நேபாள மன்னரின் பேரணியில் ஒட்டப்பட்ட உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சுவரொட்டி; ஏன்?
செய்தி முன்னோட்டம்
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஒரு சுவரொட்டி நேபாளத்தில் அரசியல் புயலை உருவாக்கியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காத்மாண்டுவில் முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவை வரவேற்கும் பேரணியில் இந்த சுவரொட்டி காணப்பட்டது.
நாட்டின் எதிர்காலத்தைப் "பாதுகாக்க" தன்னை ஆதரிக்குமாறு ஞானேந்திரா விடுத்த முதல் நேரடி வேண்டுகோள் இதுவாகும்.
மேலும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் அரசாங்கத்திற்கு எதிராக அவர் மேற்கொள்ளவுள்ள மிக முக்கியமான சவாலாகும்.
அரசியல் தாக்கங்கள்
யோகி ஆதித்யநாத்தின் சுவரொட்டி இந்தியாவின் செல்வாக்கு குறித்த கேள்விகளை எழுப்புகிறது
யோகி ஆதித்யநாத் நேபாளத்தின் அகற்றப்பட்ட முடியாட்சியின் நன்கு அறியப்பட்ட ஆதரவாளர் ஆவார்.
ஜனவரி மாதம் உத்தரபிரதேசத்திற்கு விஜயம் செய்தபோது மன்னர் ஞானேந்திரா, யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார்.
இந்த இணக்கத்தை இணைத்து, பிரதமர் ஒலியின் ஆதரவாளர்கள், ஞானேந்திராவின் பின்னால் 'இந்தியாவின் கை' என்று ஆதித்யநாத்தின் படத்தைக் காண்பித்தனர்.
இருப்பினும், ஞானேந்திராவின் ஆதரவாளர்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தனர், இந்தப் புகைப்படம் முடியாட்சி ஆதரவு இயக்கத்தை களங்கப்படுத்த வேண்டுமென்றே செய்யப்பட்ட முயற்சி என்று கூறினர்.
"ஒலியின் தலைமை ஆலோசகர் பிஷ்னு ரிமாலின் அறிவுறுத்தலின் பேரில் இந்த புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டது" என்று ராஸ்ட்ரிய பிரஜாதந்திர கட்சி (ஆர்பிபி) தலைவர் கூறினார்.
குற்றச்சாட்டுகள்
யோகி ஆதித்யநாத்தின் சுவரொட்டி விவகாரம் ஒரு சதித்திட்டம் இருப்பதாக மன்னராட்சி ஆதரவு கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன
இந்த சம்பவத்திற்குப் பிறகு, பிரதமர் ஒலி, "எங்கள் பேரணிகளில் வெளிநாட்டுத் தலைவர்களின் புகைப்படங்களை நாங்கள் பயன்படுத்துவதில்லை" என்று ஆதித்யநாத்தை வெளிப்படையாகக் குறிப்பிடாமல் கூறினார்.
பேரணியின் ஏற்பாட்டாளர்கள் ஆதித்யநாத்தின் படத்தைப் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளனர், பங்கேற்பாளர்களுக்கு ஞானேந்திராவின் உருவப்படத்தையும் தேசியக் கொடியையும் காட்சிப்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் ஒரே உத்தரவு என்று கூறுகின்றனர்.
முன்னாள் அமைச்சரும் முடியாட்சிக்கு ஆதரவானவருமான தீபக் கியாவலி, தங்கள் ஊர்வலத்திற்கு வெளிநாட்டவரின் புகைப்படம் தேவை என்ற குற்றச்சாட்டை நிராகரித்தார்.
வரலாற்று சூழல்
ஞானேந்திரா வெளியேற்றம் மற்றும் யோகி ஆதித்யநாத்தின் நிலைப்பாடு
ஜனநாயக ஆதரவு கட்சிகளுக்கும், மன்னருக்கும் இடையே UPA அரசாங்கத்தால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட ஒரு ஒப்பந்தத்திற்குப் பிறகு, 2008 ஆம் ஆண்டு நேபாளத்தில் ஞானேந்திரா அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
அப்போது கோரக்பூர் எம்.பி.யாக இருந்த ஆதித்யநாத், இந்த நடவடிக்கையை விமர்சித்தார்.
ஆதித்யநாத் கோரக்நாத் மடத்தைச் சேர்ந்தவர், இது நேபாளத்தின் முன்னாள் அரச பரம்பரையுடன் ஆழமான பிணைப்பைக் கொண்டுள்ளது.
ஷா வம்சம், குரு கோரக்நாத்தால் ஆசீர்வதிக்கப்பட்டதாக நம்பப்படுவதால், கோரக்நாத் மடத்துடன் ஞானேந்திராவுக்கு நம்பிக்கை மற்றும் மரியாதையின் ஆழமான தொடர்பு இருப்பதாக RPP தலைவர் கூறுகிறார்.
காரணங்கள்
1992 ஆம் ஆண்டு மன்னர் தானே கோரக்பூர் மடத்திற்கு காரில் சென்றார்
மேலும், முன்னாள் மன்னர் ஞானேந்திராவின் சகோதரர் பிரேந்திரா, ஆதித்யநாத்தின் வழிகாட்டியாக இருந்த மஹந்த் அவைத்யநாத்தை தனது குருவாகக் கண்டார்.
1992 ஆம் ஆண்டு மன்னர் காத்மாண்டுவிலிருந்து கோரக்பூர் மடத்திற்கு காரிலேயே, தானாக ஒட்டிச்சென்று அவரை சந்தித்துள்ளார்.
இந்தப் பிணைப்பு பல ஆண்டுகளாகத் தொடர்ந்தது, 2015 ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8,962 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, நிவாரணப் பணிகளில் மடம் பங்கேற்றது.
எல்லைப் பகுதிகளின் மறுசீரமைப்புப் பணிகளை யோகி ஆதித்யநாத் மேற்பார்வையிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.