NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / கே.எஃப்.சி, பாட்டா உள்ளிட்ட கடைகளை குறி வைக்கும் கும்பல்; மீண்டும் பதட்டத்தில் வங்கதேசம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கே.எஃப்.சி, பாட்டா உள்ளிட்ட கடைகளை குறி வைக்கும் கும்பல்; மீண்டும் பதட்டத்தில் வங்கதேசம்
    மீண்டும் வங்கதேசத்தில் போராட்டம் துவங்கியுள்ளது pc: இந்தியா டுடே

    கே.எஃப்.சி, பாட்டா உள்ளிட்ட கடைகளை குறி வைக்கும் கும்பல்; மீண்டும் பதட்டத்தில் வங்கதேசம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 09, 2025
    02:30 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்த வார தொடக்கத்தில் காசாவில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக வெடித்த புதிய போராட்டங்களை கண்டிக்கும் நோக்கத்தில் மீண்டும் வங்கதேசத்தில் போராட்டம் துவங்கியுள்ளது.

    குறிப்பாக கே.எஃப்.சி, பாட்டா உள்ளிட்ட வணிக நிலையங்களை சூறையாடுவதாகவும் மாறியதால் வங்கதேச தலைநகர் டாக்கா மீண்டும் கொந்தளிப்பில் உள்ளது.

    இஸ்ரேலுடன் தொடர்பு கொண்டதாக போராட்டக்காரர்களால் கருதப்பட்ட பாட்டா, கேஎஃப்சி, பிட்சா ஹட் மற்றும் பூமா போன்ற சர்வதேச பிராண்டுகளின் விற்பனை நிலையங்கள் அழிக்கப்பட்டு சூறையாடப்பட்டன.

    இரண்டாவது போர் நிறுத்த ஒப்பந்தம் கடைபிடிக்கப்படாத நிலையில், காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை தீவிரப்படுத்தியபோது, ​​சில்ஹெட், சட்டோகிராம், குல்னா, பாரிஷால், குமிலா மற்றும் டாக்காவில் ஆயிரக்கணக்கானோர் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவித்து வீதிகளில் இறங்கியபோது இந்த சம்பவம் நடந்தது.

    போராட்டம்

    கடந்த ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்திலிருந்து மீளாத பங்களாதேஷ்

    கடந்த ஆண்டு பங்களாதேஷை குழப்பத்தில் ஆழ்த்திய மாணவர் போராட்டங்களை நினைவூட்டும் வகையில், இந்த அமைதியின்மை நிலவியது.

    இதனால், போலீசார் திடீர் சோதனைகளை நடத்தி 70க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.

    பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் ஆட்சியின் கீழ் வங்கதேசம் தனது முதல் உலகளாவிய முதலீட்டு உச்சி மாநாட்டை நடத்தத் தயாராகி வரும் நிலையில் தற்போது மீண்டும் போராட்டம் துவங்கியுள்ளது கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    தாக்குதல்

    வங்கதேசத்தில் KFC, BATA கடைகள் ஏன் தாக்கப்பட்டன?

    டாக்கா ட்ரிப்யூனில் வெளியான ஒரு அறிக்கையின்படி, KFC, Puma, Bata, Domino's, மற்றும் Pizza Hut போன்ற சர்வதேச சங்கிலித் தொடர்கள் இஸ்ரேலுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்டதால் குறிவைக்கப்பட்டன.

    உண்மையில், அவர்களுக்கு யூத தேசத்துடன் எந்த தொடர்பும் இல்லை.

    சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் காணொளிகளில், கும்பல்கள் பாட்டா ஷோரூமின் கண்ணாடி கதவுகளை செங்கற்களால் உடைத்து, பின்னர் டஜன் கணக்கானவர்களால் காலணிகளைக் கொள்ளையடிப்பதைக் காட்டுகிறது.

    சில காலணிகள் பின்னர் பேஸ்புக் சந்தையில் கூட தோன்றியதாக பங்களாதேஷின் டிபிஎஸ் செய்தியில் வெளியான ஒரு செய்தி தெரிவிக்கிறது.

    மற்றொன்று ஒரு KFC விற்பனை நிலையம் குச்சிகளால் சேதப்படுத்தப்பட்டதைக் காட்டுகிறது. பூமா மற்றும் டோமினோவின் பல கடைகளும் சேதப்படுத்தப்பட்டன.

    எதிர்வினை

    போராட்டங்களுக்கு பாட்டாவின் பதில்

    செக் குடியரசு நிறுவனமான பாட்டா, இஸ்ரேல் பொறுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனத்தெரிவித்துள்ளது.

    1962 ஆம் ஆண்டு பங்களாதேஷில் தனது முதல் விற்பனை நிலையத்தைத் திறந்த பாட்டா, இந்த நாசவேலையைக் கண்டித்ததுடன், மோதலுடன் எந்த "அரசியல் தொடர்பும்" இல்லை என்பதை வலியுறுத்தியது.

