காசா: செய்தி
தாமதங்கள் மற்றும் தொடர் தாக்குதல்களுக்கு பிறகு ஒருவழியாக அமலுக்கு வந்தது இஸ்ரேல் - ஹமாஸ் போர்நிறுத்த ஒப்பந்தம்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) உள்ளூர் நேரப்படி காலை 11.15 மணிக்கு போர் நிறுத்தம் தொடங்கியது.
ஹமாஸுடனான போர் நிறுத்த உடன்படிக்கைக்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்; ஒப்பந்தம் எப்போது அமலுக்கு வரும்?
இஸ்ரேலின் அமைச்சரவை ஹமாஸுடனான போர்நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது, இது பெரும் அழிவை ஏற்படுத்திய 15 மாத மோதலுக்கு சாத்தியமான முடிவைக் குறிக்கிறது.
கடைசி நிமிட சிக்கலுக்குப் பிறகு பிணைக் கைதிகள் விடுதலை ஒப்பந்தம் எட்டப்பட்டது: இஸ்ரேல் பிரதமர் உறுதி
காசா பகுதியில் பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக ஹமாஸுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
15 மாத காசா போர் முடிவுக்கு வந்தது; ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட இஸ்ரேல்- ஹமாஸ் தரப்பு
காசாவில் 15 மாதங்களாக நீடித்த போரில் சிக்கியுள்ள இஸ்ரேலும் ஹமாஸும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம்; இன்று இரவு வெளியாகலாம் என தகவல்
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான சாத்தியமான போர்நிறுத்த ஒப்பந்தம் இன்று (ஜனவரி 14) அறிவிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
காசா மருத்துவமனையில் சோதனை; 240க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை கைது செய்தது இஸ்ரேல்
வடக்கு காசாவில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனையில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய சோதனையின் போது பல மருத்துவ ஊழியர்கள் உட்பட 240க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை கைது செய்துள்ளனர்.
"மத்திய கிழக்கில் நிலைமை மோசமாகிவிடும்": ஹமாஸ் அமைப்பிற்கு கெடு விதித்த டிரம்ப்
அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்பதற்கு முன்னதாக காசா பகுதியில் பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால், மத்திய கிழக்கில் "நரகம்" போல நிலைமை மோசமாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது ICC
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, முன்னாள் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant மற்றும் ஹமாஸ் தலைவர் முகமது டெய்ஃப் ஆகியோருக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
காசா போலியோ தடுப்பூசிக்காக 3 நாள் போர் இடைநிறுத்தத்திற்கு இஸ்ரேல், ஹமாஸ் சம்மதம்
போரினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் உள்ள 6,40,000 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போடுவதற்காக காசாவில் மூன்று நாள் சண்டையை நிறுத்த இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டுள்ளன.
இஸ்ரேலின் புதிய நிபந்தனைகளை நிராகரித்த ஹமாஸ்; கெய்ரோ போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறியது
எகிப்தின் கெய்ரோவில் காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தையின் போது முன்வைக்கப்பட்ட புதிய இஸ்ரேலிய நிபந்தனைகளை ஏற்க ஹமாஸ் மறுத்துவிட்டது.
காஸா போரினால் தடைப்பட்ட IVF சிகிச்சை; 'அதிசய' குழந்தைகளை எண்ணி புலம்பும் பெற்றோர்
காஸாவில் நடந்து வரும் போரின் விளைவாக இன் விட்ரோ ஃபெர்டிலைசேஷன் (ஐவிஎஃப்) சிகிச்சை மூலம் பிறந்த குழந்தைகள் உட்பட பல உயிர்கள் பலியாகியுள்ளன.
ஹனியே கொல்லப்பட்டதை அடுத்து ஹமாஸ் தலைவராக யாஹ்யா சின்வாரை தேர்வு
ஜூலை 31 அன்று இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, ஹமாஸ் அதன் தலைவராக, காஸாவின் தலைவர் யாஹ்யா சின்வாரை நியமித்தது.
