உத்தரப்பிரதேசம்: செய்தி
கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லி-ஆக்ரா விரைவுச் சாலையில் வாகனங்கள் மோதி தீ விபத்து: 4 பேர் பலி, 25 பேர் காயம்
உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள டெல்லி-ஆக்ரா விரைவு சாலையில் (யமுனா விரைவுச் சாலை), இன்று அதிகாலை கடும் பனிமூட்டம் காரணமாக கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
உத்தரப்பிரதேச இருமல் மருந்து வழக்கு: அமலாக்கத்துறை 3 மாநிலங்களில் 25 இடங்களில் அதிரடிச் சோதனை; முக்கியக் குற்றவாளி துபாயில் பதுங்கல்
உத்தரப்பிரதேசத்தில் சட்டவிரோதக் கோடீன் அடிப்படையிலான இருமல் மருந்து விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) மூன்று மாநிலங்களில் உள்ள 25 இடங்களில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டது.
நாட்டிலேயே முதல் முறை: வாக்காளர் பட்டியலில் தவறான விவரம் அளித்த குடும்பத்தின் மீது உ.பி.யில் வழக்குப்பதிவு
உத்தரப்பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கும் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) படிவங்களில் தவறான விவரங்களை அளித்ததாக ஒரு குடும்பத்தின் மீது முதல் முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எந்தப் பயிற்சியும் இன்றிச் செயல்படும் ரோபோ ஆசிரியரை உருவாக்கி அரசு பள்ளி மாணவர் சாதனை
உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாஹரைச் சேர்ந்த 17 வயது மாணவர் ஆதித்யா, எவ்விதமான ரோபாட்டிக்ஸ் பயிற்சியும் பெறாமல், முழுமையாகச் செயல்படக்கூடிய சோபியா (Sophia) என்ற ரோபோ ஆசிரியரை உருவாக்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
உ.பி.யில் இரவு நேரத்தில் பணிபுரியும் பெண்களுக்கு இரட்டிப்பு ஊதியம்; தொழிலாளர் சட்டத்தில் முக்கியச் சீர்திருத்தம்
பணிபுரியும் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் ஒரு முக்கியச் சீர்திருத்தமாக, உத்தரப் பிரதேச அரசு இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை பெண்கள் இரவுப் பணிகளில் பணியாற்ற அனுமதி அளித்து ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது.
அனைத்து கல்வி நிறுவனங்களிலும் வந்தே மாதரம் பாடல் கட்டாயமாக்கப்படும்; உத்தரப்பிரதேச முதல்வர் அறிவிப்பு
உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் வந்தே மாதரம் பாடல் கட்டாயம் பாடப்பட வேண்டும் என்று திங்கட்கிழமை (நவம்பர் 10) அறிவித்துள்ளார்.
தலைக்கவசம் அணியாதவருக்கு ₹21 லட்சம் அபராதம்; ஷாக் கொடுத்த போக்குவரத்து காவல்துறை; பின்னணி என்ன?
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிய ஒருவருக்கு ₹21 லட்சத்துக்கும் அதிகமான தொகைக்கு அபராதம் விதிக்கப்பட்டதைக் கண்டு அந்த ஸ்கூட்டர் ஓட்டுநர் அதிர்ச்சி அடைந்தார்.
உத்தரப்பிரதேசத்தில் தண்டவாளங்களை கடக்கும்போது ரயில் மோதி 6 பேர் உயிரிழந்தனர்
உத்தரபிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சுனார் சந்திப்பில் புதன்கிழமை காலை ரயில் மோதியதில் 6 பயணிகள் உயிரிழந்தனர் என்று Hindustan Times தெரிவித்துள்ளது.
அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம் முழுவதும் நிறைவு; நவம்பர் 25 அன்று கொடியேற்றுகிறார் பிரதமர் மோடி
அயோத்தியின் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை திங்களன்று (அக்டோபர் 27), பிரதான ராமர் கோயில் தொடர்பான அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறைவடைந்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.
அயோத்தி தீப உற்சவம்: 26 லட்சத்திற்கும் அதிகமான அகல் விளக்குகளுடன் புதிய உலக சாதனை
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற ஒன்பதாவது தீப உற்சவத்தில், சரயு நதிக்கரையில் உள்ள 56 கட்டங்களிலும் 26 லட்சத்திற்கும் அதிகமான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு, அயோத்தி ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 19) அன்று ஒளிவெள்ளத்தில் ஜொலித்தது.
