NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வர வாய்ப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வர வாய்ப்பு

    திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வர வாய்ப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Feb 27, 2024
    06:59 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் குடியேறிய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய மூன்று அண்டை நாடுகளைச் சேர்ந்த மத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம் அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கான ஆன்லைன் போர்ட்டல் தயார் நிலையில் இருப்பதாகவும், இதற்கான சோதனை ஓட்டங்களை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே செய்து வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    ஆவணங்கள் இல்லாத அண்டை நாட்டு அகதிகளுக்கு CAA சட்டம் உதவும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

    நீண்ட கால விசாக்களுக்கான விண்ணப்பங்கள் அதிகமாக பாகிஸ்தானில் இருந்து பெறப்பட்டுள்ளதாக அமைச்சகம்தெரிவித்துள்ளது.

    இந்தியா 

     மாவட்ட அதிகாரிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் அதிகாரம் 

    நீண்ட கால விசாக்களை வழங்குவதற்கான அதிகாரங்கள் ஏற்கனவே மாவட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

    கடந்த இரண்டு ஆண்டுகளில், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்திருக்கும் இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜைனர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க 30க்கும் மேற்பட்ட மாவட்ட நீதிபதிகள் மற்றும் ஒன்பது மாநில உள்துறைச் செயலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    குடியுரிமைச் சட்டம், 1955ன் கீழ், இந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ஏப்ரல் 1, 2021 முதல் டிசம்பர் 31, 2021 வரை, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 1,414 முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு குடியுரிமைச் சட்டத்திற்கு கீழ் இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டது என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆண்டு அறிக்கை கூறுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    குடியுரிமை (திருத்த) சட்டம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    இந்தியாவில் மேலும் 157 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் இருவர் பலி  கொரோனா
    "இந்தியா அமெரிக்காவை பலவீனமாக பார்க்கிறது": நிக்கி ஹேலி பகிரங்க குற்றச்சாட்டு அமெரிக்கா
    பாதுகாப்பை பலப்படுத்த இந்தியா மற்றும் மியான்மர் இடையே உள்ள எல்லை பகுதியை மூட மத்திய அரசு உத்தரவு அமித்ஷா
    இந்தியாவில் மேலும் 163 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் இருவர் பலி  கொரோனா

    குடியுரிமை (திருத்த) சட்டம்

    இந்தியா முழுவதும் 7 நாட்களுக்குள் CAA நடைமுறைக்கு வரும்: மத்திய அமைச்சர் உத்தரவாதம் சிஏஏ
    "தமிழ்நாட்டினுள் CAA கால்வைக்க விடமாட்டோம்": முதலமைச்சர் ஸ்டாலின் சூளுரை முதல் அமைச்சர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025