NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மேகாலயாவில் காணாமல் போன இந்தூர் பெண் விவகாரத்தில் இறுதியாக விலகியது மர்மம்!
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    மேகாலயாவில் காணாமல் போன இந்தூர் பெண் விவகாரத்தில் இறுதியாக விலகியது மர்மம்!
    சோனம் ரகுவன்ஷி என்ற பெண் உத்தரபிரதேசத்தின் காஜிபூரில் கைது செய்யப்பட்டார்

    மேகாலயாவில் காணாமல் போன இந்தூர் பெண் விவகாரத்தில் இறுதியாக விலகியது மர்மம்!

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 09, 2025
    08:59 am

    செய்தி முன்னோட்டம்

    மேகாலயாவில் தேனிலவின் போது காணாமல் போன இந்தூர் பெண் தனது கணவரைக் கொலை செய்ததற்காக திங்கள்கிழமை கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சோனம் ரகுவன்ஷி என்ற பெண் உத்தரபிரதேசத்தின் காஜிபூரில் கைது செய்யப்பட்டார்.

    சோனம் தனது குடும்பத்தினருக்கு தானே போன் செய்து, இந்தூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க கூறியதாக காவல்துறை வட்டாரங்கள் கூறியதாக, இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

    இந்தத் தகவலின் பேரில், காவல்துறையினர் சோனம்-ஐ கைது செய்துள்ளனர்.

    சோனம், ராஜ் குஷ்வாஹா என்ற மற்றொரு நபருடன் உறவில் இருந்ததாகவும், தனது கணவரைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    தேனிலவு கொண்டாட சென்ற இடத்தில் செய்ய கொலை மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒப்பந்தக் கொலையாளிகளை அவர் வேலைக்கு அமர்த்தியதாகக் கூறப்படுகிறது.

    விவரங்கள்

    தேனிலவுக்கு சென்ற ஜோடி மாயமானதும் விவகாரம் சூடு பிடித்தது

    ஜூன் 2 ஆம் தேதி மேகாலயாவில் உள்ள ஒரு ஆழமான பள்ளத்தாக்கில் சோனமின் கணவர் 28 வயது ராஜா ரகுவன்ஷியின் அழுகிய உடல் கண்டெடுக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த கைது நடந்துள்ளது.

    இந்த ஜோடி தேனிலவுக்காக மாநிலத்திற்குச் சென்றிருந்த நிலையில், மே 23 அன்று சோஹ்ரா (சிரபுஞ்சி) பகுதியில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

    அவர்கள் வாடகைக்கு எடுத்த ஸ்கூட்டர் பின்னர் சோஹ்ராரிமில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

    எனினும் வண்டியின் சாவி அதனோடே இருந்தது.

    இந்த நிலையில், சில கிலோமீட்டர் தூரத்தில் ரகுவன்ஷியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

    உடலில் காணப்பட்ட வெட்டுக்காயங்கள், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை கிளறியது. எனினும், சோனம் பற்றிய தகவல் இல்லாமல் காவல்துறை குழம்பியது.

    கொலை

    கணவரின் கொலையை திட்டமிட்ட புதுமணப்பெண் சோனம்

    மேகாலயா காவல்துறை இயக்குநர் ஜெனரல் இடஷிஷா நோங்ராங், சோனம் தனது கணவரின் கொலையைத் திட்டமிட்டதில் ஈடுபட்டதாகவும், குற்றத்தைச் செயல்படுத்த ஒப்பந்தக் கொலையாளிகளை நியமித்ததாகவும் உறுதிப்படுத்தினார்.

    சோனம் மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று தாக்குதல் நடத்தியவர்கள் உட்பட மொத்தம் நான்கு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் ஒரு சந்தேக நபர் தலைமறைவாக உள்ளார்.

    தேனிலவு தம்பதியினர் காணாமல் போன நாளில் அடையாளம் தெரியாத மூன்று ஆண்களுடன் கடைசியாகக் காணப்பட்டதாக உள்ளூர் டூரிஸ்ட் கைடு ஒருவர் முன்னதாக போலீசாரிடம் தெரிவித்திருந்தார்.

    இதுவே விசாரணையில் முக்கியமான துப்பாக கருதப்படுகிறது.

    இதுவே காவல்துரையினரை இது திட்டமிடப்பட்ட கொலையாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தை கிளறியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மேகாலயா
    இந்தூர்
    கொலை
    கைது

    சமீபத்திய

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அமைதி போராட்டத்தின் போது வெடித்த வன்முறை; ராணுவத்தை இறக்கிய அதிபர் டிரம்ப் லாஸ் ஏஞ்சல்ஸ்
    மேகாலயாவில் காணாமல் போன இந்தூர் பெண் விவகாரத்தில் இறுதியாக விலகியது மர்மம்! மேகாலயா
    நம்பர் ஒன் வீரரான ஜானிக் சின்னரை தோற்கடித்து, பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றார் கார்லோஸ் அல்கராஸ் கார்லோஸ் அல்கராஸ்
    மொபைலில் ஸ்டோரேஜ் பிரச்சினையை தீர்க்க புதிய அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்

    மேகாலயா

    மேகாலயாவில் பிரதமர் மோடியின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு பிரதமர் மோடி
    இந்தியாவின் வடமாநிலங்களான நாகலாந்து, திரிபுராவிலும் பாஜக கூட்டணி முன்னிலை பாஜக
    வடகிழக்கு முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி பாஜக
    கொன்ராட் சங்மா மீண்டும் மேகாலயா முதலமைச்சராக பதவியேற்றார் பாஜக

    இந்தூர்

    இந்தூர் மக்களவைத் தொகுதியில் 1.7 லட்சம் நோட்டா வாக்குகள் பதிவு நோட்டா
    "இருங்க பாய்..": கிரைம் பிரான்ச் DCக்கே மோசடி கால் செய்து வகையாக மாட்டிய மோசடி கும்பல் சைபர் கிரைம்
    ஜனவரி 1 முதல் இந்த நகரில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு நீங்கள் பணம் கொடுத்தால் FIR தான்! இந்தியா

    கொலை

    'ஐந்தாவது முறையாக...இறுதியாக': மம்தாவை சந்திக்க ஒப்புக்கொண்ட மருத்துவர்கள் மம்தா பானர்ஜி
    கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில் ஆதாரங்களை போலீசார் சிதைத்ததாக சி.பி.ஐ குற்றச்சாட்டு கொல்கத்தா
    பெங்களூரு பெண்ணை கொலை செய்ததாக சந்தேகப்படும் நபர் தற்கொலை; தற்கொலை கடிதம் மீட்பு பெங்களூர்
    கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கொல்கத்தா டாக்டர்களின் 24 மணி நேர கெடு: இல்லையெனில் உண்ணாவிரதப் போராட்டம்  கொல்கத்தா

    கைது

    தென் கொரியாவில் ஜனாதிபதியை கைது செய்ய புலனாய்வாளர்கள் முயல்வதால் பதட்டம் தென் கொரியா
    நடிகை ஹனி ரோஸ் மீது ஆபாசமான பேச்சு: செம்மனுர் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் கைது  கேரளா
    இராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டதற்காக பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய அதிபர் யூன் கைது தென் கொரியா
    பாந்த்ரா குடியிருப்பில் சைஃப் அலிகானை தாக்கிய நபரை மும்பை போலீசார் கைது செய்தனர் சைஃப் அலி கான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025