னாள் இஸ்ரேலிய தூதர் டேனியல் கார்மன், 1999 கார்கில் போரின் போது இஸ்ரேலின் ஆதரவிற்கு "சாதகமாக" காசாவுடனான போரில் இஸ்ரேலுக்கு இந்தியா ஆயுதங்களை வழங்கக்கூடும் என்று கூறியுள்ளார்.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலினால் 42 பாலத்தீனர்கள் பலி: போரை நிறுத்த வலியுறுத்தி இஸ்ரேல் மக்கள் போராட்டம்
சனிக்கிழமையன்று காசா நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 42 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் அரசாங்க ஊடக அலுவலகத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தில் ஏற்பட்ட மரணங்கள் 'தேவையான தியாகங்கள்' என்று ஹமாஸ் தலைவர் கூறியதாக தகவல்
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட காசாவில் உள்ள ஹமாஸின் உயர் அதிகாரி, பாலஸ்தீனிய குடிமக்களின் மரணத்தை "தேவையான தியாகங்கள்" என்று தான் கருதுவதாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
"All Eyes on Rafah" என்ற புகைப்படத்திற்கு எதிராக இஸ்ரேலின் "Where were your eyes on..."
கடந்த சில நாட்களாக இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வரும்,"All Eyes on Rafah" என்ற புகைப்படத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
காசா பகுதி மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலை அடுத்து ட்ரெண்ட் ஆகும் ''All Eyes on Rafah''
தெற்கு காசா நகரத்தின் மீது இஸ்ரேல் ஒரு பெரிய தாக்குதலை நடத்தி வரும் நிலையில், அந்த நகரத்தில் வசிக்கும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக பல லட்சம் பேர் சமூக வளைத்தளங்களில் குரல் கொடுத்துள்ளனர்.
ரஃபா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: இடம்பெயர்ந்தோர் கூடாரங்கள் தாக்கப்பட்டதில் 30 பேர் கொல்லப்பட்டனர்
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில், இடம்பெயர்ந்தோர் வசிக்கும் தெற்கு காசா பகுதி நகரமான ரஃபாவில், குறைந்தது 30 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் என்றும், டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் அரசாங்கத்தில் விரிசல்: பிரதமருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்தார் இஸ்ரேல் அமைச்சர்
காசா போரில் இஸ்ரேல் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், இஸ்ரேல் அமைச்சர் பென்னி காண்ட்ஸ் ஒரு இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளார். அதனால், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் போர் அமைச்சரவையில் புதிய விரிசல்கள் உருவாகியுள்ளன.
ரஃபாவில் கொல்லப்பட்டார் இந்தியாவை சேர்ந்த ஐநா ஊழியர்: இஸ்ரேல் நடத்துவது இனப்படுகொலை இல்லை என்கிறது அமெரிக்கா
காசாவில் இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையில் பணிபுரியும் இந்தியர் ஒருவர் அவர் பயணித்த வாகனம் தாக்கப்பட்டதால் கொல்லப்பட்டார்.
2 ரஃபா பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்
இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் கிழக்கு ரஃபாவில் உள்ள இரண்டு பகுதிகளைத் தாக்கியதாக காசா சிவில் பாதுகாப்பு மற்றும் உதவி அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர்.
காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்தார் நெதன்யாகு: ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 19 பேர் பலி
கெரெம் ஷாலோம் எல்லைக் கடவையில் நடத்தப்பட்ட கொடிய ராக்கெட் தாக்குதலுக்கு ஹமாஸ் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தை இஸ்ரேல் தாக்கியது.
காசா போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால் ரஃபா பகுதி மீது தாக்குதல் நடத்துவோம்: இஸ்ரேல் எச்சரிக்கை
காசா போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ள ஹமாஸுக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்துள்ளது இஸ்ரேல்.
காசா போர் நிறுத்தம், பணயக்கைதிகள் ஒப்பந்தம் குறித்து ஜோ பைடன்-நெதன்யாகு விவாதம்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசினார்.
இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டங்கள்: அமெரிக்கா முழுவதும் 550 பேர் கைது
சியோனிஸ்டுகள் வாழத் தகுதியற்றவர்கள் என்றும் அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்றும் இஸ்ரேலிய எதிர்ப்புப் போராட்டத் தலைவர் ஒருவர் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
காசா போராட்டம், ஆன்லைன் வகுப்புகள்: கல்விக் கட்டணத்தைத் திரும்ப கேட்கும் கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்கள்
காசாவில் போரைக் கையாண்ட விதத்தை கண்டித்து அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனுக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் உள்ள பல்கலைக்கழக வளாகங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் குதித்த நிலையில், அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு முழுவதும் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதாக அறிவித்துள்ளது.
ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல்: 6 குழந்தைகள் உட்பட 9 பாலஸ்தீனியர்கள் பலி
வெள்ளியன்று காசாவின் தெற்கு நகரமான ரஃபாவில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
பிற தாக்குதல்களுக்கு தயாராவதாக இஸ்ரேல் அறிவிப்பு: மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம்
காசாவில் இராணுவ நடவடிக்கைகள் நடந்து வரும் நிலையில், மற்ற தாக்குதல்களுக்கு தயாராகி வருவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளதால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் எழுந்துள்ளது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் 3 மகன்கள் பலி
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் மூன்று மகன்கள் காசா பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
தெற்கு காசாவில் இருந்து அனைத்து படைகளையும் திரும்பப் பெற்றது இஸ்ரேல்
கிட்டத்தட்ட 184 நாட்கள் போருக்கு பிறகு காசா பகுதியின் தெற்குப் பகுதியில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தங்கள் தரைப்படைகளை திரும்பப் பெற்றுள்ளன.
இப்போதே செயல்படுங்கள் அல்லது....: காசா போர் தொடர்பாக இஸ்ரேல் பிரதமருக்கு அமெரிக்கா எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும், பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்தை எட்டுவதில் தாமதம் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
காசா போர் நிறுத்தத்தை கோரும் ஐநா வாக்களிப்பில் இருந்து விலகியது அமெரிக்கா: இஸ்ரேல் காட்டம்
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் காசாவில் போர்நிறுத்தம் செய்வதற்கான தனது முதல் கோரிக்கையை திங்களன்று வெளியிட்டது.
காசா போர்நிறுத்ததின் மீதான புதிய வரைவுத் தீர்மானத்தை கொண்டுவந்துள்ளது ஐநா
காசா போர்நிறுத்ததின் மீதான புதிய வரைவுத் தீர்மானத்தின் மீது வாக்களிக்க உள்ளது ஐநா சபை
போருக்கு மத்தியில் எகிப்து-காசா எல்லைக்கு செல்கிறார் ஐ.நா தலைவர்
ஐக்கிய நாடுகள் சபையின்(ஐ.நா.) பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், காசா-எகிப்து எல்லைக்கு சனிக்கிழமை சென்று, போர்நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசா போருக்கு மத்தியில் ரம்ஜான் பண்டிகை வர இருப்பதால் ஜெருசலேமில் பதற்றம்
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நடந்து வரும் நிலையில், இன்னும் சில நாட்களில் ரம்ஜான் வர உள்ளதால், இஸ்லாமியர்களுக்கும் யூதர்களுக்கும் பொதுவான புனித தலமாக இருக்கும் அல்-அக்ஸா மசூதி குறித்த கவலைகள் எழுந்துள்ளது. மேலும் , இதனால் புனித நகரமான ஜெருசலேமில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
காசா மக்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரண பொருட்களை 'ஏர் டிராப்' செய்ய அமெரிக்கா முடிவு
பிரான்ஸ், ஜோர்டான் மற்றும் எகிப்து போன்ற நாடுகளுடன் இணைந்து காசா மக்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரண பொருட்களை 'ஏர் டிராப்' செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
உணவு இல்லாமல் உதவிக்காக காத்து கொண்டிருந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு: 112 பேர் பலி
உணவு இல்லாமல் உதவிக்காக காத்து கொண்டிருந்த கூட்டத்தின் மீது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், காசாவில் குறைந்தது 112 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 760 பேர் காயமடைந்தனர்.
போர் நடந்து வரும் வடக்கு காசா பகுதிக்கான உதவிகளை நிறுத்தியது ஐநா உணவு நிறுவனம்
இஸ்ரேலின் தொடர்ச்சியான துப்பாக்கிச் சூடு மற்றும் சிவில் ஒழுங்கு சீர்குலைவு காரணமாக வடக்கு காசாவிற்கு வழங்கி வந்த உணவு விநியோகத்தை ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம்(WFP) இடை நிறுத்தியுள்ளது.