இந்தியா: செய்தி
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் புளூ டிக் வேண்டுமா? வெளியானது கட்டண விபரம்
சமூக வலைத்தளங்களான ட்விட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவைகளுக்கு புளூ டிக் பயனாளர்களுக்கு கட்டண சலுகையை அந்நிறுவனம் ஏற்கனவே நிர்ணயித்து இருந்தது.
சென்னை சென்ட்ரல் - கோவை வந்தே பாரத் ரயில் வெள்ளோட்டம் இன்று துவங்கியது
இந்தியாவின் அதிவேகமான 'வந்தே பாரத்' ரயில் சேவைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது.
இந்தியாவில் 3 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: ஒரே நாளில் 3,016 கொரோனா பாதிப்பு
நேற்று(மார்-29) 2,151ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 40% உயர்ந்து 3,016ஆக அதிகரித்துள்ளது.
உலக வங்கியின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவாரா அஜய் பங்கா
உலக வங்கி தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்துவிட்ட நிலையில், வேறு எந்த நாடும் வேட்பாளரை பகிரங்கமாக முன்வைக்காததால், உலக வங்கியின் தலைவர் பதவி அமெரிக்க வேட்பாளரான அஜய் பங்காவுக்கே வழங்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ரூ.5000 முதலீட்டில் 66,000 லாபம்! சிறந்த 5 மியூச்சுவல் ஃபண்ட்கள்
கடந்த 1 வருடமாக பங்குசந்தையானது கடுமையான வீழ்ச்சியை கண்டு வருகிறது.
ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தி திணிப்பு - தமிழக முதல்வர் எச்சரிக்கை
ஆவின் விற்பனை செய்யும் தயிர் பாக்கெட்டுகளில் தயிர் என எழுதக்கூடாது, தாஹி என இந்தியில் எழுத வேண்டும் என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
UPI கட்டணம்: வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த வேண்டாம்! NPCI நிறுவனர் விளக்கம்
2,000 ரூபாய்க்கு UPI பேமெண்ட்களுக்கு ஏப்ரல் 1 முதல் கட்டண விதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியானதற்கு மீண்டும் ஒரு விளக்கத்தை கொடுத்துள்ளது NPCI.
நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைக்கு பிறந்த 4 குட்டிகள்
நமீபியாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட சியாயா என்ற சிறுத்தைக்கு நான்கு குட்டிகள் பிறந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் இன்று(மார்-29) தெரிவித்தார்.
'சீக்கியர்களே ஒன்றுபடுங்கள்': வீடியோவை வெளியிட்ட அம்ரித்பால் சிங்
பஞ்சாப் காவல்துறையால் வெவ்வேறு மாநிலங்களில் தேடப்பட்டு வரும் தப்பியோடிய காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங் இன்று(மார் 29) ஒரு வீடியோவை வெளியிட்டார்.
2021 வரை 472 கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது: மத்திய அரசு
2021 டிசம்பர் 31ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில் இருக்கும் 472 கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பெற்றோர்கள் இறப்பால் அனாதையான 2 வயது சிறுவன் அமெரிக்காவில் இருந்து மீட்கபடுவான்: தமிழக அரசு உறுதி
அமெரிக்காவில் பெற்றோரின் மரணத்தால் அனாதையான இரண்டு வயது சிறுவனை வீட்டிற்கு அழைத்து வர, மத்திய அரசின் சட்ட மற்றும் தூதரக உதவி உட்பட அனைத்து ஆதரவும் கோரப்படும் என்று தமிழக அரசு உறுதியளித்துள்ளது.
இந்தி திணிப்பு: தயிர் பாக்கெட்டுகளில் 'தாஹி' என்ற பெயரை போட அறிவுறுத்தல்
தயிர் பாக்கெட்டுகளில் 'தாஹி' என்ற இந்தி வார்த்தையை போட வேண்டும் என்றும், 'தயிர்' 'மொசரு'(கன்னடம்) போன்ற தென் இந்திய மொழிகளை இந்தி வார்த்தைக்கு அருகில் அடைப்புக்குறிக்குள் போட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
UPI கட்டணம்: ஏப்ரல் 1 முதல் அமல்! யாருக்கு ஆபத்து?