அக்டோபர் 7 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் ராணுவத் தலைவர் கொல்லப்பட்டார்
கடந்தாண்டு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் ஹமாஸ் ராணுவத் தலைவர் முகமது டெய்ஃப் கடந்த மாதம் காசாவில் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்கில் போருக்குப் பதில் இஸ்ரேலுக்கு இந்தியா ஆயுதங்களை வழங்கக்கூடும் என முன்னாள் தூதுவர் பகீர் வாக்குமூலம்
இந்தியாவுக்கான முன்னாள் இஸ்ரேலிய தூதர் டேனியல் கார்மன், 1999 கார்கில் போரின் போது இஸ்ரேலின் ஆதரவிற்கு "சாதகமாக" காசாவுடனான போரில் இஸ்ரேலுக்கு இந்தியா ஆயுதங்களை வழங்கக்கூடும் என்று கூறியுள்ளார்.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலினால் 42 பாலத்தீனர்கள் பலி: போரை நிறுத்த வலியுறுத்தி இஸ்ரேல் மக்கள் போராட்டம்
சனிக்கிழமையன்று காசா நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 42 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் அரசாங்க ஊடக அலுவலகத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தில் ஏற்பட்ட மரணங்கள் 'தேவையான தியாகங்கள்' என்று ஹமாஸ் தலைவர் கூறியதாக தகவல்
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட காசாவில் உள்ள ஹமாஸின் உயர் அதிகாரி, பாலஸ்தீனிய குடிமக்களின் மரணத்தை "தேவையான தியாகங்கள்" என்று தான் கருதுவதாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
"All Eyes on Rafah" என்ற புகைப்படத்திற்கு எதிராக இஸ்ரேலின் "Where were your eyes on..."
கடந்த சில நாட்களாக இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வரும்,"All Eyes on Rafah" என்ற புகைப்படத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
காசா பகுதி மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலை அடுத்து ட்ரெண்ட் ஆகும் ''All Eyes on Rafah''
தெற்கு காசா நகரத்தின் மீது இஸ்ரேல் ஒரு பெரிய தாக்குதலை நடத்தி வரும் நிலையில், அந்த நகரத்தில் வசிக்கும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக பல லட்சம் பேர் சமூக வளைத்தளங்களில் குரல் கொடுத்துள்ளனர்.
ரஃபா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: இடம்பெயர்ந்தோர் கூடாரங்கள் தாக்கப்பட்டதில் 30 பேர் கொல்லப்பட்டனர்
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில், இடம்பெயர்ந்தோர் வசிக்கும் தெற்கு காசா பகுதி நகரமான ரஃபாவில், குறைந்தது 30 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் என்றும், டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் அரசாங்கத்தில் விரிசல்: பிரதமருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்தார் இஸ்ரேல் அமைச்சர்
காசா போரில் இஸ்ரேல் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், இஸ்ரேல் அமைச்சர் பென்னி காண்ட்ஸ் ஒரு இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளார். அதனால், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் போர் அமைச்சரவையில் புதிய விரிசல்கள் உருவாகியுள்ளன.
ரஃபாவில் கொல்லப்பட்டார் இந்தியாவை சேர்ந்த ஐநா ஊழியர்: இஸ்ரேல் நடத்துவது இனப்படுகொலை இல்லை என்கிறது அமெரிக்கா
காசாவில் இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையில் பணிபுரியும் இந்தியர் ஒருவர் அவர் பயணித்த வாகனம் தாக்கப்பட்டதால் கொல்லப்பட்டார்.
2 ரஃபா பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்
இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் கிழக்கு ரஃபாவில் உள்ள இரண்டு பகுதிகளைத் தாக்கியதாக காசா சிவில் பாதுகாப்பு மற்றும் உதவி அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர்.
காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்தார் நெதன்யாகு: ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 19 பேர் பலி
கெரெம் ஷாலோம் எல்லைக் கடவையில் நடத்தப்பட்ட கொடிய ராக்கெட் தாக்குதலுக்கு ஹமாஸ் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தை இஸ்ரேல் தாக்கியது.
காசா போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால் ரஃபா பகுதி மீது தாக்குதல் நடத்துவோம்: இஸ்ரேல் எச்சரிக்கை
காசா போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ள ஹமாஸுக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்துள்ளது இஸ்ரேல்.
காசா போர் நிறுத்தம், பணயக்கைதிகள் ஒப்பந்தம் குறித்து ஜோ பைடன்-நெதன்யாகு விவாதம்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசினார்.
இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டங்கள்: அமெரிக்கா முழுவதும் 550 பேர் கைது
சியோனிஸ்டுகள் வாழத் தகுதியற்றவர்கள் என்றும் அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்றும் இஸ்ரேலிய எதிர்ப்புப் போராட்டத் தலைவர் ஒருவர் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
காசா போராட்டம், ஆன்லைன் வகுப்புகள்: கல்விக் கட்டணத்தைத் திரும்ப கேட்கும் கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்கள்
காசாவில் போரைக் கையாண்ட விதத்தை கண்டித்து அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனுக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் உள்ள பல்கலைக்கழக வளாகங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் குதித்த நிலையில், அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு முழுவதும் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதாக அறிவித்துள்ளது.
ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல்: 6 குழந்தைகள் உட்பட 9 பாலஸ்தீனியர்கள் பலி
வெள்ளியன்று காசாவின் தெற்கு நகரமான ரஃபாவில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
பிற தாக்குதல்களுக்கு தயாராவதாக இஸ்ரேல் அறிவிப்பு: மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம்
காசாவில் இராணுவ நடவடிக்கைகள் நடந்து வரும் நிலையில், மற்ற தாக்குதல்களுக்கு தயாராகி வருவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளதால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் எழுந்துள்ளது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் 3 மகன்கள் பலி
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் மூன்று மகன்கள் காசா பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
தெற்கு காசாவில் இருந்து அனைத்து படைகளையும் திரும்பப் பெற்றது இஸ்ரேல்
கிட்டத்தட்ட 184 நாட்கள் போருக்கு பிறகு காசா பகுதியின் தெற்குப் பகுதியில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தங்கள் தரைப்படைகளை திரும்பப் பெற்றுள்ளன.
இப்போதே செயல்படுங்கள் அல்லது....: காசா போர் தொடர்பாக இஸ்ரேல் பிரதமருக்கு அமெரிக்கா எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும், பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்தை எட்டுவதில் தாமதம் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
காசா போர் நிறுத்தத்தை கோரும் ஐநா வாக்களிப்பில் இருந்து விலகியது அமெரிக்கா: இஸ்ரேல் காட்டம்
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் காசாவில் போர்நிறுத்தம் செய்வதற்கான தனது முதல் கோரிக்கையை திங்களன்று வெளியிட்டது.
காசா போர்நிறுத்ததின் மீதான புதிய வரைவுத் தீர்மானத்தை கொண்டுவந்துள்ளது ஐநா
காசா போர்நிறுத்ததின் மீதான புதிய வரைவுத் தீர்மானத்தின் மீது வாக்களிக்க உள்ளது ஐநா சபை
போருக்கு மத்தியில் எகிப்து-காசா எல்லைக்கு செல்கிறார் ஐ.நா தலைவர்
ஐக்கிய நாடுகள் சபையின்(ஐ.நா.) பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், காசா-எகிப்து எல்லைக்கு சனிக்கிழமை சென்று, போர்நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசா போருக்கு மத்தியில் ரம்ஜான் பண்டிகை வர இருப்பதால் ஜெருசலேமில் பதற்றம்
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நடந்து வரும் நிலையில், இன்னும் சில நாட்களில் ரம்ஜான் வர உள்ளதால், இஸ்லாமியர்களுக்கும் யூதர்களுக்கும் பொதுவான புனித தலமாக இருக்கும் அல்-அக்ஸா மசூதி குறித்த கவலைகள் எழுந்துள்ளது. மேலும் , இதனால் புனித நகரமான ஜெருசலேமில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
காசா மக்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரண பொருட்களை 'ஏர் டிராப்' செய்ய அமெரிக்கா முடிவு
பிரான்ஸ், ஜோர்டான் மற்றும் எகிப்து போன்ற நாடுகளுடன் இணைந்து காசா மக்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரண பொருட்களை 'ஏர் டிராப்' செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
உணவு இல்லாமல் உதவிக்காக காத்து கொண்டிருந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு: 112 பேர் பலி
உணவு இல்லாமல் உதவிக்காக காத்து கொண்டிருந்த கூட்டத்தின் மீது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், காசாவில் குறைந்தது 112 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 760 பேர் காயமடைந்தனர்.
போர் நடந்து வரும் வடக்கு காசா பகுதிக்கான உதவிகளை நிறுத்தியது ஐநா உணவு நிறுவனம்
இஸ்ரேலின் தொடர்ச்சியான துப்பாக்கிச் சூடு மற்றும் சிவில் ஒழுங்கு சீர்குலைவு காரணமாக வடக்கு காசாவிற்கு வழங்கி வந்த உணவு விநியோகத்தை ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம்(WFP) இடை நிறுத்தியுள்ளது.