குழந்தை கிஃபிர் பிபாஸ் மற்றும் குடும்பத்தினரின் சடலத்தை ஒப்படைக்கும் ஹமாஸ்; துக்க நாளாக அனுசரிக்கும் இஸ்ரேல்
செய்தி முன்னோட்டம்
ஹமாஸ் தன்வசம் வைத்திருந்த இஸ்ரேலின் இளம் வயது பணயக்கைதியான ஒன்பது மாத குழந்தை கிஃபிர் பிபாஸ், அவரது நான்கு வயது சகோதரர் ஏரியல், அவர்களின் தாய் ஷிரி பிபாஸ் மற்றும் மற்றொரு பணயக்கைதி ஓடெட் லிஃப்ஷிட்ஸ் ஆகியோரின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
அவர்களது உடல்கள் இன்று (பிப்ரவரி 20) காசாவின் கான் யூனிஸிலிருந்து திருப்பி அனுப்பப்படுகிறது.
இதையொட்டி இஸ்ரேல் இந்த நாளை மனதை உடைக்கும் துக்க நாளாக அனுசரிக்க உள்ளது.
பணயக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்கள் அமைப்பு, இந்த தகவலை இதயத்தை உடைக்கும் செயல் என்று விவரித்தது.
கடத்தல்
அக்டோபர் 7 தாக்குதலில் கடத்தல்
அக்டோபர் 7 அன்று ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களின் போது கிப்புட்ஸ் நிர் ஓஸில் இருந்து கடத்தப்பட்ட பிபாஸ் குடும்பம் உயிர் பிழைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியது.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதற்கு வருத்தம் தெரிவித்து, "இந்த நாள் இஸ்ரேல் அரசுக்கு மிகவும் கடினமான நாளாக இருக்கும்.
இதயத்தை உடைக்கும் நாள், துக்க நாள்" என்று தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியது.
பிபாஸ் குடும்பம், அவர்கள் பாதுகாப்பாக திரும்புவதற்கான உலகளாவிய அழைப்புகளுடன் இஸ்ரேலில் நடந்து வரும் பணயக்கைதிகள் நெருக்கடியின் குறியீடாக மாறியது.
இஸ்ரேல்-காசா போர் தொடரும் மனிதாபிமான மற்றும் பாதுகாப்பு நெருக்கடியை அவர்களின் இறப்புகள் எடுத்துக்காட்டுகின்றன.