இனி யூபிஐ மூலம் அதிக பண பரிமாற்றம் செய்யப்பட்டால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று NPCI ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
ராகுல் காந்தி விவகாரம்; இடைதேர்தலை நடத்த அவசரம் இல்லை: தேர்தல் ஆணையம்
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் அடுத்து, காலியாக உள்ள கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் அவசரப்படவில்லை என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று(மார் 29) தெரிவித்தார்.
இந்திய ஏற்றுமதியில் வளர்ச்சி - 25% கைப்பற்றிய ஆப்பிள் நிறுவனம்
கடந்த 2022 ஆம் ஆண்டில் ஸ்மார்ட் போன் ஏற்றுமதியில் ஆப்பிள் நிறுவனம் 25 சதவீதத்தை எட்டியுள்ளதாக Counterpoint Research தெரிவித்துள்ளது.
எவரெஸ்ட் சிகரம் ஏறும் தமிழக வீராங்கனைக்கு நிதியுதவி வழங்கிய உதயநிதி ஸ்டாலின்
நேபாளம் தலைநகரான காட்மாண்டுவில் இருந்து 'ஏசியன் ட்ரக்கிங் இன்டர்நேஷனல் நிறுவனம்' தனது குழுவினருடன் உலகத்திலேயே மிகஉயரமான எவரெஸ்ட் சிகரம் ஏற செல்கின்றனர்.
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிப்பு
224 தொகுதிகளை கொண்ட கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலின் வாக்கெடுப்பு மே 10ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று(மார் 29) அறிவித்துள்ளது.
மின்சார வாகனம் ஊக்குவிப்பு - ரூ.800 கோடியில் உருவாகும் சார்ஜ் நிலையங்கள்
மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் விதமாக 7432 சார்ஜிங் நிலையங்களை அமைக்க மத்திய அரசு ரூ. 800 கோடி ஒதுக்கியுள்ளதாக மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே தெரிவித்துள்ளார்.
திரிபுராவில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
திரிபுராவின் உனகோட்டி மாவட்டத்தில், சில்சாரில் இருந்து அகர்தலா நோக்கிச் சென்ற ரயிலில் இருந்து 1.10 கோடி ரூபாய் மதிப்புள்ள 221.96 கிராம் போதை பொருளை எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) செவ்வாய்கிழமை கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: ஒரே நாளில் 2,151 கொரோனா பாதிப்பு
5 மாதங்கள் இல்லாத அளவு இந்தியாவில் தினசரி கொரோனாவின் எண்ணிக்கை 2,151ஆக அதிகரித்துள்ளது.
உக்ரைனில் இருந்து திரும்பி இருக்கும் மருத்துவ மாணவர்களுக்கு தனி தேர்வு
உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்கள், தற்போதுள்ள எந்த மருத்துவக் கல்லூரிகளிலும் சேராமல், MBBS இறுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற ஒரே ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு நேற்று(மார்-28) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து: அரசு அதிரடி நடவடிக்கை
18 மருந்து நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு, உற்பத்தியை நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் IIT, IIM, NITஐ சேர்ந்த 61 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்
இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள்(IITs), இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (IIMs), தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (NITs) போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 61 மாணவர்கள் கடந்த 5 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஏப்ரல் மாதம் முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை 12% வரை உயருகிறது
இந்தியாவின் மொத்த விலை பணவீக்கத்திற்கு ஏற்ப மருந்துகளின் விலையினை மாற்றியமைக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்திய-சீக்கிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பேர் பிலிப்பைன்ஸில் கைது
இண்டர்போலின் 'ரெட் நோட்டீஸ்' கண்காணிப்புப் பட்டியலில் இருந்த சீக்கிய தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் மூன்று பேர், பிலிப்பைன்ஸ் அரசு நிறுவனங்களின் கூட்டு நடவடிக்கையின் போது இந்த மாதம் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
ஆதார் கார்டுடன் பான் கார்டினை இணைக்க கால அவகாசத்தை நீட்டித்த மத்திய அரசு
ஆதார் கார்டுடன் பான் கார்டினை ஒன்றிணைக்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து கூறிவருகிறது.
