NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டேட்டிங் செயலியில் சந்தித்த பெண்ணால் ₹6.5 கோடியை இழந்த இந்திய தொழிலதிபர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    டேட்டிங் செயலியில் சந்தித்த பெண்ணால் ₹6.5 கோடியை இழந்த இந்திய தொழிலதிபர்
    டேட்டிங் செயலியில் சந்தித்த பெண்ணால் ரூ.6.5 கோடியை இழந்த தொழிலதிபர்

    டேட்டிங் செயலியில் சந்தித்த பெண்ணால் ₹6.5 கோடியை இழந்த இந்திய தொழிலதிபர்

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 29, 2025
    07:25 pm

    செய்தி முன்னோட்டம்

    நொய்டாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் டேட்டிங் செயலியில் சந்தித்த ஒரு பெண்ணால் மோசடியான ஆன்லைன் வர்த்தக தளத்தில் முதலீடு செய்து ₹6.5 கோடியை இழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

    டெல்லியைச் சேர்ந்த செக்டார் 36 இல் வசிக்கும் தல்ஜித் சிங், இந்த மோசடியில் தான் எவ்வாறு பாதிக்கப்பட்டேன் என்பதை விவரித்து கடந்த புதன்கிழமை (மார்ச் 26) சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார்.

    தல்ஜித் சிங்கின் கூற்றுப்படி, டிசம்பர் 2024 இல் ஒரு டேட்டிங் செயலியில் அனிதா சவுகான் என்ற பெண்ணை அவர் சந்தித்தார்.

    முன் அனுபவம் இல்லாவிட்டாலும், ஆன்லைன் வர்த்தகம் மூலம் கணிசமான லாபம் ஈட்ட முடியும் என்று அவர் தல்ஜித்தை நம்ப வைத்துள்ளார்.

    லாபம்

    ஆரம்ப லாபத்தை பார்த்து பேராசை

    ஆரம்பத்தில், தல்ஜித் சிங் ₹3.2 லட்சம் முதலீடு செய்து ₹24,000 லாபம் ஈட்டினார். இது அவரது நம்பிக்கையை அதிகரித்தது.

    இந்த ஆரம்பகால வருமானத்தால் ஊக்கமடைந்த அவர், பல வங்கிக் கணக்குகளில் இருந்து ₹6.52 கோடியை முதலீடு செய்தார்.

    அவற்றில் சில கடன்கள் மூலம் பெறப்பட்டன. இருப்பினும், வர்த்தக தளங்களிலிருந்து தல்ஜித் சிங் தனது நிதியை எடுக்க முயன்றபோது சிக்கல் ஏற்பட்டது.

    தளங்கள் 30% பாதுகாப்பு கட்டணத்தையும், கூடுதலாக ₹61 லட்சத்தை பரிமாற்ற சேவை கட்டணமாகவும் கோரியபோது அவருக்கு சந்தேகம் ஏற்பட, இது மோசடியானது என்பதை உணர்ந்துள்ளார்.

    இதையடுத்து வழக்கு பதிவு செய்ததோடு, போலீஸ் விசாரணைக்கு உதவுவதற்காக குற்றம் சாட்டப்பட்டவர்களின் பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் தொடர்புத் தகவல்களை தல்ஜித் சிங் வழங்கியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆன்லைன் மோசடி
    சைபர் கிரைம்
    நொய்டா
    உத்தரப்பிரதேசம்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    ஆன்லைன் மோசடி

    காவல்துறை அதிகாரியிடமே ரூ.2 லட்சத்தை மோசடி செய்த ஆன்லைன் மோசடி கும்பல்! டெல்லி
    'பிங்க் நிற வாட்ஸ்அப் செயலி' மூலம் தகவல்களை திருடும் புதிய மோசடி  வாட்ஸ்அப்
    15,000 பேர், 700 கோடி ரூபாய்.. பெரிய அளவில் நடத்தப்பட்டிருக்கும் ஆன்லைன் மோசடி இந்தியா
    சிம் கார்டு விற்பனையாளர்களுக்கு இனி காவல்துறை சரிபார்ப்பு கட்டாயம் இந்தியா

    சைபர் கிரைம்

    உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் லைப்ரரி ஹேக்கர்களால் முடக்கம்; மில்லியன் கணக்கான பயனர்களின் தரவுகள் கசிவு இன்டர்நெட்
    மொபைல் மூலம் நடக்கும் மோசடிகள் அதிகரிப்பு; தற்காத்துக் கொள்வது எப்படி? சைபர் பாதுகாப்பு
    நவம்பர் 1 முதல் ஓடிபி வராதா? டிராயின் முடிவால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கலக்கம் சைபர் பாதுகாப்பு
    டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்காமல் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? மான் கி பாத் உரையில் பிரதமர் மோடி அறிவுறுத்தல் நரேந்திர மோடி

    நொய்டா

    பக்கத்து வீட்டு வாசலில் தொங்கி கொண்டிருந்த 2 வயது சிறுமியின் உடல் இந்தியா
    க்ரைம் ஸ்டோரி: பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டெலிவரி ஏஜென்ட்- டெல்லி அருகே கொடூரம்  க்ரைம் ஸ்டோரி
    உத்தரகாண்ட் சுரங்க விபத்து- 120 மணி நேரத்தை கடந்து தொடரும் மீட்பு குழுவின் போராட்டம் உத்தரகாண்ட்
    வட இந்தியாவில் கடும் பனிமூட்டம்- பல்வேறு ரயில்கள் மற்றும் விமானங்கள் தாமதமாக இயக்கம் டெல்லி

    உத்தரப்பிரதேசம்

    லஞ்சமாக உருளைக் கிழங்கை கேட்ட உத்தரபிரதேச சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் காவல்துறை
    ஒவ்வொரு வீட்டிலும் சோலார் பேனல் மின்சாரம்; 30,000 இளைஞர்களுக்கு பயிற்சியளிக்க உ.பி. அரசு முடிவு இந்தியா
    காவல்துறையில் பெண்களுக்கு 20% இட ஒதுக்கீடு; உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு காவல்துறை
    கிருஷ்ண ஜெயந்தி: கட்டாயம் பார்க்க வேண்டிய 5 கிருஷ்ணர் கோவில்கள்  வாழ்க்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025