NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மகா கும்பம்: மகாசிவராத்திரி அன்று 1-கோடிக்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மகா கும்பம்: மகாசிவராத்திரி அன்று 1-கோடிக்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பு
    உத்தரபிரதேச அரசு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது

    மகா கும்பம்: மகாசிவராத்திரி அன்று 1-கோடிக்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 25, 2025
    11:16 am

    செய்தி முன்னோட்டம்

    மகா கும்பமேளா நிறைவடையும் நேரத்தில், மகாசிவராத்திரியை முன்னிட்டு புதன்கிழமை நடைபெறும் இறுதி அமிர்த ஸ்நானத்தில் 1 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மகா கும்பமேளாவின் கடைசி நாளில் ஏராளமான யாத்ரீகர்கள் வருவதை சமாளிக்க உத்தரபிரதேச அரசு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.

    ஜனவரி 13 ஆம் தேதி மகா கும்பமேளா தொடங்கியதிலிருந்து, கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகளின் சங்கமமான திரிவேணி சங்கமத்தில் இதுவரை கிட்டத்தட்ட 64 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.

    மகா கும்பமேளா துவங்கியதிலிருந்து இதுவரை மொத்தம் ஐந்து அம்ரித் ஸ்னான்கள் நடந்துள்ளன - ஜனவரி 13, 14, 29, பிப்ரவரி 3 மற்றும் 12.

    பாதுகாப்பு ஏற்பாடுகள்

    உ.பி., மாநிலத்தில் அதிகரித்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

    பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பொறுத்தவரை, கும்பமேளா பகுதி முழுவதும் எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படாது என காவல்துறை ஏற்க்கனவே தெரிவித்துள்ளது.

    அதே நேரத்தில் பாஸ் உள்ள வாகனங்கள் மட்டுமே நியமிக்கப்பட்ட பார்க்கிங் பகுதிகளில் நிறுத்த அனுமதிக்கப்படும்.

    இதற்கிடையில், பிரயாக்ராஜுக்குச் செல்லும் அனைத்து முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் வழித்தடங்களிலும் மோட்டார் சைக்கிள்களில் 40 காவல்துறை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

    சீரான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்துக்காக, மாற்றுப்பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    பிரயாக்ராஜை இணைக்கும் ஏழு சாலை வழித்தடங்களில் கூடுதல் இயக்குநர் ஜெனரல் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெனரல் நிலை அதிகாரிகள் நிறுத்தப்படுவார்கள்.

    கும்பமேளாவின் கடைசி நாள், மகாசிவராத்திரியுடன் இணைந்து வருவதால், நகரத்தில் உள்ள அனைத்து சிவன் கோயில்களுக்கும் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள், அங்கு சட்டம் ஒழுங்கை பராமரிக்க ஏற்கனவே கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மகா கும்பமேளா
    உத்தரப்பிரதேசம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    மகா கும்பமேளா

    144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகா கும்பமேளா இன்று உ.பி.,யில் துவக்கம்; 45 கோடி மக்கள் பங்கேற்கக்கூடும் உத்தரப்பிரதேசம்
    மகா கும்பமேளாவில் பங்கேற்ற ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி; கமலா என்ற இந்து பெயரை ஏற்றார் வாரணாசி
    மஹா கும்பமேளா ஏன் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடுகிறது தெரியுமா? உத்தரப்பிரதேசம்
    விண்வெளி பொறியியல் டு சந்நியாசம்: 2025 மகா கும்பமேளாவில் கவனத்தை ஈர்க்கும் ஐஐடி பாபா ஐஐடி

    உத்தரப்பிரதேசம்

    ஹத்ராஸ்: மக்கள் நசுக்கப்பட்டாலும் போலே பாபா 'முதலில் வெளியேற' அனுமதி; FIR-இல் மாயமான பாபா பெயர்  ஹத்ராஸ்
    ஹத்ராஸ் நெரிசல்: இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்று கூறிக்கொண்ட'போலே பாபா' ஹத்ராஸ்
    பிரயாக்ராஜ் பள்ளியில், புதிய மற்றும் பழைய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குள் நடைபெற்ற நாற்காலி சண்டை பள்ளிகள்
    'தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது': ஹத்ராஸ் உயிரிழப்புகளுக்கு போலே பாபா இரங்கல்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025