NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து: அரசு அதிரடி நடவடிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து: அரசு அதிரடி நடவடிக்கை
    இந்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி 76 மருந்து நிறுவனங்களில் சோதனை நடத்தினார்.

    18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து: அரசு அதிரடி நடவடிக்கை

    எழுதியவர் Sindhuja SM
    Mar 28, 2023
    07:11 pm

    செய்தி முன்னோட்டம்

    18 மருந்து நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு, உற்பத்தியை நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும், 26 மருந்து நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என்று NDTV செய்தியில் கூறி இருக்கிறது.

    இந்தியாவில் இருந்து போலியான மருந்துகள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில், மருந்து நிறுவனங்களுக்கு எதிரான இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி தலைமையில் 76 மருந்து நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.

    மத்திய, மாநில குழுக்கள் மூலம் இந்த திடீர் ஆய்வு 20 மாநிலங்களில் நடத்தப்பட்டது. இந்த சோதனைகள் 15 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்தியா

    இந்திய மருந்துகளால் உலக நாடுகளில் ஏற்பட்ட பாதிப்புகள்

    கடந்த சில மாதங்களாக இந்திய மருந்து நிறுவனங்கள் தயாரித்த மருந்துகளால் பல்வேறு நாடுகளில் இறப்புகள் ஏற்பட்டன.

    கடந்த மாதம், குஜராத்தைச் சேர்ந்த மருந்து நிறுவனமான சைடஸ் லைஃப் சயின்சஸ், கீல்வாதத்திற்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் 55,000க்கும் மேற்பட்ட பொதுவான மருந்து பாட்டில்களை அமெரிக்க சந்தையில் இருந்து திரும்பப் பெற்றது. சுத்தமின்மையின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    கடந்த ஆண்டு உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகளின் மரணத்திற்கு காரணமாக இருந்த இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் மூன்று ஊழியர்கள் நொய்டாவில் கைது செய்யப்பட்டனர்.

    அவர்கள் மீது கலப்பட மருந்து தயாரித்து விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

    பிப்ரவரியில், சென்னையை சேர்ந்த மருந்து நிறுவனத்தின் கண் சொட்டு மருந்துகளால் அமெரிக்காவில் குறைந்தது 55 பேர் பாதிக்கப்பட்டனர், ஒருவர் உயிரிழந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உஸ்பெகிஸ்தான்
    அமெரிக்கா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    பஜாஜ் பல்சர் 220F Vs TVS அப்பாச்சி RTR 200 4V - சிறந்த பைக் எது? பைக் நிறுவனங்கள்
    வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ICMR அதிரடி நடவடிக்கை கொரோனா
    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : தங்கம் வென்றார் நிது கங்காஸ் உலக கோப்பை
    காஷ்மீருக்கு செல்லும் முதல் ரயில் பாதை டிசம்பரில் திறக்கப்படும்: ரயில்வே அமைச்சர் ஜம்மு காஷ்மீர்

    உஸ்பெகிஸ்தான்

    உஸ்பெகிஸ்தான் இருமல் மருந்து பிரச்சனை: இந்தியாவில் இருவர் கைது இந்தியா

    அமெரிக்கா

    கடற்படை ஏவுகணையை உருவாக்கியுள்ள ஈரான் ஈரான்
    தற்கொலை செய்து கொண்ட கோடீஸ்வரர் தாமஸ் லீ உலகம்
    பாகிஸ்தானுக்கு கடன் வழங்கும் சீனா: உள்குத்து இருக்குமோ என்று கவலைப்படும் அமெரிக்கா இந்தியா
    சீன ஆய்வகங்களில் இருந்து கொரோனா பெரும்தொற்று பரவி இருக்கலாம்: அமெரிக்கா கொரோனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025