NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உஸ்பெகிஸ்தான் இருமல் மருந்து பிரச்சனை: இந்தியாவில் இருவர் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    உஸ்பெகிஸ்தான் இருமல் மருந்து பிரச்சனை: இந்தியாவில் இருவர் கைது
    நிறுவனத்தின் இரண்டு இயக்குநர்கள் தலைமறைவு

    உஸ்பெகிஸ்தான் இருமல் மருந்து பிரச்சனை: இந்தியாவில் இருவர் கைது

    எழுதியவர் Sindhuja SM
    Mar 03, 2023
    05:57 pm

    செய்தி முன்னோட்டம்

    உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த 19 குழந்தைகளை காவு வாங்கியதாக கூறப்படும் மருந்துகளை உற்பத்தி செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்திய இருமல் மருந்துகளைக் குடித்ததால் உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த 19 குழந்தைகள் உயிரிழந்ததாக கடந்த டிசம்பர் மாதம் அந்நாடு இந்தியாவின் மீது குற்றம் சாட்டி இருந்தது.

    உ.பி. மாநிலம் நொய்டாவில் இயங்கி வரும் மேரியான் பயோடெக் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட Doc-1-Max இருமல் மருந்தே இதற்கு காரணம் என்று கூறப்பட்டதால், இந்திய அரசு இந்த நிறுவனத்தின் நொய்டா கிளைக்கு சீல் வைத்தது.

    இந்த மருந்தை ஆய்வு செய்த போது, இதில் எத்திலின் க்ளைக்கால் என்ற நச்சுப் பொருள் பயன்படுத்தப்பட்டிருந்தது தெரியவந்ததாக உஸ்பெகிஸ்தான் கூறி இருந்தது.

    நொய்டா

    FIRஇல் பெயரிடப்பட்டுள்ள மூன்று பேர் கைது

    இந்நிலையில், இதை தயாரித்த மருந்து நிறுவனத்தில் பணிபுரியும் மூன்று ஊழியர்களை நொய்டா காவல்துறையினர் இன்று(மார் 3) கைது செய்துள்ளனர்.

    மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின்(சிடிஎஸ்சிஓ) மருந்துப் பரிசோதகரின் புகாரின் பேரில், மரியான் பயோடெக் நிறுவனத்தின் இயக்குநர்கள் இருவர் உட்பட, ஐந்து அதிகாரிகள் மீது நேற்று இரவு FIR பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மத்திய மற்றும் உத்தரபிரதேச மாநில மருந்து அதிகாரிகள் மரியான் பயோடெக் மருந்துகளின் மாதிரிகளை சோதித்ததில், அதில் கலப்படம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

    FIRஇல் பெயரிடப்பட்டுள்ள மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் நிறுவனத்தின் இரண்டு இயக்குநர்கள் தலைமறைவாக உள்ளனர் என்ற தகவலையும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    ஜார்கண்ட் மாநிலத்தில் பி.எஸ்.என்.எல். டவரை திருட முயன்ற 6 நபர்கள் கைது மாநிலங்கள்
    Splendor-க்கு போட்டியாக களமிறங்கிய ஹோண்டாவின் புதிய பைக் - என்ன ஸ்பெஷல்? ஹோண்டா
    ஆயுள் காப்பீடு எடுப்பவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? தொழில்நுட்பம்
    பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025