NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மீரட் கொலை: போலி மருந்துச் சீட்டு தயாரித்து, கணவருக்கு தூக்க மருந்து வாங்கி கொலை செய்தது அம்பலம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மீரட் கொலை: போலி மருந்துச் சீட்டு தயாரித்து, கணவருக்கு தூக்க மருந்து வாங்கி கொலை செய்தது அம்பலம்
    முஸ்கன் ரஸ்தோகி, கணவருக்கு தூக்க மருந்து வாங்கி கொலை செய்தது அம்பலம்

    மீரட் கொலை: போலி மருந்துச் சீட்டு தயாரித்து, கணவருக்கு தூக்க மருந்து வாங்கி கொலை செய்தது அம்பலம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 24, 2025
    08:22 am

    செய்தி முன்னோட்டம்

    மீரட்டைச் சேர்ந்த முஸ்கன் ரஸ்தோகி என்ற பெண், தனது கணவரை தூக்க மருந்து கொடுத்து கொலை செய்து, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி , தனது காதலரின் உதவியுடன் ஒரு சிமெண்ட் டிரம்மில் அடைத்து வைத்ததாகக் கூறப்படுகிறது.

    கணவரை கொலை செய்வதற்கு சில நாட்களுக்கு முன்பு Anti-depressant மருந்துகளை வாங்குவதற்காக மருத்துவரின் மருந்துச் சீட்டை மாற்றியதாக காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

    மீரட் கூடுதல் எஸ்பி ஆயுஷ் விக்ரமின் கூற்றுப்படி, முஸ்கன் தனக்கு anxiety பிரச்சினைகள் இருப்பதாகக் கூறி உள்ளூர் மருத்துவரைச் சந்தித்துள்ளார்.

    அவரிடமிருந்து Anti anxiety மருந்துகளுக்கான மருந்துச்சீட்டைப் பெற்ற்றுள்ளார்.

    பின்னர் கூகிளில் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை ஆராய்ந்து, ஒரு போலி மருந்துச் சீட்டை தயாரித்து, அதில் மருந்துகளின் பெயர்களை மாற்றி எழுதியுள்ளார்.

    வழக்கு 

    வணிக கடற்படை அதிகாரியை கள்ள காதலர் உதவியுடன் கொலை செய்த மனைவி

    முதலில் பிப்ரவரி 25 ஆம் தேதி அன்று 27 வயதான முஸ்கன், தனது கணவர் முன்னாள் வணிக கடற்படை அதிகாரியான சவுரப் ராஜ்புத்திற்கு, விஷம் கலந்த மதுவை கொடுக்க முயன்றார்.

    இருப்பினும், சவுரப் அன்று மது அருந்தாமல் இருந்ததால் அவரது திட்டம் தோல்வியடைந்ததாக போலீசார் மேலும் தெரிவித்தனர்.

    பின்னர், மார்ச் 4 ஆம் தேதி தூக்கமாத்திரை கலந்த உணவை கொடுத்து, அவரை கொலை செய்துள்ளார்.

    உத்தரபிரதேச அதிகாரிகள் நடத்திய சோதனையில், முஸ்கான் மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள் மற்றும் தூக்க மாத்திரைகள் உட்பட மூன்று வகையான மருந்துகளை வாங்கியிருப்பதை உறுதிப்படுத்தினர் - ஒரு அமில நீக்கி, பதட்ட எதிர்ப்பு மருந்து மற்றும் ஒரு மிடாசோலம் ஊசி என்று அதிகாரி மேலும் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரப்பிரதேசம்
    கொலை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு நிதி வழங்குவது தொடர்பான IMF வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா; பயங்கரவாத ஆதரவை குறிப்பிட்டு ஆட்சேபனை பாகிஸ்தான்
    இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம்: ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் தொடரும் பலத்த குண்டுவெடிப்புகள் ஜம்மு காஷ்மீர்
    தனது மூன்று விமானப்படை தளங்கள் மீது இந்தியா 'ஏவுகணை தாக்குதல்' நடத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு பாகிஸ்தான்
    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்தி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்

    உத்தரப்பிரதேசம்

    கன்வார் யாத்திரை: கடை உரிமையாளர்களின் பெயர் எழுத உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை உச்ச நீதிமன்றம்
    தாஜ்மஹாலில் கங்கை நதியின் புனித நீரை விநியோகித்த இருவர் கைது இந்தியா
    லஞ்சமாக உருளைக் கிழங்கை கேட்ட உத்தரபிரதேச சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் காவல்துறை
    ஒவ்வொரு வீட்டிலும் சோலார் பேனல் மின்சாரம்; 30,000 இளைஞர்களுக்கு பயிற்சியளிக்க உ.பி. அரசு முடிவு இந்தியா

    கொலை

    கொல்கத்தா மருத்துவர் கொலை விவகாரத்தில் மாநில அரசை நோக்கி கேள்விகளை எழுப்பும் பெற்றோர்  கொல்கத்தா
    ஹத்ராஸ், உன்னாவ் வழக்குகளை முடித்துவைத்த CBI குழு கொல்கத்தா மருத்துவர் விவகாரத்தில் களமிறங்குகிறது கொல்கத்தா
    கொல்கத்தா மருத்துவர் கொலை: 3 ஜூனியர் டாக்டர்களை பாலிகிராப் பரிசோதனைக்கு உட்படுத்த திட்டமிடும் சிபிஐ கொல்கத்தா
    கொல்கத்தா மருத்துவர் விவகாரத்தில் லீக் ஆன ஆடியோ கிளிப்ஸ்: தங்களுக்கு தொடர்பில்லை என தந்தை மறுப்பு கொல்கத்தா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025