ஸ்மார்ட் கீ வசதியுடன் ஹோண்டாவின் புதிய ஆக்டிவா 125 அறிமுகம்!
முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா புதிய ஆக்டிவா 2023 125 ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
பாகிஸ்தானுக்கும் அம்ரித்பாலுக்கும் தொடர்பு இருக்கிறதா: புதிய தகவல்
பிரிவினைவாத தலைவரான அம்ரித்பால் சிங்கை காவல்துறையினர் தீவிரமாக தேடிவரும் நிலையில், பாகிஸ்தானுக்கும் அவருக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உளவுத்துறை அமைப்புகள் கூறுயுள்ளன.
மார்ச் 31 தான் கடைசி - மியூச்சுவல் ஃபண்டில் நாமினி சேர்க்காவிட்டால் என்ன ஆகும்?
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நாமினி சேர்ப்பதைக் கட்டாயமாக்கி உள்ளது.
உலக இளைஞர் பளுதூக்கும் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரருக்கு வெண்கலம்
அல்பேனியாவின் டுரெஸ் நகரில் நடைபெற்ற ஐடபிள்யூஎஃப் உலக இளைஞர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய பளுதூக்கும் வீரர் பரலி பெடப்ரேட் 67 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
தமிழக அரசை மிரட்டும் வகையில் பேசிய முன்னாள் ராணுவ கர்னல் மன்னிப்பு கோரியதால் முன்ஜாமீன்
இந்திய ராணுவ வீரரை அடித்து கொலை செய்த திமுக நிர்வாகியை கண்டித்து கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி தமிழக பா.ஜ.க. சார்பில் அண்ணாமலை தலைமையில் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தியாவில் 610 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் XBB1.16 கொரோனா வகை
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், XBB1.16 என்ற கொரோனா வகை 610 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதிரடியாக சரிந்த தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரம்!
தங்கம் விலையானது பெருபாலும் ஏற்ற இறக்கம் உள்ளது. ஒரு சில நாட்களில் வான்முட்டும் விலைக்கு செல்லும் தங்க விலை, சில நாட்களில் வாடிக்கையாளர்களை குஷிப்படுத்துவது போல குறைவது வழக்கம்.
ஈரோட்டில் தாலி கட்டிய கையோடு மனைவியை மாட்டு வண்டியில் அழைத்துச்சென்ற மருத்துவர்
தற்போதைய காலகட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து கார், பைக் முதலியன இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது.
தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.15% ஆக உயர்வு!
தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான PF வட்டி விகிதத்தை 8.15% ஆக உயர்த்த இபிஎப்ஓ நிர்ணயித்துள்ளது.
ஒரே நாளில் 50 எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்களை திறந்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனம்!
இந்திய வாகனசந்தையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை பெட்ரோல் வாகனத்திற்கு நிகராக வந்துவிட்டது. எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தில் பிராதன இடத்தில் இருக்கும் ஓலா ஸ்கூட்டர்கள் பல அப்டேட்களை வழங்கி வருகின்றன.
பிபிசி பஞ்சாப் ட்விட்டர் கணக்கு முடக்கம்: இந்தியாவுக்கு எதிரான தகவல்களை பரப்பியதாக குற்றசாட்டு
காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங்கை போலீஸார் தீவிரமாக தேடிவரும் நிலையில், பிபிசி பஞ்சாபி செய்தியின் ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.
இமாச்சல் வரை பரவிய H3N2 வைரஸ்: 10 வார குழந்தைக்கு பாதிப்பு
இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தின் டெஹ்ரா துணைப்பிரிவைச் சேர்ந்த இரண்டரை மாத பெண் குழந்தைக்கு H3N2 பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கண் நோய்களை கண்டறியும் AI-ஆப்! அசத்திய 11 வயது கேரளா சிறுமி
இந்திய சிறுமி ஒருவர் AI-யை பயன்படுத்தி கண் நோய்களை கண்டறியும் ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
ராகுல் காந்தியின் வழக்கை அமெரிக்கா கவனித்து வருகிறது: அமெரிக்க அதிகாரி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நீதிமன்ற வழக்கை அமெரிக்கா கவனித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறையின் முக்கிய துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் திங்கள்கிழமை(மார் 27) தெரிவித்தார்.