NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமெரிக்கா ஒப்புதலுடன், காசா மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்; 100க்கும் மேற்பட்டோர் பலி
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்கா ஒப்புதலுடன், காசா மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்; 100க்கும் மேற்பட்டோர் பலி
    காசா மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

    அமெரிக்கா ஒப்புதலுடன், காசா மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்; 100க்கும் மேற்பட்டோர் பலி

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 18, 2025
    10:12 am

    செய்தி முன்னோட்டம்

    ஜனவரி முதல் நீடித்து வந்த பலவீனமான போர்நிறுத்தத்தை முறியடித்து, செவ்வாய்க்கிழமை அதிகாலை காசா முழுவதும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டனர்.

    காசா நகரம், டெய்ர் அல்-பலா, கான் யூனிஸ் மற்றும் ரஃபா உள்ளிட்ட பல இடங்களைத் தாக்கிய இந்தத் தாக்குதல்கள், போர்நிறுத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து நடத்தப்பட்ட தீவிரமான இஸ்ரேலிய தாக்குதல் ஆகும்.

    ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்த குடியிருப்புப் பகுதிகளைத் தாக்கியதால், இறந்தவர்களில் பலர் குழந்தைகள் என்று பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தாக்குதல்கள் நடந்தவுடன், தாக்குதல்களை நடத்துவதற்கு முன்பு இஸ்ரேல், டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்துடன் கலந்தாலோசித்ததாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.

    பணையக்கைதிகள்

    காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணையக்கைதிகள்

    காசாவில் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீதமுள்ள 59 பணயக்கைதிகளின் விடுதலை குறித்து இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே பல வாரங்களாக நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன.

    எகிப்து மற்றும் கத்தார் தலைமையிலான மத்தியஸ்த முயற்சிகள் இருந்தபோதிலும், அமெரிக்காவின் ஆதரவு கொண்ட இஸ்ரேல், ஹமாஸ் "எங்கள் பணயக்கைதிகளை விடுவிக்க மீண்டும் மீண்டும் மறுப்பதாக" குற்றம் சாட்டியது.

    இதற்கு பதிலளித்த ஹமாஸ் அதிகாரி ஒருவர், இஸ்ரேல் ஒருதலைப்பட்சமாக போர்நிறுத்தத்தை முறியடித்ததாக குற்றம் சாட்டினார், மேலும் நிலைமை மேலும் கட்டுப்பாட்டை மீறக்கூடும் என்று எச்சரித்தார்.

    ஜனவரி 19 அன்று முதலில் ஏற்படுத்தப்பட்ட இந்த போர் நிறுத்தம் , சுமார் 2,000 பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக 33 இஸ்ரேலியர்களையும் ஐந்து தாய் பணயக்கைதிகளையும் விடுவிக்க வழிவகுத்தது.

    தாக்குதல்

    பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பாலஸ்தீனம் குற்றச்சாட்டு

    செவ்வாய்க்கிழமை நடந்த வான்வழித் தாக்குதல்கள் இஸ்ரேலிய இராணுவம் ஹமாஸின் போர் தளபதிகள் மற்றும் உள்கட்டமைப்பு என விவரிக்கப்படுபவர்களை இலக்காகக் கொண்டிருந்தன.

    இருப்பினும், காசா நகரில் ஒரு கட்டிடம் மற்றும் டெய்ர் அல்-பலாவில் உள்ள வீடுகள் உட்பட பொதுமக்கள் பகுதிகளில் பரவலான அழிவு ஏற்பட்டதாக பாலஸ்தீனிய மருத்துவர்களும் சாட்சிகளும் தெரிவித்தனர்.

    பேரழிவின் முழு அளவு இன்னும் முழுமையாக தெரியவில்லை.

    ஆனால் காசாவின் ஏற்கனவே முடங்கிப்போன மருத்துவமனை அமைப்பு உயிரிழப்புகளைக் கையாள போராடி வருவதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல்
    காசா
    அமெரிக்கா

    சமீபத்திய

    விளையாட்டை விட பாதுகாப்புதான் முக்கியம்; ஐபிஎல் 2025 தொடர் ரத்து செய்யப்படலாம் என தகவல் ஐபிஎல் 2025
    சூழும் போர் மேகத்தால் அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ரத்தா? யுஜிசி அறிக்கை யுஜிசி
    இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்கா தலையிடாது என்று ஜே.டி. வான்ஸ் கூறுகிறார் இந்தியா
    அமெரிக்க-இங்கிலாந்திற்கு இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம்! அமெரிக்கா

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேலின் மொசாட் தலைமையகம் உட்பட டெல் அவிவ் பகுதியில் ஏவுகணை தாக்குதல் நடத்திய ஹெஸ்புல்லா இஸ்ரேல்
    லெபனானில் தரைவழித் தாக்குதலுக்குத் தயாராகும் இஸ்ரேல்: தீவிர போர் குறித்து அதிபர் பைடன் எச்சரிக்கை இஸ்ரேல்
    ஹிஸ்புல்லா மீதான போரை 21 நாட்கள் நிறுத்துவதற்கான முன்மொழிவை நிராகரித்தது இஸ்ரேல் இஸ்ரேல்
    லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் மற்றும் அவரது மகள் பலி இஸ்ரேல்

    இஸ்ரேல்

    இஸ்ரேல்-ஈரான் மோதலால் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்; நிபுணர்கள் எச்சரிக்கை ஈரான் இஸ்ரேல் போர்
    போரை நிறுத்த இந்தியா உதவ வேண்டும்; இந்தியாவுக்கான ஈரான் தூதர் கோரிக்கை ஈரான் இஸ்ரேல் போர்
    இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகத்தை நிறுத்த பிரான்ஸ் வலியுறுத்தல்; வெட்கக்கேடானது என காட்டமாக வர்ணித்த இஸ்ரேலிய பிரதமர் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    ஐநா அமைதிப் படை நிலைகள் மீதான இஸ்ரேல் தாக்குதல்; இந்தியா கவலை லெபனான்

    காசா

    காசா போர் நிறுத்தத்தை கோரும் ஐநா வாக்களிப்பில் இருந்து விலகியது அமெரிக்கா: இஸ்ரேல் காட்டம்  அமெரிக்கா
    இப்போதே செயல்படுங்கள் அல்லது....: காசா போர் தொடர்பாக இஸ்ரேல் பிரதமருக்கு அமெரிக்கா எச்சரிக்கை இஸ்ரேல்
    தெற்கு காசாவில் இருந்து அனைத்து படைகளையும் திரும்பப் பெற்றது இஸ்ரேல் இஸ்ரேல்
    இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் 3 மகன்கள் பலி  இஸ்ரேல்

    அமெரிக்கா

    ரஷ்யாவின் மோதலுக்கு மத்தியில் அமெரிக்காவும் உக்ரைனும் முக்கியமான கனிம ஒப்பந்தத்தில் உடன்பாடு உக்ரைன்
    பெரும் பணக்காரர்களுக்கான டிரம்பின் 'கோல்ட் கார்டு' விசா இந்தியர்களை எவ்வாறு பாதிக்கும்? டொனால்ட் டிரம்ப்
    'ரெட் மூன்': வரவிருக்கும் முழு சந்திர கிரகணத்தை எப்படி, எங்கே பார்ப்பது சந்திர கிரகணம்
    அமெரிக்க குடியுரிமையின் விலை 5 மில்லியன் டாலர் மட்டுமே; கோல்டு கார்டின் சிறப்பம்சங்கள் என்ன? டொனால்ட் டிரம்ப்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025