
மேகாலயாவில் காணாமல் போன இந்தூர் பெண் விவகாரத்தில் இறுதியாக விலகியது மர்மம்!
செய்தி முன்னோட்டம்
மேகாலயாவில் தேனிலவின் போது காணாமல் போன இந்தூர் பெண் தனது கணவரைக் கொலை செய்ததற்காக திங்கள்கிழமை கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சோனம் ரகுவன்ஷி என்ற பெண் உத்தரபிரதேசத்தின் காஜிபூரில் கைது செய்யப்பட்டார்.
சோனம் தனது குடும்பத்தினருக்கு தானே போன் செய்து, இந்தூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க கூறியதாக காவல்துறை வட்டாரங்கள் கூறியதாக, இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தத் தகவலின் பேரில், காவல்துறையினர் சோனம்-ஐ கைது செய்துள்ளனர்.
சோனம், ராஜ் குஷ்வாஹா என்ற மற்றொரு நபருடன் உறவில் இருந்ததாகவும், தனது கணவரைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
தேனிலவு கொண்டாட சென்ற இடத்தில் செய்ய கொலை மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒப்பந்தக் கொலையாளிகளை அவர் வேலைக்கு அமர்த்தியதாகக் கூறப்படுகிறது.
விவரங்கள்
தேனிலவுக்கு சென்ற ஜோடி மாயமானதும் விவகாரம் சூடு பிடித்தது
ஜூன் 2 ஆம் தேதி மேகாலயாவில் உள்ள ஒரு ஆழமான பள்ளத்தாக்கில் சோனமின் கணவர் 28 வயது ராஜா ரகுவன்ஷியின் அழுகிய உடல் கண்டெடுக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த கைது நடந்துள்ளது.
இந்த ஜோடி தேனிலவுக்காக மாநிலத்திற்குச் சென்றிருந்த நிலையில், மே 23 அன்று சோஹ்ரா (சிரபுஞ்சி) பகுதியில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.
அவர்கள் வாடகைக்கு எடுத்த ஸ்கூட்டர் பின்னர் சோஹ்ராரிமில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
எனினும் வண்டியின் சாவி அதனோடே இருந்தது.
இந்த நிலையில், சில கிலோமீட்டர் தூரத்தில் ரகுவன்ஷியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
உடலில் காணப்பட்ட வெட்டுக்காயங்கள், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை கிளறியது. எனினும், சோனம் பற்றிய தகவல் இல்லாமல் காவல்துறை குழம்பியது.
கொலை
கணவரின் கொலையை திட்டமிட்ட புதுமணப்பெண் சோனம்
மேகாலயா காவல்துறை இயக்குநர் ஜெனரல் இடஷிஷா நோங்ராங், சோனம் தனது கணவரின் கொலையைத் திட்டமிட்டதில் ஈடுபட்டதாகவும், குற்றத்தைச் செயல்படுத்த ஒப்பந்தக் கொலையாளிகளை நியமித்ததாகவும் உறுதிப்படுத்தினார்.
சோனம் மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று தாக்குதல் நடத்தியவர்கள் உட்பட மொத்தம் நான்கு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ஒரு சந்தேக நபர் தலைமறைவாக உள்ளார்.
தேனிலவு தம்பதியினர் காணாமல் போன நாளில் அடையாளம் தெரியாத மூன்று ஆண்களுடன் கடைசியாகக் காணப்பட்டதாக உள்ளூர் டூரிஸ்ட் கைடு ஒருவர் முன்னதாக போலீசாரிடம் தெரிவித்திருந்தார்.
இதுவே விசாரணையில் முக்கியமான துப்பாக கருதப்படுகிறது.
இதுவே காவல்துரையினரை இது திட்டமிடப்பட்ட கொலையாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தை கிளறியது.