
மேகாலயா தேனிலவு கொலை: திருமணமான 3 நாட்களுக்கு பின் காதலனுடன் கொலைக்கு திட்டமிட்ட மணப்பெண்
செய்தி முன்னோட்டம்
மேகாலயாவில் தேனிலவின் போது, தனது கணவர் ராஜா ரகுவன்ஷியைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட சோனம் ரகுவன்ஷி, திருமணமான மூன்று நாட்களுக்குப் பிறகு தனது காதலனுடன் சேர்ந்து அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டதாக இந்தியா டுடேவிற்கு வட்டாரங்கள் தெரிவித்தன.
தனது காதலர் ராஜ் குஷ்வாஹாவுடனான சாட்டில், தனது கணவர் தன்னுடன் நெருக்கமாக இருப்பது தனக்குப் பிடிக்கவில்லை என்று சோனம் கூறியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கணவர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல நாட்களாக தலைமறைவாக இருந்த சோனம், திங்கட்கிழமை உத்தரபிரதேசத்தின் காஜிபூரில் சரணடைந்தார்.
திருமணமான மூன்று நாட்களுக்குப்பிறகு, தனது கணவரைக் கொல்லத் திட்டமிட்டிருப்பது குறித்தும் அவர் ராஜிடம் சாட்டில் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
ராஜாவைக் கொல்ல வேண்டுமென்றே தேனிலவுக்கு தொலைதூர இடத்தை சோனம் தேர்ந்தெடுத்ததாக கூறப்படுகிறது.
வழக்கு
தேனிலவுக்கு சென்ற ஜோடி மாயமானதும் விவகாரம் சூடு பிடித்தது
ஜூன் 2 ஆம் தேதி மேகாலயாவில் உள்ள ஒரு ஆழமான பள்ளத்தாக்கில் சோனமின் கணவர் 28 வயது ராஜா ரகுவன்ஷியின் அழுகிய உடல் கண்டெடுக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த கைது நடந்துள்ளது.
இந்த ஜோடி தேனிலவுக்காக மாநிலத்திற்குச் சென்றிருந்த நிலையில், மே 23 அன்று சோஹ்ரா (சிரபுஞ்சி) பகுதியில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.
அவர்கள் வாடகைக்கு எடுத்த ஸ்கூட்டர் பின்னர் சோஹ்ராரிமில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் வண்டியின் சாவி அதனோடே இருந்தது.
இந்த நிலையில், சில கிலோமீட்டர் தூரத்தில் ரகுவன்ஷியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
உடலில் காணப்பட்ட வெட்டுக்காயங்கள், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை கிளறியது. எனினும், சோனம் பற்றிய தகவல் இல்லாமல் காவல்துறை குழம்பியது.
கொலை
கூலிப்படை உடன் திட்டமிடப்பட்ட கொலை
உத்தரபிரதேச காவல்துறையிடம் சரணடைந்த பிறகு, சோனம் ராஜாவை கொலை செய்ய கூலிப்படையை அமர்த்தியதாகக் கூறப்பட்டது.
அந்தப் பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த ராஜ் உட்பட நான்கு ஆண்கள், அவரது கணவரைக் கொன்றதாகக் கூறி கைது செய்யப்பட்டனர்.
குஷ்வாஹாவைத் தவிர, ராஜாவைக் கொன்றதாகக் கூறப்படும் மற்ற மூன்று பேரும் ஆகாஷ் ராஜ்பூட், விகாஸ் என்ற விக்கி மற்றும் ஆனந்த் என அடையாளம் காணப்பட்டனர்.
திங்களன்று நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் ராஜாவின் உடலில் பல கூர்மையான காயங்கள் இருப்பதை உறுதிப்படுத்தியது, அதில் இரண்டு பெரிய காயங்கள் இருந்தன - ஒன்று அவரது தலையின் முன்பக்கத்திலும் மற்றொன்று பின்புறத்திலும்.