NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / வெங்காய ஏற்றுமதி தடையை மார்ச் 31 வரை நீட்டித்தது மத்திய அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    வெங்காய ஏற்றுமதி தடையை மார்ச் 31 வரை நீட்டித்தது மத்திய அரசு

    வெங்காய ஏற்றுமதி தடையை மார்ச் 31 வரை நீட்டித்தது மத்திய அரசு

    எழுதியவர் Sindhuja SM
    Feb 20, 2024
    07:27 pm

    செய்தி முன்னோட்டம்

    நாட்டிற்குள் வெங்காய தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகவும், விலை ஏற்றத்தை கட்டுக்குள் வைத்திருப்பதற்காகவும் இந்திய அரசாங்கம் வெங்காய ஏற்றுமதி தடையை மார்ச் 31, 2024 வரை நீட்டித்துள்ளது.

    டிசம்பர் 8, 2023 முதல் வெங்காய ஏற்றுமதி தடை நீடிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தடையை மார்ச் 31, 2024 வரை நீட்டித்துள்ளதாக நுகர்வோர் விவகார செயலாளர் ரோஹித் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

    கடந்த அக்டோபரில், வெங்காயம் விலை உயர்ந்தபோது நுகர்வோருக்கு உதவும் வகையில், சில்லறை சந்தையில் கிலோவுக்கு ரூ.25 என்ற மானிய விலையில் வெங்காய விற்பனையை மத்திய அரசு அதிகரித்தது.

    வெங்காயம் 

    கடந்த டிசம்பரில் 40.62% உயர்ந்த வெங்காய விலை 

    ஆகஸ்ட் 2023 இல் விதிக்கப்பட்ட ஏற்றுமதி தடை டிசம்பர் 31, 2023 வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், தடை நீக்கப்பட்டதாக வதந்தி பரவியதை அடுத்து, மொத்த வெங்காயத்தின் விலை 40.62% உயர்ந்து குவிண்டாலுக்கு ரூ.1,800ஆக விற்பனை செய்யப்பட்டது.

    வரவிருக்கும் பொதுத் தேர்தல் காரணமாகவும், குளிர்காலத்தில் வெங்காய உற்பத்தி குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாலும் மார்ச் 31 க்குப் பிறகும் தடை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எனினும், அமைச்சகங்களிடம் இருந்து பெறப்படும் அனுமதியின் பெயரிலும் ஒப்பந்தங்களின் பெயரிலும் நட்பு நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி அனுமதிக்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மத்திய அரசு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    இந்தியாவில்  2,083 பேருக்கு JN.1 வகை கொரோனா பாதிப்பு கொரோனா
    'பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்': மாலத்தீவு அதிபருக்கு எதிர்கட்சி தலைவர் வலியுறுத்தல் மாலத்தீவு
    H-1 பி விசா உள்நாட்டு புதுப்பித்தல் திட்டம் அறிமுகம்; ஏப்ரல் 1 வரை மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும் விசா
    மாலத்தீவு பட்டப்பகலில் நடந்த கொடூரம்; அரசு வழக்கறிஞருக்கு கத்திக்குத்து மாலத்தீவு

    மத்திய அரசு

    அமளிதுமளியான நாடாளுமன்றம்; மொத்தம் 142 எம்பிக்கள் சஸ்பெண்ட் நாடாளுமன்றம்
    வெள்ள நிவாரணத் தொகையாக பிரதமரிடம் ₹12,000 கோடி கோரினார் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடி
    வாக்களிப்பது முதல் தினசரி கொடுப்பனவுகள் வரை - இடைநீக்கத்தினால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இழக்கப்போவது என்ன? எதிர்க்கட்சிகள்
    சாத்விக்/சிராக் ஜோடிக்கு கேல்ரத்னா, முகமது ஷமிக்கு அர்ஜுனா விருதுகள் அறிவிப்பு பேட்மிண்டன் செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025