LOADING...
வரதட்சணை கொலை: கிரேட்டர் நொய்டாவில் குற்றம் சாட்டப்பட்ட கணவர் மீது காவல்துறை என்கவுன்ட்டர்
கிரேட்டர் நொய்டாவில் குற்றம் சாட்டப்பட்ட கணவர் மீது போலீஸ் என்கவுன்ட்டர்

வரதட்சணை கொலை: கிரேட்டர் நொய்டாவில் குற்றம் சாட்டப்பட்ட கணவர் மீது காவல்துறை என்கவுன்ட்டர்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 24, 2025
03:38 pm

செய்தி முன்னோட்டம்

ஒரு பயங்கரமான வரதட்சணை கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, குற்றம் சாட்டப்பட்ட கணவர் விபின், ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24) பிற்பகல் கிரேட்டர் நொய்டாவில் உள்ள சிர்சா சௌக் அருகே உத்தரபிரதேச போலீசாரால் நடந்த என்கவுன்ட்டரில் காலில் சுடப்பட்டார். மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது, ஒரு காவல்துறை அதிகாரியிடம் இருந்து துப்பாக்கியைப் பிடுங்கி தப்பிக்க முயன்ற விபின், போலீசாரால் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபின், அவரது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து, கடந்த வியாழக்கிழமை தனது மனைவி நிக்கியை, அவர்களின் ஆறு வயது மகனின் கண் முன்னே கொடூரமாகத் தாக்கி தீ வைத்துக் கொளுத்தியதாகக் கூறப்படுகிறது. விபின் சனிக்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், எஞ்சிய குற்றவாளிகளைப் பிடிக்கத் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

வரதட்சணை

வரதட்சணைக் கொடுமை

நிக்கியின் தந்தை பிகாரி சிங் பய்லா, தனது மகள் வரதட்சணைக்காகக் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், இந்த கொலையில் விபின் குடும்பத்தினர் அனைவரும் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என்றும், அவர்களின் வீடுகள் இடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரினார். சுடப்பட்ட பின்னரும், விபின் ஒரு செய்தி நிறுவனத்திடம், தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும், தனது மனைவி தானாகவே இறந்தார் என்றும், இந்த மரணத்தை தற்கொலை போல் காட்ட முயன்றார். ஆனால், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரின் கூற்றுகள் மற்றும் காவல்துறை விசாரணைகள் இதற்கு முரணாக உள்ளன. நிக்கி 2016ஆம் ஆண்டு விபினைத் திருமணம் செய்து கொண்டார்.