அனைத்து கல்வி நிறுவனங்களிலும் வந்தே மாதரம் பாடல் கட்டாயமாக்கப்படும்; உத்தரப்பிரதேச முதல்வர் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் வந்தே மாதரம் பாடல் கட்டாயம் பாடப்பட வேண்டும் என்று திங்கட்கிழமை (நவம்பர் 10) அறிவித்துள்ளார். வந்தே மாதரம் பாடல் வெளியிடப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி இந்தியா முழுவதும் ஓராண்டு நினைவுச் சிறப்பு அனுசரிக்கப்படும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோரக்பூரில் நடந்த ஏக்தா யாத்ரா (ஒற்றுமைப் பேரணி) நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், குடிமக்களிடையே தேசப் பற்று மற்றும் தேசியப் பெருமை உணர்வைத் தூண்டுவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று தெரிவித்தார்.
கட்டாய நடைமுறை
அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கட்டாய நடைமுறை
ஒவ்வொரு மாணவர் மனதிலும் தேசியப் பாடலுக்கான மரியாதையை விதைக்க வேண்டும் என்றும், விரைவில் உத்தரப் பிரதேசத்தின் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் வந்தே மாதரம் பாடுவது கட்டாய நடைமுறையாக மாறும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார். பங்கிம் சந்திர சட்டர்ஜியால் இயற்றப்பட்ட வந்தே மாதரம் பாடல், அவரது ஆனந்தமடம் நாவலின் ஒரு பகுதியாக இலக்கிய இதழான பங்கதர்ஷனில் நவம்பர் 7, 1875 அன்று முதன்முதலில் வெளியிடப்பட்டது. இது அப்போதைய காலனித்துவக் காலத்தில் இந்தியாவின் எழுச்சிக்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் இது ஒரு அடையாளமாக மாறியது. தற்போது, நவம்பர் 7, 2025 முதல் நவம்பர் 7, 2026 வரை ஓராண்டு கால தேசியச் சிறப்பு விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.