NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ரஃபா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: இடம்பெயர்ந்தோர் கூடாரங்கள் தாக்கப்பட்டதில் 30 பேர் கொல்லப்பட்டனர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரஃபா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: இடம்பெயர்ந்தோர் கூடாரங்கள் தாக்கப்பட்டதில் 30 பேர் கொல்லப்பட்டனர்
    இஸ்ரேலிய தாக்குதலில், குறைந்தது 30 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் pc: இந்தியா டுடே

    ரஃபா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: இடம்பெயர்ந்தோர் கூடாரங்கள் தாக்கப்பட்டதில் 30 பேர் கொல்லப்பட்டனர்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 27, 2024
    07:41 am

    செய்தி முன்னோட்டம்

    இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில், இடம்பெயர்ந்தோர் வசிக்கும் தெற்கு காசா பகுதி நகரமான ரஃபாவில், குறைந்தது 30 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் என்றும், டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

    15 நாட்களுக்கு முன்பு இஸ்ரேலியப் படைகள் தரைவழித் தாக்குதலைத் தொடங்கிய பின்னர், நகரின் கிழக்குப் பகுதிகளிலிருந்து தப்பி ஓடிய ஆயிரக்கணக்கான மக்கள் ரஃபாவில் தற்காலிக கூடாரத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

    அந்த கூடாரங்களில் தற்போது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதாக பாலஸ்தீனிய சுகாதார மற்றும் சிவில் அவசர சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    காயமடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதால், இஸ்ரேலிய தாக்குதல்களில் இறந்தவர்களின் இறுதி எண்ணிக்கையை மருத்துவர்கள் உறுதிப்படுத்தவில்லை.

    இஸ்ரேல்- ஹமாஸ் போர் 

    ஹமாஸை குறி வைத்து தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்

    இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி வழங்கியதற்கு அமெரிக்காவே பொறுப்பு என்று கூறி, ஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர், இந்த தாக்குதலை 'படுகொலை' என்று அழைத்தார்.

    "ரஃபாவில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட்டுகள், ஹமாஸ் இன்னும் செயல்படும் ஒவ்வொரு இடத்திலும் (இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள்) செயல்படும் என்பதை நிரூபிக்கிறது" என்று இஸ்ரேலிய போர் அமைச்சரவை மந்திரி பென்னி காண்ட்ஸ் கூறினார்.

    இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை 36,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலைத் தாக்கிய பின்னர் காசாவில் இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது.

    கடந்த சில மாதங்களாக, காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை சர்வதேச சமூகம் கண்டித்தும், கட்டுப்பாட்டை கடைப்பிடிக்குமாறும் வலியுறுத்தி வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல்
    காசா
    பாலஸ்தீனம்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் ஹமாஸ் துணைத் தலைவர் கொல்லப்பட்டார் ஹமாஸ்
    செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: அமெரிக்க ராணுவம் హౌతీ రెబెల్స్
    ஈரானில் இரட்டை குண்டுவெடிப்புகளால் தாக்கப்பட்ட காசிம் சுலைமானி கல்லறை- யார் அவர்? ஈரான்
    அமெரிக்காவின் 'இறுதி எச்சரிக்கை' புறக்கணிப்பு: செங்கடலில் ட்ரோன் படகை வெடிக்கச் செய்த ஹூதிகள் அமெரிக்கா

    இஸ்ரேல்

    இஸ்ரேல் மீது ஈரான் 48 மணி நேரத்தில் தாக்குதல் நடத்தக்கூடும்  ஈரான்
    ஈரான், இஸ்ரேலுக்கு பயணம் செய்ய வேண்டாம் என இந்தியா அறிவுறுத்தல்  ஈரான்
    இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வரும் ஈரான்  ஈரான்
    இஸ்ரேலை தாக்க இருக்கும் ஈரான்: இஸ்ரேலுக்கு உதவ போர்க்கப்பல்களை அனுப்பியது அமெரிக்கா  ஈரான்

    காசா

    காசா போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர நெதன்யாகுவிடம் மோடி வலியுறுத்தல் பிரதமர் மோடி
    செங்கடல் வர்த்தக கப்பல்கள் தாக்கப்படுவதால் சர்வதேச அளவில் ஏற்படும் பாதிப்புகள் என்ன? இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல் போரை நிறுத்த ஒப்புக் கொள்ளும் வரை பணயக்கைதிகளை மேலும் விடுவிக்க ஹமாஸ் மறுப்பு இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    குஜராத் பகுதியில் கப்பலை தாக்கிய ட்ரோன் ஈரானிலிருந்து ஏவப்பட்டது- அமெரிக்கா ஈரான்

    பாலஸ்தீனம்

    இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் தலைவர்: யாரிந்த யாஹ்யா சின்வார்? இஸ்ரேல்
    அமெரிக்கா: வெறுப்பினால் 6 வயது பாலஸ்தீன-முஸ்லீம் சிறுவனை 26 முறை கத்தியால் குத்தி கொன்ற கொடூரன்  அமெரிக்கா
    லெபனானில் உள்ள பயங்கரவாத அமைப்பு மீது இஸ்ரேல் தாக்குதல்: போர் விரிவடைய வாய்ப்பு  இஸ்ரேல்
    பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பெங்களூரில் பெரும் போராட்டம்  பெங்களூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025