
காசாவை முழுவதுமாகக் கைப்பற்ற இஸ்ரேல் திட்டம்: அதிகாரிகள் தகவல்
செய்தி முன்னோட்டம்
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை, காசா பகுதியை முழுமையாகக் கைப்பற்றி, குறிப்பிடப்படாத காலத்திற்கு அங்கு தங்கும் திட்டத்தை அங்கீகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது, ஹமாஸ் மீதான அழுத்தத்தை அதிகரித்து, பணயக்கைதிகள் விடுவிப்பு மற்றும் போர்நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் காணும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என கூறப்படுகிறது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்களை தெற்கு காசாவிற்குள் இடம் பெயர்க்கும் சாத்தியக்கூறும் உள்ளது என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராணுவ நடவடிக்கைகள்
இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள்
இஸ்ரேலின் இராணுவத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் இயால் ஜமீர், காசாவின் பல பகுதிகளில் கூடுதல் ராணுவ நடவடிக்கைகள் நடைபெறும் என்றும், போராளி உள்கட்டமைப்புகள் தொடர்ந்து தாக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
தற்போது காசாவின் பாதி பகுதியில் இஸ்ரேல் கட்டுப்பாடு செலுத்தி வருகிறது.
மார்ச் மாதம் முதல், இஸ்ரேல் காசாவிற்குள் உதவி நுழைவுகளை தடை செய்ததால், மக்கள் பெரும் பசி மற்றும் மருந்து பற்றாக்குறையில் சிக்கியுள்ளனர்.
இதனால் காசா உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றாக மாறியுள்ளது.
இந்த நிலையில் இப்படியொரு திட்டத்தை இஸ்ரேல் தீட்டி வருகிறது.