உலகின் முதல் ராமாயண கருப்பொருள் கொண்ட மெழுகு அருங்காட்சியகம் அயோத்தியில் திறக்கப்பட உள்ளது
அயோத்தியில் ராமாயணத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகின் முதல் மெழுகு சிலை அருங்காட்சியகம் திறக்கப்பட உள்ளது.
இந்தியாவில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன, மோசடி வழக்குகள் அதிகம்: NCRB
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் சைபர் குற்றங்கள் 2023 ஆம் ஆண்டில் 31.2% என்ற மிகப்பெரிய அதிகரிப்பைக் கண்டுள்ளது.
உ.பி.யில் பயங்கரம்; ₹39 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்றோர், மனைவியை கொன்ற மகன் கைது
உத்தரப் பிரதேசத்தில் இன்சூரன்ஸ் தொகையாகக் கோடிக்கணக்கான ரூபாயைப் பெறுவதற்காகத் தனது பெற்றோர் மற்றும் மனைவியைக் கொலை செய்ததாகக் கூறப்படும் அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஐ லவ் முஹம்மது சர்ச்சையை தொடர்ந்து உத்தரப்பிதேச மதகுரு தௌகீர் ரஸா கான் கைது; 1,700 பேர் மீது வழக்கு
உத்தரப் பிரதேசத்தின் பரேலியில் ஐ லவ் முஹம்மது பிரச்சாரத்தை ஆதரித்து நடைபெற்ற போராட்டங்களைத் தொடர்ந்து வன்முறை வெடித்த நிலையில், உள்ளூர் மதகுருவும் இத்திஹாத்-இ-மில்லத் கவுன்சில் தலைவருமான மௌலானா தௌகீர் ரஸா கான் சனிக்கிழமை (செப்டம்பர் 27) அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் 16 மாநிலங்கள் வருவாய் உபரியைப் பதிவு செய்துள்ளன; ₹37,000 கோடியுடன் முதலிடத்தில் இருப்பது யார்?
இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (CAG) 2022-23 நிதியாண்டுக்கான மாநில நிதி குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
காவல்துறையின் பதிவேடுகளில் இருந்து சாதி விவரங்களை நீக்க உத்தரபிரதேச அரசு உத்தரவு
சாதி அடிப்படையிலான பாகுபாடுகளைக் களையெடுக்கும் ஒரு முக்கியமான நடவடிக்கையாக, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, காவல்துறையின் பதிவேடுகள், பொது இடங்கள் மற்றும் வாகனங்களில் இருந்து சாதி தொடர்பான அனைத்து குறிப்புகளையும் நீக்க உத்தரவிட்டுள்ளது.
'தலாக்' அறிவித்த கணவரை, நீதிமன்றத்திற்கு வெளியே அடித்து துவம்சம் செய்த உ.பி. பெண்
உத்தரபிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்தில் ஒரு பெண் நீதிமன்றத்திற்கு வெளியே தனது கணவரை செருப்புகளால் அடித்து துவைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
நேபாளக் கலவரம்: எல்லைக்கு அருகில் இந்திய யாத்ரீகர்கள் தாக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டனர்
நேபாளத்தில் காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோவிலில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த இந்திய யாத்ரீகர்கள் குழு வியாழக்கிழமை தாக்கப்பட்டது.
உத்தரபிரதேசத்தில் 52 வயது பெண்ணைக் கொன்ற 26 வயது இன்ஸ்டாகிராம் காதலன்
உத்தரபிரதேசத்தின் மெயின்புரியில் 52 வயது பெண் ஒருவர் தனது 26 வயது காதலனால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
வரதட்சணை கொலை: கிரேட்டர் நொய்டாவில் குற்றம் சாட்டப்பட்ட கணவர் மீது காவல்துறை என்கவுன்ட்டர்
ஒரு பயங்கரமான வரதட்சணை கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, குற்றம் சாட்டப்பட்ட கணவர் விபின், ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24) பிற்பகல் கிரேட்டர் நொய்டாவில் உள்ள சிர்சா சௌக் அருகே உத்தரபிரதேச போலீசாரால் நடந்த என்கவுன்ட்டரில் காலில் சுடப்பட்டார்.