    "பாட்டா ஒரு இஸ்ரேலுக்குச் சொந்தமான நிறுவனம் அல்லது நடந்து வரும் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் அரசியல் தொடர்புகளைக் கொண்டுள்ளது என்ற தவறான கூற்றுகளை நாங்கள் அறிவோம். பாட்டா என்பது செக் குடியரசில் நிறுவப்பட்ட ஒரு தனியார், குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனம், மோதலுடன் எந்த அரசியல் தொடர்பும் இல்லை," என்று பாட்டா வங்காளதேச ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

    மற்றவை

    தாக்குதலுக்கு உள்ளன மற்ற நிறுவனங்கள் கூறுவது என்ன?

    பூமா ஒரு ஜெர்மன் பன்னாட்டு நிறுவனம். இருப்பினும், 2018ஆம் ஆண்டில் இஸ்ரேல் கால்பந்து சங்கத்திற்கு(IFA) நிதியுதவி செய்ததற்காக சமூக ஊடகங்களில் ஒரு பிரிவினரிடமிருந்து பூமா கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது.

    இருப்பினும், அந்த ஒப்பந்தம் 2024இல் முடிவடைந்தது.

    டோமினோஸ் ஒரு அமெரிக்க நிறுவனம், அதே நேரத்தில் வங்கதேசத்தில் அதன் உரிமையாளர்கள் இந்தியாவின் ஜூபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமானவர்கள்.

    இருப்பினும், பீட்சா நிறுவனத்தின் இஸ்ரேல் உரிமையாளர் கடந்த ஆண்டு இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுக்கு ஆதரவைத் தெரிவித்ததற்காக தாக்குதலுக்கு உள்ளானது.

    KFC ஒரு அமெரிக்க நிறுவனம் மற்றும் இஸ்ரேலிலும் விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது. இருப்பினும், 2021ஆம் ஆண்டில் டெல் அவிவை தளமாகக் கொண்ட மார்க்கெட்டிங் நிறுவனமான டிக்டக் டெக்னாலஜிஸை கையகப்படுத்திய பிறகு, அது விமர்சனத்தையும் எதிர்கொண்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    போராட்டம்
    பங்களாதேஷ்
    காசா
    இஸ்ரேல்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    போராட்டம்

    குழாய் மூலம் அமோனியா அனுப்பப்படாது என கோரமண்டல் நிறுவனம் அறிவிப்பு   சென்னை
    'வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலர்' - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்  மு.க ஸ்டாலின்
    மத்திய அரசின் புதிய 'ஹிட் அண்ட் ரன்' சட்டத்தால் என்ன பாதிப்பு? நாடு தழுவிய போராட்டங்களின் பின்னணி இந்தியா
    ஹைதராபாத்தில் குதிரையில் உணவு விநியோகம் செய்த ஸோமாட்டோ ஊழியர்- வைரல் வீடியோ சோமாட்டோ

    பங்களாதேஷ்

    செயின்ட் மார்டின் தீவை தர மறுத்ததால் அமெரிக்காவின் சதிவேலை; ஷேக் ஹசீனா பரபரப்பு குற்றச்சாட்டு ஷேக் ஹசீனா
    ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா ஆதரவளித்தது சரிதான்; காங்கிரஸ் எம்பி சசி தரூர் கருத்து ஷேக் ஹசீனா
    7 நாட்களில் சட்டவிரோத ஆயுதங்களை கைவிடுங்கள்: போராட்டக்காரர்களிடம் வங்கதேச இடைக்கால அரசு போராட்டம்
    எனது தந்தை, மற்ற தியாகிகள் கடுமையாக அவமதிக்கப்பட்டனர்: மௌனம் கலைத்த ஷேக் ஹசினா ஷேக் ஹசீனா

    காசா

    தெற்கு காசாவில் இருந்து அனைத்து படைகளையும் திரும்பப் பெற்றது இஸ்ரேல் இஸ்ரேல்
    இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் 3 மகன்கள் பலி  இஸ்ரேல்
    பிற தாக்குதல்களுக்கு தயாராவதாக இஸ்ரேல் அறிவிப்பு: மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம்  இஸ்ரேல்
    ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல்: 6 குழந்தைகள் உட்பட 9 பாலஸ்தீனியர்கள் பலி இஸ்ரேல்

    இஸ்ரேல்

    போரை நிறுத்த இந்தியா உதவ வேண்டும்; இந்தியாவுக்கான ஈரான் தூதர் கோரிக்கை ஈரான் இஸ்ரேல் போர்
    இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகத்தை நிறுத்த பிரான்ஸ் வலியுறுத்தல்; வெட்கக்கேடானது என காட்டமாக வர்ணித்த இஸ்ரேலிய பிரதமர் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    ஐநா அமைதிப் படை நிலைகள் மீதான இஸ்ரேல் தாக்குதல்; இந்தியா கவலை லெபனான்
    ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளால் கொல்லப்பட்டார் ஹமாஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025