NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மேகாலயா தேனிலவு கொலை: திருமணமான 3 நாட்களுக்கு பின் காதலனுடன் கொலைக்கு திட்டமிட்ட மணப்பெண்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    மேகாலயா தேனிலவு கொலை: திருமணமான 3 நாட்களுக்கு பின் காதலனுடன் கொலைக்கு திட்டமிட்ட மணப்பெண்
    சோனம், திங்கட்கிழமை உத்தரபிரதேசத்தின் காஜிபூரில் சரணடைந்தார்

    மேகாலயா தேனிலவு கொலை: திருமணமான 3 நாட்களுக்கு பின் காதலனுடன் கொலைக்கு திட்டமிட்ட மணப்பெண்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 10, 2025
    11:16 am

    செய்தி முன்னோட்டம்

    மேகாலயாவில் தேனிலவின் போது, தனது கணவர் ராஜா ரகுவன்ஷியைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட சோனம் ரகுவன்ஷி, திருமணமான மூன்று நாட்களுக்குப் பிறகு தனது காதலனுடன் சேர்ந்து அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டதாக இந்தியா டுடேவிற்கு வட்டாரங்கள் தெரிவித்தன.

    தனது காதலர் ராஜ் குஷ்வாஹாவுடனான சாட்டில், தனது கணவர் தன்னுடன் நெருக்கமாக இருப்பது தனக்குப் பிடிக்கவில்லை என்று சோனம் கூறியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    கணவர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல நாட்களாக தலைமறைவாக இருந்த சோனம், திங்கட்கிழமை உத்தரபிரதேசத்தின் காஜிபூரில் சரணடைந்தார்.

    திருமணமான மூன்று நாட்களுக்குப்பிறகு, தனது கணவரைக் கொல்லத் திட்டமிட்டிருப்பது குறித்தும் அவர் ராஜிடம் சாட்டில் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

    ராஜாவைக் கொல்ல வேண்டுமென்றே தேனிலவுக்கு தொலைதூர இடத்தை சோனம் தேர்ந்தெடுத்ததாக கூறப்படுகிறது.

    வழக்கு 

    தேனிலவுக்கு சென்ற ஜோடி மாயமானதும் விவகாரம் சூடு பிடித்தது

    ஜூன் 2 ஆம் தேதி மேகாலயாவில் உள்ள ஒரு ஆழமான பள்ளத்தாக்கில் சோனமின் கணவர் 28 வயது ராஜா ரகுவன்ஷியின் அழுகிய உடல் கண்டெடுக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த கைது நடந்துள்ளது.

    இந்த ஜோடி தேனிலவுக்காக மாநிலத்திற்குச் சென்றிருந்த நிலையில், மே 23 அன்று சோஹ்ரா (சிரபுஞ்சி) பகுதியில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

    அவர்கள் வாடகைக்கு எடுத்த ஸ்கூட்டர் பின்னர் சோஹ்ராரிமில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் வண்டியின் சாவி அதனோடே இருந்தது.

    இந்த நிலையில், சில கிலோமீட்டர் தூரத்தில் ரகுவன்ஷியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

    உடலில் காணப்பட்ட வெட்டுக்காயங்கள், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை கிளறியது. எனினும், சோனம் பற்றிய தகவல் இல்லாமல் காவல்துறை குழம்பியது.

    கொலை 

    கூலிப்படை உடன் திட்டமிடப்பட்ட கொலை

    உத்தரபிரதேச காவல்துறையிடம் சரணடைந்த பிறகு, சோனம் ராஜாவை கொலை செய்ய கூலிப்படையை அமர்த்தியதாகக் கூறப்பட்டது.

    அந்தப் பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த ராஜ் உட்பட நான்கு ஆண்கள், அவரது கணவரைக் கொன்றதாகக் கூறி கைது செய்யப்பட்டனர்.

    குஷ்வாஹாவைத் தவிர, ராஜாவைக் கொன்றதாகக் கூறப்படும் மற்ற மூன்று பேரும் ஆகாஷ் ராஜ்பூட், விகாஸ் என்ற விக்கி மற்றும் ஆனந்த் என அடையாளம் காணப்பட்டனர்.

    திங்களன்று நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் ராஜாவின் உடலில் பல கூர்மையான காயங்கள் இருப்பதை உறுதிப்படுத்தியது, அதில் இரண்டு பெரிய காயங்கள் இருந்தன - ஒன்று அவரது தலையின் முன்பக்கத்திலும் மற்றொன்று பின்புறத்திலும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மேகாலயா
    கொலை
    உத்தரப்பிரதேசம்

    சமீபத்திய

    மேகாலயா தேனிலவு கொலை: திருமணமான 3 நாட்களுக்கு பின் காதலனுடன் கொலைக்கு திட்டமிட்ட மணப்பெண் மேகாலயா
    கொந்தளிப்பில் LA நகரம்; கலவரக்காரர்களை கட்டுப்படுத்த தேசிய காவல்படை வீரர்களையும், கடற்படையினரையும் இறக்கிய டிரம்ப் லாஸ் ஏஞ்சல்ஸ்
    29 வயதில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த மேற்கிந்திய தீவுகள் வீரர் நிக்கோலஸ் பூரன் கிரிக்கெட்
    2025 WTC இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் நாள் உள்ளதா? டெஸ்ட் சாம்பியன்ஷிப்

    மேகாலயா

    மேகாலயாவில் பிரதமர் மோடியின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு பிரதமர் மோடி
    இந்தியாவின் வடமாநிலங்களான நாகலாந்து, திரிபுராவிலும் பாஜக கூட்டணி முன்னிலை பாஜக
    வடகிழக்கு முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி பாஜக
    கொன்ராட் சங்மா மீண்டும் மேகாலயா முதலமைச்சராக பதவியேற்றார் இந்தியா

    கொலை

    கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில் ஆதாரங்களை போலீசார் சிதைத்ததாக சி.பி.ஐ குற்றச்சாட்டு கொல்கத்தா
    பெங்களூரு பெண்ணை கொலை செய்ததாக சந்தேகப்படும் நபர் தற்கொலை; தற்கொலை கடிதம் மீட்பு பெங்களூர்
    கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கொல்கத்தா டாக்டர்களின் 24 மணி நேர கெடு: இல்லையெனில் உண்ணாவிரதப் போராட்டம்  கொல்கத்தா
    கொல்கத்தா மருத்துவரின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் எவ்வாறு கைது செய்யப்பட்டார்? CBI குற்றப்பத்திரிகை விவரிக்கிறது கொல்கத்தா

    உத்தரப்பிரதேசம்

    உத்தரப்பிரதேசத்தில் புதிய சமூக ஊடகக் கொள்கை அறிமுகம்: தேச விரோத இடுகைகளுக்கு ஆயுள் தண்டனை யோகி ஆதித்யநாத்
    தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய மெட்டா ஏஐ; பின்னணி என்ன? மெட்டா
    புல்டோசர் முறையில் நீதி வழங்குவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவு உச்ச நீதிமன்றம்
    வாரணாசியில் ரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025