உத்தரபிரதேசத்தின் கோண்டாவில் கால்வாயில் எஸ்யூவி கவிழ்ந்து பதினொரு பக்தர்கள் பலி
உத்தரபிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 3) அன்று பக்தர்களை ஏற்றிச் சென்ற எஸ்யூவி வாகனம் சாலையை விட்டு விலகி கால்வாயில் விழுந்ததில் பதினொரு பேர் உயிரிழந்தனர்.
ஓரினச்சேர்க்கையாளர் டேட்டிங் ஆசையில் சென்று ரூ.8 லட்சம் இழந்த 57 வயது டாக்டர்
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த 57 வயது மருத்துவர், டேட்டிங் செயலி மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர் டேட்டிங்கைத் தொடர்ந்து நடந்த மிரட்டி பணம் பறிக்கும் மோசடியில் ரூ.8 லட்சத்தை இழந்தார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பூர்வீக கிராமம் 'படேஷ்வர்' ஆன்மிக சுற்றுலாத்தலமாக மாறுகிறது
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த ஊரான படேஷ்வர் கிராமம், முக்கிய ஆன்மிக மற்றும் பாரம்பரிய சுற்றுலா மையமாக மாற்றப்படும் என உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.
ஈரான் தலைவர் கொமேனிக்கும் உத்தரப்பிரதேசத்திற்கும் உள்ள வரலாற்றுத் தொடர்பு; வியக்கவைக்கும் பின்னணி!
உத்தரபிரதேசத்தின் பராபங்கி மாவட்டத்தில் உள்ள அமைதியான கிராமமான கிந்தூர், ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஸ்தாபகத் தந்தை அயதுல்லா ருஹோல்லா கொமேனியுடன் அதன் மூதாதையர் தொடர்பு காரணமாக எதிர்பாராத விதமாக உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது.
கணவர் வீட்டை கவனிக்கச் சொன்னதால் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர் எண்ணிக்கை குறைந்துவிட்டதாம்; போலீசில் புகாரளித்த மனைவி
உத்தரப் பிரதேசத்தின் ஹபூர் மாவட்டத்தில் ஒரு பெண் தனது கணவர் தனது சமூக ஊடக நடவடிக்கைகளில் தலையிடுவதாகக் குற்றம் சாட்டியதால், இன்ஸ்டாகிராம் பயன்பாடு தொடர்பான குடும்ப சண்டை போலீஸ் வழக்காக மாறியது.
மேகாலயா ஹனிமூன் கொலையை சகோதரி தான் செய்திருப்பாள் என உறுதியாக சொல்கிறார் சோனமின் அண்ணன்
சோனம் ரகுவன்ஷியின் சகோதரர் கோவிந்த், தனது சகோதரி தான் அவளது கணவர் ராஜா ரகுவன்ஷியைக் கொன்றது உறுதியாகத் தெரிகிறது என்று இன்று தெரிவித்தார்.
மேகாலயா தேனிலவு கொலை: திருமணமான 3 நாட்களுக்கு பின் காதலனுடன் கொலைக்கு திட்டமிட்ட மணப்பெண்
மேகாலயாவில் தேனிலவின் போது, தனது கணவர் ராஜா ரகுவன்ஷியைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட சோனம் ரகுவன்ஷி, திருமணமான மூன்று நாட்களுக்குப் பிறகு தனது காதலனுடன் சேர்ந்து அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டதாக இந்தியா டுடேவிற்கு வட்டாரங்கள் தெரிவித்தன.
மேகாலயாவில் காணாமல் போன இந்தூர் பெண் விவகாரத்தில் இறுதியாக விலகியது மர்மம்!
மேகாலயாவில் தேனிலவின் போது காணாமல் போன இந்தூர் பெண் தனது கணவரைக் கொலை செய்ததற்காக திங்கள்கிழமை கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு
லக்னோவில் கணவன் மனைவியின் நள்ளிரவு நடைப்பயணம் ஒன்று சோகமாக மாறியது. 37 வயதான வழக்கறிஞர் அனுபம் திவாரி தனது மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து ஆற்றில் குதித்ததாகக் கூறப்படுகிறது.
பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு இல்லை: அலகாபாத் உயர்நீதிமன்றம்
சர்ச்சையான தீர்ப்புகளை வழங்கி வரும் அலகாபாத் உயர் நீதிமன்றம் மற்றுமொரு தீர்ப்பை வழங்கி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டேட்டிங் செயலியில் சந்தித்த பெண்ணால் ₹6.5 கோடியை இழந்த இந்திய தொழிலதிபர்
நொய்டாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் டேட்டிங் செயலியில் சந்தித்த ஒரு பெண்ணால் மோசடியான ஆன்லைன் வர்த்தக தளத்தில் முதலீடு செய்து ₹6.5 கோடியை இழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சாலைகளில் தொழுகை மேற்கொண்டால் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் ரத்து; உ.பி. காவல்துறை எச்சரிக்கை
ஈத்-உல்-பித்ர் மற்றும் ரம்ஜானின் கடைசி வெள்ளிக்கிழமை (மார்ச் 28) தொழுகைக்கு முன்னதாக, உத்தரபிரதேசத்தின் மீரட் காவல்துறை சாலைகளில் தொழுகை நடத்துவதற்கு எதிராக கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
மீரட் கொலை: போலி மருந்துச் சீட்டு தயாரித்து, கணவருக்கு தூக்க மருந்து வாங்கி கொலை செய்தது அம்பலம்
மீரட்டைச் சேர்ந்த முஸ்கன் ரஸ்தோகி என்ற பெண், தனது கணவரை தூக்க மருந்து கொடுத்து கொலை செய்து, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி , தனது காதலரின் உதவியுடன் ஒரு சிமெண்ட் டிரம்மில் அடைத்து வைத்ததாகக் கூறப்படுகிறது.
மகளின் பிறந்தநாளுக்காக லண்டனில் இருந்து வந்த கணவரை வெட்டி கொன்ற மனைவி
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த வணிகக் கடற்படை அதிகாரி ஒருவர், தனது மகளின் பிறந்தநாளைக் கொண்டாட லண்டனிலிருந்து சர்ப்ரைஸாக இந்தியா திரும்பிய சில நாட்களுக்குப் பிறகு, அவரது மனைவி மற்றும் அவரது கள்ள காதலரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஐந்து ஆண்டுகளில் ரூ.400 கோடியை அரசுக்கு வரியாக செலுத்தியுள்ள ராமர் கோவில் நிர்வாகம்
ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் ரூ.400 கோடி வரி செலுத்தியுள்ளது.
ISI-க்கு ரகசியங்களை கசியவிட்ட உத்தரபிரதேச ஆயுத தொழிற்சாலை ஊழியர் கைது
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்காக உளவு பார்த்ததாக ஃபிரோசாபாத்தில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேபாள மன்னரின் பேரணியில் ஒட்டப்பட்ட உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சுவரொட்டி; ஏன்?
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஒரு சுவரொட்டி நேபாளத்தில் அரசியல் புயலை உருவாக்கியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து அரசியல் வாரிசு ஆகாஷ் ஆனந்தை நீக்கினார் மாயாவதி
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது உறவினரும், கட்சியில் அவரது அரசியல் வாரிசுமான ஆகாஷ் ஆனந்தை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்.
2025 மகா கும்பமேளாவில் காணாமல் போன 54,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணைப்பு
பிரயாக்ராஜில் சமீபத்தில் முடிவடைந்த மகா கும்பமேளா, 66 கோடி பக்தர்களின் பெருந்திரளான கூட்டத்திற்கு மத்தியில், தங்கள் குடும்பங்களிலிருந்து பிரிந்துபோன 54,000க்கும் மேற்பட்ட நபர்களின் வெற்றிகரமான மறு இணைப்பையும் கண்டுள்ளது.
மகா கும்பம்: மகாசிவராத்திரி அன்று 1-கோடிக்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பு
மகா கும்பமேளா நிறைவடையும் நேரத்தில், மகாசிவராத்திரியை முன்னிட்டு புதன்கிழமை நடைபெறும் இறுதி அமிர்த ஸ்நானத்தில் 1 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகா கும்பமேளா குறித்து தவறான தகவல் பரப்பிய 140 சமூக ஊடக கணக்குகள் மீது வழக்கு பதிவு
பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா விழா நிறைவடையும் நிலையில், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக மில்லியன் கணக்கான பக்தர்கள் தொடர்ந்து கூடி வருகின்றனர்.
ஜனவரி 19 முதல் 5 வது முறையாக கும்பமேளா பகுதியில் தீ விபத்து
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில், காலியாக இருந்த 'தனியார் முகாமில்' தீ விபத்து ஏற்பட்டது.