உதய்பூரில் இன்று விஜய் தேவரகொண்டா -ராஷ்மிகா மந்தனா திருமணம்: தெலுங்கு மற்றும் கொடவா முறைப்படி சடங்குகள்
செய்தி முன்னோட்டம்
பல ஆண்டுகால காத்திருப்புக்கு பிறகு, தென்னிந்திய திரையுலகின் கனவு ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இன்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மணவாழ்க்கையில் இணைகின்றனர். 'VIROSH' என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இந்த ஜோடி, கடந்த சில நாட்களாக உதய்பூரில் உள்ள ஐடிசி மெமென்டோஸ் (ITC Mementos) நட்சத்திர விடுதியில் தங்கியிருந்து திருமண கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஊடக செய்திகளின்படி, விஜய் மற்றும் ராஷ்மிகா ஆகிய இருவரின் குடும்ப பாரம்பரியத்தையும் போற்றும் வகையில், இன்று இரண்டு வெவ்வேறு முறைகளில் திருமண சடங்குகள் நடைபெறுகின்றன.
விவரங்கள்
திருமண விவரங்கள்
செய்திகளின் படி, காலையில் விஜய் தேவரகொண்டாவின் பாரம்பரியத்தைப் பின்பற்றி தெலுங்கு இந்து முறைப்படி சடங்குகள் நடைபெறுகின்றன. மாலையில் ராஷ்மிகாவின் பூர்வீகத்தைப் போற்றும் வகையில் கர்நாடகாவின் 'கொடவா' (Kodava) இன முறைப்படி திருமணச் சடங்குகள் நடைபெறவுள்ளன. கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற மெஹந்தி, சங்கீத் மற்றும் ஹல்டி போன்ற சடங்குகளில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா மற்றும் நெருங்கிய திரைத்துறையினர் உதய்பூர் வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, வரும் மார்ச் 4-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா ஓட்டலில் ஒட்டுமொத்த திரையுலகினரும் பங்கேற்கும் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.