
ஆபரேஷன் கிதியோன் சாரியட்ஸ்: காசாவில் புதிய ராணுவ தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்
செய்தி முன்னோட்டம்
இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) ஆபரேஷன் கிதியோன் சாரியட்ஸ் என்ற புதிய ராணுவத் தாக்குதலைத் தொடங்கியுள்ளன.
இது காசா பகுதியில் இஸ்ரேலின் இருப்பை விரிவுபடுத்துவதையும் முக்கிய மூலோபாய பகுதிகளில் முன்னேறுவதையும் நோக்கமாகக் கொண்டது.
இஸ்ரேலிய ராணுவ வட்டாரங்களின்படி, இந்த நடவடிக்கை வெள்ளிக்கிழமை (மே 16) இரவு வடக்கு காசாவில் கடுமையான குண்டுவீச்சுகளுடன் தொடங்கியது.
இதில் காசா நகரத்தின் துஃபா சுற்றுப்புறம் உட்பட, கான் யூனிஸ், ஜபாலியா மற்றும் டெய்ர் அல்-பலாஹ் போன்ற தெற்குப் பகுதிகளில் ஒரே நேரத்தில் ராணுவ நடவடிக்கையும் தொடங்கியது.
இது காசாவில் நடந்து வரும் ராணுவ நடவடிக்கையின் அதிகரிப்பைக் குறிக்கிறது என்பதை இஸ்ரேலிய பாதுகாப்புப் படை உறுதிப்படுத்தியது.
நோக்கம்
தாக்குதலை அதிகரித்துள்ளதன் நோக்கம்
பணயக்கைதிகளை விடுவித்தல் மற்றும் காசாவை நிர்வகிக்கும் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற நாடுகளால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட ஹமாஸை முற்றிலுமாக தோற்கடித்தல் ஆகியவை இதில் அடங்கும்.
"கிதியோன் சாரியட்ஸ் விரிவான தாக்குதல்களைத் தொடங்கி காசாவில் உள்ள மூலோபாயப் பகுதிகளைக் கைப்பற்ற படைகளைத் திரட்டியது" என்று ஒரு இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார்.
"இஸ்ரேலிய குடிமக்களைப் பாதுகாப்பதற்கும் இந்தப் போரின் நோக்கங்களை அடைவதற்கும் எங்கள் துருப்புக்கள் தெற்கு கட்டளையின் கீழ் தொடர்ந்து செயல்படும்." என்று அவர் மேலும் கூறினார்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸை ஒழிப்பதில் தனது உறுதியை மீண்டும் வலியுறுத்தி உள்ளார். மேலும், வரும் நாட்களில் மேலும் ராணுவ விரிவாக்கம் இருக்கும் என உறுதியளித்தார்.